CATEGORIES
Kategorier
இலங்கைக்கு உதவ உலக வங்கி தயார்
இலங்கைக்கு ஆதரவளிக்க உலக வங்கி தயாராக இருப்பதாகவும் எதிர்வரும் மாதங்கள் முக்கியமானதாக இருக்கும் எனவும் உலக வங்கியின் தெற்காசிய பிராந்தியத்திற்கான உப தலைவர் மார்ட்டின் ரைசர் தெரிவித்துள்ளார்.
2 சிறுத்தை குட்டிகள் மீட்பு; ஏற்க தாய் மறுப்பு
தாயிடமிருந்து பிரிக்கப்பட்ட இரண்டு சிறுத்தை குட்டிகள் வனவிலங்கு அதிகாரிகளின் பாதுகாப்பில் உள்ளன.
கொரோனாவில் பலியான முஸ்லிம்களின் சடலங்களை எரித்தமை குறித்து அமைச்சரவை மட்ட விசாரணை
கொரோனா தொற்றால் மரணமடைந்த முஸ்லிம்களின் சடலங்களை எரிப்பதற்கு பிழையான தீர்மானம் மேற்கொண்ட கொரோனா குழு அதிகாரிகளுக்கு எதிராக அமைச்சரவை மட்டத்தில் விசாரணை மேற்கொள்ளப்படும் என சுகாதார அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல உறுதியளித்தார்.
வெள்ளியுடன் வேலை பறிபோகும் அபாயம்
உள்ளூராட்சி மன்றத் தேர்தலில் வேட்பாளர்களாக போட்டியிடும் அரச சேவையில் ஒப்பந்த அடிப்படையில் ஊழியர்களாக பணியாற்றுபவர்களின் வேலைகள் ஜூலை 21 ஆம் திகதியுடன் பறிபோகும் அபாயம் காணப்படுவதாக எதிர்க்கட்சியில் சுயாதீன அணியை சேர்ந்த பாராளுமன்ற உறுப்பினர் டலஸ் அழகப்பெரும தெரிவித்தார்.
இரட்டை நிலைப்பாட்டை நிறுத்திக்கொள்ள வேண்டும்
எமது நாட்டில் தமிழ் மக்களின் உரிமைகளுக்காக அமெரிக்க தூதுவர் நடவடிக்கை எடுத்து வருகிறார். காணி உரிமை, காணாமல் போனவர்களின் விடுதலை, மனித புதைக்குழி, உண்மை மற்றும் நல்லிணக்கம் தொடர்பாக பல்வேறு விடயங்கள் தொடர்பாக குறிப்பிட்டுள்ளார். தமிழ் சமூகத்துக்காக அவர்கள் மேற்கொள்ளும் இந்த விடயங்களை நாங்கள் வரவேற்கிறோம்.
இராஜதந்திர மட்டத்தில் புரிந்துணர்வு ஒப்பந்தத்தை எட்டுவதே எதிர்பார்ப்பு
இந்தியாவுக்கும் இலங்கைக்கும் இடையில் இராஜதந்திர மட்டத்தில் புரிந்துணர்வு ஒப்பந்தத்தை எட்டுவதற்கு தேவையான செயற்பாடுகளை நிறைவு செய்வதே ஜனாதிபதியின் எதிர்வரும் இந்திய விஜயத்தின் எதிர்பார்ப்பு என்று அமைச்சரவைப் பேச்சாளர், வெகுஜன ஊடகத்துறை அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவித்தார்.
வங்குரோத்து குறித்து விசாரிக்கும் தெரிவுக்குழுவின் தலைவர் பதவியை எதிர்க்கட்சிக்கு வழங்குக
பாராளுமன்றத்தில் ஏதேனும் அதிகாரம் தொடர்பில் நம்பிக்கை இருக்குமாக இருந்தாலோ, நடந்துள்ள விடயம் தொடர்பில் உண்மையை அறிய வேண்டும் என்ற நோக்கம் இருந்தாலோ தெரிவுக்குழு தலைவர் பதவியை எதிர்க்கட்சிக்கு வழங்க வேண்டும் என்று மக்கள் விடுதலை முன்னணியின் தலைவர் அநுரகுமார திஸாநாயக்க தெரிவித்தார்.
முழு அரச பொறிமுறையையும் டிஜிட்டல் மயம்
இந்த நாட்டில் காணப்படும் ஊழல் மோசடிகளை நிறுத்துவதென்றால் முழு அரச பொறிமுறைகளையும் டிஜிட்டல் மயப்படுத்த வேண்டும் என்றும் அப்போது வருமானத்தை ஈட்டும் அனைத்து நிறுவனங்களும் அதன் மூலம் முழுமையான டிஜிட்டல் முறைமைக்கு உட்படுத்தப்படும் என்றும் நிதி இராஜாங்க அமைச்சர் செஹான் சேமசிங்க தெரிவித்தார்.
