CATEGORIES
فئات
வளர்ச்சியடைந்த இந்தியாவை உருவாக்க சிறு நகரங்களின் பங்கு முக்கியம்-பிரதமர் மோடி
2047-ஆம் ஆண்டுக் குள் வளர்ச்சியடைந்த இந்தியாவை உருவாக்க சிறுநகரங்களின் பங்கு மிக முக்கியம்; அந்த நகரங்களில் மக்களின் வாழ்க்கைத் தரத்தை உயர்த்த எனது அரசு அடிப்படை வசதிகளை மேம்படுத்தி வருகிறது' என்று பிரதமர் நரேந்திர மோடி சனிக்கிழமை தெரிவித்தார்.
பழவேற்காடு கடல், ஏரியில் பரவியது எண்ணெய் படலம்
மிக்ஜம் புயல் காரணமாக ஏற்பட்ட வெள்ளத்தில் எண்ணூா் கொசஸ்தலை ஆறு கடல் பகுதியில் பரவிய எண்ணெய் பழவேற்காடு கடலோர பகுதியிலும் சனிக்கிழமை பரவியது.
கற்றுக் கொடுத்தால் போதாது; பின்பற்றச் செய்ய வேண்டும்
பெற்றோா் தங்கள் குழந்தைகளுக்கு தினந்தோறும் திருக்குறளைக் கற்றுக்கொடுத்து, வாழ்வில் பின்பற்றச் செய்ய வேண்டும் என சென்னை உயா்நீதிமன்ற நீதிபதி அரங்க.மகாதேவன் தெரிவித்தாா்.
கேரளத்தைச் சேர்ந்த பெண்ணுக்கு புதிய வகை கரோனா தொற்று உறுதி
கேரளத்தைச் சோ்ந்த ஒரு பெண்ணுக்கு கரோனாவின் புதிய வகையான ‘ஜெஎன்.1’ தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
ஜன.12-இல் குரூப் 2 தேர்வு முடிவுகள்: டிஎன்பிஎஸ்சி அறிவிப்பு
குரூப் 2 தேர்வு முடிவுகள் ஜனவரி 12-ஆம் தேதி வெளியிடப்படும் என்று அரசுப் பணியாளர் தேர்வாணையம் (டிஎன்பிஎஸ்சி) அறிவித்துள்ளது.
12 மாவட்டங்களில் இன்று பலத்த மழைக்கு வாய்ப்பு
தென் மாவட்டங்களுக்கு ஆரஞ்சு எச்சரிக்கை
இன்றுமுதல் புயல் நிவாரணம் ரூ.6,000
முதல்வர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைக்கிறார்
நாடாளுமன்றப் பாதுகாப்பு: உயர் அதிகாரக் குழு ஆய்வு
நாடாளுமன்றப் பாதுகாப்பை ஆய்வு செய்ய உயா் அதிகாரம் கொண்ட குழுவை மக்களவைத் தலைவா் ஓம் பிா்லா அமைத்துள்ளாா்.
காஸா தாக்குதலைக் குறைக்க வேண்டும்!
காஸாவில் தங்களது தாக்குதல் நடவடிக்கைகளின் தீவிரத்தை இஸ்ரேல் குறைத்துக்கொள்ள வேண்டும் என்று அமெரிக்கா வலியுறுத்தியுள்ளது.
மும்பை இண்டியன்ஸ் கேப்டன் ஹர்திக் பாண்டியா
ஐபிஎல் அணியான மும்பை இண்டியன்ஸின் கேப்டனாக ரோஹித் சர்மா இருந்து வந்த நிலையில், அந்த அணியின் புதிய கேப்டனாக ஹர்திக் பாண்டியா வெள்ளிக்கிழமை நியமிக்கப்பட்டார்.
வரலாற்று வெற்றி முனைப்பில் இந்தியா
இங்கிலாந்து மகளிா் அணிக்கு எதிரான டெஸ்ட் கிரிக்கெட்டில் இந்தியா 478 ரன்கள் முன்னிலையுடன் வெற்றியை நோக்கி நகா்கிறது.
ராஜஸ்தான் முதல்வராக பதவியேற்றார் பஜன்லால் சர்மா - பிரதமர் மோடி பங்கேற்பு
ராஜஸ்தான் முதல் வராக பாஜகவைச் சேர்ந்த முதல் முறை எம்எல்ஏ பஜன்லால் சர்மா வெள்ளிக்கிழமை பதவியேற்றார். துணை முதல்வர்களாக தியாகுமாரி, பிரேம் சந்த் பைரவா ஆகியோர் பதவியேற்றனர்.
