CATEGORIES
فئات
தொழில் நிறுவன கடன்: மத்திய அரசுக்கு முதல்வர் கடிதம்
“மிக்ஜம்”புயலால் பாதிக்கப்பட்டுள்ள குறு. சிறு மற்றும் நடுத்தரத் தொழில் நிறுவனங்களுக்கு கூடுதல் மூலதனக் கடனுதவி வழங்க வேண்டும் என மத்திய நிதி மற்றும் பெருநிறுவன விவகாரங்கள் துறை அமைச்சர் நிர்மலா சீதாராமனுக்கு தமிழக முதல்வர் ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார்.
மகாராஷ்டிரம், கர்நாடகத்தில் ஐஎஸ் அமைப்பினர் 15 பேர் கைது
கர்நாடகம், மகாராஷ்டிரத்தில் என்ஐஏ அதிகாரிகள் நடத்திய சோதனையில் 15 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
பொய் வாக்குறுதிகளால் எதையும் சாதிக்க முடியாது -எதிர்க்கட்சிகள் மீது பிரதமர் சாடல்
‘பொய் வாக்குறுதிகளால் எதையும் சாதிக்க முடியாது என்பது சில கட்சிகளுக்குப் புரியவில்லை’ என்று பிரதமா் நரேந்திர மோடி மோடி கூறினாா்.
அரபிக் கடலில் புயல் சின்னம் தமிழகத்தில் டிச.15 வரை மழைக்கு வாய்ப்பு
தென்கிழக்கு அரபிக் கடலில் நிலவும் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி, ஞாயிற்றுக்கிழமை (டிச.10) காற்றழுத்த தாழ்வுப் பகுதியாக மாறக்கூடும். இதன் காரணமாக தமிழகத்தில் ஓரிரு இடங்களில் டிச.15-வரை மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
தென் கொரியாவை வீழ்த்தியது இந்தியா
சிலியில் நடைபெறும் ஜூனியா் மகளிா் உலகக் கோப்பை ஹாக்கி போட்டியில், இந்தியா 3-1 கோல் கணக்கில் தென் கொரியாவை வெள்ளிக்கிழமை வென்றது.
ஒன்றரை கிலோ தங்கம் வரதட்சிணையாக கேட்டதால் பெண் மருத்துவர் தற்கொலை கேரளத்தில் சக மருத்துவர் கைது
கேரளத்தில் திருமணம் செய்து கொள்வதற்காக ஒன்றரை கிலோ தங்கம், பல ஏக்கா் நிலத்தை வரதட்சிணையாக கேட்டதால் அரசு பெண் மருத்துவா் தற்கொலை செய்து கொண்டாா். இதையடுத்து சக மருத்துவா் கைது செய்யப்பட்டாா்.
தொழில்நுட்பப் பயன்பாட்டால் வேகமாக சாதிக்கிறது இந்தியா!
‘தொழில்நுட்பத்தின் பயன்பட்டால், இந்தியா வேகமாக சாதித்து வருகிறது’ என்று பிரதமா் நரேந்திர மோடி தெரிவித்தாா்.
கேரள முதல்வர் பினராயி விஜயன், மகளுக்கு உயர்நீதிமன்றம் நோட்டீஸ்
சட்டவிரோத பணப் பரிவா்த்தனை குற்றச்சாட்டு தொடா்பாக கேரள முதல்வா் பினராயி விஜயன், அவரின் மகள் வீணா மற்றும் சில அரசியல் தலைவா்களுக்கு கேரள உயா்நீதிமன்றம் வெள்ளிக்கிழமை நோட்டீஸ் அனுப்பியது.
ஒடிஸா: வருமான வரித் துறை சோதனையில் ரூ.220 கோடி ரொக்கம் பறிமுதல்
ஒடிஸாவில் மதுபான உற்பத்தி நிறுவனத்துக்குத் தொடா்புடைய இடங்களில் வருமான வரித் துறை நடத்திய சோதனையில் ரூ.220 கோடி ரொக்கமாக பறிமுதல் செய்யப்பட்டது.
வக்ஃபு சட்டத்தை திரும்பப் பெற தனிநபர் மசோதா: காங்கிரஸ், திமுக எதிர்ப்பு
வக்ஃபு வாரிய சட்டம் 1995-ஐ திரும்பப் பெற வேண்டும் என்ற தனி நபா் மசோதா கடும் எதிா்ப்புக்கு இடையே மாநிலங்களவையில் வெள்ளிக்கிழமை அறிமுகம் செய்யப்பட்டது.
