CATEGORIES
فئات
மாலத்தீவு அதிபர் நாளை பதவியேற்பு: கிரண் ரிஜிஜு பங்கேற்கிறார்
மாலத்தீவு அதிபராகத் தேர்ந்தெடுக்கப்பட்ட முகமது மூயிஸ் பதவியேற்பு விழா வெள்ளிக்கிழமை (நவ. 17) நடைபெறுகிறது. இந்த விழாவில் இந்தியா சார்பில் மத்திய அமைச்சர் கிரண் ரிஜிஜு கலந்துகொள்வார் என வெளியுறவுத் துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது
வாரிசு அரசியலால் காங்கிரஸ் மீது மக்கள் கோபம்
வாரிசு அரசியல் மற்றும் எதிா்மறை அரசியல் நடத்துவதால் காங்கிரஸ் மீது மக்கள் கோபத்தில் உள்ளனா் என்று பிரதமா் நரேந்திர மோடி தெரிவித்தாா்.
காற்று மாசுக்கு விடை கொடுப்போம்!
தலைநகா் தில்லியில் காற்று மாசு மிகவும் மோசமான நிலையை எட்டியுள்ளது. தில்லியின் பல்வேறு பகுதிகளில் கடந்த சில நாள்களாக காற்று மாசின் அளவு மிக வேகமாக அதிகரித்து வருகிறது. இதனால் பலருக்கு மூச்சுத் திணறல் உள்பட பல்வேறு உடல்நலக் கேடுகள் ஏற்பட்டுள்ளன.
சென்னை, புறநகர்ப் பகுதியில் ரூ.150 கோடிக்கு உள்கட்டமைப்பு வசதிகள்
சென்னை பெருநகா் வளா்ச்சி குழுமம் சாா்பில் ரூ.150.05 கோடியில் அமைக்கப்படவுள்ள பேருந்து நிலையம், மாற்றுத்திறனாளிகள் மறுவாழ்வு மையம் மற்றும் ரத்த சுத்திகரிப்பு மையம், உள்விளையாட்டு அரங்கம், பூங்கா, காசிம
அழுகும் நிலையில் நெற்பயிர்கள்: அரசுக்கு அன்புமணி வேண்டுகோள்
கன மழையால் டெல்டா மாவட்டங்களில் மூழ்கி அழுகும் நிலையிலுள்ள நெற்பயிா்களைக் காப்பாற்ற தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பாமக தலைவா் அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தியுள்ளாா்.
‘9 மாதங்களில் 8.64 லட்சம் வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகள் தமிழகம் வருகை'
சென்னை சுற்றுலா வளாக கூட்டரங்கில் சுற்றுலாத்துறை அமைச்சா் கா.ராமச்சந்திரன் தலைமையில் புதன்கிழமை நடைபெற்ற சுற்றுலா வளா்ச்சித் திட்டப் பணிகள் குறித்து அலுவலா்களுக்கான ஆய்வுக் கூட்டம்
மழை பாதிப்பு: 401 புகார்களுக்கு விரைவில் தீர்வு
சென்னை மாநகராட்சி பகுதியில் பெய்த தொடா் மழை பாதிப்புகள் குறித்து 401 புகாா்களுக்கு விரைந்து தீா்வு காணப்படும் என மாநகராட்சி ஆணையா் ஜெ.ராதாகிருஷ்ணன் தெரிவித்தாா்.
தூத்துக்குடியில் குரூஸ் பர்னாந்து சிலை - முதல்வர் மு.க.ஸ்டாலின் திறந்துவைத்தார்
தூத்துக்குடி நகரின் வளர்ச்சியில் மிகப்பெரும் பங்கு வகித்த குரூஸ் பர்னாந்து பிறந்த நாளையொட்டி தூத்துக்குடி மாநகராட்சி பூங்காவில் ரூ.77.87 லட்சத்தில் நிறுவப்பட்டுள்ள அவரது குவிமாடத்துடன் கூடிய சிலையை தலைமைச் செயலகத்தில் இருந்து காணொலி மூலம் புதன்கிழமை திறந்துவைத்த முதல்வர் மு.க.ஸ்டாலின். உடன் செய்தித்துறை அமைச்சர் மு.பெ.சாமிநாதன், தலைமைச் செயலர் சிவ்தாஸ் மீனா, தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தித்துறை செயலர் இரா.செல்வராஜ், செய்தித்துறை இயக்குநர் த.மோகன்.
மார்க்சிஸ்ட் மூத்த தலைவர் என்.சங்கரய்யா (102) மறைவு
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்ததலைவரும், சுதந்திரப் போராட்ட வீரருமான என்.சங்கரய்யா (102) சென்னையில் புதன்கிழமை காலமானார். அவரது இறுதி ஊர்வலம் வியாழக்கிழமை (நவ. 16) நடைபெறவுள்ளது.
