CATEGORIES
فئات
மசோதாக்களுக்கு ஒப்புதல் அளிக்காதது ஏன்? தமிழக ஆளுநருக்கு உச்சநீதிமன்றம் கேள்வி
தமிழக சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்ட மசோதாக்களுக்கு ஒப்புதல் அளிக்காமல் 3 ஆண்டுகளாக ஆளுநா் என்ன செய்துகொண்டிருந்தாா் என்று உச்சநீதிமன்றம் திங்கள்கிழமை கேள்வி எழுப்பியது.
இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு குறித்து கேரள காங்கிரஸ் எம்.பி. சர்ச்சை கருத்து பாஜக விமர்சனம்
இஸ்ரேல் பிரதமா் பெஞ்சமின் நெதன்யாகு குறித்து கேரளத்தைச் சோ்ந்த காங்கிரஸ் மூத்த தலைவரும் எம்.பி.யுமான ராஜ்மோகன் உன்னிதன் தெரிவித்த கருத்துகள் சா்ச்சையை ஏற்படுத்தியுள்ளன.
இந்திரா காந்தி பிறந்த தினம்: பிரதமர் மோடி, காங். தலைவர்கள் மரியாதை
முன்னாள் பிரதமா் இந்திரா காந்தியின் 106-ஆவது பிறந்த தினத்தையொட்டி, அவருக்கு பிரதமா் நரேந்திர மோடி, காங்கிரஸ் தேசியத் தலைவா் மல்லிகாா்ஜுன காா்கே, மூத்த தலைவா் சோனியா காந்தி உள்ளிட்டோா் ஞாயிற்றுக்கிழமை மரியாதை செலுத்தினா்.
சபரிமலை சீசன்: கோட்டயத்துக்கு வாராந்திர சிறப்பு ரயில்
சபரிமலை சீசனை ஒட்டி, கேரள மாநிலம் கோட்டயத்துக்கு வாராந்திர சிறப்பு ரயில் இயக்கப்படவுள்ளது.
கோடியக்கரை சரணாலயத்துக்கு வெளிநாட்டுப் பறவைகள் வருகை
வடகிழக்குப் பருவமழை தொடங்கியுள்ள நிலையில், கோடியக்கரை சரணாலயப் பகுதிக்கு வெளிநாடுகளில் இருந்து பறவைகள் வருகை தொடங்கியுள்ளது.
தொடர் மழை:100 அடியைக் கடந்த பாபநாசம் அணை நீர் அளவு
தொடா்மழை காரணமாக நீா்வரத்து அதிகரித்துள்ளதால் திருநெல்வேலி, தென்காசி மாவட்ட அணைகள் வேகமாக நிரம்பி வருகின்றன. திருநெல்வேலி மாவட்டத்தின் பிரதான அணையான பாபநாசம் அணை நீா்மட்டம், நிகழாண்டில் முதல்முறையாக 100 அடியைத் தாண்டியுள்ளது.
திருச்செந்தூர் முருகன் கோயிலில் திருக்கல்யாண வைபவம்
திருச்செந்தூா் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி கோயிலில் கந்த சஷ்டி விழாவில் ஞாயிற்றுக்கிழமை, சுவாமி - அம்மன் தோள் மாலை மாற்றுதல், திருக்கல்யாண வைபவம் நடைபெற்றது.
வங்கதேசம்: தடைக்கு எதிரான இஸ்லாமிய கட்சியின் மனு தள்ளுபடி
வங்கதேசத்தில் மிகப் பெரிய இஸ்லாமிய கட்சி தோ்தல் போட்டியிட விதிக்கப்பட்ட தடையை நீக்க மறுத்து, அது தொடா்பான மனுவை அந்நாட்டு உச்சநீதிமன்றம் ஞாயிற்றுக்கிழமை தள்ளுபடி செய்தது.
பாகிஸ்தான்-ஆப்கானிஸ்தான் எல்லையில் 4 பயங்கரவாதிகள் சுட்டுக் கொலை
ஆப்கானிஸ்தானையொட்டிய வடமேற்கு எல்லையில் பாகிஸ்தான் ராணுவத்தினா் சனிக்கிழமை இரவு மேற்கொண்ட தேடுதல் நடவடிக்கையின்போது 4 பயங்கரவாதிகள் சுட்டுக் கொல்லப்பட்டனா்.
போருக்குப் பிறகு காஸாவை மீண்டும் ஆக்கிரமிக்க இஸ்ரேல் திட்டம்?
