CATEGORIES
Kategorier
13 குறித்து ஜனாதிபதி விசேட அறிவிப்பு
13ஐ அமலாக்க தமிழ்க் கட்சிகளின் மாறுபட்ட கருத்துகள் இடையூறு
கோழி இறைச்சி விலை குறைப்பு
ஒரு கிலோ கிராம் கோழி இறைச்சியின் விலையை 100 ரூபாவினால் குறைக்க உள்ளூர் உற்பத்தியாளர்கள் இணக்கம் தெரிவித்துள்ளதாக விவசாய அமைச்சு தெரிவித்தது.
அழகான பெண்களிடம் பாலியல் சேஷ்டை: விசாரணைக்கு பெண் எம்.பி கோரிக்கை
பாராளுமன்றத்தின் உணவு வழங்கல் மற்றும் பாராமரிப்புத் திணைக்களத்தைச் சேர்ந்த சில பிரதானிகள் உட்பட சில அதிகாரிகளின் அழகான பெண்களுக்கு எதிராக மேற்கொண்டதாகக் கூறப்படும் அங்க சேஷ்டைகள் மற்றும் துஷ்பிரயோகங்கள் தொடர்பில் சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு எதிராக கடும் நடவடிக்கை எடுக்குமாறு மகளிர் பாராளுமன்ற உறுப்பினர் மன்றத்தின் தலைவி கலாநிதி சுதர்ஷனி பெர்னாண்டோபுள்ளே பாராளுமன்ற பொதுச் செயலாளர் திருமதி குஷானி ரோஹனதீரவிடம் கோரிக்கை விடுத்துள்ளார்.
தேசிய கீதத்தை ரீமிக்ஸ் செய்து பாட முடியாது
அமைச்சர் விதுர விக்கிரமநாயக்க அறிவிப்பு
பிறந்தநாள் வீட்டுக்கு தீ வைத்த 5 பேர் சிக்கினர்
வவுனியா-தோணிக்கல் பகுதியில் பிறந்தநாள் கொண்டாட்டம் நடைபெற்றுக் கொண்டிருந்த போது, வீட்டிற்கு தீ வைத்த சம்பவம் தொடர்பில் ஐவர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பிரிவு அறிவித்துள்ளது.
சிறைக் கைதிகளுக்கு சின்னமை நோய்
சிறைச்சாலையில் உள்ள கைதிகளுக்கு சின்னம்மை நோய் ஏற்பட்டுள்ளமையால் வவுனியா சிறைச்சாலை 14 நாட்களுக்கு முடக்கப்பட்டுள்ளதுடன், கைதிகளை உறவினர்கள் பார்வையிடுவதும் இடைநிறுத்தப்பட்டுள்ளது.
முத்துராஜவெல முனையத்தில் 40 பவுசர்கள் தடுத்து வைத்தனர்
பெற்றோல் நிலைய உரிமையாளர்கள் குற்றச்சாட்டு
இந்தியாவின் நிலைப்பாட்டில் எவ்வித மாற்றமும் இல்லை
இந்திய உயர்ஸ்தானிகர் பாக்லே தெரிவிப்பு
மகாவலி எதிர்ப்புக்கு பாகுபாடே காரணம்
மகாவலியால் தமிழ் மக்களுக்கு 2 ஏக்கரும் சிங்கள மக்களுக்கு 25 ஏக்கரும் வழங்கப்படுவதாக கூறுவதாகவும் தமிழ் மக்கள் மகாவலி என்பதை எதிர்த்து நிற்பதற்கு பாகுபாடான செயற்பாடே காரணம் என்று கமக்கார அமைப்பு குற்றச்சாட்டியுள்ளது.
எரிபொருள் தீர்ந்ததால் பூமிக்கு திரும்பிய செயற்கைக்கோள்
லண்டன், ஐரோப்பிய செயற்கைக்கோள் ஒன்று அட்லாண்டிக் பெருங்கடலில் விழுந்துள்ளது. ஏயோலஸ் (Aeolus) என்று பெயரிடப்பட்ட இந்த செயற்கைக்கோள் 1,360 கிலோகிராம் எடையுள்ள வானிலை கண்காணிப்பு செயற்கைக்கோள் ஆகும்.
