CATEGORIES
Kategorier
ஆபத்தான நிலையில் மின்கம்பம் பொதுமக்கள் அச்சத்துடன் பயணம்
ஆரல்வாய்மொழி பகுதியில் ஆபத்தான நிலையில் மின் கம்பம் உள்ளதால் பொதுமக்கள் அப்பகுதியில் அச்சத்துடன் செல்கின்றனர். உடனே அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க கோரிக்கை வைத்துள்ளனர்.
விஜயகாந்த் பிறந்த நாள் விழா
தேசிய முற்போக்கு திராவிட கழகம் கேப்டன் விஜயகாந்த் பிறந்த நாளை வறுமை ஒழிப்பு தினமாக கடைபிடித்து பல்வேறு நலத்திட்ட உதவிகள் வழங்கி தேமுதிகவினர் சிறப்பாக கொண்டாடி வருகின்றனர்.
விடுதலை சிறுத்தைகள் கட்சி ஆர்ப்பாட்டம்
கொரோனா என்னும் கொடிய நோயிலிருந்து புதுச்சேரி மா நில மக்களையும், அவர்களின் உயிரையும் பாதுகாக்க தவறிய துணைநிலை ஆளுநரை உடனே திரும்பப் பெறு, நூற்றுக்கு மேற்ப்பட்ட உயிர்களைப் பாதுகாக்கத் தவறியது மற்றும் 10 ஆயிரத்திற்கும் மேற்ப்பட்ட மக்களைத் தொற்று பாதிக்கும் நிலையைக் கட்டுப்படுத்தத் தவறிய புதுச்சேரி மாநில முதலமைச்சர் மற்றும் சுகாதாரத்துறை அமைச்சர் ஆகியோரின் செயலற்ற நிர்வாகத்தை கண்டித்து விடுதலைச்சிறுத்தைகள் கட்சி சார்பில் சட்டப்பேரவை மற்றும் சுகாதாரத்துறை முற்றுகை ஆர்ப்பாட்டம் நடந்தது.
மின்சாரம் தாக்கி 3 மாடுகள் பலி
காரைக்காலை அடுத்த திருநள்ளாறு நெய்வாச்சேரி கிராமத்தில், மின்சாரம் தாக்கி 3 மாடுகள் பலியானது. இறந்த மாட்டிற்கு இழப்பீட்டுத்தொகை வழங்கவேண்டும் என, மாட்டின் உரிமையாளர்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.
பிரணாப் முகர்ஜி ஆழ்ந்த கோமா நிலைக்கு சென்றுவிட்டார்: ராணுவ மருத்துவமனை
முன்னாள் ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி ஆழ்ந்த கோமா நிலைக்கு சென்றுவிட்டார் என ராணுவ மருத்துவமனை கூறி உள்ளது.
மக்கள் நடமாட்டத்தை கட்டுப்படுத்த காவல்துறை தவறிவிட்டது: கிரண்பேடி குற்றச்சாட்டு
புதுச்சேரி கவர்னர் கிரண்பேடி சமூக வலைதளத்தில் கருத்து தெரிவித்துள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது.
மின் கட்டண கணக்கீட்டு முறையை மாற்றி அமைக்க வலியுறுத்தி திமுக ஆர்ப்பாட்டம்
கொரோனா தொற்றால் வாழ்வாதாரம் இழந்து நிற்கும் மக்களுக்கான மின் கட்டண கணக்கீட்டு முறையை, உடனே மாற்றி அமைக்க வலியுறுத்தி, காரைக்காலில் திமுக நேற்று ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
பினராயி விஜயன் அரசுக்கு எதிராக காங்கிரஸ் கொண்டு வந்த நம்பிக்கையில்லா தீர்மானம் தோல்வி
கேரளாவில் பினராயி விஜயன் தலைமையிலான மார்க்சிஸ்ட் அரசுக்கு எதிராக, சட்டமன்றத்தில் காங்கிரஸ் கொண்டு வந்த நம்பிக்கையில்லா தீர்மானம் தோல்வி அடைந்தது.
தொலைபேசி வழியாக மக்கள் குறைதீர்வு நாள் கூட்டம்
திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாக முதல் தளத்தில் கொரோனா ஊரடங்கினை முன்னிட்டு தொலைபேசி வழியாக மக்கள் குறைதீர்வு நாள் மாவட்ட ஆட்சித் தலைவர் கந்தசாமி தலைமையில் நடைபெற்றது.
