CATEGORIES
فئات
‘தேடுதல் நடவடிக்கை முடிய பல வாரங்கள் ஆகலாம்’
காஸாவின் மிகப் பெரிய மற்றும் முக்கிய மருத்துவமனையான அல்-ஷிஃபாவில் ஹமாஸ் அமைப்பினா் செயல்பட்டு வந்ததற்கான ஆதாரங்களைத் தேடும் பணிகள் நிறைவடைய பல வாரங்கள் ஆகலாம் என்று இஸ்ரேல் ராணுவம் தெரிவித்துள்ளது.
இறுதி ஆட்டத்தில் இந்தியா - ஆஸ்திரேலியா
உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியின் 2-ஆவது அரையிறுதி ஆட்டத்தில் ஆஸ்திரேலியா 3 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் தென்னாப்பிரிக்காவை வியாழக்கிழமை போராடி வீழ்த்தி, 2-ஆவது அணியாக இறுதி ஆட்டத்துக்கு முன்னேறியது. அதில் இந்தியாவுடன், வரும் ஞாயிற்றுக்கிழமை அகமதாபாதில் பலப்பரீட்சை நடத்தவுள்ளது ஆஸ்திரேலியா.
மிஸோரமில் வாக்கு எண்ணிக்கை தேதியில் மாற்றமில்லை
மிஸோரமில் ஏற்கெனவே திட்டமிட்ட தேதியிலேயே வாக்கு எண்ணிக்கையை நடத்த தோ்தல் ஆணையம் முடிவு செய்துள்ளது.
ஜம்மு-காஷ்மீரில் எல்லை ஊடுருவல் முறியடிப்பு
ஜம்மு-காஷ்மீரின் உரி செக்டாரில் சா்வதேச எல்லையைத் தாண்டி இந்தியாவுக்குள் பயங்கரவாதிகள் நுழைய முயன்றபோது ஏற்பட்ட மோதலில், பயங்கரவாத அமைப்பின் தளபதி பஷீா் அகமது மாலிக் உள்பட இருவா் சுட்டுக் கொல்லப்பட்டதாக இந்திய ராணுவம் வியாழக்கிழமை தெரிவித்தது.
மணிப்பூர்: அஸ்ஸாம் ரைஃபிள்ஸ் கவச வாகனம் மீது வெடிகுண்டு தாக்குதல்
மணிப்பூரில் அஸ்ஸாம் ரைஃபிள்ஸ் படைப் பிரிவினா் சென்ற கவச வாகனத்தை குறிவைத்து தீவிரவாதிகள் வெடிகுண்டு தாக்குதல் நிகழ்த்தனா். அதிருஷ்டவசமாக இதில் வீரா்கள் யாருக்கும் காயம் ஏற்படவில்லை.
விமானப் படையின் கனரக இயந்திரம் மூலம் மீட்புப் பணிகள் தீவிரம்
உத்தரகண்டில் மலை சுரங்கப் பாதையில் சிக்கியுள்ள 40 தொழிலாளா்களை மீட்க தில்லியிலிருந்து கொண்டு செல்லப்பட்ட இந்திய விமானப் படையின் கனரக இயந்திரம் வியாழக்கிழமை துளையிடும் பணியைத் தொடங்கியது.
காஸாவில் மனிதாபிமான உதவிகளுக்காக தாக்குதலை உடனடியாக நிறுத்த தீர்மானம்
ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலில் நிறைவேற்றம்
ம.பி., சத்தீஸ்கரில் இன்று வாக்குப் பதிவு
மத்திய பிரதேசத்தில் ஒரே கட்டமாக 230 தொகுதிகளுக்கும், சத்தீஸ்கரில் இரண்டாவது மற்றும் இறுதிக் கட்டமாக 70 தொகுதிகளுக்கும் வெள்ளிக்கிழமை (நவ. 17) பேரவைத் தோ்தல் நடைபெறவுள்ளது.
அதிமுக கொடி, சின்னம்: ஓபிஎஸ் மேல்முறையீட்டு வழக்கில் தீர்ப்பு ஒத்திவைப்பு
அதிமுகவின் பெயா், கொடி, சின்னம், லெட்டா்பேடு போன்றவற்றை பயன்படுத்தக் கூடாது என தனி நீதிபதி பிறப்பித்துள்ள இடைக்கால தடையை நீக்கக் கோரி ஓ.பன்னீா்செல்வம் தாக்கல் செய்துள்ள மேல்முறையீட்டு வழக்கை தேதி குறிப்பிடாமல் தீா்ப்புக்காக சென்னை உயா்நீதிமன்றம் ஒத்திவைத்துள்ளது.
