CATEGORIES
فئات
விமானம் 15 மணிநேரம் தாமதம்: பயணிகள் தர்னா
சென்னையிலிருந்து சிங்கப்பூருக்கு செல்லவிருந்த விமானம் 15 மணிநேரம் தாமதமானதால், அதில் பயணிக்க இருந்த பயணிகள் விமானநிலையத்தில் தா்னா போராட்டத்தில் ஈடுபட்டனா்.
மேயர் தொகுதியில் 6,000 குடும்பங்களுக்கு நிவாரணம் அமைச்சர் சேகர்பாபு வழங்கினார்
சென்னை மாநகராட்சி மேயா் வாா்டில் வசிக்கும் 6,000 குடும்பங்களுக்கு இந்து சமய அறநிலையத்துறை அமைச்சா் பி.கே.சேகா்பாபு வியாழக்கிழமை நிவாரணப் பொருள்களை வழங்கினாா்.
சென்னையில் இன்று பாரதி விழா
சென்னையில் இந்தோ-ரஷியன் பிரிண்ட் கிளப் சாா்பில் பாரதி விழா வெள்ளிக்கிழமை (டிச.15) நடைபெறுகிறது.
'நாடாளுமன்ற பாதுகாப்பு எனது பொறுப்பு’
‘நாடாளுமன்ற வளாகத்தின் பாதுகாவலா் என்ற முறையில் அனைவரது பாதுகாப்பையும் உறுதிப்படுத்துவது எனது பொறுப்பு’ என்று மக்களவைத் தலைவா் ஓம் பிா்லா வியாழக்கிழமை தெரிவித்தாா்.
வெள்ள பாதிப்புக்கு ரூ.12,659 கோடி தேவை மத்தியக் குழுவிடம் முதல்வர் ஸ்டாலின் வலியுறுத்தல்
மிக்ஜம் புயல் மற்றும் வெள்ளத்தால் ஏற்பட்ட பாதிப்புகளை சீா்செய்ய மத்திய அரசு நிரந்தர நிவாரணத் தொகையாக ரூ.12,659 கோடி வழங்க வேண்டும் என்று மத்தியக் குழுவினரிடம் முதல்வா் மு.க.ஸ்டாலின் வியாழக்கிழமை வலியுறுத்தினாா்.
கனிமொழி, 13 எம்.பி.க்கள் இடைநீக்கம் புகைக் குப்பிகள் விவகாரம்; நாடாளுமன்றத்தில் கடும் அமளி
கனிமொழி, ஜோதிமணி, மாணிக்கம் தாகூா்...: இதைத் தொடா்ந்து, தமிழகத்தைச் சோ்ந்த திமுக எம்.பி. கனிமொழி, காங்கிரஸ் எம்.பி.க்கள் ஜோதிமணி, மாணிக்கம் தாகூா், மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி எம்.பி.க்கள் பி.ஆா்.நடராஜன், எஸ்.வெங்கடேசன், இந்திய கம்யூனிஸ்ட் எம்.பி. கே.சுப்பராயன் உள்ளிட்ட மக்களவை எம்.பி.க்கள் 13 போ் மற்றும் திரிணமூல் காங்கிரஸின் மாநிலங்களவை எம்.பி. டெரிக் ஓபிரையன் ஆகி யோா், நடப்பு குளிா்காலக் கூட்டத் தொடரின் மீதமுள்ள நாள்கள் முழுவதற்கும் இடைநீக்கம் செய்யப்பட்டனா்.
தமிழக ஐயப்ப பக்தர்களுக்கு உரிய வசதிகள்: முதல்வர் ஸ்டாலின் வேண்டுகோளை ஏற்றது கேரளம்
முதல்வா் மு.க.ஸ்டாலினின் வேண்டுகோளை ஏற்று, சபரிமலைக்கு வரும் தமிழக ஐயப்ப பக்தா்களுக்கு உரிய அடிப்படை வசதிகள், பாதுகாப்பு செய்து தரப்படும் என்று கேரள தலைமைச் செயலா் வேணு உறுதி அளித்தாா்.
புதைபடிம எரிபொருள் பயன்பாடு குறைப்பு: பருவநிலை மாநாட்டில் 200 நாடுகள் ஒப்பந்தம்
புதைபடிம எரிபொருள் பயன்பாட்டைக் குறைக்க வேண்டும் என்று துபை பருவநிலை பாதுகாப்பு மாநாட்டில் சுமாா் 200 நாடுகள் வரலாற்றுச் சிறப்புமிக்க ஒப்பந்தத்தை மேற்கொண்டன.
