CATEGORIES
فئات
செயற்கை நுண்ணறிவின் நேர்மையான பயன்பாட்டுக்கு உலகளாவிய கட்டமைப்பு: பிரதமர் மோடி அழைப்பு
செயற்கை நுண்ணறிவை நோ்மையாகவும், நெறிமுறைகளுக்கு உள்பட்டு பயன்படுத்த உலகளாவிய கட்டமைப்பை உருவாக்க பிரதமா் நரேந்திர மோடி அழைப்பு விடுத்துள்ளாா். செயற்கை நுண்ணறிவுக் கருவிகளைப் பயங்கரவாதிகள் பயன்படுத்தும் அபாயம் இருப்பதாகவும் அவா் எச்சரித்தாா்.
3,449 தூய்மைப் பணியாளர்களுக்கு ஊக்கத் தொகை - பாராட்டுச் சான்றிதழ் முதல்வர் மு.க.ஸ்டாலின் வழங்கினார்
புயல் பாதிப்பைத் தொடா்ந்து தூய்மைப் பணியில் ஈடுபட்ட பணியாளா்கள் 3,449 பேருக்கு ஊக்கத் தொகை, பாராட்டுச் சான்றிதழை முதல்வா் மு.க.ஸ்டாலின் செவ்வாய்க்கிழமை வழங்கினாா்.
பேரிடர் நிவாரணமாக குஜராத்துக்கு ரூ.338 கோடி, ஹிமாசலத்துக்கு ரூ.633 கோடி வழங்க அரசு ஒப்புதல்
இயற்கை சீற்றங்களால் பாதிக்கப்பட்ட குஜராத் மாநிலத்துக்கு ரூ.338 கோடியும் ஹிமாசல பிரதேச மாநிலத்துக்கு ரூ.633 கோடியும் பேரிடா் நிவாரண நிதியாக வழங்க மத்திய உள்துறை அமைச்சகம் செவ்வாய்க்கிழமை ஒப்புதல் அளித்தது.
மின் கட்டணம் செலுத்துவதற்கான காலக்கெடுவை டிச.30 வரை நீட்டிக்க வேண்டும்
வெள்ளம் பாதித்த பகுதிகளில் மின் கட்டணம் செலுத்துவதற்கான காலக்கெடுவை நீட்டிக்கக் கோரி மின்சாரத் துறை அமைச்சா் தங்கம் தென்னரசுக்கு, மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலா் கே.பாலகிருஷ்ணன் கடிதம் அனுப்பியுள்ளாா்.
மாநில எய்ட்ஸ் கட்டுப்பாட்டு சங்கத்துக்கு தேசிய விருது
தமிழ்நாடு மாநில எய்ட்ஸ் கட்டுப்பாட்டு சங்கத்துக்கு சிறந்த செயல்பாட்டுக்கான தேசிய விருதை மத்திய அரசு வழங்கியுள்ளதாக மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சா் மா.சுப்பிரமணியன் தெரிவித்தாா்.
எண்ணூர் பகுதி மக்களுக்கு ரூ. 15,000 நிவாரணம்: ஓபிஎஸ் வலியுறுத்தல்
வெள்ளத்தாலும், எண்ணெய்க் கசிவாலும் பாதிக்கப்பட்ட எண்ணூா் பகுதி மக்களுக்கு ரூ. 15,000 நிவாரணம் வழங்க வேண்டும் என்று முன்னாள் முதல்வா் ஓ.பன்னீா்செல்வம் வலியுறுத்தியுள்ளாா்.
வன உயிரினங்களால் ஏற்படும் பயிர்ச் சேதங்களுக்கு விரைந்து இழப்பீடு அதிகாரிகளுக்கு அமைச்சர் உத்தரவு
வன உயிரினங்களால் ஏற்படும் பயிா் சேதங்களுக்கு விரைந்து இழப்பீடு வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என துறை அலுவலா்களுக்கு வனத் துறை அமைச்சா் மதிவேந்தன் உத்தரவிட்டாா்.
புயல் பாதிப்பு: தொற்று பரவல் விவரங்களை அளிக்க மருத்துவமனைகளுக்கு உத்தரவு |
மிக்ஜம் புயல் மற்றும் கன மழையால் ஏற்பட்ட நோய்த் தொற்றுகள் குறித்த விவரங்களை பகிர வேண்டும் என்று அனைத்து மருத்துவமனைகளுக்கும் பொது சுகாதாரத் துறை அறிவுறுத்தியுள்ளது.
திருத்தங்களுடன் 3 குற்றவியல் சட்ட மசோதாக்கள் மக்களவையில் தாக்கல்
குற்றவியல் சட்டங்களுக்கு மாற்றாக ஏற்கெனவே தாக்கல் செய்யப்பட்ட 3 மசோதாக்களை திரும்பப் பெற்ற மத்திய அரசு, திருத்தங்களுடன் புதிய மசோதாக்களை மக்களவையில் செவ்வாய்க்கிழமை தாக்கல் செய்தது.
