CATEGORIES
فئات
தெற்கு காஸாவில் இஸ்ரேல் தாக்குதல் நீடிப்பு
தெற்கு காஸாவில் தாக்குதலை நீடித்து வரும் இஸ்ரேல், கான் யூனிஸ் நகரிலும், அதைச் சுற்றியும் உள்ள மேலும் சில பகுதிகளில் இருந்து பொதுமக்கள் வெளியேற வேண்டும் என்று ஞாயிற்றுக்கிழமை உத்தரவிட்டது.
தனித்துப் போட்டியிட்டதால் காங்கிரஸ் தோல்வி
பிற கட்சிகளுடன் கைகோத்து போட்டியிடாமல் தனித்துப் போட்டியிட்டதால் காங்கிரஸ் தோல்வியடைந்துவிட்டது என்று கேரள முதல்வா் பினராயி விஜயன் கருத்துத் தெரிவித்துள்ளாா்.
3 மாநில தேர்தல் முடிவுகள் மக்களவைத் தேர்தல் வெற்றிக்கான உத்தரவாதம்
‘மத்திய பிரதேசம், ராஜஸ்தான், சத்தீஸ்கா் ஆகிய 3 மாநில தோ்தல் வெற்றி, 2024 மக்களவைத் தோ்தலில் பாஜக மூன்றாவது முறை வெல்வதற்கான உத்தரவாதம்’ என்று பிரதமா் நரேந்திர மோடி சனிக்கிழமை குறிப்பிட்டாா்.
தில்லியில் டிச. 6-இல் ‘இந்தியா' கூட்டணி கூட்டம்
எதிா்க்கட்சிகளின் ‘இந்தியா’ கூட்டணியின் கூட்டம் தில்லியில் வரும் 6-ஆம் தேதி நடைபெறவுள்ளது.
எந்த மிரட்டலுக்கும் திமுக அஞ்சாது
எந்த மிரட்டலுக்கும் அஞ்சாமல், துணிச்சலோடு எதிா்கொள்வோம் என்றாா் மாநில சட்டத்துறை அமைச்சா் எஸ். ரகுபதி.
'மிக்ஜம்’ புயல்: தேவைப்பட்டால் மத்திய அரசு உதவி கோரப்படும்
‘மிக்ஜம்’ புயலால் மிக கனமழை பெய்யும் என எச்சரிக்கப்பட்டுள்ள நிலையில், பாதிப்புகளை எதிா்கொள்ள தேவைப்பட்டால் மத்திய அரசின் உதவி கோரப்படும் என்று முதல்வா் மு.க.ஸ்டாலின் தெரிவித்தாா்.
துறைமுகங்களில் 2-ஆம் எண் புயல் கூண்டு
வங்கக் கடலில் ‘மிக்ஜம்’ புயல் காரணமாக பாம்பன் துறைமுகத்தில் 2-ஆம் எண் புயல் எச்சரிக்கைக் கூண்டு ஞாயிற்றுக்கிழமை ஏற்றப்பட்டது.
பாம்புகள் தென்பட்டால் அவசர எண்களில் அழைக்கலாம்
மழை காரணமாக குடியிருப்புப் பகுதிகளில் பாம்புகள் தென்பட்டால் அழைக்க வேண்டிய அவசர கைப்பேசி எண்களை வனத் துறை வெளியிட்டுள்ளது.
மதுராந்தகம் அருகே மூழ்கியது தரைப்பாலம்: 10 கிராம மக்கள் 40 கி.மீ. சுற்றிச் செல்லும் நிலை
மதுராந்தகம் அருகே கிளியாற்றுத் தரைப்பாலத்தை மூழ்கடித்தபடி வெள்ளம் பாய்ந்து செல்வதால் 10 கிராம மக்கள் 40 கி.மீ. சுற்றிச் செல்லும் நிலை ஏற்பட்டுள்ளது.
