CATEGORIES
Kategorier
பிளஸ்2 தேர்வு முடிவுகள் ஜூலை முதல் வாரத்தில் வெளியாகும்: அமைச்சர் செங்கோட்டையன்
பிளஸ் 2 தேர்வு முடிவுகள் ஜூலை முதல் வாரத்தில் வளியாகும் என்று பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார்.
தோவாளை வட்டார அளவிலான கொரோனா விழிப்புணர்வு பிரச்சாரம்
தோவாளை வட்டார அளவிலான கொரோனா விழிப்புணர்வு பிரச்சாரம் தொடங்கியது.
கொரோனா தொற்று ஜூலையில் ஆயிரமாக அதிகரிக்கும்
புதுச்சேரி ஆளுனர் கிரண்பேடி எச்சரிக்கை
மத்திய அரசு ஆதரவு அளிக்கவில்லை - முதல்வர் நாராயணசாமி குற்றச்சாட்டு
புதுச்சேரி கதிர்காமத்தில் உள்ள காரோனா அரசு சிறப்பு மருத்துவமனையில் முதலமைச்சர் நாராயணசாமி, சுகாதார துறை அமைச்சர் மல்லாடி கிருஷ்ணாராவ் ஆகியோர் இன்று நேரடியா பாக சென்று கொரோனா நோயாளிகள் சிகிச்சை பெற்று வரும் பகுதிகளை ஆய்வு செய்தனர். பின்னர் மருத்துவ அதிகாரிகள், மருத்துவர்கள் உடன் ஆலோசனைக் கூட்டம் நடத்தினர். இக்கூட்டத்தில் முதல்வர் நாராயணசாமி பேசியதாவது:
கடலூரில் பைக் திருடிய, குறைந்த விலைக்கு வாங்கிய 5 பேர் கைது - 19 வாகனங்கள் பறிமுதல்: தனிப்படைக்கு எஸ்.பி. ஸ்ரீஅபினவ் பாராட்டு
கடலூர் பகுதிகளில் தொடர்ந்து இருசக்கர வாகனங்கள் திருட்டு போவதாக புகார்கள் வந்ததின் அடிப்படையில் மாவட்ட எஸ்.பி. ஸ்ரீஅபினவ் உத்தரவு படி, டிஎஸ்பி சாந்தி மேற்பார்வையில் முதுநகர் இன்ஸ்பெக்டர் பால் சுதர் தலைமையில் சப் இன்ஸ்பெக்டர் ரவி, சிறப்பு சப் இன்ஸ்பெக்டர்கள் மூர்த்தி, சங்கரலிங்கம், போலீசார் செந்தில்வேலன், கருணாகரன், சிவக்குமார், சுதாகர் ஆகியோர் கொண்ட தனிப்படை அமைக்கப்பட்டு தீவிர தேடுதல் வேட்டை நடத்தப்பட்டது.
ரத்த பரிமாற்று சிகிச்சையால் 6695 நபர்கள் பயனடைந்தனர்: மருத்துவ கல்லூரி முதல்வர் தகவல்
உலகெங்கிலும் ஜூன் 14ஆம் தேதி உலக ரத்தக் கொடையாளர் தினமாக கடைபிடிக்கப்படுகிறது. அதையொட்டி புதுக்கோட்டை மருத்துவக் கல்லூரி மாணவர்கள் ஒரு ரத்ததான முகாமிற்கு ஏற்பாடு செய்திருந்தனர். விழாவிற்கு தலைமை வகித்து பேசிய மருத்துவக்கள்ளூரி மருத்துவமனை முதல்வர் டாக்டர். மீனாட்சி சுந்தரம் ,” கடந்த ஓராண்டில் 48 ரத்த தான முகாம்கள் நடத்தப்பட்டு 1897 யூனிட் ரத்தம் சேகரிக்கப்பட்டது.
புதுவை மாநில எல்லைகளில் கடும் கட்டுப்பாடு - கொரோனாவை தடுக்க முதல்வர் நாராயணசாமி உத்தரவு
புதுச்சேரியில் நாளுக்குநாள் கொரோனா தொற்று ஆளாகுபவர்களின் எண்ணிக்கை அதிகரித்துக்கொண்டே உள்ளது. நேற்று ஒரே நாளில் மட்டும் 30 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது. மேலும் ஒருவர் சிகிச்சை பலனின்றி இறந்துள்ளார்.