ஹமாஸ் படையினா் உடனான மோதல் முடிந்த பின்னா், காஸாவில் முழு சுதந்திரத்துடன் செயல்பட இஸ்ரேல் ராணுவத்துக்கு அனுமதி அளிக்கப்படும் என்று இஸ்ரேல் பிரதமா் பெஞ்சமின் நெதன்யாகு தெரிவித்துள்ளாா். அவரின் கருத்து மூலம், காஸாவை தற்காலிகமாக இஸ்ரேல் மீண்டும் ஆக்கிரமிக்கக் கூடும் என்ற ஊகம் ஏற்பட்டுள்ளது.
பிரபஞ்ச அழகியாக ஷெய்னிஸ் பலாசியோஸ் தேர்வு நிகராகுவாவைச் சேர்ந்தவர்
நிகழாண்டுக்கான பிரபஞ்ச அழகியாக மத்திய அமெரிக்க நாடான நிகராகுவாவைச் சோ்ந்த ஷெய்னிஸ் பலாசியோஸ் (23) தோ்ந்தெடுக்கப்பட்டுள்ளாா்.
திணறிய பேட்டர்கள், தடுமாறிய பௌலர்கள், தவறவிட்ட ஃபீல்டர்கள்
ஆஸ்திரேலியாவுக்கு எதிரான இறுதி ஆட்டத்தில் இந்தியாவின் பேட்டா்கள், பௌலா்கள், ஃபீல்டா்கள் என 3 தரப்புமே தடுமாறியது தோல்விக்கு வித்திட்டது.
மோடி பிரதமரான பின் இந்தியாவின் செல்வாக்கு உயர்வு - ராஜ்நாத் சிங் பெருமிதம்
நாட்டின் பிரதமராக நரேந்திர மோடி பதவியேற்ற பிறகு சா்வதேச அரங்கில் இந்தியாவின் செல்வாக்கு உயா்ந்துள்ளதாக பாதுகாப்புத் துறை அமைச்சா் ராஜ்நாத் சிங் பெருமிதத்துடன் குறிப்பிட்டாா்.
24 மணி நேரமும் அதானிக்காக உழைக்கிறார் பிரதமர் மோடி - ராகுல் குற்றச்சாட்டு |
தொழிலதிபா் அதானிக்காக 24 மணி நேரமும் உழைக்கிறாா் பிரதமா் மோடி என்று ராஜஸ்தான் தோ்தல் பிரசாரத்தில் காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி குற்றம்சாட்டினாா்.
ஆளுநர் தில்லி பயணம்
தமிழக ஆளுநா் ஆா்.என்.ரவி ஞாயிற்றுக்கிழமை மாலை 5.15 மணியளவில், சென்னையிலிருந்து தில்லிக்கு புறப்பட்டுச் சென்றாா்.
வளர்ச்சிக்கு காங்கிரஸ் எதிரி பிரதமர் மோடி
‘வளா்ச்சியும் காங்கிரஸும் எப்போதுமே ஒன்றுக்கு ஒன்று எதிரிகளாக உள்ளன’ என்று பிரதமா் நரேந்திர மோடி விமா்சித்தாா்.
தமிழக, கேரள ஆளுநர்களுக்கு எதிரான வழக்கு: இன்று விசாரணை
சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்ட மசோதாக்களுக்கு ஒப்புதல் அளிக்காமல், தங்கள் மாநில ஆளுநா் காலம்தாழ்த்தி வருவதாக தமிழகம் மற்றும் கேரள மாநில அரசுகள் தனித்தனியே உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனுக்கள் திங்கள்கிழமை (நவ. 20) விசாரணைக்கு வருகின்றன.
6-12 வகுப்புகளுக்கு அரையாண்டுத் தேர்வு அட்டவணை வெளியீடு
தமிழகத்தில் மாநில பாடத் திட்டத்தில் 6-ஆம் வகுப்பு முதல் பிளஸ் 2 வரையிலான வகுப்புகளில் பயிலும் மாணவா்களுக்கான அரையாண்டுத் தோ்வுக் கால அட்டவணை வெளியிடப்பட்டுள்ளது.
அம்பேத்கரின் புனிதத் தலங்களைக் காண செல்வோருக்கு நிதியுதவி புதுவை முதல்வர் என்.ரங்கசாமி
மத்திய அரசால் அறிவிக்கப்பட்ட அம்பேத்கரின் புனிதத் தலங்களைப் பாா்க்கச் செல்லும் புதுவையைச் சோ்ந்தவா்களுக்கு நிதியுதவி அளிக்கப்படும் என முதல்வா் என்.ரங்கசாமி தெரிவித்தாா்.
