CATEGORIES
Kategorier
உக்ரேனில் முக்கிய அணை தகர்ப்பு
மக்கள் வெளியேற்றம்: ரஷ்ய படைகள் மீது குற்றச்சாட்டு
இனவாதம் தொடர்ந்தால் பிரச்சினை நேரிடும்
பெருந்தோட்டங்களில் தொடர்ந்தும் இனவாத செயற்பாடு தொடர்ந்தால் பெருந்தோட்ட நிர்வாகங்கள் பாரியதொரு பிரச்சினைக்கு முகம் கொடுக்க நேரிடும் என்று பாராளுமன்ற உறுப்பினர் வடிவேல் சுரேஷ் தெரிவித்தார்
வெளிவிவகார அமைச்சரும் கிழக்கு ஆளுநரும் கலந்துரையாடல்
வெளிவிவகார அமைச்சர் அலி சப்ரிக்கும் கிழக்கு மாகாண ஆளுநர் செந்தில் தொண்டமானுக்கும் இடையிலான கலந்துரையாடல் நேற்று முன்தினம் (06) கொழும்பில் இடம்பெற்றது
பொலிஸ் ஜீப் புரண்டது; மூவர் காயம்
நோர்வூட் பொலிஸ் நிலையத்தைச் சேர்ந்த பொலிஸார், செவ்வாய்க்கிழமை (06) இரவு ரோந்து சேவையில் ஈடுபட்டிருந்த நிலையில், அவர்கள் பயணித்துக்கொண்டிருந்த ஜீப், பள்ளத்தில் விழுந்து விபத்துக்கு உள்ளானதில் மூவர் காயமடைந்துள்ளனர்
சிறு, நடுத்தர தொழிற்றுறையினரின் சொத்துகளை அரசுடமை ஆக்குவது முறையற்றது
2 மாதங்களில் 4 ஆயிரம் சொத்துகள் அரசுடமை என்கிறார் ஹர்ஷ
இலங்கை மத்திய வங்கியே நெருக்கடி ஏற்படுத்தியது
தாங்கள் ஒப்படைக்கும் போது இருந்த அந்நிய செலாவணி கையிருப்பை பூச்சியம் வரையில் குறைத்துள்ளனர் என்றும் அந்நிய செலவணி கையிருப்பை பயன்படுத்தி கடனை மீளச் செலுத்த இலங்கை மத்திய வங்கி எடுத்த தீர்மானமே நெருக்கடிக்கு காரணம் என்றும் எதிர்க்கட்சி பிரதம கொரடாவான லக்ஷ்மன் கிரியெல்ல தெரிவித்தார்
ஜூன் 15 முதல் ஒன்லைனில் கடவுச்சீட்டு விண்ணப்பிக்கலாம்
எதிர்வரும் 15 ஆம் திகதி முதல் கடவுச்சீட்டுகளை ஒன்லைனில் விண்ணப்பித்து, வீடுகளுக்கே அவற்றை பெற்றுக்கொள்ளும் நடைமுறை அறிமுகப்படுத்தப்படவுள்ளதாக குடிவரவு, குடியகல்வு திணைக்களம் அறிவித்துள்ளது
கஜேந்திரனின் கைதால் சபையில் சொற்போர்
கூட்டமைப்பு எம்.பிக்களும் அமைச்சர்களும் பரஸ்பரம் குற்றச்சாட்டு அரச தரப்பினர் புலிக் கூச்சலிட்டனர்
டுபாயில் இருந்து வந்த தாய்க்கும் மகளுக்கும் குரங்கு அம்மை தொற்று
குரங்கு அம்மை வைரஸால் பாதிக்கப்பட்ட இருவர் நாட்டில் இனங்காணப்பட்டுள்ளதாக சுகாதார பணிப்பாளர் நாயகம் டொக்டர் அசேல குணவர்தன தெரிவித்தார்
கஜேந்திரகுமார் பொன்னம்பலம் கொழும்பில் கைது; கிளியில் பிணை
யாழ். மருதங்கேணி பகுதியில் இடம்பெற்ற கூட்டமொன்றின் போது பொலிஸ் புலனாய்வாளர்களுடன் இடம்பெற்ற சம்பவம் குறித்து, தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான கஜேந்திரகுமார் பொன்னம்பலம், புதன்கிழமை (07) கைது செய்யப்பட்டார்
இன்று மூன்றாவது ஒருநாள் சர்வதேசப் போட்டி: தொடரைக் கைப்பற்றுவது யார்?
இலங்கை, ஆப்கானிஸ்தான் அணிகளுக்கு இடையிலான மூன்றாவது ஒருநாள் சர்வதேசப் போட்டியானது ஹம்பாந்தோட்டையில் இன்று காலை 10 மணிக்கு நடைபெறவுள்ளது.