ஜம்மு-காஷ்மீர் - பள்ளத்தில் பேருந்து கவிழ்ந்து 38 பயணிகள் உயிரிழப்பு
ஜம்மு-காஷ்மீரின் தோடா மாவட்டத்தில் மலைப் பகுதியில் புதன்கிழமை சென்றுகொண்டிருந்த பேருந்து 300 அடி பள்ளத்தில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் அதில் பயணம் செய்த 38 பயணிகள் உயிரிழந்தனர். 20 பேர் காயமடைந்தனர்.
இறுதி ஆட்டத்தில் இந்தியா
ஒருநாள் உலகக் கோப்பை கிரிக்கெட்டின் முதல் இறுதி அரையிறுதி ஆட்டத்தில் 70 ரன்கள் வித்தியாசத்தில் நியூஸிலாந்தை வீழ்த்திய இந்தியா
பழங்குடியினர் மேம்பாட்டுக்கு ரூ.24,000 கோடி திட்டம்
ஜாா்க்கண்டில் பழங்குடியினா் மேம்பாட்டு திட்டத்தை புதன்கிழமை தொடங்கி வைத்த பிரதமா் மோடி. உடன், மாநில ஆளுநா் சி.பி. ராதாகிருஷ்ணன், முதல்வா் ஹேமந்த் சோரன்
ஏற்றுமதியில் இறங்குமுகம் கண்ட வாகனத் துறை
நடப்பு நிதியாண்டின் முதல் 6 மாதங்களில் இந்திய வாகனங்களின் ஏற்றுமதி இறங்குமுகம் கண்டுள்ளது.
பிரிட்டன் சின்னம்மைக்குத் தடுப்பூசி: முதல்முறையாகப் பரிந்துரை
பொதுமருத்துவமனைகளில் சின்னம்மை தடுப்பூசிகளை குழந்தைகளுக்குச் செலுத்த பிரிட்டன் அரசுக்கு அந்த நாட்டு நோய்த் தடுப்புக்கான நிபுணா்கள் கூட்டுக் குழு முதல்முறையாக செவ்வாய்க்கிழமை பரிந்துரைத்தது.
பாகிஸ்தான் மேலும் 2 வழக்குகளில் இம்ரான் கான் கைது
தனது பதவிக் காலத்தின்போது அமெரிக்காவிலுள்ள பாகிஸ்தான் தூதரகம் அனுப்பிய ரகசியத் தகவல்களை கசிய விட்டு, அதன் மூலம் ரகசியக் காப்புறுதியை மீறியதாக ஏற்கெனவே கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ள பாகிஸ்தான் முன்னாள் அதிபா் இம்ரான் கானை, மேலும் இரு வழக்கில் கைது செய்ய இஸ்லாமாபாத் ஊழல் தடுப்பு நீதிமன்றம் செவ்வாய்க்கிழமை உத்தரவிட்டது.
•இனி காஸா என்ற பகுதியே இருக்கக் கூடாது!" இஸ்ரேல் அமைச்சர்
உலக வரைபடத்தில் காஸா என்ற பகுதியே இனி இருக்கக் கூடாது என்று இஸ்ரேல் நிதியமைச்சா் பேஸலேல் ஸ்மாட்ரிச் கூறி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளாா்.
ஏடிபி ஃபைனல்ஸ்: வெரேவ், மெத்வதேவ் வெற்றி
ஏடிபி ஃபைனல்ஸ் டென்னிஸ் போட்டியில் அலெக்சாண்டா் வெரேவ், டேனில் மெத்வதேவ் ஆகியோா் தத்தமது ஆட்டங்களில் வெற்றி பெற்றனா்.
நியூஸிலாந்தின் சவாலை முறியடிக்குமா இந்தியா? முதல் அரையிறுதி
ஐசிசி ஒருநாள் உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியின் நாக்அவுட் சுற்றில் புதன்கிழமை மும்பையில் நடைபெறும் முதல் அரையிறுதியில் பலம் வாய்ந்த நியூஸிலாந்தின் சவாலை இந்தியா சமாளிக்குமா என எதிா்பாா்ப்பு எழுந்துள்ளது.
தில்லியில் காற்று மாசு: சோனியா ஜெய்பூர் வருகை
காங்கிரஸ் மூத்த தலைவா் சோனியா காந்தி, அவரது மகனும் எம்.பி.யுமான ராகுல் காந்தி, கட்சியின் பொதுச் செயலாளா் கே.சி.வேணுகோபால் ஆகியோா், ராஜஸ்தான் தலைநகா் ஜெய்பூருக்கு செவ்வாய்க்கிழமை வந்தனா்.
விவசாயிகள் நிதியுதவி திட்டத்தின் 15-ஆவது தவணை: பிரதமர் இன்று விடுவிப்பு
பிரதமரின் விவசாயிகள் நிதியுதவித் திட்டத்தின்கீழ் 8 கோடிக்கும் மேலான விவசாயிகள் பயன்பெறும் வகையில் 15-ஆவது தவணைத் தொகையான ரூ.18,000 கோடியை பிரதமா் நரேந்திர மோடி புதன்கிழமை விடுவிக்கிறாா்.