தொற்று அதிகம் பாதிக்கப்பட்ட பகுதிகளில் முழு ஊரடங்கு: நாராயணசாமி அறிவிப்பு
கொரோனா தொற்று அதிகம் பாதிக்கப்பட்ட பகுதிகளில் முழு ஊரடங்கை அமல்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக முதல் அமைச்சர் நாராயணசாமி அறிவித்துள்ளார்.
தமிழகத்தில் இபாஸ் முறை ரத்தாகுமா? 29ந் தேதி எடப்பாடி பழனிசாமி கலெக்டர்களுடன் ஆலோசனை
தமிழகத்தில் இபாஸ் முறை தொடர்பாக 29ந் தேதி முதல் அமைச்சர் எடப்பாடி பழனிசாமி அனைத்து மாவட்ட கலெக்டர்களுடன் ஆலோசனை நடத்துகிறார்.
தேமுதிக தனித்துப் போட்டியா? பிரேமலதா பரபரப்பு பதில்
சட்டசபை தேர்தலில் தேமுதிக தனித்துப் போட்டியா என்ற கேள்விக்கு தேமுதிக பொருளாளர் பிரேமலதா விஜயகாந்த் பதில் அளித்தார்.
தற்கொலைக்கு முயன்ற சிறுவர்களை சந்தித்து ஆட்சியர் ஆறுதல்
நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோடு வட்டம் கைலாசம்பாளையம் கிராமம் கருங்கல்காடு பகுதியில் வசித்து வரும் விசைத்தறி தொழிலாளியான சுப்ரமணி (40) கடன் பிரச்சனையின் காரணமாக மனைவி மேனகா மற்றும் மகள் பூஜாஸ்ரீ, மகன் நவீன்குமார் ஆகியோருடன் விஷம் குடித்து தற்கொலைக்கு முயன்றுள்ளார்.
குண்டும் குழியுமான மலைச்சாலையால் பொதுமக்கள் அவதி
வருசநாடு அருகே அரசரடி வெள்ளிமலை இந்திராநகர் உள்ளிட்ட மலை கிராமங்களுக்கு செல்லும் சாலை குண்டும் குழியுமாக உள்ளதால் மழைநீர் தேங்கி வாகனங்கள் செல்வது மிகவும் சிக்கல் நிலவி வருகிறது.
கொரோனா நோயாளிகள் போராட்டம்
சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைக்கழக பொறியியல் கல்லூரி கோல்டன் ஜூபிலி மாணவர் விடுதியில் கொரோனா வைரஸ் சிகிச்சை சிறப்பு மையம் செயல்பட்டு வருகிறது.
குடும்பத்துடன் பிறந்தநாள் கொண்டாடிய விஜயகாந்த்
தேசிய முற்போக்கு திராவிட கழகம் கட்சியின் தலைவரும், நடிகருமான விஜயகாந்துக்கு இன்று பிறந்தநாள்.
கொ.பஞ்சங்குப்பம் கிராமத்தில் பகுதி நேர நியாயவிலைக் கடை திறப்பு
கடலூர் மாவட்டம் சிதம்பரம் சட்டமன்ற தொகுதி பரங்கிப்பேட்டை அடுத்த கொ.பஞ்சங்குப்பம் கிராமத்தில் பகுதி நேர நியாய விலை கடையினை சட்டமன்ற உறுப்பினர் கே.ஏ பாண்டியன் திறந்து வைத்தார்.
இ சேவை மையம் திறப்பு
தர்மபுரி மாவட்டம், நல்லம்பள்ளி வட்டம், தளவாய் ஹள்ளி ஊராட்சியில் மாரியம்பட்டி கிராமத்தில் தமிழக அரசின் அரசு பொது இ சேவை மையம் திறப்பு விழா நடைபெற்றது.
அருண் ஹோம் நீட்ஸ் திறப்பு விழா
சேலம் குகை சுதந்திரா இயக்கம் வர்த்தக பிரிவு சார்பில் அருண் ஹோம் நீட்ஸ் திறப்பு விழா மற்றும் சுதந்திரா இயக்கம் மகளிர் பிரிவு சார்பில் மகளிர் ஆடை உற்பத்தி துவக்க விழா சுதந்திர இயக்கம் நிறுவனர், மாநிலத் தலைவர் காமராஜ் தலைமையில் மாநில தலைமை அலுவலக வளாகத்தில் நடைபெற்றது.