மேல்நிலை நீர்தேக்க தொட்டி திறப்பு
கடலூர் மாவட்டம் சிதம்பரம் வட்டம் குமராட்சி ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட உசுப்பூர் ஊராட்சி விபீஷ்ணபுரம் பகுதியில் 30,000 லிட்டர் கொள்ளளவுடன் புதிதாக கட்டப்பட்டுள்ள மேல்நிலை தொட்டியினை சட்டமன்ற உறுப்பினர் கே.ஏ. பாண்டியன் பொதுமக்கள் பயன்பாடிற்கு திறந்து வைத்தார்.
கொட்டாரம் பெருமாள்புரத்தில் சார்நிலை கருவூலம் திறப்பு
கன்னியாகுமரி விவேகானந்தபுரத்தில் பல ஆண்டுகளாக தனியார் கட்டிடத்தில் இயங்கி வந்த கன்னியாகுமரி சார்நிலை கருவூலம் 80.52 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் புதிதாக கட்டப்பட்டது.
ஆரணி அருகே 15ம் நூற்றாண்டில் கட்டப்பட்ட குளத்தை புனரமைத்து விளையாட்டுபூங்கா அமைக்கப்படும்
ஆட்சியர் கந்தசாமி பேட்டி
சுய உதவி குழுக்களுக்கு கடன் வழங்கிய முதல்வர்
தமிழ்நாடு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி எடப்பாடி பயணியர் மாளிகையில் சேலம் மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கியின் மூலம் 904 நபர்களுக்கு பயிர்க் கடன், 191 நபர்களுக்கு மத்திய காலக் கடன், 765 நபர்கள் அடங்கிய 53 சுய உதவிக் குழுக்களுக்கு சுய உதவிக் குழுக் கடன், 1,240 நபர்கள் அடங்கிய 62 சுய உதவிக் குழுக்களுக்கு கோவிட் 19 கடனுதவி என 3,100 பயனாளிகளுக்கு ரூபாய் 1074.22 லட்சம் வழங்கப்பட்டது.
மாலை எக்ஸ்பிரஸ் செய்தி எதிரொலி பச்சூர் கிராம வாரச்சந்தையில் ஆக்கிரமிப்பு அகற்றம்
திருப்பத்தூர் மாவட்டம் நாட்றம் பள்ளி தாலுகாவிற்கு உட்பட்ட பச்சூர் கிராம பகுதியில் சுமார் 13 வருடகாலமாக வார சந்தை செயல்பட்டு வந்தது.
மாற்றுத்திறனாளிகளுக்கு தலா ரூ.1000 வழங்க முதல்வர் உத்தரவு
மாற்றுத் திறனாளிகளுக்கு தலா ரூ.1000 வழங்க முதல்வர் எடப்பாடி பழனிசாமி உத்தரவு பிறப்பித்துள்ளார்.
மாற்றுத்திறனாளிகளுக்கு நலத்திட்ட உதவி வழங்கல்
தூத்துக்குடியில் 30 மாற்றுத்திறனாளிகளுக்கு பல்வேறு நலத்திட்ட உதவிகளை மாவட்ட ஆட்சியர் சந்தீப் நந்தூரி, வழங்கினார்.
காரைக்காலில் ஆறுகள், வாய்க்கால்கள் தூர் வாரும் பணி துவக்கம்
காரைக்கால் மாவட்ட பொதுப்பணித் துறைக்கு சொந்தமான சுமார் 91 கிலோ மீட்டர் தூரமுள்ள ஆறுகள், வாய்க்கால்கள் தூர்வாரும் பணி இன்று தொடங்கப்பட்டுள்ளது. இப்பணியை விரைந்து முடிக்க அறிவுறுத்தியுள்ளேன். என, புதுச்சேரி வேளாண்துறை அமைச்சர் கமலக்கண்ணன் தெரிவித்துள்ளார்.