தலைக்கவசம் அணியாமல் செல்வோரை ‘வாட்ஸ்ஆப்’ மூலம் அவதானித்து சட்ட நடவடிக்கை
மோட்டார் சைக்கிள்களில் தலைக்கவசம் அணியாமல் செல்வோரை புகைப்படம் எடுத்து 'வாட்ஸ்ஆப்' குழுமத்தில் பதிவேற்றுவதன் மூலம், வீதி போக்குவரத்துச் சட்டத்தை மீறுவோருக்கு எதிராக, சட்டத்தை நடைமுறைப்படுத்தும் சமூக செயற்றிட்டம் ஆரம்பிக்கப்பட்டுள்ளது என்று சிரேஷ்ட பிரதி பொலிஸ் மாஅதிபர் நாலக டீ சில்வா (வடமேற்கு) தெரிவித்தார்.
டயானா விவகாரம்: தீர்ப்பு ஒத்திவைப்பு
சுற்றுலாத்துறை இராஜாங்க அமைச்சர் டயானா கமகே, எம்.பியாக இருக்க தகுதியற்றவர் என்று அறிவிக்குமாறு கோரி தாக்கல் செய்யப்பட்ட ரிட் மனு குறித்த தீர்ப்பை ஜூலை 25ஆம் திகதிக்கு மேன்முறையீட்டு நீதிமன்றம், செவ்வாய்க்கிழமை (06) ஒத்திவைத்தது.
தங்கத்துடன் சிக்கிய எம்.பியின் மீது ஏன் சட்டம் பாயவில்லை?
விமான நிலையத்தில் சட்டவிரோத தங்கம் மற்றும் பொருட்களுடன் அண்மையில் பிடிபட்ட பாராளுமன்ற உறுப்பினர் அலி சப்ரி ரஹீமுக்கு ஏன் சட்டம் உரிய முறையில் அமலாக்கப்படவில்லை என்று எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ பாராளுமன்றத்தில் வியாழக்கிழமை (06) கேள்வி எழுப்பினார்.
25 வருடங்கள் ஆட்சியில் அமர்த்தி ஜனநாயகத்தை சீர்குலைக்க மக்கள் தயாராக இல்லை
2048ஆம் ஆண்டில், ஜனாதிபதிக்கு 99 வயதாகும் போது நாட்டின் பொருளாதாரம் ஸ்திர நிலைக்கு வரும் வரையில் அவருக்கு இன்னும் 25 வருடங்களுக்கு ஆட்சியில் இருப்பதற்கு இடமளித்து, இந்த நாட்டின் ஜனநாயகத்தை சீர்குலைக்க மக்கள் தயாராக இல்லை என்று ஐக்கிய மக்கள் சக்தி பாராளுமன்ற உறுப்பினர் எஸ். எம் மரிக்கார் தெரிவித்தார்.
சுமந்திரன் எம்.பி சமர்ப்பித்த சட்டமூலம் அரசியலமைப்புக்கு முரணானது அல்ல
உயர்நீதிமன்றம் வியாக்கியானம்
பல்கலைக்கழகங்களை கட்டியெழுப்ப முடியாது
பல்கலைக்கழக கட்டமைப்பினுள் நிலவும் பல்வேறு பிரச்சினைகளை பாராளுமன்றத்தின் கவனத்துக்கு கொண்டு வந்த எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாஸ, அரசாங்கம் உடனடி நடவடிக்கை எடுக்காவிட்டால் முழு பல்கலைக்கழக கட்டமைப்பையும் மீண்டும் கட்டியெழுப்ப முடியாத நிலையை எட்டும் என்று தெரிவித்தார்.
வெள்ளத்தில் சிக்குண்ட சா/த பரீட்சார்த்திகளை கரைசேர்த்த கடற்படை
புளத்சிங்கள பிரதேசத்தில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட க.பொ.த சாதாரண தரப் பரீட்சைக்கு தோற்றும் பாடசாலை பரீட்சார்த்திகள் பரீட்சை மண்டபங்களுக்கு செல்ல இலங்கை கடற்படை உதவியுள்ளது.
சர்வதேசத்திடம் நீதிகோரிச் செல்வோரை துப்பாக்கி கொண்டு அச்சுறுத்துகிறீர்கள்
சிறீதரன் எம்.பி தெரிவிப்பு அமைச்சர் அலிசப்ரிக்கும் பதிலடி
முத்திரை வெளியிட்டது வெட்கக் கேடானது
முகவரி இல்லாத சமூகத்துக்கு பல வருடங்கள் தலைவராக இருந்தவரை கௌரவிப்பதற்காக முத்திரை வெளியிடுமளவுக்கு இந்தப் பாராளுமன்றம் இருக்கின்றது என்றும், இது வெட்கக் கேடானது என்றும் ஐக்கிய மக்கள் சக்தி பாராளுமன்ற உறுப்பினர் எம்.வேலுகுமார் தெரிவித்தார்.
