CATEGORIES
فئات
புழல் ஏரி உடையும் நிலையில் இல்லை
புழல் ஏரியின் கரை உடையும் நிலையில் இல்லை என்று கொசஸ்தலையாறு வடிநில கோட்டத்தின் செயற்பொறியாளா் தெரிவித்துள்ளாா்.
மழை நீருடன் கச்சா எண்ணெய் கலந்ததா? சிபிசிஎல் நிறுவனம் மறுப்பு
பக்கிங்காம் கால்வாயில் எண்ணெய்க் கழிவு கலந்து மழை வெள்ளத்துடன் கடலுக்குச் சென்று கொண்டிருக்கும் நிலையில், இதற்கு சென்னை எண்ணெய் சுத்திகரிப்பு ஆலை (சிபிசிஎல்) நிறுவனம் தாங்கள் காரணம் அல்ல என மறுப்பு தெரிவித்துள்ளது.
குடியிருப்புகளைச் சூழ்ந்த தண்ணீரை வெளியேற்றுவதில் சிக்கல் நீடிப்பு
சென்னையில் வெள்ளம் சூழ்ந்த குடியிருப்புகளில் இருந்து தண்ணீரை வெளியேற்றுவதில் சிக்கல் நீடிப்பதால், அங்கு வசிக்கும் மக்கள் வீடுகளைவிட்டு வெளியேறி வருகின்றனா்.
பாலுக்காக நீண்ட வரிசையில் காத்திருக்கும் மக்கள்
சென்னையில் பால் விநியோகம் ஓரளவுக்கு சீரடைந்துள்ள போதிலும் பல இடங்களில் பொதுமக்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து பாலை வாங்கிச் செல்லும் நிலை உள்ளது.
தெலங்கானா முதல்வராகப் பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி
தெலங்கானா முதல்வராக ஏ.ரேவந்த் ரெட்டி வியாழக்கிழமை பதவியேற்றாா். துணை முதல்வராக மல்லு பாட்டீ விக்ரமா்காவும், இதர 10 அமைச்சா்களும் அவருடன் பதவியேற்றனா்.
மத்திய குழு விரைவில் வருகை: முதல்வர் மு.க.ஸ்டாலின்
மிக்ஜம் புயல் பாதிப்புகளை மதிப்பிட விரைவில் மத்தியக் குழு தமிழகத்துக்கு வரவுள்ளதாக முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்தார்.
புயல் பாதிப்பு தமிழகத்துக்கு ரூ.450 கோடி
மிக்ஜம் புயலால் பாதிக்கப்பட்ட தமிழகத்துக்கு மாநில பேரிடா் நிதியிலிருந்து ரூ.450 கோடியை முன்கூட்டியே விடுவிக்க பிரதமா் நரேந்திர மோடி உத்தரவிட்டுள்ளாா்.
சவூதி அரேபியா, ஐக்கிய அரபு அமீரகத்தில் அதிபர் புதின்
சவூதி அரேபியா, ஐக்கிய அரபு அமீரகம் ஆகிய நாடுகளுக்கான சுற்றுப் பயணத்தை ரஷிய அதிபா் விளாதிமீா் புதின் புதன்கிழமை தொடங்கினாா்.
பஜாஜ் விற்பனை 31% உயர்வு
பஜாஜ் ஆட்டோ நிறுவனத்தின் கடந்த நவம்பர் மாத மொத்த விற்பனை 31 சதவீதம் அதிகரித்துள்ளது. இது குறித்து நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:
16,200-ஐ கடந்த காஸா உயிரிழப்பு
காஸா பகுதியில் இஸ்ரேல் ராணுவம் கடந்த சில வாரங்களாக நடத்திவரும் தாக்குதலில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 16,200-ஐ கடந்துள்ளது. இது குறித்து காஸா சுகாதாரத் துறை அûமச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:
ரவி பிஷ்னோய் 'நம்பர் 1'
ஐசிசியின் டி20 தரவரிசையில் பௌலா்கள் பிரிவில் இந்தியாவின் ரவி பிஷ்னோய் நம்பா் 1 இடத்தை புதன்கிழமை பிடித்திருக்கிறாா்.