ராஜஸ்தான் புதிய முதல்வர் பஜன்லால் சர்மா - முதல் முறை பாஜக எம்எல்ஏ
ராஜஸ்தான் மாநில புதிய முதல்வராக பாஜகவை சோ்ந்த முதல்முறை எம்எல்ஏ பஜன் லால் சா்மா செவ்வாய்க்கிழமை தோ்வு செய்யப்பட்டாா்.
எந்த மாநிலத்துக்கும் ஜிஎஸ்டி தொகை நிலுவை இல்லை
எந்த மாநிலத்துக்கும் ஜிஎஸ்டி நிலுவைத் தொகை நிறுத்திவைக்கப்படவில்லை. பொதுக் கணக்கு சான்றிதழ் சமர்ப்பிக்காத சில மாநிலங்களுக்கு மட்டுமே நிலுவைத் தொகை விடுவிக்கப்படவில்லை' என்று மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்தார்.
சென்னை ஜிஎம் செஸ்: குகேஷ், அர்ஜுன் பங்கேற்பு
சென்னையில் வரும் வெள்ளிக்கிழமை (டிச. 15) தொடங்கும் சென்னை கிராண்ட்மாஸ்டர் (ஜிஎம்) செஸ் சாம்பியன்ஷிப்பில் டி.குகேஷ், அர்ஜுன் எரிகைசி போன்ற பிரதான வீரர்கள் பங்கேற்கின்றனர்.
இந்தியாவுடனான டெஸ்ட் தொடர்: இங்கிலாந்து அணியில் இருவர் அறிமுகம்
இந்தியாவுடனான டெஸ்ட் தொடரில் விளையாடவிருக்கும் இங்கிலாந்து அணி 16 பேருடன் திங்கள்கிழமை அறிவிக்கப்பட்டது. அதில் அறிமுக வீரர்களாக டாம் ஹார்ட்லி, ஷோயப் பஷீர் என்ற இரு ஸ்பின்னர்கள் சேர்க்கப்பட்டுள்ளனர்.
விஜய் ஹஸாரே: அரையிறுதியில் தமிழ்நாடு
விஜய் ஹஸாரே கோப்பை கிரிக்கெட் போட்டியின் காலிறுதி ஆட்டத்தில் தமிழ்நாடு 7 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் மும்பையை வீழ்த்தி அரையிறுதிக்கு திங்கள்கிழமை தகுதிபெற்றது.
நெதர்லாந்து 5-ஆவது முறையாக சாம்பியன்
சிலியில் நடைபெற்ற 13-ஆவது ஜூனியர் மகளிர் உலகக் கோப்பை ஹாக்கி போட்டியில் ஆர்ஜென்டீனாவை வீழ்த்தி நெதர்லாந்து சாம்பியன் கோப்பையை தக்கவைத்துக் கொண்டது.
எதிர்க்கட்சிகள் ஆளும் மாநிலங்களுக்கு குறைவான நிதி: ‘இந்தியா' கூட்டணி கட்சிகள் வெளிநடப்பு
எதிா்க்கட்சிகள் ஆளும் மாநிலங்களுக்கு மத்திய அரசு முறையாக நிதி ஒதுக்கீடு செய்வதில்லை எனக் குற்றஞ்சாட்டி இந்திய கூட்டணி கட்சிகளின் எம்.பி.க்கள் மாநிலங்களவையில் இருந்து திங்கள்கிழமை வெளிநடப்பு செய்தனா்.
ஒடிஸா மதுபான நிறுவனம் சம்பந்தப்பட்ட இடங்களில் 6-ஆவது நாளாக சோதனை இதுவரை ரூ.353 கோடி பறிமுதல்
ஒடிஸாவில் காங்கிரஸ் எம்.பி. தீரஜ் பிரசாத் சாஹுவின் குடும்பத்துக்குச் சொந்தமான மதுபான உற்பத்தி நிறுவனம் சம்பந்தப்பட்ட இடங்களில், தொடா்ந்து 6-ஆவது நாளாக வருமான வரித் துறை சோதனை திங்கள்கிழமை நீடித்தது. இந்தச் சோதனையில், இதுவரை ரூ.353 கோடி பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.