4 மாத ஊதியத்தை வழங்க வலியுறுத்தி அங்கன்வாடி ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்
நிலுவையில் உள்ள 4 மாத ஊதியத்தை வழங்க வலியுறுத்தி, காரைக்கால் மாவட்ட அங்கன்வாடி ஊழியர்கள், காரைக்காலை அடுத்த கோட்டுச்சேரி அங்கன்வாடி மையம் எதிரில் நேற்று கனவ ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
காங்கிரஸ் தலைவராக தொடர வேண்டும் சோனியா காந்திக்கு ஆதிர் ரஞ்சன் சவுத்ரி கடிதம்
காங்கிரஸ் கட்சியின் தலைவராக தொடர வேண்டும் என்று சோனியா காந்திக்கு ஆதிர் ரஞ்சன் சவுத்ரி கடிதம் எழுதியுள்ளார்.
இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 31 லட்சத்தைக் கடந்தது
இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை தற்போது 31 லட்சத்தைக் கடந்துள்ளது.
காசி விஸ்வநாதர் கோவிலில் சிவலிங்கத்தின் மீது சூரிய ஒளி படர்ந்த அபூர்வ காட்சி
கரிகால் சோழனால் கட்டப்பட்ட காசி விஸ்வநாதர் கோவிலில் சூரிய ஒளி படர்ந்த கதிர்கள் கோவில் கருவறையில் உள்ள சிவலிங்கத்தின் மீது படர்ந்தது.
மதுபானங்களுக்கு மேலும் 3 மாதங்களுக்கு கொரோனா வரி: கவர்னர் ஒப்புதல்
புதுச்சேரியில் மதுபானங்களுக்கு விதிக்கப்பட்ட கொரோனா வரி மேலும் 3 மாதங்களுக்கு நீட்டிக்கப்பட்டு உள்ளது.
திருப்பூரில் குழந்தைகளை அரசு பள்ளிகளில் சேர்க்கும் தொழிலதிபர்கள்
திருப்பூரில் குழந்தைகளை தனியார் பள்ளிகளில் இருந்து அரசு பள்ளிகளில் சேர்க்கும் தொழிலதிபர்கள் மாற்றி வருகின்றனர்.
கூடங்குளம் முதலாவது அணுஉலையில் மின் உற்பத்தி மீண்டும் தொடக்கம்
கூடங்குளம் முதலாவது அணுஉலையில் 410 மெகாவாட் மின் உற்பத்தி மீண்டும் தொடங்கியது.
கொடைக்கானலில் தொடர் மழை: ஆற்றில் அடித்துச் செல்லப்பட்டவர் உயிரிழப்பு
கொடைக்கானலில் தொடர் மழையால் அருவி களில் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டது. மலைப் பகுதியில் உள்ள ஆற்றைக் கடக்க முயன்றபோது வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டதில் ஒருவர் உயிரிழந்தார்.
சீனாவுடனான பேச்சு வார்த்தை தோல்வி அடைந்தால் ராணுவ நடவடிக்கைகளுக்கு இந்தியா தயார்: பிபின் ராவத்
சீனாவுடனான பேச்சு வார்த்தை தோல்வி அடைந்தால் ராணுவ நடவடிக்கைன களுக்கு இந்தியா தயாராக உள்ளது என இந்தியாவின் பாதுகாப்புப் படைத் தலைவர் (சி.டி. எஸ் ஜெனரல் பிபின் ராவத் தெரிவித்து உள்ளார்.
தமிழகம் முழுவதும் பார்களை மூட உத்தரவிடக் கோரிய வழக்கு தள்ளுபடி
தமிழகம் முழுவதும் டாஸ்மாக் கடைகளின் அருகிலுள்ள பார்களை மூட உத்தரவிடக் கோரி தொடரப்பட்ட வழக்கைத் தள்ளுபடி செய்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது.
பாடகர் எஸ்.பி.பி.க்கு கொரோனா நெகட்டிவ்: எஸ்.பி.பி.சரண்
கொரோனாவால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த பாடகர் எஸ். பி. பாலசுப்ரமணியம் தற்போது கொரோனாவில் இருந்து மீண்டுள்ளதாக அவரது மகன் சரண் தெரிவித்துள்ளார்.