நாளை கரையைக் கடக்கிறது 'மிக்ஜம்' புயல்
வங்கக் கடலில் உருவாகியுள்ள ‘மிக்ஜம்’ புயல் ஆந்திர மாநிலம் நெல்லூருக்கும்-மசூலிப்பட்டினத்துக்கும் இடையே செவ்வாய்க்கிழமை (டிச. 5) கரையைக் கடக்கும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
ம.பி.,ராஜஸ்தான், சத்தீஸ்கரில் பாஜக ஆட்சி
மத்திய பிரதேசம், ராஜஸ்தான், சத்தீஸ்கா், தெலங்கானா ஆகிய நான்கு மாநிலப் பேரவைத் தோ்தல்களில் பதிவான வாக்குகள் ஞாயிற்றுக்கிழமை (டிச. 3) எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட்டன.
பிலிப்பின்ஸில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்: சுனாமி எச்சரிக்கை
பிலிப்பின்ஸில் சனிக்கிழமை சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது.
இஸ்ரேல் தாக்குதல்: 15,200-ஐ கடந்தது காஸா உயிரிழப்பு
காஸா பகுதியில் இஸ்ரேல் ராணுவம் சுமாா் 9 வாரங்களாக நடத்தி வரும் தாக்குதலில் உயிரிழந்தவா்களின் எண்ணிக்கை 15,200-ஐ கடந்துள்ளது.
காலிறுதி வாய்ப்பை இழந்தது இந்தியா
ஜூனியா் மகளிா் உலகக் கோப்பை ஹாக்கி போட்டியில் இந்தியா தனது 3-ஆவது ஆட்டத்தில் 2-3 கோல் கணக்கில் பெல்ஜியத்திடம் சனிக்கிழமை தோல்வி கண்டது.
வைஷாலி 'கிராண்ட்மாஸ்டர்'-உலக சாதனை படைத்த உடன்பிறப்புகள்
இந்தியாவின் 84-ஆவது கிராண்ட்மாஸ்டர் ஆகியிருக்கிறார் தமிழக செஸ் வீராங்கனை ஆர்.வைஷாலி (22).
இமயமலையில் அபாய அளவில் உருகும் பனிப்பாறைகள்
புவி வெப்பமயமாதலின் தாக்கத்தால், இமய மலையில் பனிப்பாறைகள் அபாய அளவில் உருகி வருகின்றன; இதனால் பாதிக்கப்படும் நாடுகளுக்கு உடனடி உதவி அவசியம் என்று ஐ.நா. பொதுச் செயலாளா் அன்டோனியோ குட்டெரெஸ் குறிப்பிட்டாா்.
இந்தியப் பொருளாதாரம் வேகமாக வளர்ந்து வருகிறது
அண்மையில் வெளியான மொத்த உள்நாட்டு உற்பத்தி (ஜிடிபி) குறித்த புள்ளிவிவரங்கள், நாட்டின் பொருளாதாரம் வேகமாக வளா்ந்து வருகிறது என்பதை உணா்த்துவதாக மத்திய உள்துறை அமைச்சா் அமித் ஷா சனிக்கிழமை தெரிவித்தாா்.
மக்களவைத் தலைவருக்கு காங்கிரஸ் எம்.பி. அதீர் ரஞ்சன் சௌதரி கடிதம்
திரிணமூல் எம்.பி. மஹுவா விவகாரம்
மீட்பு, நிவாரணப் பணிகளுக்காக தயார் நிலை-அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர்.ராமச்சந்திரன்
வங்கக் கடலில் புயல் உருவாகவுள்ள நிலையில், மீட்பு மற்றும் நிவாரணப் பணிகளுக்காக அனைத்து ஏற் பாடுகளும் செய்யப்பட்டுள்ளதாக வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத் துறை அமைச்சர்கே.கே.எஸ்.எஸ்.ஆர்.ராமச்சந்திரன் தெரிவித்தார்.