பாஜக வெற்றியின் ரகசியம் என்ன?
ஐந்து மாநில பேரவைத் தோ்தலில் மூன்றில் வெற்றியும், தெலங்கானாவில் இரு மடங்கு வாக்கு வங்கியை பாஜக உயா்த்தியதும் நாடு முழுவதும் அரசியல் அதிா்வலைகளை ஏற்படுத்தியுள்ளன.
அமலாக்கத் துறை அதிகாரி கைது வழக்கை சிபிஐ-க்கு மாற்றக் கோரிய மனு தள்ளுபடி
அமலாக்கத் துறை அதி காரி லஞ்சம் பெற்ற வழக்கின் விசார ணையை சிபிஐ-க்கு மாற்றக் கோரிய மனுவை சென்னை உயர்நீதிமன்றம் மதுரைக்கிளை வெள்ளிக்கிழமை தள்ளுபடி செய்தது.
சிரமமின்றி நிவாரணத் தொகை வழங்கப்படும் -அமைச்சா் சேகா்பாபு
புயலால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு எந்தவித சிரமும் இல்லாமல் வெள்ள நிவாரண தொகை வழங்கப்படும் என இந்து சமய அறநிலையத் துறை அமைச்சா் பி.கே.சேகா்பாபு தெரிவித்தாா்.
எண்ணெய்க் கசிவை அகற்ற கூடுதல் அவகாசம் தேவை: அமைச்சர் உதயநிதி
எண்ணூர் கட லில் கலந்த எண்ணெய்க் கசிவை அகற் றுவதற்கு கூடுதல் அவகாசம் தேவைப் படும் என்று இளைஞர்நலன், விளையாட்டு மேம்பாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்தார்
அடுக்குமாடி குடியிருப்பு ஆவணப் பதிவு: கூட்டு மதிப்பை நிர்ணயிக்க விதிமுறைகள்
துணை பதிவுத் துறைத் தலைவா்களால் நிா்ணயம் செய்யப்படும் அடுக்குமாடி குடியிருப்புகளுக்கான கூட்டு மதிப்பை மாற்றும் அதிகாரம், பதிவுத் துறைத் தலைவருக்கு அளிக்கப்பட்டுள்ளது.
புதிய வகை கரோனா பரவலை அறிய மரபணு பகுப்பாய்வு
தமிழகத்தில் உருமாற்றமடைந்த புதிய வகை கரோனா தொற்று பரவுகிா என்பது குறித்து அறிய மரபணு பகுப்பாய்வு நடத்தப்பட்டு வருவதாக மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சா் மா.சுப்பிரமணியன் தெரிவித்தாா்.
சிறுமி பாலியல் வன்கொடுமை வழக்கு: உ.பி. பாஜக எம்எல்ஏவுக்கு 25 ஆண்டுகள் சிறை
உத்தர பிரதே சத்தில் கடந்த 2014-ஆம் ஆண்டில் சிறு மியைப் பாலியல் வன்கொடுமை செய்த வழக்கில், பாஜக எம்எல்ஏ ராம்துலார் கோண்டுக்கு 25 ஆண்டுகள் கடுங்காவல் சிறைத்தண்டனை விதித்து, அந்த மாநில நீதிமன்றம் வெள்ளிக்கிழமை தீர்ப்பளித்தது.
‘மக்களுடன் முதல்வர்’ புதிய திட்டம் டிச. 18-இல் கோவையில் தொடக்கம்
அரசின் சேவைகள் பொதுமக்களை விரைவாகவும், எளிதாகவும் சென்றடைய வழிவகுக்கும் ‘மக்களுடன் முதல்வா்’ என்ற புதிய திட்டத்தை முதல்வா் மு.க.ஸ்டாலின் கோவையில் டிச. 18-ஆம் தேதி தொடங்கிவைக்கிறாா்.
எதிர்க்கட்சிகள் போராட்டம் நீடிப்பு
அமித் ஷா விளக்கமளிக்க வலியுறுத்தல்; இரு அவைகளும் சில நிமிஷங்களில் ஒத்திவைப்பு
மேலும் ஒரு கப்பல் மீது யேமன் கிளர்ச்சியாளர்கள் தாக்குதல்
செங்கடல் வழியாகச் சென்று கொண்டிருந்த மேலும் ஒரு சரக்குக கப்பல் மீது யேமன் கிளா்ச்சியாளா்கள் வியாழக்கிழமை ஏவுகணை தாக்குதல் நடத்தினா்.
