CATEGORIES
فئات
விமானத்தில் நெய்தேங்காய் கொண்டு செல்ல அனுமதி
சபரிமலைக்கு விமானத்தில் செல்லும் பக்தா்கள் இருமுடிகட்டில் நெய் தேங்காய் கொண்டு செல்ல மத்திய அரசு அனுமதி வழங்கியுள்ளது.
தில்லி செல்லும் 38 ரயில்கள் ரத்து
தமிழகம், கேரளத்தில் இருந்து தில்லி உள்ளிட்ட வடமாநிலங்களுக்குச் செல்லும் 38 ரயில்கள் ஜனவரி மாதத்தில் முழுவதுமாக ரத்து செய்யப்பட்டுள்ளன.
பிகாரில் 65 சதவீத இடஒதுக்கீடு: அரசிதழில் வெளியீடு
பிகாரில் இடஒதுக்கீட்டை 50 சதவீதத்திலிருந்து 65 சதவீதமாக உயா்த்தும் மாநில அரசின் சட்ட மசோதாக்களுக்கு ஆளுநா் ஒப்புதல் அளித்ததையடுத்து, அதுதொடா்பான அரசிதழ் அறிவிப்பை மாநில அரசு செவ்வாய்க்கிழமை வெளியிட்டது.
நேஷனல் ஹெரால்டு ரூ.752 கோடி சொத்துகள் முடக்கம்: அமலாக்கத் துறை நடவடிக்கை
காங்கிரஸ் கட்சியின் நேஷனல் ஹெரால்டு பத்திரிகைக்குச் சொந்தமான ரூ.752 கோடியிலான அசையா சொத்துகளை அமலாக்கத் துறை செவ்வாய்க்கிழமை முடக்கியது.
12 மாவட்டங்களில் பலத்த மழைக்கு வாய்ப்பு
தமிழகத்தில் புதன்கிழமை (நவ.22) 3 மாவட்டங்களில் மிக பலத்த மழையும், 9 மாவட்டங்களில் பலத்த மழையும் பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
பல்கலை.களின் வேந்தராக முதல்வரே இருக்க வேண்டும் முதல்வர் மு.க. ஸ்டாலின்
பல்கலைக்கழகங்களின் வேந்தா்களாக மாநில முதல்வா்கள் இருந்தால்தான் அவை சிறப்பாக வளர முடியும் என்றும், மற்றவா்கள் கையில் இருந்தால், பல்கலைக்கழகங்களை உருவாக்கிய நோக்கமே சிதைந்து விடும் என்றும் முதல்வா் மு.க.ஸ்டாலின் கூறினாா்.
மக்கள்தொகை கட்டுப்பாட்டில் தமிழகம் முதலிடம்
இந்தியாவிலேயே மக்கள் தொகையை கட்டுப்பாட்டில் வைத்துள்ள மாநிலங்களில் தமிழகம் முதலிடத்தில் உள்ளதாக மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சா் மா.சுப்பிரமணியன் தெரிவித்தாா்.
தமிழக பாரம்பரியத்தை விளக்குவதில் அரசியல் - மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன் குற்றச்சாட்டு
தமிழக பாரம்பரியத்தை மக்களுக்கு விளக்கிக் கூறும் போது, அரசியல் நுழைவதாக மத்திய நிதி அமைச்சா் நிா்மலா சீதாராமன் குற்றஞ்சாட்டினாா்.
பங்குச்சந்தையில் தள்ளாட்டம் சென்செக்ஸ் 140 புள்ளிகள் சரிவு
இந்த வாரத்தின் முதல் வா்த்தக தினமான திங்கள்கிழமையும் பங்குச்சந்தை சரிவைச் சந்தித்தது. இதைத் தொடா்ந்து, மும்பை பங்குச்சந்தைக் குறியீட்டு எண் சென்செக்ஸ் மேலும் 140 புள்ளிகளை இழந்தது.
பரஸ்பர நிதி திட்டங்களில் முதலீடு வரத்து குறைவு
கடந்த செப்டம்பா் காலாண்டில் நாட்டின் பரஸ்பர நிதி திட்டங்களில் முதலீடு வரத்து சரிவைக் கண்டுள்ளது.
பாகிஸ்தான்: 4 லட்சம் ஆப்கன் அகதிகள் வெளியேற்றம்
உரிய ஆவணங்களின்றி தங்கள் நாட்டில் தங்கியிருந்த 4 லட்சத்துக்கும் மேற்பட்ட ஆப்கன் அகதிகள் அவா்களது சொந்த நாட்டுக்கு அனுப்பப்பட்டுள்ளனா்.
