CATEGORIES
Kategorier
போதையில் பிறந்தநாள் கொண்டாட்டம் என்ற பெயரில் நடக்கும் விபரீத கொண்டாட்டங்கள்
பிறந்தநாள் என்றால் அதிகாலையில் எழுந்து குளித்து விட்டு புத்தாடைகள் அணிந்து பெற்றோர்கள் பெரியோர்களிடம் ஆசி வாங்கி அவரவர் நம்பிக்கையின் அடிப்படையில் கோயில், சர்ச், மசூதிக்கு சென்று வழிபாடுகள் நடத்தி குடும்பத்தோடும் ந ண்பர்களோடும் அமைதியாக கொண்டாடப்பட்டு வந்த பிறந்தநாள் கொண்டாட்டங்கள் தற்போது சுற்றுலா தலங்கள் மதுபானவிடுதிகள் பொது டங்களில் பொதுமக்களுக்கு டையூறாகவும் பட்டா கத்தி போன்ற கொடூரமான ஆயுதங்களாலும் பிறந்தநாள் கேக் வெட்டிக் கொண்டாடும் கலாச்சாரத்திற்கு சில இளைய தலை முறையினர் சென்று கொண்டிருக்கின்றனர்.
பில்டர்மணல் தயாரிக்கும் இயந்திரம் பறிமுதல் தப்பி ஓடிய கும்பலுக்கு வலை
திருப்பத்தூர் மாவட்டத்திற்கு உட்பட்ட காக்காகரை, சுந்திரம்பள்ளி, நத்தம் நாட்றம்பள்ளி செட்டேரிடேம் புதுப்பேட்டை வெலக்கல் நத்தம் ஜோலார்பேட்டை போன்ற பகுதியை ஒட்டி உள்ள ஓடை புறம்போக்கு, ஏரி, குளங்களில் இருந்து ஆங்காங்கே பல்வேறு இடங்களில் ஜேசிபி கனரக எந்திரங்களை கொண்டு இரவு பகலாக பல ஏக்கர் கணக்கில் பெரிய பெரிய பள்ளங்களை தோண்டி மணல் அள்ளி செல்லும் மாஃபியாக்களின் அட்டகாசம் தலைவிரித்து ஆடுகிறது.
புதுமை படைப்புக்கான உயர் தரவரிசை பட்டியலில் சோனா கல்லூரி
தேசிய அளவில் புதுமை படைப்புக்கான உயர் தர வரிசை பட்டியலில் சோனா தொழில்நுட்பக் கல்லூரி இடம் பெற்று சாதனை படைத்துள்ளது. சோனா தொழில் நுட்பக் கல்லூரி இந்திய தேசிய கல்வித்துறையின் அடல் உயர் கல்வி நிலையங்களின் புதுமை படைப்புக்கான தரவரிசை 2020ல் இடம் பெற்றுள்ளது.
வாடகை வாகன ஓட்டுநர்கள் ஆர்ப்பாட்டம்
கொரோனா பரவுவதை தடுக்கும் வகையில் ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்ட நிலையில் அனைத்து வாகன போக்குவரத்தும் ரத்து செய்யப்பட்டது. இதன் காரணமாக பல்லாயிரக்கணக்கான வாகன ஓட்டிகள் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளனர்.
திருமண மண்டப கட்டுமானப்பணியை சிவா எம்எல்ஏ ஆய்வு
புதுச்சேரி பாட்கோ நிதி மூலம் தாழ்த்தப்பட்ட மக்கள் பயன் பெறும் வகையில் உருளையன்பேட்டை தொகுதி ராஜா நகர், ஐயனார் கோவில் வீதியில் ரூ.1.80 கோடியில் 2000 சதுர அடியில் 3 தளத்தில் திருமண மண்டபம் சிவா எம்.எல்.ஏ., முயற்சியின் காரணமாக கட்டப்பட்டு வருகிறது.
சிதம்பரத்தில் ராஜீவ்காந்தி பிறந்தநாள் விழா
சிதம்பரத்தில் ராஜீவ்காந்தியின் 76வது பிறந்த நாள் விழா கொண்டாடப்பட்டது.