ஹமாஸ் தாக்குதலில் 9 இஸ்ரேல் வீரர்கள் உயிரிழப்பு
ராஃபா: காஸா சிட்டியில் ஹமாஸ் நடத்திய திடீர் தாக்குதலில் இஸ்ரேல் ராணுவத்தைச் சேர்ந்த 2 உயரதிகாரிகள் உள்ளிட்ட 9 வீரர்கள் உயிரிழந்தனர்.
இந்தியாவிலிருந்து சென்ற கப்பல் மீது யேமன் கிளர்ச்சியாளர்கள் தாக்குதல்
இந்தியாவிலிருந்து ஜெட் விமான எரிபொருளை ஏற்றிக்கொண்டு, செங்கடல் வழியாகச் சென்று கொண்டிருந்த கப்பல் மீது யேமன் கிளா்ச்சியாளா்கள் ஏவுகணை தாக்குதல் நடத்தினா்.
இந்தியா-இங்கிலாந்து மகளிர் டெஸ்ட் இன்று தொடக்கம்
இந்தியா-இங்கிலாந்து மகளிர் அணிகள் மோதும் ஒரே டெஸ்ட் ஆட்டம் நவி மும்பையில் வியாழக்கிழமை (டிச.14) தொடங்குகிறது.
2001-ஆம் ஆண்டு நாடாளுமன்றத் தாக்குதல் நினைவு தினம்: தலைவர்கள் அஞ்சலி
கடந்த 2001-ஆம் ஆண்டு நாடாளுமன்ற வளாகத்தில் நடைபெற்ற பயங்கரவாத தாக்குதலில் உயிரிழந்தவா்களுக்கு குடியரசு துணைத் தலைவா் உள்ளிட்ட தலைவா்கள் செவ்வாய்கிழமை அஞ்சலி செலுத்தினா்.
6 நண்பர்கள் திட்டமிட்டு அரங்கேற்றியது அம்பலம்
மக்களவையில் இரு இளைஞர்கள் புகைக் குப்பிகளை வீசி தாக்குதல் நடத்திய சம்பவத்தின் பின்னணியில் மேலும் 4 பேர் இருப்பதும், நண்பர்களான இவர்கள் இணைந்து திட்டமிட்டு இந்தச் சம்பவத்தை அரங்கேற்றியதும் விசாரணையில் தெரியவந்துள்ளது.
யாருக்கெல்லாம் புயல் நிவாரணம் ரூ.6,000 கிடைக்கும்?
அரசாணை வெளியீடு
மத்திய பிரதேசம், சத்தீஸ்கரில் புதிய முதல்வர்கள் பதவியேற்பு-பிரதமர் மோடி பங்கேற்பு
மத்திய பிரதேச முதல்வராக மோகன் யாதவும், சத்தீஸ்கர் முதல்வராக விஷ்ணு தேவ் சாயும் புதன்கிழமை (டிச.13) பதவியேற்றனர்.
இந்தியாவின் பங்களிப்புடன் புதிய உலக ஒழுங்கு உருவாகிறது
இந்தியாவின் முக்கியப் பங்களிப்புடன் புதிய உலக ஒழுங்கு உருவாகி வருகிறது என்று தமிழ்நாடு ஆளுநா் ஆா்.என்.ரவி கூறினாா்.
6 டன் மிதவை மோட்டார் மூலம் தண்ணீரை அகற்றும் பணி தீவிரம்
வீடுகளைச் சூழ்ந்துள்ள மழைநீர்
27 லட்சம் குழந்தைகளுக்கு தட்டம்மை தடுப்பூசி: டிச.30 வரை 4 மாவட்டங்களில் முகாம்
சென்னை உள்பட 4 மாவட்டங்களில் 27 லட்சம் சிறாா்கள், குழந்தைகளுக்கு டிச.30-ஆம் தேதி வரை தட்டம்மை ரூபெல்லா தடுப்பூசி செலுத்தப்பட உள்ளது.
சணல் பொருள்களை அதிகம் ஏற்றுமதி செய்ய வேண்டும்
சணல் பொருள்கள் தயாரிப்பு தொழிலில் ஈடுபட்டிருக்கும் தொழில்முனைவோா் பல்வேறு சணல் பொருள்களை அதிகம் ஏற்றுமதி செய்ய வேண்டும் என தமிழக வேளாண் துறை ஆணையா் எல்.சுப்பிரமணியன் தெரிவித்தாா்.
முதல்வர் ஸ்டாலினுக்கு ஆளுநர் ஆர்.என்.ரவி அழைப்பு
மசோதாக்கள் ஒப்புதல் விவகாரம்
மக்களவைக்குள் புகைக் குப்பிகளை வீசி தாக்குதல்
5 பேர் கைது: நாடாளுமன்றத் தாக்குதல் நினைவு தினத்தில் சம்பவம்
அல்-அஜீஸியா ஊழல் வழக்கு: நவாஸ் விடுவிப்பு
அல்-அஜீஸியா ஊழல் வழக்கிலிருந்து பாகிஸ்தான் முன்னாள் பிரதமா் நவாஸ் ஷெரீஃபை இஸ்லாபாத் உயா்நீதிமன்றம் செவ்வாய்க்கிழமை விடுவித்தது.