நிதி உதவி வழங்கும் நிகழ்ச்சி
தமிழ்நாடு ஊரக புத்தாக்கத் திட்டம் உலகவங்கி நிதியுதவியுடன் ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறையின் கீழ் தொடங்கப்பட்ட திட்டமாகும். இத்திட்டம் நாமக்கல் மாவட்டத்தில் பள்ளிப்பாளையம், திருச்செங்கோடு, புதுச்சத்திரம் மற்றும் மோகனூர் ஆகிய நான்கு வட்டாரங்களில் செயல்பட்டுவருகிறது.
சிலம்பாட்டம் பயிற்சி பட்டறை தொடக்க விழா
காலாப்பட்டு தொகுதியில் தமிழர்களின் வீரகலை சிலம்பாட்டம் பயிற்சி பட்டறை தொடக்க விழா சிந்தனை சிற்பி சிங்காரவேலர் குடிலான நாம் தமிழர் கட்சி காலாப்பட்டு தொகுதி அலுவலகத்தில் நடை பெற்றது. இந்நிகழ்ச்சியினை காலப்பட்டு தொகுதி செயலாளர் காமராஜ் ஒருங்கிணைத்தார்.
சின்னமுட்டம் விசைப்படகு மீனவர்கள் வேலைநிறுத்தம்
கன்னியாகுமரி சுனாமி காலனியை சேர்ந்த லிப்டன்(27) மீனவர். இவர் கடந்த சில தினங்களுக்கு முன்பு 18 மீனவர்களுடன் சின்னமுட்டம் மீன்பிடி துறைமுகத்தில் இருந்து விசைப்படகில் மீன்பிடிக்க கடலுக்கு சென்றார்.
ஆரல்வாய்மொழியில் பாதுகாப்புடன் கூடிய கூண்டு வடிவ கொரோனா சோதனைச்சாவடி
ஆரல்வாய்மொழியில் பாதுகாப்புடன் கூடிய கூண்டு வடிவ கொரோனா சோதனைச்சாவடி அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது.
ஓபிசி பிரிவினருக்கு 50% இடஒதுக்கீடு கோரிய வழக்கு 2 வாரத்தில் பதிலளிக்க மத்திய அரசுக்கு ஐகோர்ட் உத்தரவு
மருத்துவ படிப்பில் மத்திய ஒதுக்கீட்டில் ஓபிசி பிரிவினருக்கு 50% இடஒதுக்கீடு கோரிய வழக்கில் 2 வாரத்தில் பதிலளிக்க மத்திய அரசுக்கு சன்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
ஊரடங்கால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணம் வழங்க வேண்டும்: சிவா எம்எல்ஏ கோரிக்கை
புதுச்சேரி தெற்கு மாநில திமுக அமைப்பாளர் சிவா எம்எல்ஏ முதல்வரிடம் அளித்த மனுவில் கூறியிருப்பதாவது, உலகையே அச்சுறுத்திக் கொண்டிருக்கும் கொரோனா நோய் தொற்று புதுச்சேரியிலும் சமீப தினங்களாக அதிகரித்துள்ளது.
11 எம்எல்ஏக்கள் வழக்கில் புதிய திருப்பம் நடவடிக்கைக்கு அவசியம் எழவில்லை: முதல்வர் பழனிசாமி
தமிழக சட்டசபையில் முதல் அமைச்சர் எடப்பாடி பழனிசாமி காண்டு வந்த நம்பிக்கை தீர்மானத்தின் மீது 2017ம் ஆண்டு, பிப்ரவரி மாதம் 18 ந்தேதி நடைபெற்ற ஓட்டெடுப்பின் போது, தற்போதைய துணை முதல் அமைச்சர் ஓ.பன்னீர் செல்வம் உள்பட 11 எம்.எல்.ஏ.க்கள் நம்பிக்கை தீர்மானத்துக்கு எதிராக வாக்களித்தனர்.