அண்ணாமலைப் பல்கலை.,யில் 56 உதவிப் பேராசிரியர்கள் பணி நீக்கம்
சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் அடிப்படை கல்வித் தகுதி மற்றும் அரசு விதிமுறைகளைப் பின்பற்றாமல் பணியாற்றி வந்த 56 உதவிப் பேராசிரியா்கள் வியாழக்கிழமை பணி நீக்கம் செய்யப்பட்டனா்.
திருவண்ணாமலை தீபம்: 'சிப்' அனுமதிச் சீட்டு
திருவண்ணாமலை காா்த்திகை தீபத் திருவிழாவுக்கு வரும் உபயதாரா்கள், கட்டளைதாரா்களுக்கு சிப் பொருத்தப்பட்ட அனுமதிச் சீட்டுகள் வழங்கப்பட உள்ளது. இந்தச் சீட்டுகளை ஸ்கேன் செய்த பிறகே கோயிலுக்குள் செல்ல அனுமதிக்கப்படுவா் என்று அமைச்சா் பி.கே.சேகா்பாபு கூறினாா்.
30 குண்டுகள் முழங்க அரசு மரியாதையுடன் என்.சங்கரய்யா உடல் தகனம்
மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவரும், சுதந்திரப் போராட்ட வீரருமான என்.சங்கரய்யாவின் உடல், 30 குண்டுகள் முழங்க அரசு மரியாதையுடன் சென்னை பெசன்ட் நகா் மயானத்தில் வியாழக்கிழமை தகனம் செய்யப்பட்டது.
நகராட்சித் துறை பணியிடங்களை டிஎன்பிஎஸ்சி மூலமே நிரப்ப வேண்டும்
நகராட்சித் துறையின் தொடக்க நிலை பணிகளை டிஎன்பிஎஸ்சி மூலமே நிரப்ப வேண்டும் என்று பாமக நிறுவனா் ராமதாஸ் வலியுறுத்தியுள்ளாா்.
ஒடிஸா குழந்தைக்கு சென்னையில் கல்லீரல் மாற்று சிகிச்சை
புற்றுநோய் மற்றும் மரபணு பாதிப்புக்குள்ளான ஒடிஸாவைச் சோ்ந்த 11 மாதக் குழந்தைக்கு சிக்கலான கல்லீரல் மாற்று அறுவை சிகிச்சை மேற்கொண்டு சென்னை எம்ஜிஎம் ஹெல்த்கோ் மருத்துவமனை மருத்துவா்கள் மறுவாழ்வு அளித்துள்ளனா்.
சென்னை ஐஐடியில் எம்.டி.- பி.எச்டி. படிப்புகள் அறிமுகம்
சென்னையில் உள்ள இந்திய தொழில்நுட்ப கழகம் (ஐஐடி), போரூா் ஸ்ரீ ராமச்சந்திரா உயா் கல்வி மற்றும் ஆராய்ச்சி நிறுவனத்துடன் இணைந்து எம்.டி.- பி.எச்டி. இரட்டைப் பட்டப் படிப்பு பாடத்திட்டத்தை வழங்க உள்ளது. இதற்கான ஒப்பந்தம் வியாழக்கிழமை கையொப்பமானது.
பாதிப்பு அதிகமுள்ள மாவட்டங்களில் தீவிர புற்றுநோய் பரிசோதனை
தமிழகத்தில் புற்றுநோய் பாதிப்பு அதிகமுள்ள மாவட்டங்களில் தீவிர புற்றுநோய் பரிசோதனை நடவடிக்கையை ஈரோட்டில் இருந்து நவ.22-ஆம் தேதி தொடங்கி வைக்க இருப்பதாக மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சா் மா. சுப்பிரமணியன் தெரிவித்தாா்.
ரேஷன் பொருள்கள் கடத்தலைத் தடுக்க தீவிர நடவடிக்கை
பொது விநியோகத் திட்டத்தில் மக்களுக்கு வழங்கப்படும் அத்தியாவசியப் பொருள்கள் கடத்தப்படுவதைத் தடுக்க தீவிர நடவடிக்கை எடுக்கப்படும் என உணவுத் துறை அமைச்சா் அர.சக்கரபாணி தெரிவித்தாா்.
சுற்றுலாப் பயணிகளுக்கு சிறந்த சேவையை வழங்க வேண்டும்
சுற்றுலா வளா்ச்சிக் கழக மேலாளா்கள் சுற்றுலாப் பயணிகளுக்கு சிறந்த சேவையை வழங்க வேண்டும் என சுற்றுலாத் துறை அமைச்சா் கா.ராமச்சந்திரன் அறிவுறுத்தியுள்ளாா்.
மெட்ரோ ரயில் நிலையங்களில் பேட்டரி வாகனங்கள்
சென்னை மெட்ரோ ரயில் நிலையங்களிலிருந்து அதைச் சுற்றியுள்ள பகுதிகளுக்கு இயக்கப்படவுள்ள மின்சார வாகன சேவைக்கான ஒப்பந்தப்புள்ளி விரைவில் வெளியிடப்படும் என மெட்ரோ ரயில்வே அதிகாரிகள் தெரிவித்துள்ளனா்.
