CATEGORIES
Kategorier
கொரோனா சிகிச்சைக்காக 118 ஆம்புலன்ஸ் வாகனங்களை முதலமைச்சர் தொடங்கி வைத்தார்
கொரோனா நோயாளிகளை அழைத்துச்செல்ல கூடுதலாக 118 ஆம்புலன்ஸ் வாகனங்களை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தொடங்கி வைத்தார்.
இந்தியாவில் கொரோனா பாதிப்பு அதிகரிப்பது ஏன்?
இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் புதிய விளக்கம்
கொரோனாவால் இறந்த காவலர்களுக்கு அஞ்சலி
கடலூர் மாவட்டம் நெல்லிக்குப்பம் காவல் நிலைய சிறப்பு உதவி ஆய்வாளர் நடராஜன், நெய்வேலி நகர் காவல் நிலைய தலைமை காவலர் ஜூலியன் குமார் ஆகியோர் கொரொனா நோய் தொற்றின் காரணமாக இறந்து போயினர்.
காளியம்மன் கோயிலில் கும்பாபிஷேக விழா
ராமநாதபுரம் மாவட்டம் ராமேஸ்வரம் அருகே வேதாளை உளராட்சி, சமத்துவபுரத்தில் அருள்மிகு ஸ்ரீ கடையகுளத்து காளியம்மன் கோயில் அஷ்டபந்தன மஹா கும்பாபிஷேக விழா தொடங்கி முதல் பூஜையாக விக்னேஸ்வர பூஜை, மகாசங்கல்பம், வாஸ்து சாந்தி கும்ப அலங்காரம், தீபாராதனை நடந்தது.
சென்னை விமான நிலையத்தில் ரூ.78 லட்சம் தங்க காகிதங்கள் பறிமுதல்
துபாய் நாட்டில் இருந்து சென்னை வந்த சிறப்பு விமானத்தில் அட்டை பெட்டியில் ரூ.78 லட்சம் மதிப்புடைய லுகிலோ தங்க காகிதங்கள் மறைத்து கடத்தி வந்தது கண்டுபிடிக்கப்பட்டது.
வேளாங்கண்ணி பேராலயத்தில் நாளை பக்தர்கள் இன்றி திருவிழா கொடியேற்றம் நடக்கிறது
வேளாங்கண்ணி பேராலயத்தில் வருகிற நாளை 29ந் தேதி (சனிக்கிழமை) மாலை 5 மணிக்கு பக்தர்கள் இன்றி திருவிழா கொடியேற்றம் நடக்கிறது என்று பேராலய அதிபர் பிரபாகர் கூறினார்.
மழையால் கீழடி பகுதியில் அகழாய்வு பணி நிறுத்தம்
கீழடி பகுதியில் பெய்த பலத்த மழை காரணமாக ஆராய்ச்சிக்காக தோண்டப்பட்ட குழிகளில் தண்ணீர் தேங்கியது. இதனால் இந்த பகுதியில் பணிகள் நடைபெறவில்லை.
நீட், ஜே.இ.இ தேர்வுகளை ஒத்திவைக்க கோரி நாடு முழுவதும் காங்கிரஸ் இன்று போராட்டம்
நீட், ஜே.இ.இ தேர்வுகளை ஒத்திவைக்க கோரி நாடு முழுவதும் காங்கிரஸ் கட்சியின் சார்பில் இன்று போராட்டம் நடைபெற உள்ளது.
மத்தியகுழு பரிந்துரையை அமல்படுத்த வேண்டும் முதல்வருக்கு ஆளுநர் கிரண்பேடி அறிவுறுத்தல்
கொரோனாவைக் கட்டுப்படுத்துவதில் புதுச்சேரி அரசுக்கு மத்தியக் குழு தொடர்ந்து தொழில்நுட்ப உதவி தர உள்ளது. அதன் விவரங்களை மத்திய அரசுக்கும், ஆளுநருக்கும், புதுச்சேரி அரசுக்கும் தந்துள்ளது.
பாஜக ஒன்றிய தலைவர் தாக்கப்பட்டதை கன்டித்து ஆர்ப்பாட்டம்
கடலூர் அடுத்த குறிஞ்சிப்பாடி தாலுக்கா பெளான் தோப்பை சேர்ந்த பாஜக குறிஞ்சிப்பாடி மேற்கு ஒன்றிய தலைவர் ஆறுமுகம் என்பவரை சத்திரம் கூட்ரோட்டில் கடைக்கு சென்றபோது அதே ஊரைச் சேர்ந்த பெலாந்தோப்பு இளங்கோவன் என்பவரால் கத்தியால் வெட்டி தாக்கப்பட்டார்.