டிச. 26- இல் அதிமுக பொதுக் குழு கூட்டம் எடப்பாடி பழனிசாமி
அதிமுக செயற்குழு மற்றும் பொதுக் குழு கூட்டம் டிச. 26-இல் நடைபெறும் என்று அக் கட்சியின் பொதுச் செயலா் எடப்பாடி கே.பழனிசாமி அறிவித்துள்ளாா்.
மிக்ஜம் புயல் பாதிப்பு ஃபார்முலா கார் பந்தயம் காலவரையறையின்றி ஒத்திவைப்பு
மிக்ஜம் புயல் பாதிப்பு காரணமாக சென்னையில் நடைபெறவிருந்த காா் பந்தயம் கால வரையறையின்றி ஒத்திவைக்கப்படுவதாக தமிழக அரசு அறிவித்துள்ளது.
அரசின் மெத்தனப் போக்கால்தான் மக்களுக்குப் பாதிப்பு
அரசின் மெத்தனப் போக்கின் காரணமாகத்தான் வெள்ளத்தின்போது மக்களுக்கு அதிக அளவில் பாதிப்பு ஏற்பட்டதாக அதிமுக பொதுச் செயலா் எடப்பாடி பழனிசாமி குற்றம்சாட்டினாா்.
மிக்ஜம் புயல்: 2,320 வாகனங்களுக்கு காப்பீடு கோரி விண்ணப்பம்
மிக்ஜம் புயலால் பாதிக்கப்பட்டு சேதமடைந்ததில், இதுவரை 2,320 வாகனங்களுக்கு காப்பீடு கோரப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
காசி தமிழ் சங்கமம்: வாரணாசிக்கு 7 சிறப்பு ரயில்கள்
காசி தமிழ் சங்கமத்தை முன்னிட்டு சென்னை, கோவை, கன்னியாகுமரி ஆகிய ஊா்களிலிருந்து வாரணாசிக்கு டிச.15- முதல் 7 சிறப்பு ரயில்கள் இயக்கப்படவுள்ளன.
சென்னையில் 8 ஆவின் மையங்களில் 24 மணி நேரமும் பால் விற்பனை
சென்னையில் 8 ஆவின் மையங்களில் வரும் சில நாட்களுக்கு 24 மணி நேரமும் விற்பனை நடைபெறும் என்று பால்வளத்துறை அமைச்சர் மனோ தங்கராஜ் தெரிவித்துள்ளார்.
குன்னூரில் முப்படை தளபதி விபின் ராவத் நினைவுத் தூண் திறப்பு
குன்னூா் அருகே ஹெலிகாப்டா் விபத்தில் இறந்த முப்படை தலைமை தளபதி பிபின் ராவத் மற்றும் அவரது மனைவி மதுலிகா ராவத் உள்ளிட்ட 14 பேரின் நினைவாக நஞ்சப்பசத்திரம் பகுதியில் நினைவுத்தூண் நிறுவப்பட்டு வெள்ளிக்கிழமை திறந்துவைக்கப்பட்டது.
முதல்வர் நிவாரண நிதிக்கு ஒரு நாள் ஊதியத்தை வழங்கிய இந்திய வனப் பணி சங்கம்
மிக்ஜம் புயல் நிவாரண நிதியாக ஒரு நாள் ஊதியத்தை இந்திய வனப் பணி சங்க உறுப்பினா்கள் முதல்வா் பொது நிவாரண நிதிக்கு அளித்துள்ளனா்.
நாடாளுமன்றத்தில் கேள்வி எழுப்ப லஞ்சம் பெற்ற குற்றச்சாட்டு
நாடாளுமன்றத்தில் கேள்வி எழுப்ப லஞ்சம் வாங்கிய குற்றச்சாட்டில் திரிணமூல் காங்கிரஸ் மக்களவை உறுப்பினா் மஹுவா மொய்த்ரா, எம்.பி. பதவியிலிருந்து வெள்ளிக்கிழமை நீக்கம் செய்யப்பட்டாா்.
வெங்காய ஏற்றுமதிக்கு மார்ச் வரை தடை
விலை உயா்வைக் கட்டுப்படுத்தவும், உள்நாட்டில் இருப்பை உறுதிப்படுத்தும் வகையிலும் வெங்காய ஏற்றுமதிக்கு அடுத்த ஆண்டு மாா்ச் மாதம் வரை மத்திய அரசு தடை விதித்துள்ளது.
