CATEGORIES
Kategorier
இங்கிலாந்து பிறீமியர் லீக்: லெய்செஸ்டரை வென்ற ஆர்சனல்
இங்கிலாந்து கால்பந்தாட்டக் கழகங்களுக்கிடையிலான பிறீமியர் லீக் தொடரில், லெய்செஸ்டர் சிற்றியின் மைதானத்தில் நேற்று முன்தினம் நடைபெற்ற அவ்வணியுடனான போட்டியில் 1-0 என்ற கோல் கணக்கில் ஆர்சனல் வென்றது.
‘ஹர்வி வெய்ன்ஸ்டீனுக்கு' மேலும் 16 ஆண்டுகள் சிறை
பிரபல ஹொலிவுட் திரைப்பட தயாரிப்பாளரான 'ஹார்வி வெய்ன்ஸ்டீனுக்கு ‘(Harvey Weinstein) எதிராக, கடந்த 2017ஆம் ஆண்டு சுமார் 80 பெண்கள் பாலியல் புகார்களைத் தெரிவித்திருந்தனர்.
ரோபோக்கள் பணி நீக்கம்
உலகளவில் அதிகரித்து வரும் பொருளாதார மந்த நிலை காரணமாக டுவிட்டர், கூகுள், மெட்டா, உள்ளிட்ட பல முன்னணி நிறுவனங்கள் அண்மைக்காலமாக தமது ஊழியர்களைப் பணி நீக்கம் செய்து வருகின்றன.
ஸ்பானிய லா லிகா தொடர்: சமநிலையில் மட்ரிட்களின் மோதல்
ஸ்பானிய கால்பந்தாட்டக் கழகங்களுக்கு இடையிலான லா லிகா தொடரில், நடப்புச் சம்பியன்களான றியல் மட்ரிட்டின் மைதானத்தில் நேற்று முன்தினம் நடைபெற்ற அவ்வணிக்கும், அத்லெட்டிகோ மட்ரிட்டுக்கும் இடையிலான போட்டியானது 1-1 என்ற கோல் கணக்கில் சமநிலையில் முடிவடைந்தது.
வீடுகளை இழந்த இ மக்களுக்கு புதிய வீடுகள்
துருக்கி - சிரிய எல்லையில் கடந்த 6 ஆம் திகதி ஏற்பட்ட சக்திவாய்ந்த நிலநடுக்கமானது முழு உலகையே சோகத்தில் ஆழ்த்தியது.
போலியான ஆவணங்களைத் தயாரித்து: அரச காணிகளை அபகரிக்கும் செயற்பாடுகள் இராஜாங்க அமைச்சர் எஸ். வியாழேந்திரன் குற்றஞ்சாட்டு
மட்டக்களப்பு மாவட்டத்தில் சில அரச அதிகாரிகள், போலியான ஆவனங்களை தயாரித்து, அரச காணிகளை அபகரிக்கும் செயற்பாடுகளை மேற்கொள்வதாக இராஜாங்க அமைச்சர் எஸ். வியாழேந்திரன் குற்றம் சாட்டியுள்ளார்.
துறைமுக நகரில் புதிய சட்ட அபிவிருத்திகளுக்கு குழு: இளம் சட்டத்தரணிகளிடம் ஜனாதிபதி கோரிக்கை
கடல்சார் பொருளாதார சட்டத்தில் நிபுணத்துவத்தை பெறுமாறும் துறைமுக நகரத்தில் புதிய சட்ட அபிவிருத்திகளை முன்னெடுப்பதற்கு குழுவொன்றை அமைக்குமாறும் இளம் சட்டத்தரணிகளிடம் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க வேண்டுகோள் விடுத்தார்.
