CATEGORIES
Kategorier
முதலாவது டெஸ்டில் இலங்கையை வென்ற பாகிஸ்தான்
இலங்கைக்கு எதிரான இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில், காலியில் கடந்த ஞாயிற்றுக்கிழமை ஆரம்பித்து நேற்று முடிவுக்கு வந்த முதலாவது போட்டியை பாகிஸ்தான் வென்றது.
ஆளுநர் தலைமையில் பரதுகாப்பு சபை கூட்டம்
திருகோணமலையில் உள்ள ஆளுநர் செயலகத்தில், ஆளுநர் செந்தில் தொண்டமான் தலைமையில் கிழக்கு மாகாண பாதுகாப்பு சபைக் கூட்டம் வியாழக்கிழமை (19) நடைபெற்றது.
வடமராட்சி கிழக்கில் கேரளா கஞ்சா மீட்பு
யாழ்ப்பாணம், வடமராட்சி கிழக்கு மாமுனை பகுதியில், சுமார் 11 மில்லியன் ரூபாய் பெறுமதியான கேரள கஞ்சாவை இன்றைய தினம் புதன்கிழமை கடற்படையினர் மீட்டுள்ளனர்.
பொலிஸார் தவறு செய்தால் அறிவிக்கவும்
பொலிஸாரினால் மேற்கொள்ளப்படும் தவறுகள் குறித்து தனக்கு அறிவிக்குமாறு கேட்டுக்கொண்ட வவுனியா மாவட்ட சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் C.P விக்கிரமசிங்க, அவ்வாறான அதிகாரிகளுக்கு எதிராக கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் தெரிவித்தார்.
தனியார் பேருந்து சாரதி, நடத்துனர் மீது தாக்குதல்
யாழ்ப்பாணம், மானிப்பாய் காரைநகர் வழித்தடத்தில் சேவையில் ஈடுபடும் தனியார் பேருந்தின் மீதும்,அதன் சாரதி மற்றும் நடத்துனர் மீதும் புதன்கிழமை இரவு தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.
வரலாற்றில் முதல் முறை
ஜனாதிபதியின் செயலாளர் சமன் ஏக்கநாயக்க, ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவுடன் இந்தியாவுக்கான உத்தியோகபூர்வ விஜயத்தில் இணைந்துள்ளதால் சாந்தனி விஜேவர்தன ஜனாதிபதியின் பதில் செயலாளராக நியமிக்கப்பட்டுள்ளார்.
திறைசேரிக்கு 1.5 பில். வழங்குகிறது லிட்ரோ
லிட்ரோ நிறுவனம் 1.5 பில்லியன் ரூபாய் தேறிய இலாபத்தினை திறைசேரிக்கு வழங்கப்படவுள்ளதாக லிட்ரோ நிறுவனத்தின் தலைவர் முதித்த பீரிஸ் தெரிவித்தார்.
வலுப்பெறுகிறது அமெரிக்க டொலர்
இலங்கை மத்திய வங்கியினால் வியாழக்கிழமை (20) வெளியிட்ட நாணய மாற்று விகிதத்தின்படி அமெரிக்க டொலரின் கொள்வனவு மற்றும் விற்பனை விலைகள் மேலும் அதிகரித்துள்ளன.
மலையக மக்களின் பிரச்சினைகளை இந்தியாவுக்கு எடுத்துரைப்பார் ஜீவன்
ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தலைமையில் அமைச்சர் ஜீவன் தொண்டமான் உள்ளிட்ட இலங்கை தூதுக்குழுவினர் இந்தியா நோக்கி, வியாழக்கிழமை (20) புறப்பட்ட நிலையில், அங்கு முக்கியத்துவமிக்க சந்திப்புகளை நடத்தவுள்ளனர்.
எரிபொருள் ஒதுக்கீடு அடுத்தமாதம் கூடும்
மதிப்பீட்டின் பின்னர் அடுத்த மாதம் எரிபொருள் ஒதுக்கீடு மேலும் அதிகரிக்கப்படும் என்று மின்சக்தி மற்றும் வலுச்சக்தி அமைச்சர் காஞ்சன விஜேசேகர, வியாழக்கிழமை (20) வெளியிட்ட தனது டுவிட்டர் பதிவில் தெரிவித்துள்ளார்.