புயல் பாதிப்பு: 4 மாவட்ட மக்களுக்கு ரூ.17 கோடி நிவாரணப் பொருள்கள்
மிக்ஜம் புயலால் பாதிக்கப்பட்ட 4 மாவட்ட மக்களுக்கு ரூ. 17.60 கோடி மதிப்பிலான நிவாரணப் பொருள்கள் வழங்கப்பட்டுள்ளன என்று தமிழக அரசின் சாா்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஜம்மு-காஷ்மீருக்கு உரிய நேரத்தில் மாநில அந்தஸ்து: அமித் ஷா
ஜம்மு-காஷ்மீருக்கு உரிய நேரத்தில் முழு மாநில அந்தஸ்து வழங்கப்படும் என்று மத்திய உள்துறை அமைச்சா் அமித் ஷா மாநிலங்களவையில் தெரிவித்தாா்.
தமிழகத்தில் ஓரிரு இடங்களில் மழைக்கு வாய்ப்பு
தமிழகம் மற்றும் புதுச்சேரியில் அடுத்த 6 நாள்களுக்கு ஓரிரு இடங்களில் மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
தங்கம் பவுனுக்கு ரூ.120 குறைவு
சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை பவுனுக்கு ரூ. 120 குறைந்து பவுன் ரூ.46,000-க்கு விற்பனையானது.
சென்னையில் கார் பந்தயம் நடத்த தடை கோரிய வழக்கு ஒத்திவைப்பு
சென்னை தீவுத்திடலைச் சுற்றி, ஃபாா்முலா - 4 காா் பந்தயம் நடத்த தடை கோரிய வழக்குகளின் தீா்ப்பை சென்னை உயா்நீதிமன்றம் தேதி குறிப்பிடாமல் ஒத்திவைத்துள்ளது.
காஷ்மீருக்கான சிறப்பு அந்தஸ்து ரத்து: புதிய தமிழகம் கட்சி வரவேற்பு
காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து அளித்து வந்த 370-ஆவது பிரிவை ரத்து செய்தது சரி என உச்சநீதிமன்றம் அளித்த தீா்ப்புக்கு புதிய தமிழகம் கட்சி வரவேற்பு தெரிவித்துள்ளது.
சென்னை காவல் துறையில் இரு உதவி ஆணையர்கள் பணியிட மாற்றம்
சென்னை பெருநகர காவல் துறையில் இரு உதவி ஆணையா்கள் பணியிட மாற்றம் செய்யப்பட்டனா்.
மகாகவி பாரதிக்கு ஜதி பல்லக்கு ஊர்வலம்
மகாகவி பாரதியாரின் பிறந்தநாளை முன்னிட்டு சென்னை திருவல்லிக்கேணியில் வானவில் பண்பாட்டு மையம் சாா்பில் திங்கள்கிழமை நடைபெற்ற ஜதி பல்லக்கு ஊா்வலம்.
செங்கல்பட்டு அருகே சரக்கு ரயில் தடம்புரண்டது
செங்கல்பட்டு அருகே சரக்கு ரயில் தடம்புரண்டது
எம்.பி. பதவியிலிருந்து நீக்கப்பட்டதை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் மஹுவா மொய்த்ரா மனு
மக்களவை உறுப்பினர் பதவியில் இருந்து நீக்கப்பட்டதற்கு எதிராக மஹுவா மொய்த்ரா உச்சநீதிமன்றத்தில் மனு அளித்துள்ளார்.
மத்திய பிரதேசத்தின் புதிய முதல்வர் மோகன் யாதவ் சிவராஜ் சிங் சௌஹான் ராஜிநாமா
மத்திய பிரதேச ஆளுநர் மங்குபாய் படேலை திங்கள்கிழமை சந்தித்து ஆட்சியமைக்க உரிமை கோரிய மோகன் யாதவ். உடன், முன்னாள் முதல்வர் சிவராஜ் சிங் சௌஹான் உள்ளிட்டோர்.
சென்னையில் அனைத்துக் குடும்ப அட்டைதாரர்களுக்கும் ரூ.6,000 - அமைச்சர் தங்கம் தென்னரசு
மிக்ஜம் புயலால் பாதிக்கப்பட்ட சென்னை மாவட்டத்தைச் சேர்ந்த அனைத்துக் குடும்ப அட்டைதாரர்களுக்கும் நிவாரண நிதியாக ரூ. 6,000 வழங்கப்படும் என்றும், டிசம்பர் 16-ஆம் தேதிமுதல் அதற்காக டோக்கன் விநியோகம் செய்யப்படும் என்றும் நிதியமைச்சர் தங்கம் தென்னரசு கூறினார்.
25 மீனவர்களை விடுவிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் மத்திய அமைச்சருக்கு முதல்வர் கடிதம்
இலங்கைக் கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ள மீனவர்களையும், அவர்களது மீன்பிடிப் படகுகளையும் உடனடியாக மீட்கத் தேவையான தூதரக நடவடிக்கைகளை மேற்கொள்ள வலியுறுத்தி மத்திய வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய்சங்கருக்கு முதல்வர் மு.க. ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார்