CATEGORIES
Kategorier
திரவ மருந்து உற்பத்தி தொழிற்சாலை திறக்கப்பட்டது
முதலாவது கிருமித் தொற்று திரவ மருந்து
பிரியமாலி விவகாரம்: தயாசிறி எம்.பியும் சீ.ஐ.டி சென்றார்
பாரிய பண மோசடி குறித்து விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள திலினி பிரியமாலி என்ற பெண்ணுக்கு, பணம் வழங்கியதாக சமூக வலைத்தளங்களில் பரவி வரும் பெயர் பட்டியலில் தனது பெயர் இடம்பெற்றுள்ளமை குறித்து, ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் பொதுச் செயலாளரும் எம்.பியுமான தயாசிறி ஜயசேகர, குற்றப் புலனாய்வு திணைக்களத்தில் (சீ.ஐ.டி) நேற்று (10) முறைப்பாடு பதிவு செய்தார்.
நாட்டைக் கட்டியெழுப்ப நிரந்தர தேசிய கொள்கை அவசியம்
நாட்டைக் கட்டியெழுப்ப நிரந்தரமான தேசிய கொள்கை ஒன்றே அவசியம் என ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார்.
வழிபாட்டுத் தலங்களுக்கு மின்கட்டணத்தில் சலுகை
மத வழிப்பாட்டு தலங்களுக்கு மின்கட்டணத்தில் சலுகை வழங்குவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது.
வெளிநாட்டு கையிருப்பும் உயர்வு
வெளிநாடுகளில் பணிபுரியும் இலங்கை பணியாளர்கள் நாட்டுக்கு அனுப்பிய பணம் ஓகஸ்ட் மாதத்துடன் ஒப்பிடுகையில் செப்டெம்பர் மாதத்தில் 24 மில்லியன் டொலரால் அதிகரித்துள்ளதாக இலங்கை மத்திய வங்கி தகவல்கள் தெரிவிக்கின்றன.
சேவையை ஆரம்பித்தது ரஷ்யாவின் 'ஏரோஃப்ளோட்'
ரஷ்யாவின் 'ஏரோஃப்ளோட்' விமான நிறுவனம் ஐந்து மாதங்களுக்குப் பின்னர், இலங்கைக்கான விமான சேவையை மீண்டும் நேற்று (09) ஆரம்பித்தது.
இன்றையதினம் வங்கி விடுமுறை
அனைத்து வங்கிகள் மற்றும் கொழும்பு பங்குச் சந்தை ஆகியவற்றுக்கு இன்றையதினம் (10) விசேட விடுமுறை வழங்கப்பட்டுள்ளதாக இலங்கை மத்திய வங்கி அறிவித்துள்ளது.
உள்ளூராட்சிமன்றங்களுக்கான உறுப்பினர்களை அரைவாசியாக குரைப்பேன்
அடுத்த தேர்தலுக்கு முன்னர் உள்ளூராட்சி மன்றங்களுக்கான (பிரதேச சபைகள், மாநகர சபைகள், நகர சபைகள்) எண்ணிக்கையை சபை உறுப்பினர்களின் 8,000 இலிருந்து 4,000 ஆகக் குறைத்து, ஜனசபா திட்டத்தையும் நடைமுறைப்படுத்த உத்தேசித்துள்ளதாக ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார்.
நான்காமிடத்தில் துடுப்பெடுத்தாடவுள்ள ஷகிப்?
அணியின் தேவைகள் கருதி, தனது விருப்பத்துக்குரிய மூன்றாமிட துடுப்பாட்ட நிலையைக் கைவிட பங்களாதேஷின் அணித்தலைவர் ஷகிப் அல் ஹஸன் தயாராகியுள்ளதாகக் கூறப்படுகிறது.
முதலாவது இருபதுக்கு – 20 சர்வதேசப் போட்டியில் மேற்கிந்தியத் தீவுகளை வென்ற அவுஸ்திரேலியா
மேற்கிந்தியத் தீவுகளுக்கெதிரான முதலாவது இருபதுக்கு - 20 சர்வதேசப் போட்டியை அவுஸ்திரேலியா வென்றது.
சம்பியன்ஸ் லீக்: சமநிலையில் பரிஸ் ஸா ஜெர்மைன் - பெய்பிக்கா
சம்பியன்ஸ் லீக் தொடரில், போர்த்துக்கல் கழகமான பெய்பிக்காவின் மைதானத்தில் நேற்று அதிகாலை நடைபெற்ற அவ்வணி உடனான போட்டியை 1-1 என்ற கோல் கணக்கில் பிரெஞ்சு லீக் 1 கழகமான பரிஸ் ஸா ஜெர்மைன் சமப்படுத்தியிருந்தது.