சுகாதார அமைச்சருக்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணை கைச்சாத்து
25 எம்.பிக்களுடன் கஜேந்திரனும் கையெழுத்திட்டார்
மதுரை - யாழ்ப்பாணம் இடையே விமான சேவை
மதுரை - யாழ்ப்பாணம் இடையில் விரைவில் விமான சேவை ஆரம்பிக்கப்படவுள்ளதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
மேற்கிந்தியத் தீவுகள் எதிர் இந்தியா: இரண்டாவது டெஸ்ட் இன்று ஆரம்பிக்கிறது
மேற்கிந்தியத் தீவுகள், இந்திய அணிகளுக்கிடையிலான இரண்டாவது டெஸ்ட் போட்டியானது போர்ட் ஒஃப் ஸ்பெய்னில் இன்றிரவு 7.30 மணிக்கு ஆரம்பிக்கின்றது
பந்துவீச்சாளர்களுக்கான தரவரிசையில் ஏழாமிடத்துக்கு முன்னேறிய ஜடேஜா
சர்வதேச கிரிக்கெட் சபையின் டெஸ்ட் போட்டிகளுக்கான பந்துவீச்சாளர்களின் தரவரிசையில் ஏழாமிடத்துக்கு இந்தியாவின் இரவீந்திர ஜடேஜா முன்னேறியுள்ளார்
கடற்கரையில் ஒதுங்கியது இந்திய ரொக்கெட் இயந்திரமா?
அஸ்திரேலியாவின் கடற்கரை பகுதியில் ஒதுங்கிய மர்ம பொருள் இந்திய ரொக்கெட் இயந்திரமாக இருக்கலாம் என ஐரோப்பிய விண்வெளி நிறுவன பொறியாளர் கருத்து தெரிவித்துள்ளார்
வெப்ப அலையால் சிவப்பு எச்சரிக்கை
ஐரோப்பிய நாடுகள் மற்றும் வட அமெரிக்காவில் வெயில் சுட்டெரித்து வருகிறது
2028ஆம் ஆண்டு வரையில் புதிய ஒப்பந்தத்தைக் கைச்சாத்திட்ட றஷ்ஃபோர்ட்
இங்கிலாந்து பிறீமியர் லீக் கால்பந்தாட்டக் கழகமான மன்செஸ்டர் யுனைட்டெட்டில் எதிர்வரும் 2028ஆம் ஆண்டு வரையில் தொடரும் வகையிலான வாரமொன்றுக்கு 325,000 ஸ்டேர்லிங்க் பவுண்ஸ்களைப் பெறும் புதிய ஒப்பந்தமொன்றில் மார்க்கஸ் றஷ்ஃபோர்ட் கைச்சாத்திட்டுள்ளார்
காதலருடன் தப்பிச் செல்ல முயன்ற பாக்.பெண் கைது
காதலருடன் புதுடெல்லிக்கு தப்பிச் செல்ல முயற்சி செய்த பாகிஸ்தானைச் சேர்ந்த பெண் சீமா குலாமை ஹைதரை பொலிஸார் கைது செய்து விசாரித்து வருகின்றனர்
3ஆவது சுற்றுப் பாதையில் சந்திரயான்-3
சந்திரயான் -3 விண்கலத்தை 3-வது சுற்றுப்பாதைக்கு உயர்த்தும் முயற்சி வெற்றிகரமாக செய்யப்பட்டதாக இஸ்ரோ அறிவித்துள்ளது
பள்ளிவாசல் அறைகள் உடைத்து திருட்டு
திருகோணமலை டைக் வீதியில் அமைந்துள்ள பள்ளிவாசல் ஒன்றில் அறைகளை உடைத்து அங்கிருந்த பொருட்கள் திருடப்பட்ட சம்பவமொன்று கடந்த வியாழக்கிழமை (13) இடம்பெற்றுள்ளது
வீட்டின் மீது பெற்றோல் குண்டு வீச்சு: பெண் காயம்
யாழ்ப்பாணம் அச்சுவேலி பத்தமேனி பகுதியில் உள்ள வீடொன்றின் மீது செவ்வாய்க்கிழமை (18) இரவு 09:30 மணியளவில் பெற்றோல் குண்டு வீசி தாக்குதல் நடத்தி, வீட்டில் இருந்த குடும்ப பெண் மீதும் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது
வாகனத் தரிப்பிடத்தில் பாரிய தீ 30 மோட்டர் சைக்கிள்கள் எரிந்து சாம்பல்
