CATEGORIES
Kategorier
முன்னாள் ஜனாதிபதிகளுக்கான சலுகைகளை நிறுத்து தீர்மானம்
ஜனாதிபதி சிறப்புரிமைச் சட்டத்தின் பிரகாரம், முன்னாள் ஜனாதிபதி ஒருவருக்கு ஓய்வூதியம், வீடு, மூன்று வாகனங்கள், எரிபொருள் மற்றும் தனிப்பட்ட செயலாளர் ஆகியவையே உரித்துடையவை.
மேற்கிந்தியத் தீவுகளுக்கெதிரான தொடரை 1-0 எனக் கைப்பற்றிய இந்தியா
மேற்கிந்தியத் தீவுகளுக்கெதிரான டெஸ்ட் தொடரை 1-0 என இந்தியா கைப்பற்றியது
1,000 ஊழியர்களை பணி நீக்கம் செய்த மைக்ரோசொஃப்ட
உலகின் பெரும் நிறுவனங்கள் தனது ஊழியர்களை வேலை நீக்கம் செய்து வருகிறது
கிரீஸில் காட்டுத்தீ; 2,500 பேர் வெளியேற்றம்
கிரீஸ் நாட்டில் இதுவரை இல்லாத வகையில் நடப்பு ஆண்டில் பெரிய அளவில் காட்டுத்தீ பெரிய பாதிப்புகளை ஏற்படுத்தி வருகிறது
சூதாட்ட தரகர் வீடில் கட்டுக்கட்டாக பணம்
மகாராஷ்டிராவில் கிரிக்கெட் சூதாட்ட தரகரின் வீட்டில் கட்டுக்கட்டாக 17 கோடி ரூபாய் பணம் கைப்பற்றப்பட்டுள்ளது
சர்ச்சையில் சுதீப்பின் சிகை அலங்காரம்
பிரபல கன்னட நடிகரான சுதீப், ஹெப்பிலி என்ற படத்தில் சுதீப் தலையில் ஒரு பக்கத்தில் முடியை வெட்டி இன்னொரு பக்கம் நீளமாக விட்டு வித்தியாசமாக சிகை அலங்காரம் செய்து இருந்தார்
புதையலுக்காக சிறுவன் நரபலி
புதையலுக்கு ஆசைப்பட்டு சிறுவனை கடத்தி நரபலி கொடுத்த 4 பேரை பொலிஸார் கைது செய்துள்ளனர்
இந்திய இலங்கை உறவின் ஒரு சிறந்த எடுத்துக்காட்டு
ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் தலைமையிலான குழு இந்தியாவுக்கு விஜயம் செய்து, இலங்கையில் வாழும் இந்திய வம்சாவளி மக்களின் அபி விருத்திக்காக மூன்று பில்லியன் ரூபாய் நிதியை வழங்க இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி இணக்கம் தெரிவித்தமை இந்திய இலங்கை உறவின் ஒரு சிறந்த எடுத்துக்காட்டாகும் என இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் உப தலைவரும் பெருந்தோட்ட மனிதவள அபிவிருத்தி நிதியத்தின் தலைவருமான பாரத் அருள்சாமி தெரிவித்தார்
மாவட்ட ஒருங்கிணைப்பு குழு தீர்மானங்கள் விழலுக்கு இறைத்த நீர்
பொலிஸாரின் ஆதரவுடன் தொடரும் மணல் அகழ்வுகள்
ஜே.வி.பி பங்கேற்காது
தேசிய நல்லிணக்க வேலைத்திட்டம் தொடர்பில் பாராளுமன்றத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் கட்சித் தலைவர்களை அறிவூட்டும் சர்வகட்சி மாநாடு, ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் ஜனாதிபதி செயலகத்தில் புதன்கிழமை (26) நடைபெறவுள்ளது
அலையாக வந்த அரசியல் கட்சிகள் அலையுடன் அடிபட்டுப் போயின்
கடந்த போராட்டத்தின் மூலம் அலையாக வந்த சில அரசியல் கட்சிகள், இன்று அலையில் அடித்துச் செல்லப்பட்டுள்ளதாக தெரிவித்த நகர அபிவிருத்தி மற்றும் வீடமைப்பு அமைச்சர் பிரசன்ன ரணதுங்க, கட்சியின் புதிய உறுப்பினர்கள் கட்சியை விட்டு வெளியேறிய போது, 'மொட்டை'ப் பாதுகாக்க நாங்கள் மாத்திரமே எஞ்சியிருந்தோம் என்றார்