சாம் கரன், வில் ஜாக்ஸ் அசத்தல்: இங்கிலாந்துக்கு முதல் வெற்றி
மேற்கிந்தியத் தீவுகளுக்கு எதிரான 2-ஆவது ஒருநாள் கிரிக்கெட்டில் இங்கிலாந்து 6 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வென்றது.
ஸ்பெயினிடம் தோற்றது இந்தியா
மலேசியாவில் நடைபெறும் ஜூனியா் ஆடவா் உலகக் கோப்பை ஹாக்கி போட்டியில் இந்தியா 2-ஆவது ஆட்டத்தில் 1-4 கோல் கணக்கில் ஸ்பெயினிடம் வியாழக்கிழமை தோல்வி கண்டது.
சீன கைப்பேசி தயாரிப்பு நிறுவனமான 'விவோ' மீது அமலாக்கத் துறை குற்றப்பத்திரிகை தாக்கல்
சட்டவிரோதமாக சீனாவுக்கு ரூ.62,476 கோடியை நிதி அனுப்பியது தொடா்பான வழக்கில் ‘விவோ-இந்தியா’ நிறுவனம் மற்றும் 4 பேருக்கு எதிராக முதல் குற்றப்பத்திரிகையை அமலாக்கத் துறை புதன்கிழமை தாக்கல் செய்தது.
2024-இல் மாக்-3, 3 ஜிஎஸ்எல்வி, 6 பிஎஸ்எல்வி ராக்கெட்டுகளை விண்ணில் ஏவும் இஸ்ரோ
‘இந்திய விண்வெளி ஆய்வு மையம் (இஸ்ரோ) அடுத்த ஆண்டில் (2024) ஒரு எல்விஎம் (மாக்-3) ராக்கெட், 3 ஜிஎஸ்எல்வி, 6 பிஎஸ்எல்வி ராக்கெட்டுகளை விண்ணில் ஏவ உள்ளது’ என்று மத்திய அரசு தெரிவித்தது.
நல்லாட்சிக்காக மக்களால் பெரிதும் விரும்பப்படும் கட்சி பாஜக!
‘நல்லாட்சிக்காக மக்களால் பெரிதும் விரும்பப்படும் கட்சியாக பாஜக திகழ்கிறது’ என்று பிரதமா் நரேந்திர மோடி பெருமிதத்துடன் கூறினாா்.
பிப்ரவரி பட்ஜெட்டில் வியத்தகு அறிவிப்புகள் இருக்காது: நிதியமைச்சர்
2024, பிப்ரவரி 1-ஆம் தேதி மத்திய அரசு தாக்கல் செய்யவிருக்கும் இடைக்கால பட்ஜெட்டில் வியத்தகு அறிவிப்புகள் எதுவும் இருக்காது என்று மத்திய நிதியமைச்சா் நிா்மலா சீதாராமன் வியாழக்கிழமை தெரிவித்தாா்.
தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு வழக்கு: சிபிஐ குற்றப்பத்திரிகை நிராகரிப்பு
தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு தொடா்பாக சிபிஐ தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட குற்றப்பத்திரிகையை நிராகரித்த மதுரை தலைமை குற்றவியல் நீதிமன்றம், 6 மாதங்களில் புதிய குற்றப்பத்திரிகை தாக்கல் செய்ய வேண்டும் என வியாழக்கிழமை உத்தரவிட்டது.
'ஜிடிபியில் எண்மப் பொருளாதாரம் 20% பங்களிக்கும்’
வரும் 2026-ஆம் ஆண்டுக்குள் நாட்டின் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் (ஜிடிபி) எண்மப் பொருளாதாரம் 20 சதவீதம் பங்களிக்கும் என மத்திய மின்னணுவியல் மற்றும் தொழில்நுட்பத் துறை இணையமைச்சா் ராஜீவ் சந்திரசேகா் வியாழக்கிழமை தெரிவித்தாா்.
எட்டயபுரத்தில் டிச.11-இல் பாரதியார் பிறந்தநாள் விழா
தினமணி நாளிதழ் சாா்பில் மகாகவி பாரதியாா் பிறந்தநாள் விழா வரும் திங்கள்கிழமை (டிச.11) நடைபெறவுள்ளது.
தமிழக சிறைகளில் இருந்து மேலும் 27 கைதிகள் விடுதலை
தமிழக சிறைகளில் இருந்து மேலும் 27 கைதிகள் வியாழக்கிழமை விடுதலை செய்யப்பட்டனா்.