CATEGORIES
Kategorier
புதுச்சேரியில் 122 பேருக்கு கொரோனா: ஒருவர் பலி
இந்தியாவில் கொரோனா வைரஸ் வேகமாக பரவி வருகிறது. ஊரடங்கு கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டிருப்பதாலும், பரிசோதனைகளை அதிகரிப்பதாலும் தொற்று உறுதி செய்யப்பட்டவர்களின் எண்ணிக்கை தொடர்ந்து உயர்கிறது. அதேசமயம் குணமடைந்தவர்களின் எண்ணிக்கை உயர்ந்து வருவது ஆறுதல் அளிப்பதாக உள்ளது.
டிக்டாக் மூலம் அமெரிக்க தேர்தலில் சீனா தலையிட வாய்ப்பு: செனட் சபை உறுப்பினர்கள் குற்றச்சாட்டு
டிக்டாக் செயலி மூலம் சீன அரசு அமெரிக்க அதிபர் தேர்தலில் தலையிட வாய்ப்புள்ளதால், அதனை தடை செய்வது குறித்து பரிசீலிக்க வேண்டும் என செனட் சபை உறுப்பினர்கள் அதிபர் ட்ரம்ப்பிடம் கோரிக்கை வைத்துள்ளனர்.
வரைமுறை இல்லாமல் பதிவுகள் யூடியூப் உள்ளிட்ட சமூக வலைதளங்களை கண்காணிக்க சென்சார் அமைப்பு கோரி உயர் நீதிமன்றத்தில் வழக்கு
சமீபகாலமாக சமூக வலைதளங்களில் மதம், ஜாதி, தனிப்பட்ட நபர்கள் குறித்த அவதூறு வரலாற்றை திரித்து, இரு பிரிவினருக்கிடையே வன்முறையை தூண்டுவது, ஆபாசமாக, அவதூறாக சித்தரிப்பது, பெண்களை அவதூறாக சித்தரித்து செய்திகள் போடுவது என பல்வேறு விஷயங்கள் பேசுபொருளாகவும், சர்ச்சையாகவும் மாறிவருகிறது.
ஜெயலலிதா நினைவிடம் கட்ட கூடுதலாக ரூ.7 கோடி ஒதுக்கீடு
ஜெயலலிதா நினைவிட கட்டுமானப் பணிகளுக்கு, கூடுதலாக, 7 கோடி ரூபாயை, அரசு ஒதுக்கீடு செய்துள்ளது.
தார்சாலை அமைக்கும் பணிக்கு பூமிபூஜை
நாமக்கல் மாவட்டம், கொல்லிமலை ஊராட்சி ஒன்றியம், குண்டுனிநாடு ஊராட்சியில் 3 வது மாற்றுவழிச்சாலை வேலிக்காடு முதல் சேரடி வரை தார்சாலை அமைக்கும் பணியினை சேந்தமங்கலம் சட்டமன்ற உறுப்பினர் சந்திரசேகரன் முன்னிலையில் மாவட்ட ஆட்சித்தலைவர் மெகராஜ் பூமிபூஜை செய்து துவக்கி வைத்தார்.
மாற்றுத்திறனாளிகள் கஞ்சி காய்ச்சும் போராட்டம்
புதுச்சேரி காங்கிரஸ் அரசு நான்கு ஆண்டுகள் முடிவடைந்த நிலையில் மாற்றுத்திறனாளிகளின் நீண்ட நாள் கோரிக்கையை நிறைவேற்றத் தவறியதால், புதுச்சேரி அரசை கண்டித்து, மாற்றுத்திறனாளிகளின் கோரிக்கையை நிறைவேற்ற கோரி புதுச்சேரி சமுக நலத்துறை அலுவலகம் எதிரில் கஞ்சி காய்ச்சும் போராட்டம் நடத்தினர்.
சளி மாதிரிகள் சேகரிக்கும் பணிகளை ஆட்சியர் ஆய்வு
தூத்துக்குடி மாநகராட்சிக்குட்பட்டகரிக்குளம் காலனி, குறிஞ்சிநகர், முள்ளக்காடு மற்றும் பழைய பேருந்து நிலையம் ஆகிய பகுதிகளில் மேற்கொள்ளப்பட்டு வரும் கொரோனா தடுப்பு பணிகள் மற்றும் காய்ச்சல் சிறப்பு முகாமில் சளி மாதிரிகள் சேகரிக்கும் பணிகளை மாவட்ட ஆட்சித் தலைவர் சந்தீப் நந்தூரி பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
ஊரடங்கு நீட்டிப்பா? மாவட்ட ஆட்சியர்களுடன் முதல்வர் தீவிர ஆலோசனை
தமிழகத்தில் கொரோனா பரவலை கட்டுப்படுத்துவதற்காக கடந்த மார்ச் மாதம் 25ந் தேதி முதல் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. அதையடுத்து பல்வேறு தளர்வுகளுடன் இதுவரை 5 முறை ஊரடங்கு நீட்டிக்கப்பட்டு உள்ளது.