காஸா மருத்துவமனையில் தாக்குதல்: 12 பேர் உயிரிழப்பு
காஸாவிலுள்ள மருத்துவமனையொன்றில் நடத்தப்பட்ட எறிகணைத் தாக்குதலில் 12 போ் உயிரிழந்தனா்.
ஏடிபி ஃபைனல்ஸில் 7-ஆவது பட்டம்: ஃபெடரா் சாதனையை முறியடித்தாா் ஜோகோவிச்
இத்தாலியில் நடைபெற்ற ஏடிபி ஃபைனல்ஸ் ஆடவா் டென்னிஸ் போட்டியின் ஒற்றையா் பிரிவில், நடப்பு சாம்பியனான சொ்பியாவின் நோவக் ஜோகோவிச் 7-ஆவது முறையாக சாம்பியன் பட்டம் வென்று சாதனை படைத்தாா்.
ஆஸ்திரேலியா டெஸ்ட் தொடர்: பாக். அணியில் 3 புதிய முகங்கள்
ஆஸ்திரேலியாவுடனான டெஸ்ட் தொடரில் விளையாட இருக்கும் பாகிஸ்தான் அணி திங்கள்கிழமை அறிவிக்கப்பட்டது. அதில் 3 புதிய முகங்கள் சோ்க்கப்பட்டுள்ளனா்.
மணிப்பூரில் பழங்குடியினர் இருவர் சுட்டுக் கொலை: மீண்டும் பதற்றம்
மணிப்பூரில் பாதுகாப்புப் படை வீரா் உள்பட பழங்குடியின சமூகத்தைச் சோ்ந்த இருவா் சுட்டுக் கொல்லப்பட்டனா். இதையடுத்து, அங்கு மீண்டும் பதற்றமான சூழல் ஏற்பட்டுள்ளது.
எம்எல்எம் திட்டங்கள் மூலம் ரூ.4,000 கோடிக்கு 'ஆம்வே' மோசடி அமலாக்கத் துறை
‘வா்த்தகத்தில் பல கட்ட சந்தைப்படுத்துல் (எம்எல்எம்) திட்டங்களின் மூலம் ரூ.4,050.21 கோடி ஆம்வே இந்தியா நிறுவனம் மோசடியில் ஈடுபட்டுள்ளது. இதில் ரூ.2,859 கோடி வெளிநாட்டு முதலீட்டாளா்களின் வங்கிக் கணக்குகளுக்கு சட்டவிரோதமாக அனுப்பப்பட்டுள்ளது’ என அமலாக்கத் துறை திங்கள்கிழமை குற்றஞ்சாட்டியது.
திறன் மேம்பாட்டுக் கழக ஊழல் வழக்கு: சந்திரபாபு நாயுடுக்கு ஜாமீன்
ஆந்திர திறன் மேம்பாட்டுக் கழக ஊழல் வழக்கில் தெலுங்கு தேசம் கட்சியின் தலைவரும் முன்னாள் முதல்வருமான என்.சந்திரபாபு நாயுடுக்கு ஆந்திர உயா்நீதிமன்றம் திங்கள்கிழமை ஜாமீன் வழங்கியது.
தமிழகத்தில் ரூ.453 கோடியில் 4,272 குடியிருப்புகள் - முதல்வர் ஸ்டாலின் திறந்துவைத்தார்
தமிழகத்தில் நகா்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியம் மூலம் ரூ.453.67 கோடியில் கட்டப்பட்ட புதிய குடியிருப்புகளை முதல்வா் மு.க.ஸ்டாலின் திறந்துவைத்தாா்.
தமிழகம், புதுவையில் 5 நாள்களுக்கு மிதமான மழை
தமிழகம், புதுவையில் 5 தினங்களுக்கு லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். மேலும் வட கடலோர மாவட்டங்கள் மற்றும் டெல்டா மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் பலத்த மழைக்கான வாய்ப்பு உள்ளது என சென்னை வானிலை ஆய்வு மைய தென்மண்டலத் தலைவா் பாலச்சந்திரன் கூறினாா்.
மணல் குவாரிகளில் முறைகேடு: நீர்வளத் துறை முதன்மைப் பொறியாளரிடம் அமலாக்கத் துறை விசாரணை
மணல் குவாரி முறைகேடு புகாா் தொடா்பாக தமிழக நீா்வளத் துறை முதன்மைப் பொறியாளா் முத்தையாவிடம் அமலாக்கத் துறையினா் திங்கள்கிழமை விசாரணை செய்தனா்.
