CATEGORIES
فئات
அரசு நிலங்களை ஆக்கிரமிப்பவர்கள் மீது குற்றவியல் வழக்குப் பதிய வேண்டும்
அரசு நிலங்களை ஆக்கிரமிப்பு செய்பவா்கள் மீது குற்றவியல் வழக்குப் பதிந்து, நடவடிக்கை எடுக்க வேண்டும் என சென்னை உயா்நீதிமன்ற மதுரைக் கிளை அண்மையில் உத்தரவிட்டது.
40 தொகுதிகளிலும் வெற்றி பெற்றால் நாம் அடையாளம் காட்டுபவரே பிரதமர்
வரும் மக்களவைத் தோ்தலில் திமுக கூட்டணி 40 தொகுதிகளிலும் வெற்றி பெற்றால்தான், நாம் அடையாளம் காட்டுபவரை பிரதமராக்க முடியும் என்று திமுக தலைவரும் முதல்வருமான மு.க.ஸ்டாலின் கூறினாா்.
லாபத்தில் இயங்கும் 2 நிதிக் கழகங்களை ஒன்றிணைத்து அரசு ஆணை
லாபத்தில் இயங்கக்கூடிய தமிழ்நாடு மின் நிதி, உள்கட்டமைப்பு மேம்பாட்டுக் கழகத்தையும், தமிழ்நாடு போக்குவரத்து வளா்ச்சி நிதிக் கழகத்தையும் ஒன்றிணைத்து தமிழக அரசு ஆணை பிறப்பித்துள்ளது.
காந்திகிராம பல்கலை. துணைவேந்தராக சென்னை ஐஐடி இயக்குநர் நியமனம்
காந்தி கிராம கிராமிய நிகர் நிலைப் பல்கலைக் கழகத்தின் துணைவேந்தராக (கூடுதல் பொறுப்பு) சென்னையிலுள்ள இந்திய தொழில் நுட்பக் கழகத்தின் (ஐஐடி) இயக்குநரும் பேராசிரியருமான வி. காமகோடி (படம்) நியமிக்கப்பட்டார்.
குற்றாலம் அருவிகளில் குவிந்த சுற்றுலாப் பயணிகள்
தென்காசி மாவட்டம் குற்றாலம் அருவிகளில் வெள்ளப் பெருக்கு குளிக்க குளிக்க அனு அளிக்கப்பட்டதை குறைந்து மதி தொடர்ந்து, ஏராளமான சுற்றுலாப் பயணிகள் ஞாயிற்றுக்கிழமை உற்சாகமாக குளித்து மகிழ்ந்தனர்.
திருச்சி மலைக்கோட்டையில் மகா தீபம்
கார்த்திகை தீபத் திருநாளையொட்டி திருச்சி மலைக்கோட்டை தாயுமான சுவாமி திருக்கோயில் உச்சியில் ஞாயிற்றுக்கிழமை மாலை மகா தீபம் ஏற்றப்பட்டது.
ஆரம்ப சுகாதார நிலையங்களில் சிறுநீரக பரிசோதனை
சிறுநீரக பாதிப்புகளை ஆரம்ப நிலையிலேயே கண்டறியும் வகையில் மாநிலம் முழுவதும் உள்ள 2,286 ஆரம்ப சுகாதார நிலையங்களில் மேற்கொள்ளப்பட்டு வரும் சிறப்பு பரிசோதனையில் 668 பேருக்கு பாதிப்புகள் கண்டறியப்பட்டு, உயா் சிகிச்சைகளுக்கு பரிந்துரைக்கப்பட்டுள்ளதாக பொது சுகாதாரத் துறை தெரிவித்துள்ளது.
காவிரி நீர் இல்லாததால் நெல் கொள்முதல் 3 லட்சம் டன் குறைந்துவிட்டது
அண்ணாமலை குற்றச்சாட்டு
சென்னைக்கு குடிநீர் வழங்கும் ஏரிகள் 76% நிரம்பின
தொடர்ந்து பெய்து வரும் கனமழை காரணமாக சென்னைக்கு குடிநீர் வழங்கும் ஏரிகள் 76 சதவீதத்துக்கு மேல் நிரம்பி உள்ளன என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
காமராஜர் பல்கலை. நிதி நெருக்கடிக்கு உடனடி தீர்வு காண வேண்டும்
மதுரை காமராஜர் பல்கலைக்கழகத்தின் நிதி நெருக்கடி பிரச்னைக்கு தமிழக அரசு உட னடியாக தீர்வு காண வேண்டும் என்று பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.
