CATEGORIES
Kategorier
பேக்கரி உற்பத்திகளின் விலைகள் குறைப்பு
பாண் உள்ளிட்ட பேக்கரி உற்பத்திப் பொருட்களின் விலைகளை செவ்வாய்க்கிழமை (20) நள்ளிரவு முதல் அமலாகும் வகையில் 10 ரூபாயால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளதாக அகில இலங்கை பேக்கரி உரிமையாளர்கள் சங்கம் அறிவித்துள்ளது.
கிரிக்கெட் போட்டியில் சட்டத்தரணிகள் அணி வெற்றி
வடக்கு மாகாணத்தில் வைத்தியர்களுக்கும் சட்டத்தரணிகளுக்கும் இடையே சிநேகபூர்வமாக நடைபெற்ற கிரிக்கெட் போட்டியில் சட்டத்தரணிகள் அணி வெற்றி பெற்றது.
ஸெபக்தக்ரோ இலங்கை தேசிய அணியில் புத்தளத்திலிருந்து ஐவர்
தாய்லாந்தில் அடுத்த மாதம். ஆறாம் திகதி முதல் 19ஆம் திகதி வரை நடைபெறவுள்ள 36ஆவது கிங்ஸ் கப் 2023 ஸெபக்தக்ரோ உலகக் கிண்ணத்துக்கான சம்பியன்ஷிப் போட்டியில் கலந்துகொள்ளும் இலங்கை தேசிய ஸெபக்தக்ரோ அணியின் ஆண்கள் பிரிவின் 12 வீரர்களில் ஐவர் புத்தளத்தை பிரதிநிதிப்படுத்தியுள்ளனர்.
ஆப்கானிஸ்தான் குழாமுக்கு திரும்பிய ரஷீ கான்
பங்களாதேஷுக்கெதிரான ஒற்றை டெஸ்டில் ஆப்கானிஸ்தானின் ரஷீட் கானுக்கு ஓய்வளிக்கப்பட்டிருந்த நிலையில், ஒருநாள் சர்வதேசப் போட்டிக் குழாமில் அவர் இடம்பெற்றுள்ளார்.
டயலொக் பாடசாலைகள் றக்பி லீக் தொடர்: கிங்ஸ்வூட்டை வீழ்த்திய இசிப்பத்தன
டயலொக் பாடசாலைகள் றக்பி லீக் தொடரில், கண்டியில் நேற்று முன்தினம் நடைபெற்ற கிங்ஸ்வூட் கல்லூரியுடனான போட்டியில் 32-08 என்ற புள்ளிகள் கணக்கில் நடப்புச் சம்பியன்களான இசிப்பத்தன கல்லூரி வென்றது.
தேசங்களுக்கான லீக் தொடர்: சம்பியனான ஸ்பெய்ன்
ஐரோப்பிய கால்பந்தாட்டச் சங்கங்களின் ஒன்றியத்தின் தேசங்களுக்கான லீக் தொடரில் ஸ்பெய்ன் சம்பியனானது.
இரகசிய சுற்றிவளைப்பில் ஈடுபட்ட இங்கிலாந்து பிரதமர்
இந்திய வம்சாவளியை சேர்ந்த ரிஷி சுனக், இங்கிலாந்து பிரதமரானது முதல் சட்டவிரோத குடியேற்றத்தை ஒழிப்பதற்கு முக்கியத்துவம் கொடுத்து வருகின்றார்.
உக்ரேனுக்கு உதவ ஐ.நா நடவடிக்கை; மாஸ்கோ நிராகரிப்பு
உக்ரேனில் ரஸ்யா ஆக்கிரமித்த பகுதியில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ள பொது மக்களுக்கு உதவி செய்வதற்கு ஐக்கிய நாடுகள் சபை முன்வந்துள்ள நிலையில், மொஸ்கோ அதனை நிராகரித்துள்ளது. வெள்ளம், வீடுகள் மற்றும் விவசாய நிலங்களை அழித்தது.
80 வயதில் பிளஸ் 2 தேர்வு எழுதவுள்ள பாட்டி
நேபாளத்தில் கையில் ஊன்று கோல் துணையுடன் நடத்துவரும் 80 வயது மூதாட்டி தனது 12 ஆம் வகுப்பு தேர்வை எழுதவுள்ளார்.
கற்கச் சென்ற மாணவனுக்கு 9 வருடகால சிறைத்தண்டணை
இங்கிலாந்தில் கல்வி கற்ற இந்திய மாணவர் ஒருவருக்கு அந்நாட்டு நீதிமன்றம் ஒன்பது வருடகால சிறைத்தண்டனை வழங்கியுள்ளது.