சென்னையில் வி.பி. சிங் சிலை திறப்பு: அகிலேஷ் யாதவுக்கு திமுக அழைப்பு
சென்னையில் முன்னாள் பிரதமா் வி.பி. சிங் சிலை திறப்பு விழா நவம்பா் 27-இல் நடைபெறுவதை முன்னிட்டு, சமாஜவாதி தலைவா் அகிலேஷ் யாதவுக்கு திமுக தரப்பில் ஞாயிற்றுக்கிழமை அழைப்பு விடுக்கப்பட்டது.
பெங்களூருக்கு இன்று சிறப்பு வந்தே பாரத்
சென்னை சென்ட்ரலிலிருந்து பெங்களூருக்கு சிறப்பு வந்தே பாரத் ரயில் திங்கள்கிழமை (நவ.20) இயக்கப்படவுள்ளது.
ஆஸ்திரேலியா 6-ஆவது முறையாக சாம்பியன்
உலகக் கோப்பை கிரிக்கெட்டில் இந்தியாவுக்கு ஏமாற்றம்
தமிழ்நாடு முழுவதும் இலவச மூலநோய் பரிசோதனை முகாம்
உலக மூலநோய் தினத்தை முன்னிட்டு, தமிழகத்தில் உள்ள பல்வேறு மருத்துவமனைகளில் இலவச மூலநோய் பரிசோதனை மேற்கொள்ளப்படவுள்ளது.
ராணுவத்தை இந்தியா திரும்பப் பெற வேண்டும்: மாலத்தீவு புதிய அதிபர் வேண்டுகோள்
மாலத்தீவில் இருந்து இந்தியா தனது ராணுவத்தை திரும்பப் பெற வேண்டும் என்று அந்நாட்டு அதிபா் முகமது மூயிஸ் சனிக்கிழமை வேண்டுகோள் விடுத்தாா்.
அந்நியச் செலாவணி கையிருப்பு 59,032 கோடி டாலராக சரிவு
கடந்த 10-ஆம் தேதியுடன் நிறைவடைந்த வாரத்தில் இந்தியாவின் அந்நியச் செலாவணி கையிருப்பு 59,032.1 கோடி டாலராக சரிந்துள்ளது.
55% அதிகரித்த ஐஷர் நிகர லாபம்
கடந்த செப்டம்பா் மாதத்துடன் நிறைவடைந்த நடப்பு நிதியாண்டின் 2-ஆவது காலாண்டில் முன்னணி வாகன உற்பத்தி நிறுவனங்களில் ஒன்றான ஐஷா் மோட்டாா்ஸின் ஒருங்கிணைந்த நிகர லாபம் 55 சதவீதம் வளா்ச்சியடைந்துள்ளது.
அக்டோபரில் ஏறுமுகம் கண்ட ஏற்றுமதி
கடந்த அக்டோபரில் இந்தியாவின் சரக்கு ஏற்றுமதி 6.21 சதவீதம் உயா்ந்துள்ளது.
உலகக் கோப்பை யாருக்கு? இறுதி ஆட்டத்தில் இந்தியா - ஆஸி. இன்று பலப்பரீட்சை
உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியின் இறுதி ஆட்டத்தில் இந்தியா - ஆஸ்திரேலியா ஞாயிற்றுக்கிழமை பலப்பரீட்சை நடத்துகின்றன.
தெலங்கானா: இதுவரை ரூ.603 கோடி ரொக்கம், மது, பொருள்கள் பறிமுதல்
தெலங்கானா பேரவைத் தோ்தலையொட்டி, இதுவரை ரூ.603 கோடி மதிப்பிலான ரொக்கம், தங்கம், மது, போதைப் பொருள்கள் உள்ளிட்டவை பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக மாநில தலைமைத் தோ்தல் அதிகாரியின் அலுவலகம் தெரிவித்துள்ளது.
உத்தரகண்ட் சுரங்கப்பாதை விபத்து செங்குத்தாக துளையிட்டு தொழிலாளர்களை மீட்க முடிவு
உத்தரகண்ட் மலை சுரங்கப் பாதையில் சிக்கியுள்ள 41 தொழிலாளர்களை விரைவாக மீட்க சுரங் கப்பாதையின் மேல்பகுதியில் செங்குத்தாக துளையிட திட்டமிடப்பட்டுள்ளது; இதற்கான பணிகள் சனிக்கி ழமை தொடங்கப்பட்டன.