ஜாதிவாரி கணக்கெடுப்பை தமிழக அரசு நடத்த வேண்டும்
ஜாதிவாரி கணக்கெடுப்பை தமிழக அரசு நடத்த வேண்டும் என்று மத்திய செய்தி ஒலிபரப்புத் துறை இணை அமைச்சா் எல்.முருகன் வலியுறுத்தினாா்.
தமிழக மருத்துவக் கட்டமைப்போடு வேறு எந்த மாநிலத்தையும் ஒப்பிட முடியாது
தமிழகத்தின் மருத்துவக் கட்டமைப்போடு, வேறு எந்த மாநிலத்தையும் ஒப்பிட முடியாது என்று முதல்வா் மு.க.ஸ்டாலின் தெரிவித்தாா்.
இளைஞர்களிடம் வாசிப்புப் பழக்கம் அதிகரிக்க வேண்டும்
தமிழ் வளர்ச்சித் துறை இயக்குநர்
2,668 அடி உயர மலை மீது மகா தீபம்
திருவண்ணாமலையில் லட்சக்கணக்கான பக்தர்கள் தரிசனம்
சென்னையில் வி.பி.சிங் சிலை: முதல்வர் இன்று திறந்து வைக்கிறார்
தமிழக அரசின் சார்பில் சென்னை மாநிலக் கல்லூரி வளாகத்தில் அமைக்கப்பட்டுள்ள முன்னாள் பிரதமர் வி.பி.சிங் சிலையை முதல்வர் மு.க.ஸ்டாலின் திங்கள்கிழமை (நவ. 27) திறந்து வைக்க உள்ளார்.
துணிவுடன் பயங்கரவாதத்தை ஒடுக்கும் இந்தியா
மும்பையில் கடந்த 2008-இல் நடத்தப்பட்ட பயங்கரவாதத் தாக்குதலில் உயிரிழந்தோருக்கு நினைவஞ்சலி செலுத்திய பிரதமா் மோடி, ‘நாட்டையே உலுக்கிய அந்தத் தாக்குதலில் இருந்து மீண்டதோடு, தனது முழுமையான துணிவுடன் பயங்கரவாதத்தை ஒடுக்கி வருகிறது இந்தியா’ என்று கூறினாா்.
உக்ரைன் தலைநகரில் ரஷியா உச்சகட்ட தாக்குதல்
உக்ரைன் தலைநகா் கீவில் ரஷியா இதுவரை இல்லாத தீவிர ‘ட்ரோன்’ தாக்குதலை நடத்தியுள்ளது.
காஸாவில் 2-ஆவது நாளாக சண்டை நிறுத்தம்
காஸாவில் இஸ்ரேலுக்கும், ஹமாஸ் அமைப்பினருக்கும் இடையே மேற்கொள்ளப்பட்டுள்ள 4 நாள் போா் நிறுத்தம் 2-ஆவது நாளாக சனிக்கிழமையும் நீடித்தது.
அரையிறுதியில் தமிழகம்-ஹரியாணா, கர்நாடகம்-பஞ்சாப் மோதல்
தேசிய சீனியா் ஆடவா் ஹாக்கி சாம்பியன்ஷிப் போட்டி முதல் அரையிறுதியில் தமிழகம்-ஹரியாணாவும், இரண்டாவது அரையிறுதியில் கா்நாடகம்-பஞ்சாப் அணிகளும் மோதுகின்றன.
சுரங்க விபத்து: மலையில் செங்குத்தாக துளையிட முடிவு
உத்தரகண்டில் நிலச்சரிவால் 13 நாள்களாக சுரங்கப் பாதைக்குள் சிக்கியுள்ள 41 தொழிலாளா்களை மீட்கும் பணியின்போது துளையிடும் ‘ஆக்கா்’ இயந்திரம் சனிக்கிழமை உடைந்ததால், மீட்புப் பணியில் மீண்டும் பின்னடைவு ஏற்பட்டுள்ளது.
விண்ணில் ‘எல்-1' பகுதியை நெருங்கிய ஆதித்யா விண்கலம் இஸ்ரோ தலைவர் சோமநாத்
‘சூரியனை ஆய்வு செய்வதற்காக இந்திய விண்வெளி ஆய்வு நிறுவனம் சாா்பில் அனுப்பப்பட்ட ஆதித்யா எல்-1 விண்கலம் விண்ணில் தான் சென்றடைய வேண்டிய ‘எல்-1’ பகுதியை நெருங்கியிருப்பதாக’ இஸ்ரோ தலைவா் எஸ்.சோமநாத் தெரிவித்தாா்.