தவறான ஊசி செலுத்தப்பட்ட 100 நாய்கள் மரணம்
இந்தியாவில் ஆந்திர மாநிலத்தில் நாய்களுக்கு செலுத்தப்பட்ட நிலையில் 100ற்கும் மேற்ப்பட்ட நாய்கள் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
‘குருதி படிந்த நிலம்' கவிதை தொகுப்பு நூல் புலனாய்வாளர்கள் நூலாசிரியரிடம் விசாரணை
கவிஞர் சோமையா சுதர்சனின் ‘குருதி படிந்த நிலம்' கவிதைத்தொகுப்பு நூல் ஞாயிற்றுக்கிழமை (18) புதுக்குடியிருப்பு மத்திய கல்லூரி பொன்விழா மண்டபத்தில், ஆசிரியர் பே. யதீஸ்வரன் தலைமையில் நடைபெற்றது.
கட்டாக்காலி எருமைகளை இறைச்சியாக்கும் கும்பல்
கொத்மலை பிரதேச செயலகப் பிரிவுக்கு உட்பட்ட பல கிராமங்களில் சுற்றித்திரியும் எருமை மாடுகளை, இனந்தெரியாதோர் கொன்று இறைச்சிக்காக எடுத்துச் செல்வதாக கொத்மலையின் பல கிராமங்களைச் சேர்ந்த கிராம மக்கள் தெரிவிக்கின்றனர்.
மன்னார் விவசாயிகளுக்கு பயறு, உளுந்து விதைகள் வழங்கிவைப்பு
மறு வயல் பயிர் செய்கையை ஊக்குவிக்கும் நோக்கத்துடன் மன்னார் மாவட்ட விவசாயிகளுக்கு பயறு, உளுந்து விதைகள் திங்கட்கிழமை (19) இலவசமாக வழங்கி வைக்கப்பட்டுள்ளன.
ஹைபொரஸ்ட் தோட்டத்தின் IO நாள் பணி பகிஷ்கரிப்பு முடிவுக்கு வந்தது
மத்துரட்ட பெருந்தோட்டம் பிரவுண்ஸ் கம்பனி நிர்வாகத்தின் கீழ் இயங்கும் ஹைபொரஸ்ட் தோட்டம் இரண்டு பிரிவுத் தொழிலாளர்களின் பணி பகிஷ்கரிப்பு முடிவுக்கு வந்தது.
குழந்தை வரத்துக்கு வசீகரம் செய்தவரும் காதலியும் கைது
குழந்தை வரத்தை எதிர்பார்த்து வசீகரம் செய்தபோது, பெண்ணொருவர் மரணமடைந்த சம்பவத்தை அடுத்து, வசீகரம் செய்த பூசாரியும் அவருடைய காதலியும் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.
தேசிய ரீதியில் சாதனை
மென்பொருள் சேவை நிறுவனங்களுக்கான இலங்கை சங்கத்தால் (Sri Lanka Association for Software Services Companies) 2023ஆம் ஆண்டுக்கான தேசிய புத்தாக்க சிந்தனைகளுக்கான விருதுகளில், தொழில்நுட்ப சிறார்கள் (ITech Kids) பிரிவில், மென்பொருள் உருவாக்கத்துக்காக நடைபெற்ற போட்டியில், கல்முனை மஹ்மூத் மகளிர் கல்லூரி மாணவி ஸூஹ்றா நதா, தேசிய ரீதியில் வெற்றி பெற்ற ஐந்து சாதனையாளர்களில் ஒருவராக தெரிவு செய்யப்பட்டு உள்ளார்.
புதிய நிர்வாகிகள் தெரிவு
காரைதீவு ஸ்ரீ பத்திரகாளி அம்பாள் கோவில் புதிய நிர்வாக சபை தெரிவு முன்னாள் தவிசாளர் கிருஷ்ணபிள்ளை ஜெயசிறில் தலைமையில் நடைபெற்றது.
முதுகில் வரிக்காயங்களுடன் ஹட்டனில் சிறுவன் மீட்பு
தாய், தந்தையால் கடுமையான தாக்குதலுக்கு உள்ளான சிறுவன், வீட்டிலிருந்து தப்பியோடிய நிலையில், ஹட்டன் ரயில் நிலையத்தில் வைத்து ஹட்டன் பொலிஸாரால் மீட்கப்பட்டுள்ளார்.
மட்டு. மயிலத்தமடு மேச்சல் தரையில் கன்றுத்தாச்சி மாட்டை இறைச்சிக்காக வெட்டிய கொடுமை
மட்டக்களப்புபொலன்னறுவை எல்லைபகுதியில் LD உள்ள மயிலத்தமடு, மாதவனை கால்நடை மேச்சல் பகுதியில் கன்றுத்தாச்சி மாட்டை இறைச்சிக்காக வெட்டி உள்ளதாகவும் இப்பகுதியில் கால்நடைகளை திட்டமிட்டு தொடர்ச்சியாகக் கொன்றுவருவதாகவும் கால்நடை வளர்ப்பாளர்கள் கடும் விசனம் தெரிவிக்கின்றனர்.