சுசினுக்கு எதிராக ஒழுக்காற்று நடவடிக்கை எடுக்க வேண்டும்
பாராளுமன்ற நடவடிக்கைகளின் போது தன்னை ஆபாசமான வார்த்தைகளில் திட்டியமைக்காக கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்தவுக்கு எதிராக ஒழுக்காற்று நடவடிக்கை எடுக்குமாறு பாராளுமன்ற உறுப்பினர் ரோஹினி கவிரத்ன, கடிதம் மூலம் கோரிக்கை விடுத்துள்ளார்.
இந்திய முட்டைகள் இன்று வருகின்றன
இலங்கை அரச வர்த்தக கூட்டுத்தாபனத்தால் இறக்குமதி செய்யப்படும் முட்டைகள், உணவகம் மற்றும் சிற்றுண்டிச்சாலை உரிமையாளர்கள் மற்றும் பேக்கரி தொழிலில் உள்ளவர்களுக்கு விற்பனை செய்யப்படும் என்று தெரிவிக்கப்படுகிறது.
ஐ.நா கூட்ட தொடர் இன்று ஆரம்பமாகிறது: அமைச்சர் அலி சப்ரி செல்லவில்லை
ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் 52 ஆவது கூட்டத்தொடர் இன்று திங்கட்கிழமை (27) ஜெனீவாவில் ஆரம்பமாகவுள்ளதுடன், மனித உரிமைகள் குழு கூட்டமும் ஆரம்பமாகவுள்ள நிலையில், ஐ.நா கூட்டத்தொடரில் தான் கலந்து கொள்ளவில்லை என்று வெளிவிவகார அமைச்சர் அலி சப்ரி தெரிவித்தார்.
இலங்கைக்கு புதிய கடன் செயல் முறைகள் தேவை ஜி20 மாநாட்டில் IMF பணிப்பாளர்
கணிக்கக்கூடிய, உரிய நேரத்தில் ஒழுங்கான செயல்முறைகள் இலங்கைக்கு தேவை என்று சர்வதேச நாணய நிதியத்தின் முகாமைத்துவ பணிப்பாளர் கிறிஸ்டலினா ஜோர்ஜீவா தெரிவித்தார்.
கடனை துரிதமாக மறுசீரமைக்கவும் இலங்கைக்கு உலக வங்கி அழைப்பு
இலங்கை மற்றும் ஏனைய நடுத்தர வருமானம் கொண்ட நாடுகளுக்கு விரைவான கடன் மறுசீரமைப்பு தேவைப்படுகிறது என்று உலக வங்கியின் தலைவர் டேவிட் மல்பாஸ் தெரிவித்தார் என்று ‘பிசினஸ் ஸ்டாண்டர்ட்’ செய்தி வெளியிட்டுள்ளது.
”எனது அந்தரங்க உறுப்புகளைத் தொட்டுத் தாக்கினார் "
இந்திய கிரிக்கெட் அணியின் நட்சத்திர வீரர் பிரித்வி ஷா. இவர் கடந்த சில நாட்களுக்கு முன்னர் மும்பையில் ஒரு நட்சத்திர விடுதியில் தனது நண்பர்களுடன் உணவு அருந்திக்கொண்டு இருந்தபோது இன்ஸ்டாகிராம் பிரபலமும், போஜ்புரி நடிகையுமான 'ஸ்வப்னா கில்' அவருடன் செல்பி எடுக்க முயன்றுள்ளார்.
பிரசாரத்தில் வெடித்த வன்முறை: தி.மு.க., நாம் தமிழர் கட்சி தொண்டர்கள் மோதல்
ஈரோடு கிழக்கு தொகுதியில் தேர்தல் களம் அனல் பறக்கும் நிலையில், நேற்று முன்தினம் இரவு நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் வீரப்பன்சத்திரம் பஸ் நிறுத்தம் அருகே பிரச்சார நடவடிக்கையில் ஈடுபட்டிருந்தார்.