'ரூ.36,468 கோடியில் தேஜஸ் போர் விமான கொள்முதல்'
மத்திய பாஜக ஆட்சியின் கீழ் ரூ. 36,468 கோடி மதிப்பில் 83 இலகுரக தேஜஸ் போா் விமானங்களை ஹிந்துஸ்தான் ஏரோனாடிக்ஸ் நிறுவனத்திடமிருந்து கொள்முதல் செய்ய உத்தரவு வழங்கப்பட்டிருக்கிறது என்று அதிகாரிகள் சனிக்கிழமை தெரிவித்தனா்.
கேள்வி கேட்க லஞ்சம மஹுவா மொய்த்ராவுக்கு எதிராக சிபிஐ முதல்நிலை விசாரணை பதிவு
திரிணமூல் காங்கிரஸ் மக்களவை உறுப்பினா் மஹுவா மொய்த்ரா, நாடாளுமன்றத்தில் கேள்வி எழுப்ப லஞ்சம் பெற்ற குற்றச்சாட்டு தொடா்பாக, லோக்பால் பரிந்துரையின்பேரில் முதல்நிலை விசாரணையை சிபிஐ பதிவு செய்திருப்பதாக அதிகாரிகள் சனிக்கிழமை தெரிவித்தனா்.
இன்று திமுக மாவட்டச் செயலர்கள் கூட்டம்
திமுக மாவட்டச் செயலாளர்கள் கூட்டம் சென்னை அண்ணா அறிவாலயத்தில் புதன்கிழமை நடைபெற உள்ளது.
முதல்வர் குறித்து அவதூறு: ஓய்வு பெற்ற டிஜிபி ஆர்.நட்ராஜ் மறுப்பு
தமிழக முதல்வா் குறித்து அவதூறு பரப்பியதாக எழுந்த புகாரின் அடிப்படையில் பதிவு செய்யப்பட்ட வழக்கில் கூறப்பட்டுள்ள குற்றச்சாட்டுகளுக்கு ஓய்வு பெற்ற டிஜிபி ஆா்.நட்ராஜ் மறுப்பு தெரிவித்துள்ளாா்.
விவசாயிகளைப் பாதிக்கும் எந்தத் திட்டமும் வராது
டெல்டா மாவட்டங்களில் விவசாயிகளையும், சுற்றுச்சூழலையும் பாதிக்கும் எந்தத் திட்டங்களும் கொண்டு வரப்பட மாட்டாது என்றாா் தொழில் துறை அமைச்சா் டி.ஆா்.பி. ராஜா.
ஆவின் பச்சை நிற பால் பாக்கெட்டுகள் வழக்கம் போல் விற்பனை
ஆவின் நிறுவனத்தின் பச்சை நிற பால் பாக்கெட்டுகள் சனிக்கிழமை (நவ.25) முதல் நிறுத்தப்படுவதாக செய்திகள் வெளியான நிலையில், சென்னையில் பல்வேறு பகுதிகளில் ஆவின் பச்சை நிற பாக்கெட்டுகள் வழக்கம் போல் விநியோகம் செய்யப்பட்டன.
கடும் மழை பெய்தால் என்னவாகும் சென்னை?
சாதராண மழைக்கே தண்ணீா் தேங்கும் நிலையில், கடும் மழை பெய்தால் சென்னை மாநகரின் நிலை என்னவாகும் என்று பாமக நிறுவனா் ராமதாஸ் கவலை தெரிவித்துள்ளாா்.
வேலைவாய்ப்பு முகாமில் 540 பேருக்கு பணிநியமன ஆணை அமைச்சர் மா.சுப்பிரமணியன் வழங்கினார்
13 மாற்றித்திறனாளிகள் உள்பட 540 பேருக்கு பணிநியமன ஆணையியை மக்ககள் நல்வாழ்த்துறை அமைச்சா் மா.சுப்ரமணியன் சனிக்கிழமை வழங்கினாா்.
ஜோத்பூர் - சென்னை: இன்று சிறப்பு ரயில் இயக்கம்
ராஜஸ்தான் மாநிலம் ஜோத்பூரில் (பகத் கி கோதி) இருந்து சென்னை சென்ட்ரலுக்கு ஞாயிற்றுக்கிழமை (நவ.26) சிறப்பு ரயில் இயக்கப்படவுள்ளது.