மக்களை பாதிக்காமல் நீர்க்கட்டண அதிகரிப்பு
சபையில் அமைச்சர் ஜீவன் அறிவிப்பு
இல்லாத பிரச்சினைகளை தோற்றுவிக்க முயற்சி
2017ஆம் ஆண்டுக்குப் பின்னர், நூற்றுக்கும் அதிகமான மருந்து வகைகள் பயன்பாட்டுக்கு தடை செய்யப்பட்டுள்ளன என்றும் உயிர்காக்கும் 14 வகையான மருந்துகள் எதிர்வரும் டிசெம்பர் மாதம் வரையான காலப்பகுதிக்கு களஞ்சியப்படுத்தப்பட்டுள்ளது என்றும் தெரிவித்த சுகாதார அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல, இல்லாத பிரச்சினைகளை தோற்றுவிக்க முயல்கின்றனர் என்று தெரிவித்தார்.
இலங்கை அகதிகள் 15 பேரை ஆஸிக்கு அனுப்ப முயன்ற 7 பேர் இந்தியாவில் விடுதலை
2010ஆம் ஆண்டு மீன்பிடி படகு மூலம் புதுவை, தேங்காய்த்திட்டு துறைமுகத்திலிருந்து இலங்கை அகதிகள் 15 பேரை அவுஸ்திரேலியாவுக்கு அனுப்ப முயன்றமை குறித்து தாக்கல் செய்யப்பட்ட ஆட்கடத்தல் வழக்கு நிரூபிக்கப்படாததால், அனைவரும் விடுதலை செய்யப்படுவதாக புதுவை தலைமை குற்றவியல் நீதிமன்ற நீதிபதி அறிவித்தார்.
கோவில்களை இடித்து விகாரைகளை கட்டினால் நல்லிணக்கம் எவ்வாறு சாத்தியமாகும்?
சரத் வீரசேகரவின் உரைக்கு சிறிதரன் எம்.பி கண்டனம்
மனிதர்களின் வயதை குறைக்கும் வேதிக் கலவை
மனிதர்களுக்கு வயதாவதை தடுக்கும் வேதிக் கலவையை கண்டுபிடித்துள்ளதாக அமெரிக்காவின் ஹார்வர்ட் பல்கலைக்கழக விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.
பாகிஸ்தானுக்கெதிரான முதலாவது டெஸ்டில் முன்னிலையில் இலங்கை
பாகிஸ்தானுக்கு எதிரான முதலாவது டெஸ்டில் முன்னிலையில் இலங்கை காணப்படுகின்றது.
டொலருக்கு பதிலாக ரூபாய், திர்ஹாமில் வர்த்தகம்
பிரதமர் நரேந்திர மோடி ஐக்கிய அரபு அமீரகத்தில் அரசு முறை பயணம் மேற்கொண்டார். அந்த நாட்டு அதிபர் ஷேக் முகமதுவை சந்தித்துப் பேசினார்.
‘துருவ நட்சத்திரம்’ இரண்டாவது பாடல்
விக்ரம் நடிப்பில், கெளதம் மேனன் இயக்கத்தில் உருவான 'துருவ நட்சத்திரம்’ திரைப்படம் நீண்ட இடைவெளிக்கு பின்னர் மீண்டும் பணிகள் தொடங்கிய நிலையில் தற்போது இந்தப் படம் வெளியீட்டுக்கு தயாராக உள்ளது.
மீண்டும் த்ரிஷாவுக்கு வாய்ப்பு
இயக்குநர் மணிரத்னம் இயக்கத்தில் கமல்ஹாசன் நடிக்க இருக்கும் 'கமல் 234' திரைப்படத்தில் த்ரிஷா தான் ஹீரோயின் என்று சொல்லப்படும் நிலையில், அதற்கு முன்பே மணிரத்னம் படத்தில் த்ரிஷா ஒரு படத்தில் இணைய இருப்பதாக கூறப்படுகிறது.
“நான் ஆபாச நடிகை தான்” சன்னி லியோன் பதிலடி
நடிகை சன்னி லியோன் குறித்து சர்ச்சைக்குரிய கருத்து தெரிவித்த நடிகை மற்றும் அமைச்சர் ரோஜாவுக்கு சன்னி லியோன் பதிலடி கொடுத்துள்ளார் கடந்த சில நாள்களுக்கு முன்னர் ஆந்திர மாநில அரசியல்வாதி மற்றும் நடிகர் பவன் கல்யாண் வாராஹி யாத்திரை தொடர்ந்தார்.
'ஜெயிலர்' இசை வெளியீடு
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்து முடித்துள்ள 'ஜெயிலர்’ திரைப்படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்து தற்போது தொழில்நுட்ப பணிகள் நடைபெற்று வருகிறது.
தங்க கலரில் தர்ஷா குப்தா
'கு க் வித் கோமாளி' என்ற நிகழ்ச்சியின் மூலம் பிரபலமான தர்ஷா குப்தா, ஒரு சில திரைப்படங்களில் நடித்தார்.
