CATEGORIES
Kategorier
சில்லாரஹள்ளி ஊராட்சியில் கிருமிநாசினி தெளிப்பு
தர்மபுரி மாவட்டம், பாப்பிரெட்டிப்பட்டி வட்டம், கடத்தூர் ஊராட்சி ஒன்றியத்துக்கு உட்பட்ட சில்லாரஹள்ளி ஊராட்சியில் கொரோனோ தடுப்பு கிருமி நாசினி மருந்து தெளிப்பு பணியினை கடத்தூர் வட்டார வளர்ச்சி அலுவலர்கள் அருள்மொழி தேவன், கணேசன் ஆகியோர் துவக்கி வைத்தனர்.
கொரோனாவில் இருந்து விரைவில் விடுதலை உலகின் முதல் தடுப்பு மருந்தை மனிதர்களுக்கு செலுத்தி ரஷ்யா வெற்றி
கொரோனா தொற்றுக் எதிரான தடுப்பு மருந் மனிதர்கள் மீது செலுத்தி சோதனை நடத்தி வெற்றி பெற்று விட்டதாக ரஷ்ய பல்கலைக்கழகம் அறிவித்துள்ளது.
கடைக்காரர்கள் முக கவசம் அணியாதவர்களுக்கு பொருட்கள் தரக்கூடாது: காவவல்துறை அறிவுறுத்தல்
முக கவசம் அணியாமல் வருபவர்களுக்கு பொருட்கள் தர வேண்டாம் என்று கடைக் காரர்களை போலீஸ் சூப்பிரண்டு அறிவுறுத்தினார்.
வி.சி கட்சி தொழிலாளர் விடுதலை முன்னணி மாநில செயலாளருக்கு கொலை மிரட்டல்
காவல் உதவி ஆணையரிடம் புகார்
வேளாண்மை உற்பத்தியாளர் சங்கத்தில் கிருமிநாசினி தெளிப்பு
தென்காசிமாவட்டம் சங்கரன் கோவிலில் வேளாண்மை உற்பத்தியாளர்கள் கூட்டுறவு விற்பனை சங்கத்தில் கிருமிநாசினி தெளிக்கப்பட்டது. மேலும் சங்கரன் கோவிலில் உள்ள மத்திய கூட்டுறவு வங்கி மற்றும் அனைத்து கூட்டுறவு சங்கங்களிலும் சங்கரன்கோவில் நகராட்சி நிர்வாகத்தின் சார்பில் கிருமி நாசினி தெளிக்கப்பட்டது.
புதுவை பட்ஜெட் ஜூலை 16இல் தாக்கல்?
புதுவை பட்ஜெட்டுக்கு மத்திய அரசு அனுமதியளித்த நிலையில், சட்டப்பேரவையில் நிகழ் நிதியாண்டுக்கான (2020-2021) பட்ஜெட் வருகிற 16ஆம் தேதி தாக்கல் செய்யப்படவுள்ளது.
சொத்து தகராறில் ஒருவருக்கு கத்தி வெட்டு
திருப்பத்தூர் மாவட்டம் நாட்றம்பள்ளி பகுதியில் உள்ள பாரதி கவுண்டர் தெருவில் வசிப்பவர் காளியப்பன் (70). இவருக்கு காந்தா சந்திரா என்ற இரண்டு மனைவிகள். இதில் முதல் மனைவி சந்திராவிற்கு தேவேந்திரன் (53) என ஒரு மகனும், இரண்டாவது மனைவிக்கு எழில்பாபு, லட்சுமி, வீர லட்சுமி, பிரித்தி விராஜ் கணேஷ் என்கிற ஆறு பிள்ளைகளும் உள்ளனர் .
ஆசியாவின் மிகப்பெரிய சூரிய மின் சக்தி பூங்கா பிரதமர் மோடி நாட்டுக்கு அர்ப்பணித்தார்
ஆசியாவின் மிகப்பெரிய சூரிய மின் சக்தி திட்டத்தை பிரதமர் மோடி இன்று நாட்டுக்கு அர்ப்பணித்தார்.
அம்பேத்கர் இல்லம் சேதம் அம்பேத்கர் இந்திய குடியரசு கட்சி கண்டனம்
சேலம் அம்பேத்கர் இந்திய குடியரசு கட்சி சேலம் மண்டல தலைவர் விஸ்வநாதன் வெளியிட்டுள்ள அறிக்கை: சட்ட மாமேதை அம்பேத்கர் வாழ்ந்த இல்லம் ராஜ்கிரஹா மும்பை தாதர் பகுதியில் உள்ளது.