அரசு பள்ளிகளில் மாணவர் சேர்க்கை தற்போதைக்கு இல்லை: அமைச்சர் செங்கோட்டையன்
அரசு பள்ளிகளில் மாணவர் சேர்க்கை தற்போதைக்கு இல்லை என்று பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார்.
காரைக்கால் நகராட்சி ஊழியர்கள் பணி புறக்கணித்து ஆர்ப்பாட்டம்
நிலுவையில் உள்ள 4 மாத ஊதியம் மற்றும் ஓய்வூதியத்தை வழங்க வலியுறுத்தி, காரைக்கால் நகராட்சி வாயிலில் ஊழியர்கள் நேற்று பணி புறக்கணிப்பு செய்து ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
புதுச்சேரியில் இன்று மேலும் 141 பேருக்கு கொரோனா பாதிப்பு
புதுச்சேரியில் இன்று ஒரே நாளில் 141 பேருக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.
மளிகை பொருட்கள் வழங்கல்
புதுச்சேரி மறைமலையடிகள் சாலை கீரின் பேலஸ் அருகில் உணவகம் பாலசந்திரன் தானி நிறுத்தம் (ஆட்டோ ஸ்டேண்ட்) நாம் தமிழர் தொழிலாளர் நலச்சங்கத்தின் சார்பாக தமிழரின் பெருமை அறிவியல் விஞ்ஞானி அப்துல் கலாம் திருவுருவ படத்திற்கு மலர் தூவி புகழ் வணக்கம் செலுத்தப்பட்டது.
டாஸ்மாக் ஊழியருக்கு கொரோனா தொற்று
ஆல்வாய் மொழியில் டாஸ்மார்க் ஊழியருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதால் கடை மூடப்பட்டது, மது பிரியர்கள் அச்சமடைந்துள்ளனர்.
ஊரடங்கு நீட்டிப்பா? மருத்துவ நிபுணர் குழுவுடன் நாளை மறுநாள் முதல்வர் ஆலோசனை
ஊரடங்கை நீட்டிப்பதா இல்லையா என்பது குறித்து மருத்துவ நிபுணர் குழுவுடன் நாளை மறுநாள் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி ஆலோசனை நடத்துகிறார்.
முகக்கவசம் வழங்கும் விழா
தர்மபுரி மாவட்டம் மொரப்பூரில் செயல்பட்டுவரும் நமது மொரப்பூர் குழு சார்பில் ஆயிரம் இலவச முகக் கவசங்கள் மற்றும் மரக்கன்றுகள் வழங்கும் விழா மொரப்பூர் பேருந்து நிலையத்தில் நடைபெற்றது.
மாற்றுத்திறனாளிகளுக்கு நிவாரணம் வழங்கல்
செங்கல்பட்டு மாவட்டம் திருப்போரூர் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட தாழம்பூர் ஊராட்சியில் தமிழக அரசால் மாற்றுத்திறனாளிகள் துறையின் மூலம் அங்கீகரிக்கப்பட்ட நாற்பதுக்கும் மேற்பட்ட மாற்றுத் திறனாளிகள் உள்ளனர்.
சாலையை சரி செய்யக்கோரி மரம் நடும் போராட்டம்
ஆரல்வாய்மொழியில் தி.மு.க சார்பில் பெருமாள்புரம் குருசடி சாலையை சரி செய்ய வேண்டி மரம் நடும் போராட்டம் நடைபெற்றது.
பாதாளசாக்கடை புதுப்பித்து கட்டும் பணிக்கு பூமி பூஜை
புதுச்சேரி முத்தியால்பேட்டை தொகுதி அதிமுக சட்டமன்ற உறுப்பினர் வையாபுரி மணிகண்டன் அலுவலகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:
கொரோனா தொற்று உறுதியானதும் வாடகைக்கு குடியிருந்தவர்களை வீட்டுக்குள் பூட்டிவைத்த உரிமையாளர்
கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதும் வாடகைக்கு குடியிருந்தவர்களை வீட்டு உரிமையாளர் பூட்டிவைத்த சம்பவம் அப்பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
தோவாளையில் குரங்குகள் அட்டகாசம்: பொதுமக்கள் அவதி
தோவாளை ஊராட்சிக்கு உட்பட்ட வடக்கு மலைப் பகுதிகளிலும் தெற்கு மலைப்பகுதிகளிலும் அதிகமான வன விலங்குகள் காணப்படுகின்றன. குறிப்பாக குரங்குகள் அதிகமாக காணப்படுகின்றது.