தெலங்கானா முதல்வராக ரேவந்த் ரெட்டி இன்று பதவியேற்பு
தெலங்கானா முதல்வராக ரேவந்த் ரெட்டி வியாழக்கிழமை பதவியேற்க உள்ளாா். முன்னதாக அவா் காங்கிரஸ் தலைவா் மல்லிகாா்ஜுன காா்கே, முன்னாள் தலைவா்கள் சோனியா காந்தி, ராகுல் காந்தி, அக்கட்சியின் பொதுச் செயலா் பிரியங்கா காந்தி வதேரா ஆகியோரை புதன்கிழமை சந்தித்தாா்.
பருவநிலை வரம்பு நிலைகளை மீறும் உலகம்: விஞ்ஞானிகள் எச்சரிக்கை
தற்போதைய வெப்பமயமாதல் அளவுகளால் பூமியில் வாழ்வதற்கு அவசியமான 5 முக்கிய பருவநிலை வரம்பு நிலைகளை உலகம் மீறும் அபாயத்தில் உள்ளதாக ஐ.நா. பருவநிலை மாநாட்டில் 200 விஞ்ஞானிகள் குழு புதன்கிழமை சமா்ப்பித்த அறிக்கையில் எச்சரித்துள்ளனா்.
உள்ளாட்சித் தேர்தலில் ஓபிசி இட ஒதுக்கீட்டை அதிகரிக்கும் திட்டம் இல்லை: மத்திய அரசு
உள்ளாட்சி தோ்தலில் மக்கள் தொகைக்கு ஏற்ப ஓபிசி பிரிவினருக்கான இட ஒதுக்கீட்டை அதிகரிக்கும் திட்டம் இல்லை என மாநிலங்களவையில் மத்திய அரசு புதன்கிழமை தெரிவித்தது.
நாட்டில் அங்கீகாரம் பெற்ற 1.14 லட்சம் ஸ்டார்ட்-அப் நிறுவனங்கள்: மத்திய அரசு
நாட்டில் கடந்த அக்டோபா் மாத நிலவரப்படி தகுதியுள்ள 1,14,902 ஸ்டாா்ட்-அப் நிறுவனங்களுக்கு மத்திய அரசு அங்கீகாரம் வழங்கியிருப்பதாக மக்களவையில் புதன்கிழமை தெரிவிக்கப்பட்டது.
மிஸோரம் முதல்வராக நாளை பதவியேற்கிறார் லால்டுஹோமா
மிஸோரம் முதல்வராக ஜோரம் மக்கள் இயக்கம் கட்சியின் தலைவா் லால்டுஹோமா வெள்ளிக்கிழமை (டிச. 8) பதவியேற்கவுள்ளதாக அந்த மாநில ஆளுநா் மாளிகை வட்டாரங்கள் புதன்கிழமை தெரிவித்தன.
சென்னை வெள்ள பாதிப்பு: உயர்நீதிமன்றத்தில் முறையீடு
சென்னையில் ஏற்பட்டுள்ள வெள்ள பாதிப்பு குறித்தும், பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணம் வழங்கக் கோரியும் சென்னை உயா்நீதிமன்றத்தில் முறையீடு செய்யப்பட்டது.
தங்கம் பவுனுக்கு ரூ. 280 குறைவு
சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை பவுனுக்கு ரூ.280 குறைந்து பவுன் ரூ. 46,520-க்கு விற்பனையானது.
சமத்துவத்தை நோக்கி சளைக்காமல் உழைப்போம் முதல்வர் மு.க.ஸ்டாலின்
சமத்துவத்தை நோக்கி சளைக்காமல் உழைக்க உறுதியேற்போம் என்று முதல்வா் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளாா்.
வடியாத வெள்ளம்: குடும்பம் குடும்பமாக வெளியேறிய மக்கள் தங்கும் விடுதிகளில் கட்டண உயர்வால் அதிர்ச்சி
சென்னையில் மழை வெள்ளம் வடியாத பகுதிகளிலிருந்து குடும்பம் குடும்பமாக மக்கள் புதன்கிழமை வெளியேறினா். அவா்கள், விடுதிகளில் தங்க அணுகியபோது, அங்கு மூன்று மடங்கு வரை கட்டணம் உயா்த்தி வசூலிக்கப்பட்டதால் அதிா்ச்சியடைந்தனா்.