முகேஷ் அம்பானி குடும்பத்தினருக்கு கொலை மிரட்டல்
மும்பையில் உள்ள ரிலையன்ஸ் மருத்துவமனை மற்றும் முகேஷ் அம்பானி குடும்பத்தினருக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இலங்கைக்கு எதிரான புதிய பிரேரணை நிறைவேறியது
அமெரிக்கா, பிரித்தானியா உள்ளிட்ட 20 நாடுகள் ஆதரவு | சீனா, பாகிஸ்தான் உள்ளிட்ட 7 நாடுகள் எதிர்ப்பு | இந்தியா, ஜப்பான், ஐக்கிய அரபு . இராச்சியம் உள்ளிட்ட 20 நாடுகள் வாக்கெடுப்பை தவிர்த்தன
யாழ்ப்பாணத்தில் SLT-MOBITEL இன் இணைக்கும் வசந்தம்
யாழ்ப்பாணப் பிரதேசத்தைச் சேர்ந்த மக்களுக்கு புதிதாக அதிவேக இணைய இணைப்புகளையும், PEO தொலைக்காட்சி இணைப்புகளையும் பெற்றுக் கொள்வதற்கான வாய்ப்பையும், ஏற்கனவே காணப்படும் தமது இணைப்புகளை மெருகேற்றிக் கொள்வதற்கான வாய்ப்பையும் வழங்க இலங்கையின் தேசிய தொலைத்தொடர்பாடல் சேவைகளை வழங்கும் SLT-Mobitel முன்வந்துள்ளது.
‘சார்ஜர்களின்' பயன்பாடு குறித்து புதிய சட்டம்
ஐரோப்பிய ஒன்றிய நாடுகளில், பல வகையான சார்ஜர்களின் பயன்பாட்டை நிறுத்தும் வகையில் புதிய சட்டமொன்று இயற்றப்பட்டுள்ளது.
அனைத்திலும் தலையிடுகிறது
மஹேஸ்வரி விஜயனந்தன் இலங்கை விடயத்தில் ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையானது, தேவையான விடயங்கள், தேவையற்ற விடயங்களென அனைத்திலும் தலையிடுவதாகத் தெரிவித்த வெளிவிவகார அமைச்சர் அலி சப்ரி, இதற்காகத்தான் நாம் எதிர்ப்பு தெரிவிக்கின்றோமே தவிர பொருளாதார மறுசீரமைப்பை முன்னெடுக்க மாட்டோம் என நாம் தெரிவிக்கவில்லை என்றார்.
12.5 கிலோவுக்கு ரூ.271 குறைத்தது லிட்ரோ
12.5 கிலோகிராம் நிறையுடைய எரிவாயு சிலிண்டரின் விலை 271 ரூபாயால் குறைக்கப்பட்டுள்ளதாகவும், 5 மற்றும் 2.3 கிலோ சிலிண்டர்களின் விலைகளும் முறையே 107 மற்றும் 48 ரூபாய்களால் குறைக்கப்பட்டுள்ளதாகவும் லிட்ரோ எரிவாயு நிறுவனத்தின் தலைவர் முதித பீரிஸ், நேற்று (05) தெரிவித்தார்.
இலங்கைக்கெதிரான தீர்மானம் மீது இன்று வாக்கெடுப்பு
ஐநா மனித உரிமைகள் பேரவையில் இலங்கை தொடர்பில் சமர்ப்பிக்கப்பட்டுள்ள மீதான வாக்கெடுப்பு இன்று (6) தீர்மானம் இடம்பெறவுள்ளது.
முதுகு உபாதையால் உலகக் கிண்ணத்திலிருந்து விலகிய பும்ரா
மொஹமட் ஷமி, தீபக் சஹர் ஆகியோர் பிரதியிட வாய்ப்புகள் காணப்படுவதோடு, மொஹமட் சிராஜ்ஜுக்கும் வாய்ப்பு காணப்படுகின்றது.
உற்சாகத்தில் உக்ரேன்
நேட்டோ படையுடன் உக்ரேன் இணைவதற்கு எதிர்ப்புத் தெரிவித்து, ரஷ்யா கடந்த பெப்ரவரி மாதம் முதல் உக்ரேன் மீது தாக்குதல் நடத்தி வருகின்றது.