108 ஆம்புலன்ஸ் ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்
கடலூர் தொழிலாளர் மற்றும் தொழிற்சங்க விரோத போக்கை கண்டித்து 108 ஆம்புலன்ஸ் தொழிலாளர் சங்கத்தினர் எம்ஆர்ஐ கண்டித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
சிறுநீரக செயலிழப்பு மாணவனுக்கு டயாலிசிஸ் சிகிச்சை அளித்து காப்பாற்றிய அரசு மருத்துவமனை
புதுக்கோட்டை மாவட்டம் காட்டு பாவா பள்ளிவாசல் பகுதியைச் சேர்ந்த கல்லூரி மாணவர் மைக்கேல் வில்லியம்ஸ் 18. இவர் சிறுநீரக செயலிழப்பு காரணமாக மதுரையில் உள்ள தனியார் மருத்துவமனையில் தொடர்ந்து சிகிச்சை பெற்று வந்தார். 62 முறை டயாலிசிஸ் செய்துள்ள அவர் அதற்கென ஐந்து லட்சம் ரூபாய் வரை செலவு செய்துள்ளார்.
அம்பேத்கர் இல்லத்தின் கண்ணாடியை உடைத்தவர்களை குண்டர் சட்டத்தில் கைது செய்ய வேண்டும்
சமநீதி இயக்க நிறுவன தலைவர் பேட்டி
குருங்காடு திட்டத்தின் கீழ் மரக்கன்று நட்டு பராமரிப்பு பணி: அதிகாரிகள் ஆய்வு
ஓரியூர் ஊராட்சிக்கு உட்பட புலியூர் கிராமத்தில் குருங்காடு திட்டத்தின் கீழ் வைக்கப்பட்டுள்ள மரக்கன்றுகளையும் பராமரிப்பு பணிகளையும் பார்வையிட்ட மாவட்ட திட்ட இயக்குனரும், கூடுதல் ஆட்சியர் பிரதிப்குமார் மற்றும் வட்டார வளர்ச்சி அலுவலரும், முறையாக இந்த மரக்கன்று திட்டத்தை பாரமரித்து வருபவதற்கு பாராட்டுகளை தெரிவித்தனர்.
கொரோனா பாதிப்பில் தொடர்ந்து 2வது இடம் தமிழகத்தில் தடுப்பு நடவடிக்கை பணிகளை மத்திய குழு ஆய்வு
தமிழக அரசு எடுத்து வரும் கொரோனா தடுப்பு நடவடிக்கைகளை பார்வையிட 3வது முறையாக மத்திய குழு தமிழகம் வந்துள்ளனர்.
கொய்யாப்பழம் வியாபாரி கொலை வழக்கில் 3 பேர் கைது
விளாத்திகுளம் அருகே வேடுபட்டி சொக்கலிங்கபுரத்தை சேர்ந்த சன்முகையத் தேவர் மகன் முத்துப்பாண்டி.
தேனி மாவட்டத்தில் ரூ.68 லட்சம் மதிப்பில் சாலை சீரமைக்கும் பணி
மயிலாடும்பாறை அருகே பாறைக்குளம் ஓடை முதல் சிறப்பாறை வரை ரூ.68 லட்சம் மதிப்பில் தார் சாலை அமைக்கும் பணி நடந்து வருவதால் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
பாரதிதாசன் மகன் மன்னர் மன்னனுக்கு அஞ்சலி கூட்டம் கடலூர் தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் சங்கம் நடத்தியது
பாவேந்தர் பாரதிதாசனின் மகன் கவிஞர் மன்னர்மன்னன் நேற்று முன்தினம் இயற்கை எய்தினார்.
ரெட்டமலை சீனிவாசன் பிறந்த நாள் நிகழ்ச்சி திருச்சி விடுதலை சிறுத்தை கொண்டாட்டம்
திருச்சியில் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் சார்பில் விடுதலை போராளி திவான் பகதூர் தாத்தா ரெட்டமலை சீனிவாசன் 161வது பிறந்த நாள் புகழஞ்சலி நிகழ்ச்சி மிளகுபாறை பகுதியில் நடைபெற்றது.
மாணிக்கம்பாளையம் அரசு பள்ளியில் தனிமைப்படுத்தப்பட்டவர்கவர்களிடம் ஆட்சியர் ஆய்வு
எலச்சிபாளையம் ஊராட்சி ஒன்றியம், மாணிக்கம்பாளையம் அரசினர் மேல்நிலைப்பள்ளியில் தனிமைப்படுத்தப்பட்டுள்ள வெளிமாநிலங்கள் மற்றும் வெளிமாவட்டங்களில் இருந்து வந்த நபர்களை மாவட்ட ஆட்சித்தலைவர் மெகராஜ் நேரில் பார்வையிட்டு, உணவு மற்றும் தங்கும் வசதிகள் குறித்து கேட்டறிந்தார்.
மின்துறை அமைச்சர் தங்கமணிக்கு கொரோனா தொற்று உறுதி
தமிழகத்தில் கொரோனா தொற்று நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே செல்கது. கொரோனா தொற்றால் மக்கள் பிரதிநிதிகளும் பாதிப்புக்கு உள்ளாகி வருகின்றனர். இந்த நிலையில், மின்சாரத்துறை அமைச்சர் தங்கமணிக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
கொரோனா நோய் எதிர்ப்பு சக்தி ஓமியோபதி மாத்திரை
நரிக்குறவர்களுக்கு வெற்றி மக்கள் இயக்கம் வழங்கியது
ஐதராபாத்தில் தொடங்கியது கொரோனா தடுப்பூசி பரிசோதனை
இந்தியாவின் முதல் தடுப்பூசியான 'கோவாக்சின்' அடுத்தக்கட்ட பரி சோதனை தொடங் கியது. மனிதர்களிடம் நடத்தப்படும் இப்பரிசோதனை ஐதராபாத் நிஜாம் அரசு மருத்துவமனையில் தொடங்கியது.
அனைத்து தொழில் சங்கம் ஆர்ப்பாட்டம்
ஆரல்வாய்மொழி தபால் நிலையம் முன்பு அனைத்து தொழில் சங்கத்தின் சார்பில் கண்டன ஆர்பாட்டம் நடந்தது.
தமிழக சித்த மருத்துவர் கண்டுபிடித்த இம்ப்ரோ பொடியில் கொரோனாவை தடுக்கும் திறன் உள்ளதா?
மத்திய அரசு பரிசோதிக்க உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவு
கொரோனா தடுப்பு பணிக்கு சென்னையில் 50 துரித செயல்வாகனங்கள்
முதல்வர் கொடியசைத்து தொடங்கி வைத்தார்
புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் 36 பேர் பீகார், உத்திரபிரதேசம் அனுப்பிவைப்பு
காரைக்காலில் கடந்த 3 மாதமாக வேலையின்றி தவித்து வந்த வெளி மாநிலங்களைச் சேர்ந்த 36 புலம்பெயர்ந்த தொழிலாளர்கள், மாவட்ட நிர்வாகம் ஏற்பாட்டின் பேரில், அவர்களது சொந்த மாநிலமான பீகார், உத்திரபிரதேசத்திற்கு, நேற்று புதுச்சேரி அரசு பேருந்து மூலம் அனுப்பி வைக்கப்பட்டனர்.
சிறுமி எரித்து கொலை
திருச்சி மாவட்டம் சோமரசம்பேட்டை காவல் நிலையத்திற்கு உட்பட்ட பகுதி முள்ளிகரும்பூர்.
இந்தியாவைத் தொடர்ந்து டிக் டாக்கை தடைசெய்யும் அமெரிக்கா?
அமெரிக்க மாநிலச் செயலாளர் மைக் பாம்பியோ விரைவில் அமெரிக்காவில் டிக்டாக் செயலியை தடை செய்யப்போவதாகத் தெரிவித்துள்ளார்.
செந்நாய் கடித்து கடமான் பலி
வருசநாடு அருகே மண்ணூத்து அடுத்துள்ள மேகமலை வனப்பகுதியில் கடமான்கள் அதிக அளவில் உள்ளது.
கொரோனா அச்சுறுத்தல் காரணமாக தாஜ்மஹால் திறக்கப்படாது
உலகப் புகழ்பெற்ற சுற்றுலா சின்னமான தாஜ் மஹால் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக திறக்கப்படாது என தெரிவிக்கப்பட்டு உள்ளது