மனிதரில் தொற்றி வாழும் மனஅழுத்தம்
யதார்த்த உலகின் நிமிடங்களில் எல்லாம் நீங்காமல் இடம் பிடித்து, தற்காலத்தில் மனிதனில் தொற்றி வாழும் நோயாக மனஅழுத்தத்தை இனங்காண முடிகிறது. ஆங்கிலத்தில் Stress எனும் சொல்லால் அடையாளப்படுத்தப்படும்.
முட்டை விலை குறித்து வார இறுதிக்குள் முடிவு
முட்டை விலை தொடர்பில், இந்த வார இறுதிக்குள் தீர்மானம் எடுக்கப்படும் என்று வர்த்தக, வர்த்தக மற்றும் உணவு பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் எம்.பி அத்தபத்து தெரிவித்துள்ளார்.
மணிப்பூர் வன்முறைக்கு மன்னாரில் கவனயீர்ப்பு
வடகிழக்கு இந்தியாவில் உள்ள மணிப்பூர் மாகாணத்தில் அண்மைக்காலமாக கிறிஸ்தவ மதத்தினருக்கு எதிராக கட்டவிழ்த்து விடப்பட்ட வன்முறைக்கு எதிராக, உலக நாடுகள், இந்திய அரசாங்கம் குறித்த விடயத்தில் தலையிட வேண்டும் என்று கோரிக்கை விடுத்தும் மன்னாரில் திங்கட்கிழமை (17) கவனயீர்ப்பு போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.
2023 அரையாண்டில் ரூ.700 பில்லியன் வரி வருமானம்
2023ஆம் ஆண்டு ஜூன் மாதம் வரையான 6 மாத காலப்பகுதியில் உள்நாட்டு இறைவரித் திணைக்களம் கிட்டதட்ட 700 பில்லியன் ரூபாயை வரி வருமானமாக பெற்றுள்ளது.
ஜனாதிபதி ரணிலுக்கு பாக். பிரதமர் பாராட்டு
சர்வதேச நாணய நிதியத்துடனான நாட்டின் ஒப்பந்தம் தொடர்பாக, பாகிஸ்தானுக்கு வழங்கப்பட்ட ஆதரவுக்காக ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவை பாகிஸ்தான் பிரதமர் ஷெஹ்பாஸ் ஷெரீப் பாராட்டியுள்ளார்.
தொடர்ந்தும் சரிகிறது இலங்கை ரூபாய்
இலங்கை மத்திய வங்கியால் திங்கட்கிழமை (13) வெளியிடப்பட்ட நாணய மாற்று விகிதத்தின்படி அமெரிக்க டொலருக்கு நிகரான இலங்கை ரூபாயின் பெறுமதி வீழ்ச்சியடைந்துள்ளது.
வடக்கு, கிழக்கைச் சேர்ந்த தமிழ் எம்.பிக்களுடன் அமெரிக்க தூதுவர் பேச்சு
வடக்கு, கிழக்கில் இருந்து பாராளுமன்றத்துக்கு தெரிவான தமிழ் பாராளுமன்ற உறுப்பினர்களுடன், இலங்கைக்கான அமெரிக்க தூதுவர் ஜூலி சங், திங்கட்கிழமை (17) முக்கிய கலந்துரையாடலில் ஈடுபட்டிருந்தார்.
நீதிமன்றத்துக்கும் தேர்தல் ஆணைக்குழுவுக்கும் அரசாங்கம் அழுத்தம் கொடுக்கப்போகிறது
மக்கள் வெறுத்த பழைய முறைமையையே தெரிவுக் குழுவின் ஊடாக தொடர்ந்தும் நடைமுறையாகும் | அரசின் கருத்துகளுக்கு ஏற்ப நீதிபதிகள் செயற்படவில்லை என்றால், தெரிவுக்குழு முன் கொண்டு வந்து அழுத்தம் கொடுக்க வாய்ப்பு
சாணக்கியனை தாக்க முயற்சி; இருவர் மீது துரத்தித் துரத்தி தாக்குதல்
மட்டக்களப்பில் அனுமதிபத்திரமின்றி சேவையில் ஈடுபடும் தனியார் போக்குவரத்து பஸ்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து, திங்கட்கிழமை (17) ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்ட பாராளுமன்ற உறுப்பினர் இரா. சாணக்கியனை தாக்க முயன்ற இருவரை, ஆர்ப்பாட்காரர்கள் துரத்தித்துரத்தி அடித்து வெளியேற்றியதையடுத்து, அங்கு பெரும் பதற்ற நிலை ஏற்பட்டது.
Ruhunu வைத்தியசாலையின் ஆடம்பர சிகிச்சை அறைகள்
Ruhunu Hospital, தனது சிகிச்சை வசதிகளில் புதிய மேம்படுத்தல்களாக - King's Court மற்றும் Presidential Suite ஆகிய ஆடம்பர சிகிச்சை அறைகளைத் திறந்துள்ளதாக அறிவித்துள்ளது