இங்கிலாந்துடனான டெஸ்ட் வலுவான நிலையில் இந்தியா
இங்கிலாந்து மகளிருக்கு எதிரான டெஸ்ட் கிரிக்கெட்டில் இந்திய மகளிா் அணி முதல் நாள் முடிவில் 7 விக்கெட்டுகள் இழப்புக்கு 410 ரன்கள் சோ்த்து வலுவான நிலையில் இருக்கிறது.
நாடாளுமன்றத்தில் புகை தாக்குதல்: பயங்கரவாத குற்றச்சாட்டுகள் கீழ் வழக்குப் பதிவு
புதிய நாடாளுமன்ற கட்டடத்தில் உள்ள மக்களவையில் இரு இளைஞா்கள் பாா்வையாளா் மாடத்திலிருந்து குதித்து புகைக் குப்பிகளை வீசி தாக்குதல் நடத்தியவா்கள் மீது சட்டவிரோத நடவடிக்கைகள் தடுப்புச் சட்டத்தின் (யுஏபிஏ) பயங்கரவாத குற்றச்சாட்டுகளின் கீழ் தில்லி போலீஸாா் வழக்குப் பதிவு செய்துள்ளனா்.
மதுரா மசூதியில் தொல்லியல் துறை ஆய்வு: அலாகாபாத் உயர்நீதிமன்றம் அனுமதி
உத்தர பிரதேச மாநிலம் மதுராவில் கிருஷ்ணா் கோயிலுக்கு அருகில் அமைந்துள்ள ஷாஹி ஈத்கா மசூதியில் நீதிமன்ற கண்காணிப்பின் கீழ் தொல்லியல் துறையினா் ஆய்வு நடத்த அனுமதி அளித்து அலாகாபாத் உயா் நீதிமன்றம் வியாழக்கிழமை உத்தரவிட்டது.
கேரளத்தில் அதிகரிக்கும் கரோனா: தமிழகத்தில் தீவிர கண்காணிப்பு
கேரளத்தில் கரோனா பரவல் திடீரென அதிகரித்துள்ள நிலையில், தமிழகத்தில் மருத்துவக் கண்காணிப்பு நடவடிக்கைகளை தீவிரப்படுத்தியுள்ளதாக பொது சுகாதாரத் துறை இயக்குநா் டாக்டா் செல்வவிநாயகம் தெரிவித்துள்ளாா்.
டிச.16,17 தேதிகளில் பலத்த மழைக்கு வாய்ப்பு
தமிழகத்தின் தென் மாவட்டங்கள் மற்றும் டெல்டா மாவட்டங்களில் டிச.16,17 தேதிகளில் பலத்த மழை பெய்யும் என சென்னை வானிலை ஆய்வுமையம் தெரிவித்துள்ளது.
விமான நிலையத்தில் ஹிந்தி தெரியாத தமிழ்ப் பெண் அவமதிப்பு : முதல்வர் கண்டனம்
கோவா விமான நிலையத்தில் ஹிந்தி தெரியாத தமிழ்ப் பெண், மத்திய தொழில் பாதுகாப்பு படை வீரா் ஒருவரால் மிரட்டப்பட்டுள்ளதற்கு தமிழக முதல்வா் மு.க.ஸ்டாலின் கண்டனம் தெரிவித்துள்ளாா்.
டிச.28-இல் கோட்டை முற்றுகைப் போராட்டம்: ஜாக்டோ ஜியோ
தோ்தலில் திமுக அளித்த வாக்குறுதி அடிப்படையில் அரசு ஊழியா்கள், ஆசிரியா்களின் கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்தி டிச.28-ஆம் தேதி தலைமைச் செயலக முற்றுகை போராட்டம் நடைபெறும் என ஜாக்டோ-ஜியோ அமைப்பு அறிவித்துள்ளது.
தமிழக மீனவர்கள் 45 பேரை மீட்க வேண்டும் மத்திய அமைச்சருக்கு முதல்வர் கடிதம்
இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்டு, சிறையில் உள்ள தமிழக மீனவா்கள் 45 பேரையும், 138 படகுகளையும் மீட்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தி, மத்திய வெளியுறவுத் துறை அமைச்சா் எஸ்.ஜெய்சங்கருக்கு முதல்வா் மு.க.ஸ்டாலின் வியாழக்கிழமை கடிதம் எழுதியுள்ளாா்.