4 மாத ஊதியத்தை உடனே வழங்க வலியுறுத்தி நெடுங்காட்டில் அங்கன்வாடி ஊழியர்கள் கருப்பு சேலை அணிந்து ஆர்ப்பாட்டம்
நிலுவையில் உள்ள 4 மாத ஊதியத்தை உடனே வழங்க வலியுறுத்தி, காரைக்கால் நெடுங்காட்டில் அங்கன்வாடி ஊழியர்கள் நேற்று கருப்பு சேலை அணிந்து கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
விஜயகாந்த் பிறந்தநாளை முன்னிட்டு நலத்திட்ட உதவிகள் வழங்கல்
தேசிய முற்போக்கு திராவிட கழக தலைவர் விஜயகாந்த் பிறந்த நாளை வறுமை ஒழிப்பு தினமாக கடைபிடித்து பல்வேறு நலத்திட்ட உதவிகள் வழங்கி தேமுதிகவினர் சிறப்பாக கொண்டாடி வருகின்றனர்.
மூலிகை தியான மண்டபம் திறப்பு
கன்னியாகுமரி மாவட்டம் மருந்துவாழ் மலையின் அருகில் பிரசித்திப்பெற்ற மலையில் சுமார் 500 அடி உயரத்தில் ஸ்ரீ குபேர மூலிகை தியான மண்டபம் ஒன்று அமைக்கப்பட்டுள்ளது.
சிபிஎம் ஆர்ப்பாட்டம்
பொன்னமராவதியில் சிபிஎம்மின் தேசம் காப்போம் ஆர்ப்பாட்டம் நடந்தது.
கொரோனா வேகமாக பரவும் நிலையில் புதுவையில் மத்திய குழுவினர் ஆலோசனை
புதுவையில் கொரோனா வைர ஸ் தொற்று பரவும் வேகம் அதிகரித்து வருகிறது. இதுவரை சுமார் 12 ஆயிரம் பேர் தொற்றினால் பாதிக்கப்பட்டுள்ளனர். அவர்களில் 180 பேர் உயிரிழந்துள்ளனர்.
பெங்களூருவில் இருந்து வேலூருக்கு ரூ.10 லட்சம் மதிப்பிலான போதை பொருட்கள் கடத்தி வந்த 5 பேர் கைது: வேன்கள், போதை வஸ்துக்கள் பறிமுதல்
பெங்களூருவில் இருந்து வேலூருக்கு கடத்தி வரப்பட்ட ரூ.மலட்சம் மதிப்பிலான குட்கா போதைப் பொருட்களை தனிப்படை காவல் துறையினர் பறிமுதல் செய்து, 5 பேரை கைது செய்துள்ளனர்.
கொரோனா நிதி வழங்குவதில் மத்திய அரசு புதுவையை திட்டமிட்டு புறக்கணிக்கிறது. நாராயணசாமி குற்றச்சாட்டு
நீட் உள்ளிட்ட மத்திய அரசின் தேர்வுகள், கல்விக்கொள்கைகள் தொடர்பாக காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி நேற்று காங்கிரஸ் ஆளும் மாநிலங்களின் முதல் அமைச்சர்கள் மற்றும் எதிர்க்கட்சிகள் ஆளும் மாநில முதல் மந்திரிகளுடன் காணொலி காட்சி மூலம் ஆலோசனை நடத்தினார்.
கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் தமிழகத்தில் முழு வீச்சில் மேற்கொள்ளப்பட்டு வருகிறது
கடலூரில் முதலமைச்சர் பழனிசாமி பேச்சு
அரசு கலை, அறிவியல் கல்லூரி முதலாம் ஆண்டு ஆன்லைன் வகுப்பு ஆக.31ல் தொடக்கம்: பழைய கல்வி கட்டணத்தையே பெற உத்தரவு
அரசு கலை, அறிவியல் கல்லூரிகளில் முதலாம் ஆண்டு மாணவர்களுக்கு ஆன்லைன் வகுப்புகள் வரும் 31ம் தேதி முதல் தொடங்கவேண்டும் என்றும், பழைய கல்வி கட்டணத்தையே பெறவேண்டும் என்றும் கல்லூரிக் கல்வி இயக்குநர் உத்தரவு பிறப்பித்துள்ளார்.
1500 பவுன் கொள்ளையில் முக்கிய தடயங்கள் சிக்கின: மதுரை போலீஸார் தகவல்
மதுரையில் கடந்த ஒன்றரை ஆண்டுக்கு முன்பு நடந்த 1500 பவுன் கொள்ளையில் முக்கியத் தடயங்கள் சிக்கியுள்ளதாக போலீஸார் தெரிவித்தனர்.
'இளம் விஞ்ஞானி' பயிற்சி முகாம் ரத்து: இஸ்ரோ அறிவிப்பு
பள்ளி மாணவர்களுக்கான இளம் விஞ் ஞானி திட்டப்பயிற்சி முகாம் ரத்து செய்யப் படுவதாக இஸ்ரோ அறிவித்துள்ளது.
