CATEGORIES
Kategorier
3 உறுதி மொழிகளை நிறைவேற்றவில்லை
சர்வதேச நாணய நிதிய (ஐஎம்எப்) திட்டத்தின் கீழ் கண்காணிக்கக்கூடிய 100 உறுதிமொழிகளில் 29ஐ இலங்கை பூர்த்தி செய்துள்ளதுடன், 2023 மே மாத இறுதிக்குள் அவற்றின் மூன்று உறுதிமொழிகளை நிறைவேற்ற தவறியுள்ளதாக வெரிடே ரிசர்ச்சின் 'ஐஎம்எப் கணிப்பான்' எனும் கருவி தெரிவித்துள்ளது.
போர் முடிவுக்கு வரவேண்டும்
உக்ரேன் மற்றும் ரஷியாவுக்கு இடையேயான போரை முடிவுக்கு கொண்டு வரும் பணியின் ஒரு பகுதியாக, ஆப்பிரிக்க அமைதி இயக்கம் என்ற பெயரிலான நடவடிக்கையை தென்னாப்பிரிக்க அரசு மேற்கொண்டு வருகிறது
இங்கிலாந்தில் மன்னரின் பிறந்த நாளில் - இந்தியர்களுக்கும் சிறப்பு விருது
இங்கிலாந்து மன்னர் 3-ம் சார்லஸ் நவம்பர் மாதம் 14-ந் திகதி தனது 75-வது பிறந்த நாளை கொண்டாடுகிறார். அவர் மன்னராக முடிசூட்டிக் கொண்ட பிறகு கொண்டாடும் முதல் பிறந்த நாள் இதுவாகும்
கிண்ணியா கால்பந்தாட்ட சம்மேளனத் தொடர்: றேஞ்சர்ஸ் சம்பியன்
கிண்ணியா கால்பந்தாட்ட சம்மேளனத்தால் நடாத்தப்பட்ட வெற்றிக் கிண்ணத் தொடரில் றேஞ்சர்ஸ் சம்பியனானது
நந்தினிக்கு வைர நெக்லஸை பரிசளித்த நடிகர் விஜய்
10 மற்றும் 12ம் வகுப்பு பொதுத்தேர்வில் தொகுதி வாரியாக முதல் மூன்று மதிப்பெண்களை பெற்ற மாணவ-மாணவிகளுக்கு விருது வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றுக் கொண்டிருக்கிறது
UiPath Automations சிறப்பு விருதுகள் 2022 இல் SLT-MOBITEL க்கு கௌரவிப்பு
SLT-MOBITEL, அண்மையில் இடம்பெற்ற UiPath Automation சிறப்பு விருதுகள் 2022 நிகழ்வில் கௌரவிப்பைப் பெற்றுக் கொண்டது
“இலட்சியம் இல்லாத வாழ்க்கை வாழ்க்கையல்ல”
எதிர்காலத்தில் இந்த நாட்டை வளப்படுத்துகின்ற செல்வங்களான மாணவர்களை 'மாணவச் செல்வங்கள்' என்று அழைப்பதில் மகிழ்ச்சியடைகின்றேன் என அக்கரைப்பற்று நீதவான் /மாவட்ட நீதிமன்ற நீதிபதி எம்.எச்.எம்,ஹம்ஸா தெரிவித்தார்
தேங்காய் எண்ணெய் விலை ரூ.1,000
பாராம்பரிய தேங்காய் எண்ணெய் உற்பத்தியாளர்களாகத் அடையாளப்படுத்திக் தம்மை கொண்ட ஒரு குழுவினர், உள்ளுர் சந்தையில் தேங்காய் எண்ணெய் விலை அதிகரிக்க வழி வகுத்துள்ளனர் என தேசிய நுகர்வோர் உரிமைகள் காப்பக அமைப்பு தெரிவித்துள்ளது
ரணிலின் தொலைநோக்கு நாடுகளை விட விசாலமானது
வீழ்ச்சியடைந்த நாட்டை மிகக் குறுகிய காலத்தில் உயரத்தில் தூக்கி வைத்த ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் தொலைநோக்கு பார்வையானது இங்கிலாந்து, அமெரிக்கா போன்ற நாடுகளை விட விசாலமானது என ஐக்கிய தேசிய கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் வஜிர அபேவர்தன தெரிவித்துள்ளார்
இ.போ.ச பஸ்களில் இனி நடத்துநர் இல்லை
இலங்கை போக்குவரத்துச் சபைக்குச் சொந்தமான பஸ்களில் அதிவேக நெடுஞ்சாலைகளில் சேவையில் ஈடுபடுத்தப்படும் பஸ்களில், நடத்துநர் இன்றி சேவைகளை வழங்குவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது
உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கு - மீண்டும் நிதி கேட்க ஆணைக்குழு முஸ்தீபு
உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான நிதியைக் கோரி, திறைச்சேரியின் செயலாளருக்கு மீண்டுமொரு கோரிக்கை கடிதத்தை அடுத்தவாரம் அனுப்பிவைப்பதற்கு தான் தீர்மானித்துள்ளதாக தேர்தல் ஆணைக்குழுவின் தவிசாளர் சட்டத்தரணி நிமல் ஜி.புஞ்சிஹேவா தெரிவித்துள்ளார்
எய்ட்ஸால் காலாண்டில் 15 பேர் உயிரிழப்பு
கடந்த வருடத்துடன் ஒப்பிடும் போது, இந்த வருட காலாண்டில் எய்ட்ஸ் தொற்றுக்கு உள்ளான தொற்றாளர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதாக சுகாதார போசனை மற்றும் சுதேச வைத்திய அமைச்சின் தேசிய பாலியல் நோய்/ எய்ட்ஸ் தடுப்பு வேலைத்திட்ட திணைக்களத்தின் புள்ளிவிவரத் தகவலில் குறிப்பிடப்பட்டுள்ளது
21 இளநீர் காய்களை பார்த்த பெண் மரணம்
21 இளநீர் காய்களைப் பார்த்த 48 வயதான பெண்ணொருவர் மயங்கிவிழுந்து மரணமடைந்த சம்பவமொன்று லக்கல பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட தாஸ்கிரிய எனுமிடத்தில் சனிக்கிழமை (17) இடம்பெற்றுள்ளது
மொட்டு வாடவில்லை; மொட்டில் வெல்வோம்
ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன நாட்டுக்கு விரோதமான, அழிவுகரமான பயணத்தை மேற்கொள்ளாது எனத் தெரிவித்துள்ள நகர அபிவிருத்தி மற்றும் வீடமைப்பு அமைச்சர் பிரசன்ன ரணதுங்க, தான் பிறந்த நாட்டின் வளர்ச்சியைத் தவிர, வேறு எந்த நிகழ்ச்சி நிரலும் தனது கட்சிக்கு இல்லை என்றார்
மீன்பிடி தடைக்காலம் முடிந்தது
தமிழகத்தின் கிழக்குக் கடற்கரை பகுதிகளில் அமலில் இருந்த 2 மாத மீன்பிடித் தடைக்காலம் நேற்றுடன் நிறைவடைந்தது.
தேசங்களுக்கான லீக் இறுதிப் போட்டியில் குரோஷியா
ஐரோப்பிய கால்பந்தாட்டச் சங்கங்களின் ஒன்றியத்தின் தேசங்களுக்கான லீக் தொடரின் இறுதிப் போட்டிக்கு குரோஷியா தகுதி பெற்றுள்ளது.
ஆஷஸில் வெல்வது அவுஸ்திரேலியா, இங்கிலாந்தா?
இங்கிலாந்து, அவுஸ்திரேலிய அணிகளுக்கிடையிலான ஐந்து டெஸ்ட் போட்டிகள் கொண்ட ஆஷஸ் தொடரானது பேர்மிங்ஹாமில் இன்று பிற்பகல் 3.30 மணிக்கு நடைபெறவுள்ள முதலாவது போட்டியுடன் ஆரம்பிக்கிறது.
ஜஃபனா கிங்ஸில் வியாஸ்காந்த், தேனுரதன், தீசன் விதுசன்
இலங்கையின் உள்ளூர் இருபதுக்கு 20 தொடரான லங்கா பிறீமியர் லீக்கின் (எல்.பி.எல்) ஏலமானது நேற்று முன்தினம் நடைபெற்ற நிலையில், ஜஃப்னா கிங்ஸால் யாழின் விஜயகாந்த் வியாஸ்காந்த், தீசன் விதுசன் மற்றும் மட்டக்களப்பின் ரட்ணராஜா தேனுரதன் ஆகியோர் ஏலமெடுக்கப்பட்டனர்.
இவ்வளவு பணம் தேவையா?
அமெரிக்காவில் பணக்காரராக வேண்டும் என்றால் 2.2 மில்லியன் பெறுமதியான சொத்து வைத்திருக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
போக்குவரத்து வசதி இன்மையுடன் அதிபர்களுக்கும் ஆசிரியர்களுக்கும் பற்றாக்குறை
கிளிநொச்சி தெற்கு கல்வி வலயத்துக்கு உட்பட்ட 66 பாடசாலைகளில் ஒன்பது பாடசாலைகளுக்கு அதிபர்கள் இல்லாத நிலையில், கடந்த ஆறுமாத காலமாக இயங்கி வருவதாக கிளிநொச்சி தெற்கு வலயக் கல்வி பணிப்பாளர் தெரிவித்துள்ளார்.