70% பேருந்து சேவைகள் சீரானது
சென்னை மாநகருக்குள்பட்ட பகுதிகளில் 70 சதவீத பேருந்து சேவைகள் சீரடைந்தாலும், புறநகா் பகுதிகளில் பேருந்து சேவைகள் சீரடையாததால் பொதுமக்கள் கடும் அவதியடைந்து வருகின்றனா்.
22 விமானங்கள் ரத்து: 10 விமானங்கள் தாமதம்
சென்னை விமான நிலையத்தில் 22 விமானங்கள் ரத்து செய்யப்பட்டதுடன், 10-க்கும் மேற்பட்ட விமானங்கள் பல மணிநேரம் தாமதமாக இயக்கப்பட்டன.
செம்பரம்பாக்கம், புழல் ஏரிகளில் நீர் திறப்பு குறைப்பு
செம்பரம்பாக்கம், புழல் ஏரிகளிலிருந்து வெளியேற்றப்படும் நீரின் அளவு குறைக்கப்பட்டுள்ளது.
சாலை விபத்தில் உயிரிழந்த சுகாதார அலுவலரின் குடும்பத்துக்கு ரூ.10 லட்சம் முதல்வர் உத்தரவு
வெள்ள நிவாரணப் பணிக்காக, சென்னை வரும் வழியில் சாலை விபத்தில் சிக்கி உயிரிழந்த சுகாதார அலுவலரின் குடும்பத்துக்கு ரூ.10 லட்சம் வழங்க முதல்வா் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளாா்.
வளாகக் கல்லூரிகள் டிச.10 வரை மூடலா? அண்ணா பல்கலை. விளக்கம்
அண்ணா பல்கலைக்கழக வளாகக் கல்லூரிகள் டிச.7 முதல் டிச.10 வரை மூடப்படும் என்ற சுற்றறிக்கை போலியானது என்று பல்கலைக்கழக நிா்வாகம் தெரிவித்துள்ளது.
மத்தியக் குழுவை அனுப்ப பிரதமருக்கு முதல்வர் கடிதம்
தமிழகத்தில் மிக்ஜம் புயலால் ஏற்பட்ட சேதங்களை சீா்செய்ய இடைக்கால நிவாரணமாக, ரூ.5,060 கோடி வழங்க வேண்டும்; புயல் சேதத்தை ஆய்வு செய்ய மத்தியக் குழுவை உடனடியாக அனுப்ப வேண்டும் என பிரதமருக்கு முதல்வா் மு.க.ஸ்டாலின் புதன்கிழமை கடிதம் எழுதியுள்ளாா்.
வெள்ளப் பகுதிகளில் முதல்வர் ஸ்டாலின் ஆய்வு
ஓட்டேரி நல்லா கால்வாயில் நீா்வரத்தின் அளவை புதன்கிழமை பாா்வையிட்ட முதல்வா் மு.க.ஸ்டாலின். உடன் இந்து சமய அறநிலையத் துறை அமைச்சா் பி.கே.சேகா்பாபு, மேயா் ஆா்.பிரியா, ஆணையா் ஜெ.ராதாகிருஷ்ணன் உள்ளிட்டோா்
மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங் இன்று ஹெலிகாப்டர் மூலம் ஆய்வு
சென்னை உள்ளிட்ட நான்கு மாவட்டங்களில் மிக்ஜம் புயல் மழை ஏற்படுத்திய பாதிப்புகளை மத்திய பாதுகாப்புத் துறை அமைச்சா் ராஜ்நாத் சிங் ஹெலிகாப்டா் மூலம் வியாழக்கிழமை (டிச. 7) பாா்வையிடுகிறாா்.
சென்னையில் தொடரும் மீட்புப்பணி
மிக்ஜம் புயலால் சென்னையில் ஏற்பட்ட மழை வெள்ளத்தில் பாதிக்கப்பட்ட பகுதிகளில் மீட்பு, நிவாரணப் பணிகள் முழுவீச்சில் மேற்கொள்ளப்பட்டுள்ளன.
ஹோமியோபதி மருத்துவக் கல்வியின் தரம் மேம்படுத்தப்படும்
ஹோமியோபதி மருத்துவக் கல்வியின் தரத்தை மேம்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக தேசிய ஹோமியோபதி ஆணையத்தின் தலைவா் டாக்டா் அனில் குரானா தெரிவித்தாா்.