நிவாரண பொருள் வழங்கும் நிகழ்ச்சி
சிவகங்கை மாவட்டம், சிவகங்கை ஊராட்சி ஒன்றியப்பகுதிகளில் கொரோனா சிறப்பு நிவாரணப்பொருள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. மாவட்ட ஆட்சித்தலைவர் ஜெயகாந்தன் தலைமை வகித்தார். கதர் மற்றும் கிராமத் தொழில்கள் வாரியத்துறை அமைச்சர் பாஸ்கரன் சாந்த நிதியிலிருந்து ஒவ்வொரு குடும்பத்திற்கும் தலா 5 கிலோ அரிசி வழங்கினார்.
மீண்டும் முழு ஊரடங்கா? மருத்துவ நிபுணர் குழுவுடன் முதலமைச்சர் ஆலோசனை
கொரோனா தொற்று அதிகரித்து வரும் நிலையில் மருத்துவ நிபுணர் குழுவுடன் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி இன்று ஆலோசனை நடத்தினார்.
நலத்திட்ட உதவி வழங்கும் நிகழ்ச்சி
சிவகங்கை மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் வருவாய்த்துறையின் மூலம் மாண்புமிகு முதலமைச்சர் பொது நிவாரண நிதியின் கீழ் நலத்திட்ட உதவி வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சித்தலைவர் ஜெயகாந்தன் தலைமை வகித்தார். மானா மதுரை சட்டமன்ற உறுப்பினர் நாக ராஜன் முன்னிலை வகிகத்தார். கதர் மற்றும் கிராமத் தொழில்கள் வாரியத்துறை அமைச்சர் பாஸ்கரன் பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கி தெரிவிக் கையில்,
நாம் தமிழர் கட்சி நிவாரண பொருட்கள் வழங்கல்
கொரோனா தொற்று நோய் அதிகரித்து வரும் சூழலில் புதுவை கதிர்காமம் தொகுதி மக்களுக்கு பகுதி வாரியாக நோய் தடுப்பு பொருட்களாக கபசுர குடிநீர், கிருமிநாசினி மற்றும் முககவசங்கள் அடங்கிய பொட்டலங்களை அனைத்து வீடுகளுக்கும் வழங்கப்பட்டு கொரோனா நுண்ணுயிர் தொற்றுநோய் பரவாமல் தடுப்பதற்காக உடலுக்கு எதிர்ப்பு சக்தியினை உருவாக்கும் கபசுரகுடி நீர் பொதுமக்களுக்கு வழங்கப்பட்டது.
மகளிர் சுயஉதவிக்குழுக்களுக்கு ரூ.37.50 லட்சம் கடன் வழங்கல்
பெருங்குளம் தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கியில் மகளிர் சுய உதவிக்குழுக்களுக்கு ரூ.37.50 லட்சம் கடன் உதவியை எஸ்.பி.சண்முகநாதன் எம்.எல்.ஏ வழங்கினார்.
பொதுமக்களுக்கு கபசுர குடிநீர் வழங்கல்
உடுமலை உழவர் சந்தை எதிரே உள்ள முழுநேர கிளை நூலகம் எண் 2 நூலகர் வாசகர் வட்டம், உடுமலை பாரதியார் நூற்றாண்டு பெண்கள் மேல்நிலைப் பள்ளி மற்றும் உடுமலை பிரியா பாராமெடிக்கல் இணைந்து கொரோனா தடுப்பு நடவடிக்கை மற்றும் சுகாதார விழிப்புணர்வு ஏற்படுத்த பொதுமக்களுக்கு கபசுர குடிநீர் வழங்கப்பட்டது.
டெல்லியில் கொரோனா நோயாளிகளுக்காக 500 ரெயில் பெட்டிகள்: மத்திய உள்துறை மந்திரி அமித்ஷா தகவல்
டெல்லியில் கொரோனா நோயாளிகள் தங்கி சிகிச்சை பெறுவதற்கு வசதியாக மத்திய அரசு 500 ரெயில் பெட்டிகளை உடனடியாக வழங்கும் என உள்துறை மந்திரி அமித்ஷா கூறியுள்ளார்.
அம்பேத்கர் சிலையை இடம் மாற்றக்கூடாது முதல்வரிடம் விசி கட்சி மனு
சேலம் மாவட்டம் முள்ளுவாடி கேட் ரயில்வே மேம்பாலம் அமைக்கும் பணி தற்போது நடைபெற்று வருகிறது.