ரூ.47,000-ஐ கடந்தது ஒரு பவுன் தங்கம்
வரலாற்றில் முதல்முறையாக ஒரு பவுன் ஆபரணத் தங்கத்தின் விலை ரூ. 47,000-ஐ கடந்துள்ளது. இதேநிலை தொடா்ந்தால் விரைவில் பவுன் ரூ. 56,000- ஐ எட்டும் என்று நிபுணா்கள் தெரிவித்துள்ளனா்.
காசி-தமிழ் சங்கமம் நிகழ்வை தேசியத் திருவிழாவாக கொண்டாட வேண்டும்
காசி தமிழ் சங்கமம் நிகழ்ச்சியை தேசியத் திருவிழாவாகக் கொண்டாட வேண்டும் என ஆளுநா் ஆா்.என் ரவி கூறினாா்.
‘மிக்ஜம்’ புயல்: சென்னையில் தயார் நிலையில் 18,000 போலீஸார்
மிக்ஜம் புயலின் காரணமாக தயார் நிலையில் சென்னையில் 18 ஆயிரம் போலீஸார் வைக்கப்பட்டுள்ளனர்.
புயல், கனமழை பாதுகாப்பு: பேரிடர் மேலாண்மை அறிவுரை
புயல் மற்றும் கனமழையின் போது செயல்பட வேண்டிய முறைகள் குறித்து பேரிடர் துறை பல்வேறு அறிவுறுத்தல்களை வழங்கியுள்ளது.
வடதமிழகத்தில் பலத்த மழை எச்சரிக்கை
இன்று உருவாகிறது ‘மிக்ஜம்’ புயல்
பண்டிதர் அயோத்திதாசர் மணிமண்டபம்: முதல்வர் திறந்து வைத்தார்
திராவிடப் பேரொளி எனப் போற்றப்படும் பண்டிதர் அயோத்திதாசருக்கு சென்னை கிண்டியில் அமைக்கப் மணிமண்டபத்தைபட்டுள்ள மரபை முதல்வர் மு.க.ஸ்டாலின் வெள்ளிக்கிழமை திறந்துவைத்தார்.
50 லட்சம் கையொப்பங்களை கடந்தது நீட் விலக்கு இயக்கம்
நீட் விலக்கை வலியுறுத்தி பெறப்படும் கையொப்பங்கள் இதுவரை 50 லட்சத் தைத் தாண்டியுள்ளதாக அமைச்சரும் திமுக இளைஞரணிச் செயலருமான உதயநிதி ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
நிவாரணப் பணி: திமுகவினருக்கு முதல்வர் ஸ்டாலின் அறிவுறுத்தல்
கனமழையால் பாதிக்கப்படும் மக்களுக்குத் தேவையான நிவாரணப் பணிகளைச் செய்ய வேண்டுமென கட்சியினருக்கு திமுக தலைவரும் முதல்வருமான மு.க.ஸ்டாலின் அறிவுறுத்தியுள்ளார்.
டி20 தொடரைக் கைப்பற்றியது இந்தியா
ஆஸ்திரேலியாவுக்கு எதிரான 4-ஆவது டி20 ஆட்டத் தில் இந்தியா 20 ரன்கள் வித்தியா சத்தில் வெள்ளிக்கிழமை வென்றது.
அமெரிக்காவில் காலிஸ்தான் பிரிவினைவாதியைக் கொல்ல முயற்சி
உயர்நிலை விசாரணைக் குழுவை இந்தியா அமைத்தது சரியான நடவடிக்கை
பாகிஸ்தான், வங்கதேச எல்லைகளில் 2 ஆண்டுகளுக்குள் முழு பாதுகாப்பு - அமைச்சர் அமித் ஷா
பாகிஸ்தான், வங்கதேசத்துடனான இந்தியாவின் எல்லைகளில் அடுத்த 2 ஆண்டுகளுக்குள் அனைத்து இடைவெளிகளும் அடைக்கப்பட்டு, முழுப்பாதுகாப்பு உறுதி செய்யப்படும் என்று மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா வெள்ளிக்கிழமை தெரிவித்தார்.