தமிழக மீனவர்கள் 9 பேருக்கும் 9 வரை விளக்கமறியல்
இலங்கை கடற்பரப்புக்குள் அத்துமீறி மீன்பிடியில் ஈடுபட்ட குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட தமிழக மீனவர்கள் ஒன்பது பேரையும் எதிர்வரும் 09ஆம் திகதி வரையில் விளக்கமறியலில் வைக்குமாறு ஊர்காவற்றுறை நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது
தாயும் கைக்குழந்தையும் 8 நாளுக்கு பின்னர் மீட்பு
காணாமல் போன இளம் தாயும், அவருடைய ஒன்றரை வயது குழந்தையும் எட்டு நாள்களுக்குப் பின்னர் கண்டுபிடிக்கப்பட்டுள்ளனர்
கடன் மறுசீரமைப்புக்கு ஐ.நா ஒத்துழைப்பு நல்கும்
ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவுக்கும் ஐக்கிய நாடுகள் சபையின் வதிவிட ஒருங்கிணைப்பாளர் மார்க்ஆன்ட்ரே பிராஞ்சுக்கும் இடையிலான சந்திப்பு, ஜனாதிபதி அலுவலகத்தில் திங்கட்கிழமை (24) நடைபெற்றது
‘ரோயல் பார்க்’ படுகொலை: ஜனாதிபதி பொது மன்னிப்பு விவகார தீர்ப்பு ஒத்திவைப்பு
'ரோயல் பார்க்' படுகொலை குற்றவாளிக்கு பொதுமன்னிப்பு வழங்கிமைக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட மனு மீதான விசாரணையை நிறைவு செய்துள்ள உயர் நீதிமன்றம் தீர்ப்பை ஒத்திவைத்துள்ளது
தமிழ்க் கட்சிகளின் கடிதத்தை மோடி சாதகமாக பரிசீலித்தார்
தமிழ்த் தேசிய கூட்டமைப்பும், தமிழ் மக்கள் கூட்டணியும் இணைந்து அனுப்பிய கடிதத்தை இந்திய பிரதமர் சாதகமாக பரிசீலித்துள்ளார்
3 வயது குழந்தை மீது கொதி நீரை ஊற்றிய தந்தை
மதுபோதையில் வீட்டுக்கு வந்த ஆறு பிள்ளைகளின் தந்தை, தன்னுடைய 3 வயதுடைய ஆறாவது குழந்தையின் மீது கொதிநீரை ஊற்றியுள்ளார்
13 க்கு எதிரான 22 பாதாளத்துக்குள் நாட்டை தள்ளும்
அரசியலமைப்பின் 13ஆவது திருத்தத்தை நீக்கும் வகையில் 22ஆம் திருத்தம் கொண்டுவரப்படுமாயின் அது நாட்டை பாதாளத்துக்குள் தள்ளுமென தெரிவித்துள்ள தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் சாள்ஸ் நிர்மலநாதன், இந்த முயற்சியை வன்மையாக கண்டித்துள்ளார்
சர்வகட்சி மாநாடு ஏமாற்று வித்தையெனில் டெலிபோன்" வெளியேறும்
அரசியல் ஏமாற்று வித்தைகள் இல்லாமல், சரியான முறையில் கலந்துரையாடலுக்கு வருவீர்களாக இருந்தால் வாருங்கள் என்று தெரிவித்துள்ள ஐக்கிய மக்கள் சக்தியின் தலைவரும் எதிர்க்கட்சித் தலைவருமான சஜித் பிரேமதாஸ, வழமையான அரசியல் ஏமாற்று வித்தை என்று கருதும் பட்சத்தில், அந்நிமிடமே குறித்த கலந்துரையாடல் மேசையை விட்டு ஐ.ம.ச வெளியேறும் என்றார்
மேற்கிந்தியத் தீவுகளுக்கெதிரான இரண்டாவது டெஸ்டில் இந்தியாவின் வெற்றிக்கு 8 விக்கெட்டுகள் தேவை
மேற்கிந்தியத் தீவுகளுக்கெதிரான இரண்டாவது டெஸ்டில் இந்தியா வெற்றி பெறுவதற்கு இறுதி நாளில் 8 விக்கெட்டுகளைக் கைப்பற்ற வேண்டியுள்ளது.