புதுமாத்தளனில் புதையல் தோண்ட பூசை செய்தவர்கள் கைது
முல்லைத்தீவு, புதுமாத்தளன் பகுதியில் புதையல் தோண்ட முற்பட்ட மூவரை முல்லைத்தீவு பொலிஸார் நேற்று (19) அதிகாலை கைதுசெய்துள்ளனர்.
மக்களின் விருப்பம் மாறியுள்ளதால் தேர்தலுக்கான தேவை ஏற்பட்டுள்ளது
தேர்தல் ஆணைக்குழு தெரிவிப்பு
சின்னத் தேர்தலுக்கான கட்டுப்பணத்தை திருப்பி கொடுக்கவும்
உள்ளூராட்சி தேர்தலில் போட்டியிடுவதற்காக அரசியல் கட்சிகள் மற்றும் வேட்பாளர்கள் செலுத்திய கட்டுப் பணத்தை திரும்ப வழங்குமாறும் அந்த நிதியைப் பயன்படுத்துவது சட்டவிரோதமானது என்றும் ஐக்கிய மக்கள் சக்தியின் தேசிய அமைப்பாளர் திஸ்ஸ அத்தநாயக்க தெரிவித்தார்.
கொழும்பில் 'திப்பு சுல்தான்'
சீனாவிலிருந்து பாகிஸ்தான் நோக்கிச் செல்லும் பாகிஸ்தான் கடற்படைக் கப்பல் 'திப்பு சுல்தான்' அதனது ஆரம்பப் பயணத்தில் 3 நாள்கள் நல்லெண்ண விஜயமாக ஞாயிற்றுக்கிழமை (18) கொழும்பு துறைமுகத்தை வந்தடைந்தது.
ரணில் செல்ல முன் மோடிக்கு கடிதம்
ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க, இந்திய பிரதமர் நரேந்திர மோடியை எதிர்வரும் 21ஆம் திகதி சந்திக்கவுள்ள நிலையில், அந்தச் சந்திப்புக்கு முன்னர், தமிழர் பிரச்சினையை தீர்க்க அழுத்தம் கொடுக்க வேண்டி, இந்திய பிரதமருக்கு கடிதம் அனுப்ப வேண்டும் என்று தமிழ் தேசிய கூட்டணியின் நிறைவேற்று குழுவில் தீர்மானம் எட்டப்பட்டதாக முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் சிவசக்தி ஆனந்தன் தெரிவித்தார்.
மீண்டும் 300ஐ விட குறைந்தது டொலர்
இலங்கை மத்திய வங்கியால் திங்கட்கிழமை (19) வெளியிடப்பட்ட நாணய மாற்று விகிதங்களுக்கு அமைய அமெரிக்க டொலருக்கு நிகரான இலங்கை ரூபாயின் பெறுமதி மீண்டும் வலுப்பெற்றுள்ளது.
இந்திய நீர்மூழ்கி ‘வாஹிர்' கொழும்புக்கு விஜயம்
'பூகோள சமுத்திர வலயம்' என்ற தொனிப்பொருளின்கீழ் முன்னெடுக்கப்படும் சர்வதேச யோகா தினத்தின் 9ஆவது பதிப்பினை அனுஷ்டிக்கும் முகமாக இந்திய கடற்படையின் நவீன தயாரிப்பான கல்வாரி வகை நீர்மூழ்கி கப்பலான ‘வாஹிர்’ கொழும்புக்கான விஜயம் ஒன்றை மேற்கொண்டுள்ளது.
டெங்குவில் இருந்து தப்பிக்க வெளிர் நிற நீள ஆடை அணிய அனுமதி
டெங்கு நுளம்புகளிடம் இருந்து பாடசாலை மாணவர்களை பாதுகாக்கும் நோக்கில் மேல் மாகாண பாடசாலை மாணவர்கள் சீருடையுடன் வெளிர் நிறமான நீளமான ஆடையை அணிவதற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
விசேட நுகர்வு பொருளாக கோதுமைமா பெயரீடு
பாண் விலை 10 ரூபாய் குறையும் என்கிறார் நளின்
20 ரூபாயால் ‘அதிர்ஷ்டம்’ அதிகரிப்பு
அதிர்ஷ்ட இலாபச் சீட்டின் விலையை 40 ரூபாயாக உயர்த்த அரசாங்கம் தீர்மானித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.