306 அரியவகை உயிரினங்கள் சிக்கின
தாய்லாந்து நாட்டில் இருந்து விமானம் மூலம் கடத்தி வரப்பட்ட 306 அரியவகை உயிரினங்களை பொலிஸார் பறிமுதல் செய்துள்ளனர்.
தேசிய கிரிக்கெட் அணியில் தெரிவு செய்யப்பட்ட மாணவிக்கு யாழில் கௌரவிப்பு
19 வயது பிரிவிற்குட்பட்ட தேசிய பெண்கள் கிரிக்கெட் அணிக்கு தெரிவு செய்யப்பட்ட மாணவிக்கான கௌரவிப்பு நிகழ்வானது சுழிபுரம் பாண்டவெட்டை காட்டுபுலம் இணைந்த கரங்கள் அமைப்பின் தலைவர் இராசேந்திரன் தலைமையில் நேற்று முன்தினம் முன்னெடுக்கப்பட்டது.
சீனாவை புரட்டிய டொக்சூரி
சீனா, பிலிப்பைன்ஸ் மற்றும் தைவான் உள்ளிட்ட நாடுகளை புரட்டி போட்ட டொக்சூரி புயலில் சிக்கி 39 பேர் உயிரிழந்துள்ளனர்.
நாய் உடை அணிந்த யூ-டியூப் பிரபலம்
ஜப்பானை சேர்ந்த டோகோ எனும் யூ-டியூப் பிரபலம் ஒருவர் நாய் உடை அணிந்து பூங்காவில் வலம் வந்த வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.
எல்.பி.எல்: கொழும்பு ஸ்ரக்கர்ஸை வென்ற ஐஃப்னா கிங்ஸ்
இலங்கையின் உள்ளூர் இருபதுக்கு - 20 தொடரான லங்கா பிறீமியர் லீக்கானது (எல்.பி.எல்) நேற்று முன்தினம் ஆரம்பமாகியிருந்த நிலையில், கொழும்பு ஆர் பிரேமதாஸ மைதானத்தில் நடைபெற்ற ஆரம்பப் போட்டியில் கொழும்பு ஸ்ரைக்கர்ஸை நடப்புச் சம்பியன்களான ஜஃப்னாஸ் கிங்ஸ் வென்றது.
ஓய்வு பெற்ற டியோ கொடின்
உருகுவேயின் முன்னாள் அணித்தலைவரான டியகோ கொடின், கால்பந்தாட்டத்திலிருந்து நேற்று முன்தினத்துடன் பருவகாலத்தில் ஓய்வு பெற்றுள்ளார்.
மேஜர் லீக் கிரிக்கெட் தொடர்: சம்பியனான மும்பை நியூ யோர்க்
ஐக்கிய அமெரிக்காவின் உள்ளூர் இருபதுக்கு - 20 தொடரான மேஜர் லீக் கிரிக்கெட் தொடரில் மும்பை இந்தியன்ஸ் நியூ யோர்க் சம்பியனானது.
பாகிஸ்தானில் குண்டுவெடிப்பு 40 பேர் பலி; 200+ காயம்
பாகிஸ்தான் வடக்கு பகுதியில் உள்ள கைபர் பக்துன்வா மாகாணத்தின் பஜுர் மாவட்டத்தில் நடைபெற்ற அரசியல் கட்சி மாநாட்டில் இடம்பெற்ற குண்டு வெடிப்பில் 40 பேர் பலி, 200-க்கும் மேற்பட்டவர்கள் காயமடைந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
வடமாகாணத்தில் தொழில் வாய்ப்புகள் குறித்து ஆலோசனை
CII- VIF குழுவொன்று வட மாகாண ஆளுநர் திருமதி பி.எஸ்.எம் சார்ள்ஸ் மற்றும் அரசாங்க அதிகாரிகளை சந்தித்து, வட மாகாணத்தில் பல்வேறு துறைகளில் மேற்கொள்ளவேண்டிய முதலீட்டு வாய்ப்புகள் குறித்து கலந்துரையாடியது.
கட்டுநாயக்கவில் கசிப்பு சிக்கியது
கட்டுநாயக்கவின் ஹினடியன பிரதேச கால்வாய் பகுதியில் காணப்பட்ட கசிப்பு வடிக்கும் இடத்தை சுற்றிவளைத்த கட்டுநாயக்க பொலிஸார், சுமார் 15 இலட்சம் ரூபாய் பெறுமதியான கசிப்பு, கோடா மற்றும் வடிகட்டும் உபகரணங்களைக் கைப்பற்றியதுடன் கசிப்பு காய்ச்சிக் கொண்டிருந்த இருவரையும் கைது செய்துள்ளனர்.