கோவிட் நோயாளிகளுக்கு தொடர் கண்காணிப்பு மையம் துவக்கம்
தமிழ்நாடு முதலமைச்சர் உத்தரவின் பேரில் ராஜீவ் காந்தி அரசு பொது மருத்துவமனையில் கோவிட் 19 குணமடைந்தவர்களுக்காக தொடர் கண்காணிப்பு மையம் தொடங்கப்பட்டுள்ளது. மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் டாக்டர் சி. விஜயபாஸ்கர் துவக்கி வைத்தார்.
முதலமைச்சர் மாநில இளைஞர் விருது பெற்றவர்களுக்கு ஆட்சியர் பாராட்டு
தமிழக முதலமைச்சர் தமிழக சட்டமன்ற பேரவையில் விதி எண். 110ன் கீழ் வெளியிட்ட அறிவிப்பைத் தொடர்ந்து சமுதாய வளர்ச்சிக்கு சேவையாற்றும் இளைஞர்களின் பணியை அங்கீகரிக்கும் பொருட்டு 2015ம் ஆண்டு முதல் "முதலமைச்சர் மாநில இளைஞர் விருது” ஒவ்வொரு ஆண்டும் சுதந்திர தினத்தன்று 15 முதல் 35 வயது வரை உள்ள 3 ஆண்கள் மற்றும் 3 பெண்களுக்கு வழங்கப்பட்டு வருகிறது.
மூப்பனார் பிறந்த நாள் விழாவையொட்டி 89 பேருக்கு வேட்டி சேலை வழங்கல்
மறைந்த த.மா.கா தலைவர் ஜி.கே.மூப்பனார் 89வது பிறந்த நாளையொட்டி சிதம்த்தில் மூப்பனார் பேரவை த.மா.கா மற்றும் ஜி.கே. வாசன் நற்பணி இயக்கத்தின் சார்பில் 89 பேருக்கு வேட்டி, சேலை மற்றும் பொதுமக்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டது.
மூலிகை கிருமிநாசினி தெளிக்கும் பணி
கொரோனா வைரஸ் பரவலை கட்டுப்படுத்தும் வகையில் அரசு மற்றும் தனியார் அமைப்புகள் சார்பில் பல்வேறு தடுப்பு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது.
புதுச்சேரி காங்கிரஸ் எம்பியின் சகோதரர் பாஜகவில் இணைந்தார்
புதுவை மாநில முன்னாள் முதல்வரும், தற்போதைய காங்கிரஸ் எம்பியுமான வைத்திலிங்கத்தின் இளைய சகோதரர் முத்துநாராயணன் பாஜகவில், அக்கட்சியின் புதுச்சேரி மாநிலத் தலைவர் சாமிநாதன் முன்னிலையில் தினங்களுக்கு முன் இணைந்துள்ளார்.
திமுக முன்னாள் அமைச்சர் ரகுமான்கான் மரணம்
தமிழகத்தில் பொதுமக்கள் மட்டுமின்றி கொரோனா தடுப்பு பணிகளில் ஈடுபட்டு வரும் அமைச்சர்கள் முதல் கடைநிலை ஊழியர்கள் வரை தொற்று பாதிப்புக்கு உள்ளாகி வருகின்றனர்.
சிவக்கொழுந்து தலைமையில் ஆய்வுக் கூட்டம்
இலாசுப்பேட்டை அசோக் நகரில் பயனற்று இருக்கும், கல்வித்துறைக்கு சொந்தமான கட்டிடத்தை இடிப்பது, இலாசுப்பேட்டை, அசோக் நகர் சமுதாயக்கூடத்தின் பின்புறத்தில் முப்பது வருடங்களுக்கு மேல் குடியிருக்கும் குடும்பங்களுக்கு பட்டா வழங்குவதுமற்றும் இலாசுப்பேட்டையில் துணை மின் நிலையம் அமைப்பது குறித்து சட்டப்பேரவைத் தலைவர் சிவக்கொழுந்து தலைமையில் ஆய்வுக் கூட்டம் அவரது அறையில் நடைபெற்றது.
பொது இடங்களில் விநாயகர் சிலை வைத்து வழிபாடு நடத்த அனுமதி முதலமைச்சரிடம் பாஜக, இந்து முன்னணி மனு
விநாயகர் சதுர்த்தி விழா வரும் 22ஆம் தேதி கொண்டாடப்படவுள்ள நிலையில் கொரோனா பரவலை தடுக்கும் வகையில் புதுச்சேரியில் பொது இடங்கள், கோவில் முன்பு விநாயகர் சிலை வைத்து வழிபடக் கூடாது என அரசு உத்தரவு பிறப்பித்தது இருந்தது.
புதுச்சேரியில் ஒரே நாளில் 554 பேருக்கு தொற்று: 8 பேர் பலி
புதுச்சேரியில் இதுவரை இல்லாத அளவுக்கு ஒரே நாளில் 554 பேருக்கு கரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில், மேலும் 8பேர் உயிரிழந்துள்ளனர். இதனால் பாதிப்பு எண்ணிக்கை 9,000 ஐ கடந்தது.
ஏனாமில் வெள்ளத்தடுப்பு சுவர் கட்டஆளுநர் அனுமதி அளிக்காததால் மக்கள் பாதிப்பு: அமைச்சர் குற்றச்சாட்டு
புதுவை மாநிலம், ஏனாமில் வெள்ளத்தடுப்புச் சுவர் கட்ட துணை நிலை ஆளுநர் கிரண் பேடி அனுமதி அளிக்காததால், வெள்ளத்தால் 600 குடும்பங்கள் பாதிக்கப்பட்டுள்ளதாக சுகாதாரத் துறை அமைச்சர் மல்லாடி கிருஷ்ணாராவ் குற்றஞ்சாட்டினார்.
பொதுமக்கள் நலன் கருதி இ-பாஸில் தளர்வு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி பேச்சு
வேலூர், ராணிப்பேட்டை, திருப் பத்தூர் வளர்ச்சி பணி, கொரோனா தடுப்பு குறித்த ஆலோசனையில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி கூறியதாவது: பொதுமக்கள் நலன் கருதி இ-பாஸில் தளர்வுகள் கொண்டுவரப்பட்டுள்ளது.
கிராமங்களில் மக்களுடன் உறவாடும் மயில்கள்
புதுச்சேரி அருகே கிராமங்களில் தெருக்கள், வீதிகளுக்கு வரும் மயில்கள் மக்களுடன் நெருங்கி உறவாடி வருகின்றன.
மாணவர் சேர்க்கை விழிப்புணர்வு பயணம்
சேமக்கோட்டையில் 2020-2021 கல்வி ஆண்டிற்கான மாணவர் சேர்க்கை விழிப்புணர்வு பயணம் நடைபெற்றது.
தொழிற்சங்கங்கள் ஆர்ப்பாட்டம்
புதுச்சேரியில் ஏஐடியூசி, சிஐடியூ, ஐஎன்டியூசி, ஏஐசிசிடியூ, எல்எல்எப், ஏஐயூடியூசி, எம்எல்எப், அரசு ஊழியர் சம்மேளனம் உள்ளிட்ட சங்கங்களின் சார் பில் புதுச்சேரி தலைமை தபால் நிலையம் முன்பு ஆர்ப்பாட்டம் இன்று நடைபெற்றது.
சுதந்திர தினவிழாவில் நலத்திட்ட உதவி வழங்கல்
திருப்பத்தூர் மாவட்டம் திருப்பத்தூர் ஆயுதப்படை மைதானத்தில் 74வது சுதந்திர தினவிழாவை முன்னிட்டு திருப்பத்தூர் மாவட்ட ஆட்சியர் சிவனருள் தேசிய கொடி ஏற்றினார்.
தாழக்குடியில் விஷ வண்டு அழிப்பு தீயணைப்புதுறையினர் நடவடிக்கை
தாழக்குடி, சந்தவிளை பகுதியை சேர்ந்த குணமணி. இவருக்கு சொந்தமான தென்னந்தோப்பு தாழக்குடி அரசு மேல்நிலைப்பள்ளி அருகில் உள்ளது.
ஆரணி ஸ்ரீபூண்டி பொன்னெ நாதர் ஜினாலயத்தில் விளக்கு பூஜை
ஆரணி அருகே ஸ்ரீபூண்டி பொன்னெ நாதர் ஜினாலயத்தில் ஆடி மாதம் 5ம் வெள்ளிக்கிழமை முன்னிட்டு, பத்மாவதிக்கும், மஹாலட்சுமிக்கு குத்துவிளக்கு ஏற்றி, சிறப்பு பூஜைகள் செய்து பெண் பக்தர்கள் வழிபட்டனர். தி.மலை மாவட்டம் ஆரணி தாலுகா இரும்பேடு கிராமத்தில் அமைந்துள்ள ஆயிரம் ஆண்டுகளுக்கு மேலாக பழமை வாய்ந்த ஸ்ரீ பூண்டி பொன்னெ நாதர் ஜினாலயம் உள்ளது.
பெண்களுக்கு எதிரான வன்முறை விழிப்புணர்வு நிகழ்ச்சி
திருச்சி மாவட்டம் நவல்பட்டு கிராமத்தில் மாவட்ட காவல் துறை குழந்தை கடத்தல் தடுப்பு பிரிவு மற்றும் தமிழி தொண்டு நிறுவனம், அன்னை தெரசா டிரஸ்ட், நவல்பட்டு கிராம் குழு இணைந்து கொரோனா காலத்தில் பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு ஏற்படும் வன்முறை நிகழ்வில் இருந்து மீள்வதற்கான விழிப்புணர்வு நிகழ்ச்சி நடந்தது.
மாமன்னன் வெங்கலராஜன் பிறந்தநாள் விழா
மாமன்னன் வங்கலராஜன் பிறந்தநாள் விழாவை முன்னிட்டு சாமிதோப்பு அன்பு வனத்திலுள்ள வெங்கலராஜன் திருவுருவச்சிலைக்கு குமரி மாவட்ட நாடார் கூட்டமைப்புகள் சார்பில் மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது.
ரத்ததான முகாம்
கொரோனா வைரஸ் பேரிடர் காலத்திலும் மக்களின் உயிர் காக்கும் வகையில் ரத்ததான முகாம்களை தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் நடத்தி வருகின்றது.
கோத்தகிரி ஊராட்சி ஒன்றியத்தில் திட்டப்பணிகளை ஆட்சியர் ஆய்வு
நீலகிரி மாவட்டம் கோத்தகிரி ஊராட்சி ஒன்றியத்திற் குட்பட்ட பகுதிகளில் மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை சார்பில் ரூ.1.50 கோடி மதிப்பில் முடிக்கப்பட்ட பல்வேறு வளர்ச்சி திட்டப்பணிகளை மாவட்ட ஆட்சித்தலைவர் இன்னசென்ட் திவ்யா பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.
குடிநீர் பிரச்னை: மக்கள் சாலை மறியல்
திருப்பத்தூர் மாவட்டம் கதிரமங்கலம் பஞ்சாயத்துக்கு உட்பட்ட பகுதியில் மாதமாக அத்தியாவசிய தேவையான குடிநீர் வரவில்லை என்பதற்காக திருப்பத் தூரில் இருந்து புதுப்பேட்டை செல்லும் சாலையில் மறியலில் ஈடுபட்டனர்.
காதல் திருமணம் செய்த இளம்பெண் தற்கொலை
திருப்பத்தூர் மா வட்டம் திருப்பத்தூர் வேலன் நகர் பகுதியை சேர்ந்த சக்திவேல் (21) என்பவர் ஜோலார் பேட்டை அடுத்த கிராமத்தை சேர்ந்த பூர்ணிமாதேவி ஏலகிரி (21) ஆகிய இருவரும் கடந்த 10 மாதங்களுக்கு முன்பு பெற்றோர்களின் எதிர்ப்பை மீறி காதலித்து திருமணம் செய்து கொண்டுள்ளனர்.
காரைக்காலில் முழு ஊரடங்கு சாலைகள், கடைகள் வெறிச்சோடின
காரைக்காலில் கொரோனா தொற்றை தடுக்கும் வகையில், நேற்று முழு ஊரடங்கு அமலுக்கு வந்ததால், மாவட்டத்தின் பிரதான சாலைகளில், கடைகள், பொதுமக்கள் நடமாட்டம் இன்றி வெறிச்சோடி காணப்பட்டது.