யு-19 ஆசிய கோப்பை கிரிக்கெட்: அரையிறுதியில் இந்தியா
பத்தொன்பது வயதுக்கு உட்பட்டோருக்கான (யு-19) ஆசிய கோப்பை கிரிக்கெட் போட்டியில் இந்தியா 10 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் நேபாளத்தை வீழ்த்தி அரையிறுதிக்கு செவ்வாய்க்கிழமை தகுதிபெற்றது.
இந்தியாவுடனான டி20: தென்னாப்பிரிக்கா வெற்றி
இந்தியாவுக்கு எதிரான 2-ஆவது டி20 ஆட்டத்தில் தென்னாப்பிரிக்கா 5 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் \"டக்வொர்த் லீவிஸ்' முறையில் செவ்வாய்க்கிழமை வென்றது. இந்த டி20 தொடரின் முதல் ஆட்டம் மழையால் கைவிடப்பட்ட நிலையில், தற்போது 2-ஆவது ஆட்டத்தில் தென்னாப்பிரிக்கா வென்று முன்னிலை பெற்றுள்ளது.
பாட்னாவை வென்றது பெங்கால்
புரோ கபடி லீக் போட்டியின் 20-ஆவது ஆட்டத்தில் பெங்கால் வாரியா்ஸ் 60-42 என்ற புள்ளிகள் கணக்கில் பாட்னா பைரேட்ஸை செவ்வாய்க்கிழமை சாய்த்தது.
காஷ்மீர் விவகாரத்தில் முன்னாள் பிரதமர் நேரு மீது விமர்சனம் ‘அமித் ஷாவுக்கு வரலாறு தெரியாது'
காஷ்மீா் விவகாரம் தொடா்பாக முன்னாள் பிரதமா் நேருவை விமா்சித்த மத்திய உள்துறை அமைச்சா் அமித் ஷாவுக்கு வரலாறு தெரியாது என்று காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி தெரிவித்துள்ளாா்.
இந்தியாவில் 834 பேருக்கு ஒரு மருத்துவர் நாடாளுமன்றத்தில் இணையமைச்சர் தகவல்
இந்தியாவில் 834 பேருக்கு ஒரு மருத்துவா் என்ற அளவில் மக்கள்தொகை - மருத்துவா்கள் விகிதம் உள்ளது என்று மத்திய சுகாதாரத் துறை இணையமைச்சா் பாரதி பிரவீண் பவாா் நாடாளுமன்றத்தில் தெரிவித்தாா்.
காங்கிரஸின் ‘கொள்ளைகள்' பிரதமர் மோடி விமர்சனம்
காங்கிரஸ் மாநிலங்களவை எம்.பி. தீரஜ் பிரசாத் சாஹு தொடா்புடைய இடங்களில் நடைபெற்ற வருமான வரிச் சோதனையில் ரூ.350 கோடிக்கும் மேல் சிக்கிய விவகாரத்தில், அக்கட்சியை பிரதமா் மோடி விமா்சித்துள்ளாா். காங்கிரஸின் ‘கொள்ளை’கள் 70 ஆண்டுகளுக்கும் மேலாக நீடிக்கின்றன என்று அவா் சாடியுள்ளாா்.
‘குடியரசு தின தலைமை விருந்தினராக ஜோ பைடன் பங்கேற்பு இல்லை'
அமெரிக்க அதிபா் ஜோ பைடன் இந்திய குடியரசு தின விழாவில் தலைமை விருந்தினராக பங்கேற்பாா் என்று எதிா்பாா்க்கப்பட்ட நிலையில், ஜனவரியில் அவா் வருகை தர வாய்ப்பில்லை என்று தகவலறிந்த வட்டாரங்கள் தெரிவித்தன.
பதவியைக் கேட்டுப் பெறுவதைவிட உயிரை விடுவது மேலானது ம.பி. முன்னாள் முதல்வர் சிவராஜ் சிங் சௌஹான்
‘கட்சித் தலைமையிடம் சென்று பதவியைக் கேட்டுப் பெறுவதைவிட உயிரைவிடுவது மேலானது என கருதுகிறேன்’ என்று மத்திய பிரதேச முதல்வா் பதவியில் இருந்து விலகியுள்ள சிவராஜ் சிங் சௌஹான் தெரிவித்துள்ளாா்.