கடன் மறுசீரமைப்பு குறித்து ஆராய்ந்து வருகின்றோம்
பொருளாதார நெருக்கடியில் இருந்து விடுபடுவதற்கு இலங்கைக்கு உடனடி நிதி உதவிகள் தேவைப்படுகின்றன. தற்போது எமது இருதரப்பு மற்றும் பல்தரப்பு கடன் வழங்குநர்களுடன் கலந்துரையாடி, கடன் மறுசீரமைப்பு குறித்து ஆராய்ந்து வருகின்றோம் என ஐக்கிய நாடுகள் சபையின் இலங்கைக்கான நிரந்தர வதிவிடப்பிரதிநிதியும் தூதுவருமான மொஹான் பீரிஸ் தெரிவித்துள்ளார்.
இலங்கையில் வறுமை பரவுவது உரிமை மீறலாகும்
சர்வதேச மன்னிப்புச் சபை தெரிவிப்பு
பகலுணவு திட்டத்தை விரிவாக்க அங்கிகாரம்
பாடசாலை பகலுணவு வேலைத்திட்டத்தை விரிவாக்கம் செய்து மேலும் ஒரு மில்லியன் மாணவர்களுக்கு முழுமையான போசாக்கான பகலுணவு வேளையை வழங்குவதற்காக ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க சமர்ப்பித்த யோசனைக்கு அமைச்சரவை அங்கிகாரம் வழங்கியுள்ளது.
சூடு பிடிக்கிறது 15 ஆயிரம் ரூபாய்
தீபாவளி பண்டிகைக்கான கொடுப்பனவாக 15 ஆயிரம் ரூபாயை வழங்குமாறு முன்வைக்கப்படும் கோரிக்கை வலுப்பெற்றுள்ளது. தீபாவளி பண்டிகைக்கு இன்னும் 19 நாள்கள் இருக்கின்ற நிலையிலேயே திடீரென சக்தியின் தலைவருமான சஜித் பிரேமதாஸ, பெருந்தோட்டங்களைச் சேர்ந்த மக்கள், தீபாவளியை மத, கலாசாரம் அடங்கிய கொண்டாட்டமாக கொண்டாடி வருகின்றனர் என்றார்.
மகேந்திரனுடன் மதியமா? மறுத்தார் ஜனாதிபதி ரணில்
ஜப்பானுக்கு பயணிக்கும் வழியில் சிங்கப்பூருக்குச் சென்று, இலங்கை மத்திய வங்கியின் முன்னாள் ஆளுநர் அர்ஜுன மகேந்திரனுடன் மதிய உணவை உட்கொண்டதாக, ஐக்கிய மக்கள் சக்தியின் எம்.பியான எஸ். எம். மரிக்கார் முன்வைத்திருந்த குற்றச்சாட்டை, ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க சபையில் மறுத்தார்.
மருத்துவத்துக்கான நோபல் பரிசு அறிவிப்பு
உலகின் மிக உயர்ந்த பரிசாகக் கருதப்படும் நோபல் பரிசானது ஒவ்வொறு ஆண்டும் அமைதி, இலக்கியம், இயற்பியல், வேதியியல், பொருளாதாரம் மற்றும் மருத்துவ துறைகளில் தலை சிறந்தவர்களுக்கு வழங்கப்பட்டு வருகின்றது.
போரை நிறுத்தவும் - புட்டினிடம் போப் கோரிக்கை
உ க்ரேன் மீதான போரை முடிவிற்குக் கொண்டு வருமாறு ரஷ்ய ஜனாதிபதி விளார்டிமிர் புட்டினுக்கு போப் பிரான்சிஸ் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
தென்னாபிரிக்காவை மீண்டும் வென்ற இந்தியா
தென்னாபிரிக்காவுக்கு எதிரான இரண்டாவது இருபதுக்கு - 20 சர்வதேசப் போட்டியில் இந்தியா வென்றது.
இலங்கையின் முன்னேற்றம் குறித்து மதிப்பீட்டு அறிக்கை வருட இறுதியில் அல்லது 2023 ஆரம்பத்தில் வெளிவரும்
ஐரோப்பிய ஆணைக்குழு தெரிவிப்பு
புனர்வாழ்வு பணியக சட்டமூலம்: திருத்தங்களை செய்ய அரசாங்கம் உத்தேசம்
நீதித்துறை மீளாய்வுக்கு உட்படுத்தப்படும் என்கிறார் சட்டமா அதிபர்