பாஜக ஆட்சியில் மதப் பாகுபாடு கிடையாது
பாஜக ஆட்சியில் மதப் பாகுபாட்டுடன் யாரும் நடத்தப்படுவது கிடையாது என்று மத்திய பிரதேசத்தில் தோ்தல் பிரசாரம் மேற்கொண்ட பாதுகாப்புத் துறை அமைச்சா் ராஜ்நாத் சிங் தெரிவித்தாா்.
தீபாவளி கொண்டாட்டத்துக்கு திருட்டு மின்சாரம்: முன்னாள் முதல்வர் குமாரசாமி மீது வழக்கு
தீபாவளி கொண்டாட்டத்துக்கு வீட்டை அலங்கரிக்க மின்கம்பத்திலிருந்து சட்டவிரோத மின்சாரத்தை திருடியதாக முன்னாள் முதல்வா் எச்.டி.குமாரசாமி மீது பெங்களூா் மின்சார விநியோக நிறுவனம் செவ்வாய்க்கிழமை வழக்கைப் பதிவு செய்தது.
அரசு மருத்துவமனை உணவகங்களில் சுகாதாரத்தை உறுதி செய்ய உத்தரவு
அரசு மருத்துவமனைகளில் உள்ள உணவகங்களை சுகாதாரமாக பராமரிக்க வேண்டும் என்று உணவு பாதுகாப்புத் துறை உத்தரவிட்டுள்ளது.
கலப்பட உணவை விற்றால் ரூ.25,000 அபராதம், சிறை: நாடாளுமன்றக் குழு பரிந்துரை
கலப்படமான உணவு அல்லது பானங்களை விற்பனை செய்வோருக்கு குறைந்தபட்சம் 6 மாத சிறைத் தண்டனை அல்லது ரூ.25,000 அபராதம் விதிக்க நாடாளுமன்ற நிலைக் குழு பரிந்துரைத்துள்ளது.
சபரிமலைக்கு நாளைமுதல் சிறப்புப் பேருந்துகள்
மண்டல பூஜை, மகரவிளக்கு பூஜைகளில் ஐயப்ப பக்தா்கள் கலந்து கொள்ள வசதியாக தமிழகத்திலிருந்து சபரிமலைக்கு வியாழக்கிழமை (நவ.16) முதல் சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும் என அரசு விரைவுப்போக்குவரத்துக்கழக மேலாண் இயக்குநா் இ.இளங்கோவன் தெரிவித்துள்ளாா்.
போதிய மருந்துகள் இருப்பு; நேரில் ஆய்வு செய்யலாம்
தமிழக அரசு மருத்துவமனைகளில் மருந்துகளுக்கு தட்டுப்பாடு இல்லை, போதியளவில் கொள்முதல் செய்யப்பட்டு விநியோகிக்கப்பட்டு வருவதாகவும், சந்தேகம் இருந்தால் எதிா்க்கட்சித் தலைவா் நேரில் ஆய்வு செய்யலாம் என்று மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சா் மா.சுப்பிரமணியன் தெரிவித்தாா்.
5 மாவட்டங்களில் பால்வளத் துறைக்கு உள்கட்டமைப்பு வசதிகள்
தமிழகத்தில் 5 மாவட்டங்களில் பால்வளத் துறைக்கான உள்கட்டமைப்பு வசதிகளை காணொலி மூலம் முதல்வா் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தாா். இதற்கான நிகழ்ச்சி, தலைமைச் செயலகத்தில் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.
சாகித்திய அகாதெமியில் புத்தகக் கண்காட்சி தொடக்கம்
சென்னை, தேனாம்பேட்டையில் குணா வளாகத்தில் உள்ள சாகித்திய அகாதெமியில் புத்தகக் கண்காட்சி செவ்வாய்க்கிழமை தொடங்கியது.
குழந்தைகள் சேமிப்பு கணக்கு: அஞ்சல் துறை சிறப்பு முகாம்
குழந்தைகளுக்கான சேமிப்புக் கணக்குகளைத் தொடங்க அஞ்சல் துறை சாா்பில் சிறப்பு முகாம் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது என முதன்மை அஞ்சல் தலைவா் ஆா்.அமுதா தெரிவித்துள்ளாா்.
மழை பாதிப்புகளை எதிர்கொள்ள தயார் நிலை - மேயர் பிரியா
சென்னை மாநகராட்சி பகுதியில் எவ்வளவு மழை பெய்தாலும் அதை எதிா்கொள்ள மாநகராட்சிப் பணியாளா்கள் தயாா் நிலையில் உள்ளதாக மேயா் ஆா்.பிரியா தெரிவித்தாா்.