இந்திய தடுப்பூசிகளின் நிலை என்ன? மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் தகவல்
டெல்லியில் இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் தலைவர் டாக்டர் பலராம் பார்கவா, நிருபர்களிடம் நேற்று கூறியதாவது: நமது நாட்டில் தற்போது 3 தடுப்பூசிகள் வெவ்வேறு கட்ட பரிசோதனையில் இருக்கின்றன.
ஸ்டெர்லைட் வழக்கில் வேதாந்தா நிறுவனம் உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு
தூத்துக்குடியில் உள்ள ஸ்டெர்லைட் ஆலை வழக்கு தொடர்பாக, வேதாந்தா நிறுவனம் உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்துள்ளது.
மராட்டியத்தில் அடுக்குமாடி கட்டிட விபத்து: பலி எண்ணிக்கை 16 ஆக உயர்வு
மராட்டியத்தில் அடுக்குமாடி கட்டிட விபத்தில் சிக்கி பலியானோர் எண்ணிக்கை தற்போது 16 ஆக உயர்ந்துள்ளது.
பண்ருட்டி தொகுதி அ.தி.மு.க. பெண் எம்.எல்.ஏ.வுக்கு கொரோனா
பண்ருட்டி தொகுதி அ.தி. மு. க. பெண் எம்.எல்.ஏ. கொரோனா தொற்றால் பாதிக்கப்பட் டுள்ளார். இவர் சென்னை மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.
கம்பைநல்லூர் பேரூராட்சியில் கொரோனா தடுப்பு விதிமுறைகளை பின்பற்றாத கடைகள்: நடவடிக்கை எடுக்க கோரிக்கை
தர்மபுரி மாவட்டம், காரிமங்கலம் வட்டம் கம்பைநல்லூர் பேரூராட்சி நிர்வாகம் தமிழக அரசின் கோரோனோ தடுப்பு நடவடிக்கையை அலட்சிப்படுத்தி வருகிறது.
ரஜினி மக்கள் மன்றம் சார்பாக நோய் எதிர்ப்பு சக்தி மாத்திரை வழங்கல்
சேலம் ரஜினி மக்கள் மன்றம் சார்பாக மக்கள் தலைவர் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் 45 ஆண்டுகால திரை உலக வெற்றி பயணத்தை கொண்டாடும் விதமாக தாதகாப்பட்டி, பில்லு கடை பஸ் ஸ்டாப்பில் ஊரடங்கு தளர்த்தப்பட்ட நிலையில் கொரோனா வைரஸ் அதிகமாக பரவ வாய்ப்பு உள்ளதால் அதனை தடுக்க ஹோமியோபதி மருத்துவ முறையில் தயாரிக்கப்பட்ட ஆர்சனிக் ஆல்பம் 30 சி நோய் எதிர்ப்பு சக்தி மாத்திரைகள் ஹோமியோபதி டாக்டர் அன்பரசி வழங்கி தொடங்கிவைத்து பொதுமக்களுக்கு கொரோனா நோயின் தன்மையையும், மாத்திரையின் செயல்பாடுகளைப் பற்றியும் விழிப்புணர்வை ஏற்படுத்தினார்.
பா.ஜ.க மகளிரணி அறிமுக கூட்டம்
திருவண்ணாமலை தெற்கு மாவட்ட பாஜக மகளிரணி அறிமுக கூட்டம் திருவண்ணாமலை செட்டித்தெரு அமுதா திருமண மண்டபத்தில் நேற்று நடைபெற்றது.
தார்சாலை பலப்படுத்தும் பணியை ஆட்சியர் ஆய்வு
புதுச்சத்திரம் ஊராட்சி ஒன்றியம், திருமலைப்பட்டி ஊராட்சியில் தமிழ்நாடு கிராம சாலைகள் மேம்பாடு திட்டத்தின் கீழ் தார்சாலை பலப்படுத்தும் பணியினை மாவட்ட ஆட்சித்தலைவர் மெகராஜ் நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
விஜயகாந்த் பிறந்த நாள் விழா
திருப்பத்தூர் மாவட்டம் ஆலங்காயம் ஊராட்சி பத்தாப்பேட்டையில் மாவட்ட செயலாளர் ஹரிகிருஷ்ணன் ஆலோசனை படி தேமுதிகவினர் சார்பில் நடைபெற்ற விஜயகாந்த் பிறந்தநாள் விழா கொண்டாட்டத்தில் ஆலங்காயம் ஒன்றிய செயலாளர் ஆர். கே. குமார் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு கொடியேற்றி இனிப்புகளை வழங்கினர்.