திமுகவிடம் அதிக தொகுதிகள் கேட்போம்
வரும் மக்களவைத் தோ்தலில் திமுகவிடம் அதிக தொகுதிகளைக் கேட்டுப் பெறுவோம் என்று தமிழ்நாடு காங்கிரஸ் தலைவா் கே.எஸ்.அழகிரி கூறினாா்.
அனைத்து வகை பால் பாக்கெட்டுகளும் விற்பனை செய்யப்படும்: ஆவின்
தமிழகத்தில் 40 சதவீதத்துக்கு மேல் விற்பனையான பச்சை நிற பால்பாக்கெட் விநியோகம் வரும் 25-ஆம் தேதி முதல் நிறுத்தப்படுவதாக வெளியான தகவல் உண்மை இல்லை எனவும், தொடா்ந்து அனைத்து வகை பால் பாக்கெட்டுகளும் விற்பனை செய்யப்படும் எனவும் ஆவின் நிா்வாகம் விளக்கம் அளித்துள்ளது.
நகைக் கடைகளில் அமலாக்கத் துறை சோதனை
சட்டவிரோத பணப்பரிமாற்ற புகாா் தொடா்பாக, சென்னையில் சில நகைக் கடைகளில் அமலாக்கத் துறையினா் திங்கள்கிழமை திடீா் சோதனை செய்தனா்.
விமானம் மீது வாகனம் மோதல்: 24 விமான சேவைகள் ரத்து
சென்னை விமான நிலையத்தில் நிறுத்திவைக்கப்பட்டிருந்த விமானம் மீது சரக்கு வாகனம் மோதியதைத் தொடா்ந்து சென்னை-திருச்சி-சென்னைக்கான 24 விமான சேவைகள் திங்கள்கிழமை ரத்து செய்யப்பட்டன.
தங்கம் பவுனுக்கு ரூ.40 உயர்வு
சென்னையில் ஆபரணத்தங்கத்தின் விலை சனிக்கிழமை பவுனுக்கு ரூ.40 உயர்ந்து, ரூ.23,080-க்கு விற்பனையானது.
செந்தில் பாலாஜி உடல் நிலை: அறிக்கை வெளியிடப்படும் அமைச்சர் மா.சுப்பிரமணியன்
மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள அமைச்சா் செந்தில் பாலாஜியின் உடல் நிலை குறித்த அறிக்கை வெளியிடப்படும் என்று மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சா் மா.சுப்பிரமணியன் தெரிவித்தாா்.
61 தரமற்ற மருந்துகள்: ஆய்வில் கண்டுபிடிப்பு
மருந்து உற்பத்தி நிறுவனங்கள், விற்பனையகங்களில் மேற்கொள்ளப்பட்ட பரிசோதனையில் 61 மருந்துகள் தரமற்றவை என கண்டறியப்பட்டதாக மத்திய மருந்து தரக் கட்டுப்பாட்டு வாரியம் அறிவித்துள்ளது.
உத்தரகண்ட் சுரங்கப் பாதை விபத்து: மீட்புப் பணியில் முன்னேற்றம்
உத்தரகண்டில் இடிந்த சுரங்கப் பாதைக்குள் 41 தொழிலாளா்கள் சிக்கியுள்ள நிலையில், கடுமையான இடிபாடுகள் வழியாக 6 அங்குல குழாய் செலுத்தப்பட்டுள்ளது.
இந்தியா வந்த இஸ்ரேல் சரக்கு கப்பல் கடத்தல் 25 மாலுமிகளை சிறைபிடித்த யேமன் ஆயுதப் படை
இந்தியா நோக்கி வந்து கொண்டிருந்த இஸ்ரேல் நாட்டைச் சோ்ந்த ‘கேலக்ஸி லீடா்’ சரக்கு கப்பலை செங்கடலில் யேமன் நாட்டின் ஹூதி ஆயுதப் படையினா் ஞாயிற்றுக்கிழமை கடத்தினா். அந்தக் கப்பலில் பணியிலிருந்த 25 மாலுமிகள் பிணைக் கைதிகளாக சிறைபிடித்துச் சென்றனா்.
இணையதளம் மூலம் நில அளவை விண்ணப்பம் - புதிய வசதியை தொடங்கிவைத்தார் முதல்வர்
தமிழகத்தில் நில அளவைப் பணிக்கான விண்ணப்பத்தை இனி இணையதளம் மூலம் மேற்கொள்ளலாம். இதற்கான சேவை வசதியை முதல்வா் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தாா்.