கிளிநொச்சியில் நீச்சல் பயிற்சியை முடித்த மாணவர்களுக்கு சான்றிதழ்கள்
கிளிநொச்சி நீர் விளையாட்டுக் கழகத்தின் ஏற்பாட்டில், ஆரம்ப நீச்சல் பயிற்சியை நிறைவு செய்த மாணவர்களுக்கு சான்றிதழ்கள் வழங்கி வைக்கப்பட்டுள்ளன.
500 குழந்தைகளை ரஷ்யா கொன்றுள்ளது
உக்ரேன் மீதான போரில் ரஷ்யா குறைந்தது 500 குழந்தைகளைக் கொன்றுள்ளது என்று உக்ரேன் ஜனாதிபதி ஜெலன்ஸ்கி தெரிவித்துள்ளார்.
மறைக்கும் எண்ணம் ஒடிசா அரசுக்கு இல்லை
பாலசோர் ரயில் விபத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கையை மறைக்கும் எந்த எண்ணமும் ஒடிசா அரசுக்கு இல்லை என்றும், மீட்பு நடவடிக்கைகள் அனைத்தும் பொதுமக்கள் முன்னிலையிலேயே நடந்தன என்றும் ஒடிசா மாநில தலைமைச் செயலாளர் தெரிவித்துள்ளார்.
ஸ்பானிய குரான் பிறி: வென்றார் வெர்ஸ்டப்பன்
ஸ்பானிய குரான் பிறீயானது ஸ்பெய்னின் பார்சிலோனாவில் நேற்று முன்தினம் நடைபெற்றபோது நடப்புச் சம்பியனான மக்ஸ் வெர்ஸ்டப்பன் வென்றார்.
செல்டா விகோவிடம் தோற்ற நடப்புச் சம்பியன்கள்
ஸ்பானிய லா லிகா தொடர்
செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்ப வளர்ச்சி மனிதர்களுக்கு ஆபத்து
உலகம் முழுவதும் AI எனப்படும் செயற்கை நுண்ணறிவு (Artificial Intelligence) தொழில்நுட்ப வளர்ச்சி அபாயங்கள் குறித்து, கூகுள் முன்னாள் பிரதம நிறைவேற்று அதிகாரி எரிக் ஷ்மிட் எச்சரித்துள்ளார்.
காஸ் வாங்கிவிட்டு குமுறும் நுகர்வோர்
நுவரெலியாவில் மாநகர சபைக்கு உட்பட்ட, சமையல் எரிவாயு விற்கும் கடைகளில், அதிக விலைக்கு சமையல் எரிவாயு விற்பனை செய்வதாக புகார் தெரிவிக்கும் மக்கள், ரசீது கேட்டால், நுகர்வோர் மீது வர்த்தகர்கள் சிலர் எகிறி பாய்வதாகவும் தெரிவித்தனர்.
மன்னார் மீனவர்களுக்கு சீன மண்ணெண்ணெய்
சீன அரசாங்கத்தால் வழங்கப்பட்ட மானிய அடிப்படையிலான மண்ணெண்ணெய், மன்னார் மாவட்ட மீனவர்களுக்கு வைபவரீதியாக நேற்று (05) மன்னார் தனியார் எரிபொருள் நிரப்பு நிலையத்தில் வைத்து பகிர்ந்தளிக்கப்பட்டது.
“நாட்டுக்காக உழைக்கின்றோம்; எங்களது ரோட்டுக்கு பஸ் தா”
புரட்டொப்ட் பகுதிக்கு வழங்கப்பட்டதாகக் கூறப்படும் இலங்கை போக்குவரத்துச் சபைக்குச் சொந்தமான பஸ்ஸை, தங்களுடைய பிரதேசங்களில் சேவையில் ஈடுபடுத்துமாறு கோரி, புரட்டொப்ட், ரஸ்புரூக், பூச்சிகொடை, மேரியல், அயரி, மேமலை கட்டுக்குத்துல, காச்சாமலை, சமகிபுர,டெல்ட்டா போன்ற தோட்டப்பகுதிகளில் தொழிலாளர் பணி நிறுத்தம் மேற்கொள்ளப்பட்டு பாரிய கண்டன ஆர்ப்பாட்ட பேரணியையும் முன்னெடுத்தனர்.
பொன் சிவகுமாரனுக்கு அஞ்சலி
தியாகி பொன் சிவகுமாரனின் 49 ஆவது நினைவேந்தல் நேற்று திங்கட்கிழமை (05) உரும்பிராயில் உள்ள அவரது நினைவிடத்தில் அனுஷ்டிக்கப்பட்டது.