வீட்டில் புகுந்த மலைபாம்பு பிடிபட்டது
ஆரல்வாய்மொழி, கணேசபுரத்தை சார்ந்த பெருமாள் என்பவர் மகன் கிறிஸ்டோபர்.
தண்ணீர் தொட்டியில் சிறுவன் சடலம் போலீசில் உறவினர்கள் சந்தேகபுகார்
குமரி மாவட்டம் ராஜாக்கமங்கலம் போலீஸ் சரகம் பாம்பன்விளை பகுதியை சேர்ந்தவர் அருண் ஜெனிஸ் (30). கட்டிய தொழிலாளி. இவருக்கு ஏற்கனவே திருமணமாகி மனைவி இறந்துவிட்டார்.
கலாம் நினைவு தினத்தை முன்னிட்டு 1000 மரக்கன்று நடும் விழா துவக்கம்
ஏவுகணையின் தந்தை, கல்வியாளர், கவிதை ஆற்றல் மிக்கவர், நூலாசிரியர் என பல பரிமாணங்களைக் கொண்டவராக விளங்கியவர், முன்னாள் ஜனாதிபதி அப்துல் கலாம்.
ரேசன் கடைகளில் இலவச முக கவசங்கள் வழங்கும் திட்டம்: முதலமைச்சர் தொடங்கி வைத்தார்
கொரோனா வைரஸ் பரவாமல் தடுக்க ரேசன் கடைகளில் இலவச முக கவசங்கள் வழங்கும் திட்டத்தை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தொடங்கி வைத்தார்.
இந்தியா நோக்கி புறப்பட்டன ரஃபேல் போர் விமானங்கள்
புதன்கிழமை அம்பாலா வந்தடையும்
தி.மலை ஒன்றியத்தில் வளர்ச்சி திட்ட பணி: திட்ட இயக்குநர் ஆய்வு
திருவண்ணாமலை ஊராட்சி ஒன்றியத்துக்குட்பட்ட பழையனூர் கண்டியாங்குப்பம் தலையாம்பள்ளம் காட்டாம்பூண்டி உள்ளிட்ட ஊராட்சிகளில் ரூ.4 கோடி மதிப்பீட்டில் நடைபெற்றுவரும் பல்வேறு வளர்ச்சி திட்ட பணிகளை மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் ஜெயசுதா நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
வீடுகளுக்கு முக கவசம் வழங்கல்
தோவாளை ஊராட்சி மன்றம் சார்பில் அனைத்து வீடுகளுக்கும் முக கவசம் வழங்கப்பட்டது.
உணவு, இடம் இன்றி தவித்த பீகார் தொழிலாளர்கள் மீட்பு
பீகார் மாநிலம் பாட்னா பகுதியைச் சேர்ந்த 52 தொழிலாளர்கள் வேலைக்காக ஆந்திர மாநிலம் குப்பம் பகுதிக்கு அழைத்து வரப்பட்டனர். பின்னர் அவர்கள் அனைவரும் புதுச்சேரி மேட்டுப்பாளையத்தில் உள்ள தனியார் கம்பெனியில் கடந்த ஏழாம் தேதி பணிமர்த்தப்பட்டனர்.
ஆளுநர் உரைக்கு செல்லும் பாதையில் அதிமுக எம்எல்ஏக்கள் தர்ணா முயற்சி
புதுச்சேரி - விழுப்புரம் செல்லும் வில்லியனூர் புறவழி புறவழி சாலையில் அமைந்துள்ள தமிழக முன்னாள் முதலமைச்சர் எம்ஜிஆரின் உருவச்சிலைக்கு மர்மநபர் ஒருவர் காவி துண்டு அணிவித்த சம்பவம் புதுச்சேரியில் பரபரப்பை ஏற்படுத்தியது.
அதிமுக நிர்வாகிகளுக்கு ரூ.15 லட்சம் நிதி தூசி மோகன் எம்எல்ஏ வழங்கினார்
திருவண்ணாமலை வடக்கு மாவட்டத்தில் ஏழ்மை நிலையில் உள்ள அதிமுக நிர்வாகிகளுக்கு கொரோனா நிதியாக தலா ரூ.5ஆயிரம் வீதம் ரூ.15 லட்சத்தை தனது சொந்த பணத்திலிருந்து தூசி மோகன் எம்.எல்.ஏ வழங்கினார்.