பிரச்சினைக்கு சுமூகமான தீர்வு
பதுளை கலன் தோட்டத்தில் முறையற்ற முகாமைத்துவம், நிர்வாக சீர்கேடு தொடர்பில் தொடர்ந்த பிரச்சினைகள் சுமூகமாக தீர்த்து வைக்கப்பட்டன.
போதைப்பொருள் பாவனையை இல்லாதொழிக்க உதவவும்
வவுனியா, தரணிக்குளம் கிராமத்தில் போதைப்பொருள் பாவனை அதிகரித்து வரும் நிலையில், அதனை இல்லாதொழிக்க உதவுமாறு வன்னி பாராளுமன்ற உறுப்பினர் கு. திலீபனிடம் கோரிக்கை முன்வைத்த கிராம மக்கள், கவனயீர்ப்பு போராட்டத்தில் புதன்கிழமை ஈடுபட்டனர்.
சுனாமியில் தலைமறைவான மரண தண்டனை கைதி சிக்கினார்
சுமார் 20 வருடங்கள் தலைமறைவாக இருந்த 54 வயதுடைய மரண தண்டனை கைதி ஒருவர் ராகமவில் கைது செய்யப்பட்டார்.
சடலங்களை அடக்கம் செய்யுமாறு அழுத்தம் கொடுக்கின்றனர்
பெருந்தோட்டங்களில் பதிடீரென மரணக்கும் சடலங்களை, மரண பரிசோ தனைகளை முன்னெடுக்காது விடுவிக்குமாறு, திடீர் மரண பரிசோதகர்களுக்கு அரசியலில் இருப்போர் கடுமையான அழுத்தங்களை பிரயோகிக்கின்றனர் என்று திடீர் மரண பரிசோதரர்கள், அகில இலங்கை திடீர் மரணம் பரிசோதகர்களின் சங்கத்திடம் முறைப்பாடு செய்துள்ளனர்.
பங்குகள் விற்பனை விவகாரத்தில் பங்காளிகளுக்கு இடையில் முரண்பாடு
அரசாங்கத்தின் பங்காளிக் கட்சிகளுக்கு இடையில் பல விடயங்கள் தொடர்பில் கருத்து முரண்பாடு ஏற்பட்டுள்ளதாக அறியமுடிகின்றது.
259 சதவீதத்தால் கைதிகள் அதிகரிப்பு
நாடளாவிய ரீதியில் உள்ள சிறைச்சாலைகளில் கைதிகளின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதாக அரச கணக்குகள் பற்றிய குழுவில் (COPA) தெரியவந்துள்ளது.
லொறியும் மோட்டார் சைக்கிளும் எரிந்து நாசம்
முல்லைத்தீவிலும், மன்னாரிலும் இரண்டு வாகனங்கள் திடீரென தீப்பற்றி எரிந்துள்ளன. மன்னாரில் லொறியும், முல்லைத்தீவில் மோட்டார் சைக்கிளுமே இவ்வாறு எரிந்துள்ளன.
காய்ச்சல் நோயாளிகளை நுளம்புகளிடமிருந்து பாதுகாப்பது முக்கியம்
டெங்கு நோயால் பாதிக்கப்பட்ட ஒருவரிடம் இருந்து மற்றவருக்கு நுளம்புகள் மூலம் டெங்கு பரவுவதால், அனைத்து காய்ச்சல் நோயாளிகளையும் நுளம்புகளிடமிருந்து பாதுகாக்க வேண்டும் என்ற விடயத்தை மக்களிடம் விரைவில் கொண்டு செல்ல வேண்டும் என டெங்கு ஒழிப்பு நிபுணர் குழுவின் தலைவி இராஜாங்க அமைச்சர் விசேட வைத்திய நிபுணர் சீதா அரம்பேபொல தெரிவித்தார்.
இருப்புப் படலை சிறுவனின் உயிரைப் பறித்தது
வீட்டின் இரும்புப் படலை, சிறுவன் மீது விழுந்ததில் அச்சிறுவன் உயிரிழந்த சம்பவம் முல்லைத்தீவு, கேப்பாபிலவு பகுதியில் புதன்கிழமை (14) காலை இடம்பெற்றுள்ளது.
கிளியில் 40 சதவீத காணிகள் படையினர் வசமே இருக்கின்றன
கிளிநொச்சி நகரத்தில் உள்ள நாற்பது சதவீதமான காணிகள் படையினர் வசம் தொடர்ந்தும் இருக்கின்ற போது, நகரத்தின் அபிவிருத்தி பற்றிப் பேசுவதில் எந்த முன்னேற்றமும் ஏற்படாது என்று பாராளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறிதரன் தெரிவித்துள்ளார்.