கொரோனா அச்சம்: 3 ஆண்டுகளுக்குப் பின்னர் தாய், மகன் மீட்பு
கொரோனாப் பரவல் குறித்த அச்சத்தில் அடுக்குமாடிக் குடியிருப்பொன்றில் தனது 11 வயதான மகனுடன் தனியாக இருந்த பெண்ணொருவர் 3 ஆண்டுகளுக்குப் பின்னர் அரியானா மாநிலம் குருகிராமத்தில் மீட்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
சம்பியன்ஸ் லீக்: சமநிலையில் சிற்றி லெய்ப்ஸிக் போட்டி
ஐரோப்பிய கால்பந்தாட்டச் சம்பியன்ஸ் லீக்
இந்தியாவுக்கெதிரான ஒருநாள் சர்வதேசப் போட்டித் தொடருக்கான அவுஸ்திரேலியக் குழாமில் மக்ஸ்வெல், மார்ஷ், றிச்சர்ட்ஸன்
இந்தியாவுக்கெதிரான ஒருநாள் சர்வதேசப் போட்டித் தொடருக்கான அவுஸ்திரேலியக் குழாமில், நீண்ட காலமாக காயங்கள் காரணமாக போட்டிகளில் பங்கேற்றிருக்காத கிளென் மக்ஸ்வெல், மிற்செல் மார்ஷ், ஜஹை றிச்சர்ட்ஸன் ஆகியோர் இடம்பெற்றுள்ளனர்.
ஆண்களுக்கு மாத்திரமே அனுமதி
ஜப்பானில் 'ஒக்கினோசமா என்ற புகழ்பெற்ற தீவொன்று உள்ளது. சுமார் 700 சதுர மீற்றர் பரப்பளவில் அமைந்துள்ள இத்தீவானது யுனஸ்கோவின் உலக பாரம்பரியம் மிக்க தளமாக அறிவிக்கப்பட்டுள்ளது.
சீனாவில் பதற்றம் ;50 க்கும் மேற்பட்டோர் இடிபாடுகளுக்குள் சிக்கித் தவிப்பு
சீனாவில் அண்மையில் நிலக்கரிச் சுரங்கமொன்று இடிந்து விழுந்ததில் 2 தொழிலாளர்கள் உயிரிழந்துள்ளனர் எனவும், 50 க்கும் மேற்பட்டோர் சுரங்கத்திற்குள் சிக்கியுள்ளனர் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
விளையாட்டில் தோல்வி பார்வையாளர்கள் 7 பேர் சுட்டுக் கொலை
பிரேசிலில் சினாப் சிட்டி என்ற இடத்தில் பில்லியர்ட்ஸ் கிளப் ஒன்று உள்ளது.
சீனா, தஜிகிஸ்தானில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்
சீனாவின் ஜின்ஜியாங் உய்குர் தன்னாட்சிப் பகுதியிலும், தஜிகிஸ்தான் எல்லை பகுதியிலும் நேற்றுக் காலை 7.2 ரிச்டர் அளவில் சக்திவாய்ந்த நிலநடுக்கமொன்று ஏற்பட்டுள்ளது.
‘மெஸ்ஸியின் மீள்வருகைக்காக பார்சிலோனாவின் கதவுகள் திறந்துள்ளன'
ஸ்பானிய கால்பந்தாட்டக் கழகமான பார்சிலோனாவுக்கு, பிரெஞ்சு லீக் 1 கழகமான பரிஸ் ஸா ஜெர்மைனின் முன்களவீரரான லியனல் மெஸ்ஸி மீளத் திரும்புவதற்கான கதவுகள் எப்போதும் திறந்துள்ளதாக பார்சிலோனாவின் பயிற்சியாளர் ஸ்கெவி பெர்ணாண்டஸ் தெரிவித்துள்ளார்.
பந்துவீச்சாளர்களின் தரவரிசையில் முதலாமிடத்துக்கு முன்னேறிய அன்டர்சன்
சர்வதேச கிரிக்கெட் சபையின் டெஸ்ட் போட்டிகளுக்கான பந்துவீச்சாளர்களின் தரவரிசையில் முதலாமிடத்துக்கு இங்கிலாந்தின் வேகப்பந்துவீச்சாளர் ஜேம்ஸ் அன்டர்சன் முன்னேறியுள்ளார்.