மட்டக்களப்பு வாழைச்சேனை பகுதியில் தனியார் வாகனதரிப்பிடத்தில் தீ ஏற்பட்டதில் அங்கு நிறுத்திவைக்கப்பட்டிருந்த 30 மோட்டர் சைக்கிள்கள் மற்றும் தீயில் எரிந்து துவிச்சக்கரவண்டிகள் முற்றாக சேதமடைந்த சம்பவம் செவ்வாய்க்கிழமை(18) மாலை இடம்பெற்றுள்ளதாக வாழைச்சேனை பொலிஸார் தெரிவித்தனர்
குறைந்தாலும் குறையாது
கோதுமை மாவின் விலை குறைந்துள்ள போதிலும், பாண் உள்ளிட்ட பேக்கரி உற்பத்திகளின் விலைகளை குறைப்பதற்கான இயலுமை இல்லை என அகில இலங்கை பேக்கரி உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவர் என். கே.ஜயவர்தன தெரிவித்தார்
எங்களுக்கு கிடைத்த காணியில் ஹோட்டல் கட்ட இடமளியாதீர்
பொகவந்தலாவை பெருந்தோட்ட நிறுவன நிர்வாகத்தின் கீழுள்ள நோர்வூட் நிவ்வெளி தோட்டத்தொழிலாளர் பணிப்பகிஸ்கரிப்பில் ஈடுபட்டு, காணித்தொடர்பிலான பிரச்சினைக்கு எதிர்ப்புத் தெரிவித்தனர்
தமிழ் முற்போக்கு கூட்டணி சஜித்துடன் கைகோர்க்க இவையே காரணங்கள்
நாடெங்கும் பரந்து வாழும், பெருந்தோட்ட மக்களுக்கு வீடு கட்டி வாழவும், பயிர் செய்கை வாழ்வாதாரத்துக்கும் காணி வழங்கி, அவர்களை சிறுதோட்ட உரிமையாளராக்கும் எமது கொள்கையை சஜித் பிரேமதாச ஏற்றுக்கொண்டுள்ளமை ஐக்கிய மக்கள் கூட்டணியில், பிரதான பங்காளி கட்சியாக அங்கம் வகிக்க பிரதான காரணங்களில் இதுவும் ஒன்று என தமிழ் முற்போக்கு கூட்டணி தலைவர் மனோ கணேசன் எம்பி தெரிவித்தார்
அஸ்வெசும திட்டத்துக்கு அரச அதிகாரிகளின் பங்களிப்பு அவசியம்
\"அஸ்வெசும” சமூக நலன்புரித் திட்டத்தை நடைமுறைப்படுத்துவதற்கு அரச அதிகாரிகளின் செயலூக்கமான பங்களிப்பு இன்றியமையாதது என தேசிய பாதுகாப்பு தொடர்பான ஜனாதிபதியின் சிரேஷ்ட ஆலோசகரும் ஜனாதிபதி பணிக்குழாம் பிரதானியுமான சாகல ரத்நாயக்க தெரிவித்தார்
மலையக மக்களின் உரிமைக்காக மன்னார் முதல் மாத்தளை வரை நடைபயணம்
இருநூறு ஆண்டுகளுக்கு முன்னர் மலையகத்துக்கு அழைத்து வரப்பட்ட மலையக மக்களால் மேற்கொள்ளப்பட்ட ஆபத்தான பயணத்தை நினைவுகூரும் வகையில் மன்னாரில் இருந்து மாத்தளை வரையான பாதயாத்திரையொன்று ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது
வேற்றுக்கிரக வாசிகளிடம் தமிழர் பிரச்சினை செல்லலாம்
ஆச்சரியப்படுவதற்கில்லை என்கிறார் அமைச்சர் டக்ளஸ்
தொடர்ந்து சரியும் இலங்கை ரூபாய்
இலங்கை ரூபாய்க்கு நிகரான அமெரிக்க டொலர் ஒன்றின் கொள்வனவு விலையும் விற்பனை விலையும் புதன்கிழமை (19) மேலும் அதிகரித்தது
சாணக்கியனை தாக்க முயன்ற இருவரை தாக்கிய மூவர் கைது
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் இரா.சாணக்கியனை தாக்க முற்பட்ட இருவரை தாக்கிய சம்பவம் தொடர்பில் 3 பேரை கைது செய்துள்ளதாக தெரிவித்த மட்டு தலைமையக பொலிஸார், இச்சம்பவத்துடன் தொடர்புடைய 10 க்கு மேற்பட்டவர்களை அடையாளம் கண்டுள்ளதாகவும் அவர்கள் தலை மறைவாகியுள்ளதாகவும் தெரிவித்தனர்