கடலாமைகளுடன் இருவர் கைது
நான்கு கடலாமைகளை பட்டாரக வாகனத்தில் கொண்டு சென்ற இருவரை, மானிப்பாய் பொலிஸார் நேற்று (31) காலை கைது செய்தனர்.
கல்முனையில் மோட்டார் சைக்கிளில் பொதுமக்களை அச்சுறுத்தும் மர்மநபர்கள்
தலைக்கவசம் இன்றி மோட்டார் சைக்கிளில் வரும் இனந்தெரியாத நபர்கள், பொதுப்போக்குவரத்தை சீர்குலைத்து, அச்சுறுத்தி வரும் சம்பவங்கள் கல்முனை பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட பகுதிகளில் இடம்பெற்று வருகின்றன.
100 இலட்சம் வாக்குகள் ரணிலுக்கு கிடைக்கும்
ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் 100 இலட்சம் வாக்குகளை பெற்றுக் கொள்வார் என பாராளுமன்ற உறுப்பினர் வஜிர அபேவர்தன தெரிவித்துள்ளார்.
25 வருடங்கள் மேலும் துன்பப்பட முடியுமா?
திருட்டை நிறுத்துவதற்கும் நாட்டை வளமாக்குவதற்கும் வித்தியாசம் தெரியாதவர்கள் தலைவர்களாக இருக்கமுடியாது
65 மருந்துகள் நீக்கம்
இந்த வருடத்தின் கடந்த 7 மாதங்களில் மாத்திரம் தரம் தொடர்பான பிரச்சினைகள் காரணமாக 65 மருந்துகள் பாவனையிலிருந்து நீக்கப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சின் மேலதிக செயலாளர் வைத்தியர் சமன் ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.
4 பேர் அகதிகளாக தமிழகத்தில் தஞ்சம்
இலங்கையில் ஏற்பட்ட பொருளாதார நெருக்கடி காரணமாக புகலிடம் தேடி, வவுனியா மாவட்டத்தை சேர்ந்த ஒரே குடும்பத்தை சேர்ந்த கணவன், மனைவி மற்றும் இரு பிள்ளைகள் அகதிகளாக படகில் புறப்பட்டு தனுஷ்கோடி, அரிச்சல்முனை கடற்கரையை திங்கட்கிழமை (31) காலை சென்றடைந்துள்ளனர்.
QR அறிமுகத்தால் பாவனை குறைவு
தேசிய எரிபொருள் அனுமதி அல்லது QR குறித்த குறியீடு அறிமுகப்படுத்தப்பட்டதன் பின்னர், இலங்கையில் மாதாந்த எரிபொருள் பாவனை 50 சதவீதத்தால் குறைக்கப்பட்டதாகவும் இதனால் எரிபொருள் இறக்குமதிக்கான செலவு குறைக்கப்பட்டு உள்ளதாகவும் இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனம் விடுத்துள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
பாராளுமன்றத்தை கலைக்கவும்
மேடைகளிலும் ஊடகங்களிலும் வீராப்பு பேசுவதை விடுத்து, பொதுத் தேர்தலுக்கு செல்லவும் | சுகாதார அமைச்சருக்கு எதிரான நம்பிக்கையில்லாத் தீரமானத்தில் சகல குப்பைகளும் ஓர் அணியில் திரளும்
இரண்டாவது ஒருநாள் சர்வதேசப் போட்டியில் இந்தியாவை வென்ற மேற்கிந்திய தீவுகள்
இந்தியாவுக்கு எதிரான மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் சர்வதேசப் போட்டித் தொடரில், பார்படோஸில் நேற்று முன்தினம் நடைபெற்ற இரண்டாவது போட்டியில் மேற்கிந்தியத் தீவுகள் வென்றது.
மத்திய பிரதேசம் 12 வயது சிறுமி பாலியல் வன்புணர்வு இருவரின் வீடுகள் தகர்ப்பு
மத்திய பிரதேச மாநிலத்தில் சிறுமியை பாலியல் வன்புணர்வு செய்த இரண்டு பேரின் வீடுகளை இடித்து அரசு நிர்வாகம் அதிரடி நடவடிக்கை எடுத்துள்ளது.