சின்னத் தேர்தல் ரிட் மனு ஒத்திவைப்பு
உள்ளூராட்சி மன்றத் தேர்தலை நடத்துவதற்கான தேர்தல் ஆணைக்குழுவின் தீர்மானத்தை இரத்து செய்யக் கோரி உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ள ரிட் மனு மீதான பரிசீலனையை மே மாதம் 11ஆம் திகதி வரை ஒத்திவைத்து உயர்நீதிமன்றம், வியாழக்கிழமை (20) உத்தரவிட்டது.
தேர்தலுக்கு ரூ.500 கொடுத்த யாழ். இளைஞன்
எம்.ஹொசாந்த் எதிர்வரும் மார்ச் 9ஆம் திகதி நடத்த திட்டமிட்டிருந்த தேர்தலை நடத்த நிதியில்லை என்று ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க பாராளுமன்றத்தில் வியாழக்கிழமை (23) அறிவித்திருந்த நிலையில், யாழ்ப்பாண இளைஞர் ஒருவர் தேர்தலை நடத்துவதற்கு 500 ரூபாய் பணத்தை அனுப்பி வைத்துள்ளார்.
வடக்கு மக்களின் வளங்களை பிரபாகரனே அழித்தொழித்தார்
வடக்கு மாகாண மக்களின் விவசாயம் உள்ளிட்ட வளங்களை அரசாங்கம் அழிக்கவில்லை என்றும் பிரபாகரனே அனைத்தையும் அழித்தொழித்தார் என்றும் நீதியமைச்சர் விஜேதாஸ ராஜபக்ஷ, வியாழக்கிழமை (23) தெரிவித்தார்.
விக்கிரமசிங்க மலர்ச்சாலையில் சின்னத் தேர்தல் என்ற உடல் ஜனாதிபதியை எச்சரித்தார் டலஸ்
உள்ளுராட்சி மன்றத் தேர்தலின் உடல் விக்கிரமசிங்க மலர்ச்சாலையில் வைக்கப்பட்டுள்ளது என்றும் இதன்மூலம் தவறான வரலாற்று சம்பவத்துக்கு மீண்டும் அழைப்பு விடுக்க வேண்டாம் என ஜனாதிபதியை எச்சரிக்கின்றோம் என்றும் சுயாதீன எதிர்க்கட்சி பாராளுமன்ற உறுப்பினர் டலஸ் அழகப்பெரும தெரிவித்தார்.
"முஜிபுரை பலிகொடுத்து விட்டனர்” -ஜனாதிபதி
பாராளுமன்ற உறுப்பினர் பதவியில் இருந்து இராஜினாமா செய்யவேண்டாம் என்று தான், முஜிபுர் ரஹ்மான் எம்.பிக்கு குறுஞ்செய்தி அனுப்பியதாகவும் அவரை அவரது கட்சியினர் பலிகொடுத்துவிட்டனர் என்றும் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க பாராளுமன்றத்தில் வியாழக்கிழமை (23) தெரிவித்தார்.
ஒத்திவைக்க தேர்தல் இல்லை பாராளுமன்றத்தில் அறிவித்தார் ஜனாதிபதி
நாம் அறிந்த வகையில் இதுவரையில் சட்டபூர்வமான தேர்தல் திகதியொன்று அறிவிக்கப்படவில்லை. சிலர் மார்ச் 9ஆம் திகதி குறித்து பேசுகின்றனர்.
சென்னையில் நில அதிர்வு அலறியடித்து ஓடிய மக்கள்
சென்னையில் நேற்றுக் காலை அண்ணா சாலை அருகே லாயிட்ஸ் ரோடு பகுதியில் அமைந்துள்ள 3 மாடி கட்டிடத்தில் இலேசான நிலஅதிர்வு உணரப்பட்டது.