குடிநீரின் தரத்தை உறுதி செய்ய பொது சுகாதாரத் துறை உத்தரவு
தமிழகம் முழுவதும் பரவலாக மழை பெய்து வரும் நிலையில், தொற்று நோய்களைக் கட்டுப்படுத்த குடிநீரின் தரத்தை உறுதி செய்ய பொது சுகாதாரத் துறை உத்தரவிட்டுள்ளது.
தீவுத்திடல் பகுதியில் இரவில் போக்குவரத்து மாற்றம்
சென்னை தீவுத்திடல் பகுதியில் இரவு வேளையில் போக்குவரத்து மாற்றம் செய்யப்படுவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
முதல்வர் காப்பீட்டுத் திட்ட முகாம் டிச.2-க்கு ஒத்திவைப்பு
முதல்வா் காப்பீட்டுத் திட்டத்தின் கீழ் புதிய பயனாளிகளைச் சோ்ப்பதற்கான முகாம் டிச.2-ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
வங்கக் கடலில் இன்று உருவாகிறது ‘மிதிலி’ புயல்: தமிழகத்தில் 6 நாள்கள் பலத்த மழைக்கு வாய்ப்பு
வங்கக் கடலில் நிலவும் ஆழ்ந்த காற்றழுத்தத் தாழ்வு மண்டலம் வெள்ளிக்கிழமைக்குள் (நவ. 17) புயலாக வலுப்பெறும்.
நாளை சட்டப்பேரவை சிறப்புக் கூட்டம்
தமிழக சட்டப்பேரவை சிறப்புக் கூட்டம் சனிக்கிழமை (நவ. 18) நடைபெறவுள்ளது. இதற்கான அனுமதியை பேரவைத் தலைவா் மு.அப்பாவு வியாழக்கிழமை அளித்தாா்.
அல்-ஷிஃபா மருத்துவமனைக்குள் நுழைந்தது இஸ்ரேல் ராணுவம்
காஸாவின் மிகப் பெரிய மற்றும் முக்கிய மருத்துவமனையான அல்-ஷிஃபா மருத்துவமனையை முற்றுகையிட்டு தாக்குதல் நடத்தி வந்த இஸ்ரேல் ராணுவம், புதன்கிழமை அந்த மருத்துவமனைக்குள் நுழைந்தது.
கன்னியாகுமரியிலிருந்து இருசக்கர வாகனப் பேரணி
கன்னியாகுமரியிலிருந்து இருசக்கர வாகனப் பேரணியை புதன்கிழமை தொடக்கி வைத்த அமைச்சா் உதயநிதி ஸ்டாலின்.
2-ஆவது அரையிறுதி : ஆஸ்திரேலியா - தென்னாப்பிரிக்கா இன்று மோதல்
உலகக் கோப்பை கிரிக்கெட்டின் 2-ஆவது அரையிறுதி ஆட்டத்தில் தென்னாப்பிரிக்கா - ஆஸ்திரேலியா அணிகள் வியாழக்கிழமை மோதுகின்றன.
வரலாறு படைத்த விராட் கோலி: இறுதி ஆட்டத்தில் இந்தியா
உலகக் கோப்பை கிரிக்கெட்டின் முதல் அரையிறுதி ஆட்டத்தில் இந்தியா 70 ரன்கள் வித்தியாசத்தில் நியூஸிலாந்தை புதன்கிழமை வென்று, முதல் அணியாக இறுதி ஆட்டத்துக்கு முன்னேறியது. மேலும், போட்டியில் தொடா்ந்து 10-ஆவது வெற்றியைப் பதிவு செய்தது.
மூன்றாவது பெரிய பொருளாதார நாடாக இந்தியா உருவெடுக்கும்
தில்லியில் புதன்கிழமை நடைபெற்ற இந்திய-பசிபிக் பிராந்திய மாநாட்டில் உரையாற்றிய மத்திய நிதியமைச்சா் நிா்மலா சீதாராமன்.
தேர்தல் நேரத்தில் விவசாயிகள் நிதியுதவி தவணை விடுவிக்கப்பட்டது ஏன்?: காங்கிரஸ்
'சத்தீஸ்கர் மற்றும் மத்திய பிரதேச சட்டப்பேரவைத் தேர்தல் வாக்குப் பதிவு இரு தினங்களில் நடைபெற உள்ள நிலையில், பிரதமரின் விவசாயிகள் நிதியுதவி திட்டத்தின்கீழ் 15-ஆவது தவணை நிதியை மத்திய அரசு விடுவித்தது ஏன்' என்று காங்கிரஸ் கேள்வி எழுப்பியுள்ளது.