இலங்கைக்கெதிரான இரண்டாவது டெஸ்டில் முன்னிலையில் பாகிஸ்தான்
இலங்கைக்கு எதிரான இரண்டாவது டெஸ்டில் பாகிஸ்தான் முன்னிலையில் காணப்படுகின்றது.
வெற்றி தோல்வியின்றி முடிவடைந்த 4ஆவது ஆஷஸ் டெஸ்ட
இங்கிலாந்து, அவுஸ்திரேலிய அணிகளுக்கிடையிலான ஐந்து போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில், மன்செஸ்டரில் கடந்த புதன்கிழமை ஆரம்பித்து நேற்று முன்தினம் முடிவுக்கு வந்த நான்காவது டெஸ்ட்டானது மழை காரணமாக வெற்றி தோல்வியின்றி நிறைவுக்கு வந்த நிலையில், 2-1 என்ற நிலையில் தொடரில் அவுஸ்திரேலியா முன்னிலை வகிக்கிறது.
கருங்கடல் ஒப்பந்தத்தை புதுப்பிக்க இந்தியா ஆதரவு
உக்ரேன் - ரஷ்யா இடையிலான கருங்கடல் ஒப்பந்தத்தை புதுப்பிக்க ஐ.நா மேற்கொள்ளும் நடவடிக்கைக்கு ஆதரவு அளிக்கப்படும் என இந்தியா உறுதியளித்துள்ளது.
ஓடையில் இருந்து சிசுவின் சடலம் மீட்பு
நோர்வூட் பொலிஸ் பிரிவுக்குற்பட்ட வெஞ்சர் பகுதியில் உள்ள ஓடையில் இருந்து, சிசுவின் சடலமொன்று மிதந்து கொண்டிருப்பதை கண்டு, அப் பிரதேச வாசிகள் நோர்வூட் பொலிஸ் நிலையத்திற்கு திங்கட்கிழமை (24) தகவல் வழங்கினர்.
நூற்றாண்டைநோக்கிய பயணம்
மட்டக்களப்பு மாவட்டத்தின் வாழைச்சேனை நகரில் புகழ்பெற்ற பழமை வாய்ந்த பாடசாலைகளில் ஒன்றான அன்னூர் தேசிய பாடசாலை நூற்றாண்டு விழாவை காண இன்னும் சில சொற்பகாலமே உள்ளது.
கல்வி அமைச்சரை சந்தித்தார் செந்தில்
கிழக்கு மாகாண ஆளுநர் செந்தில் தொண்டமானுக்கும், கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த இடையில் திங்கட்கிழமை (24) கலந்துரையாடல் இடம்பெற்றது.
நெடுந்தீவில் மாட்டிறைச்சி கடைகள் தேவையில்லை
யாழ் மாவட்டத்தின் பசுந்தீவு என அழைக்கப்படுகின்ற நெடுந்தீவில் மாட்டிறைச்சி கடைகள் தேவையில்லை என நெடுந்தீவு பிரதேச பொது அமைப்புக்கள் தெரிவித்துள்ளன.
அடுத்த வாரம் முட்டை ரூ.35
இறக்குமதி செய்யப்படும் முட்டைகளை லங்கா சதொச விற்பனை நிலையங்கள் ஊடாக விநியோகம் செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக வர்த்தக அமைச்சர் நளின் பெர்னாண்டோ தெரிவித்துள்ளார்.
பங்களிப்பை எதிர்பார்த்துள்ளேன் யுவான் ஜியாஜூயிடம் ஜனாதிபதி எடுத்துரைப்பு
சீன கமியூனிஸ்ட் கட்சியின் மத்திய செயற்குழு மற்றும் அரசியல் குழுக்களின் உறுப்பினரும், ஷொங் கிங் நகரசபைக் குழுவின் செயலாளருமான யுவான் ஜியாஜூன் உள்ளிட்ட சீன தூதுக்குழுவினர் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவைச் ஜனாதிபதி அலுவலகத்தில் சனிக்கிழமை (22) சந்தித்து கலந்துரையாடினர்.
“அதற்கு சரிப்பட்டு வரவே மாட்டார்”
அடுத்த ஜனாதிபதித் தேர்தலில் மும்முனைப்போட்டியே இடம்பெறும் என்றும் அதில் சஜித் பிரேமதாச இடம்பெறமாட்டார் என்றும் அமைச்சர் ஹரின் பெர்னாண்டோ தெரிவித்துள்ளார்.