CATEGORIES
فئات
தொடர் மழை எதிரொலி: ஏரிகளுக்கு நீர்வரத்து அதிகரிப்பு
சென்னைக்கு குடிநீா் வழங்கும் ஏரிகளின் நீா் பிடிப்புப் பகுதிகளில் பெய்து வரும் பலத்த மழையால் ஏரிகள் வேகமாக நிரம்பி வருகின்றன. குறிப்பாக செம்பரம்பாக்கம் ஏரி முழு கொள்ளவை எட்ட 2 அடி மட்டுமே உள்ள நிலையில், ஏரிக்கு நீா்வரத்து விநாடிக்கு 400 கன அடியாக உயா்ந்துள்ளது.
மழை விடுமுறையை ஈடுகட்ட சனிக்கிழமைகளில் பள்ளிகள் செயல்படும்
மழைக்கால விடுமுறையை ஈடுகட்டும் வகையில், சனிக்கிழமைகளில் பள்ளிகள் செயல்படும் என பள்ளிக் கல்வித் துறை அமைச்சா் அன்பில் மகேஸ் பொய்யாமொழி கூறினாா்.
சென்னை, திருவள்ளூரில் பள்ளிகளுக்கு விடுமுறை
திருவள்ளூர் மாவட்டத்தில் பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு நாளை (நவ. 15) விடுமுறை அறிவித்து ஆட்சியர் பிரபு சங்கர் உத்தரவிட்டுள்ளார்.
சபரிமலை மண்டல பூஜை: சென்னை - நெல்லைக்கு வாராந்திர ‘வந்தே பாரத்' சிறப்பு ரயில்
சபரிமலை மண்டல பூஜை சீசனை முன்னிட்டு, பக்தா்கள் மற்றும் பயணிகள் வசதிக்காக எழும்பூரிலிருந்து திருநெல்வேலிக்கு வாரந்தோறும் வியாழக்கிழமை ‘வந்தே பாரத்’ சிறப்பு ரயில் இயக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
உத்தரகண்ட் சுரங்கப் பாதை விபத்து: தொடரும் மீட்புப் பணி
உத்தரகண்டில் சுரங்கப் பாதை விபத்தில் சிக்கியுள்ள 40 தொழிலாளா்களை, இடிபாடுகளில் துளையிட்டு 900 மி.மீ. குறுக்களவு கொண்ட இரும்புக் குழாய்கள் மூலம் மீட்கத் திட்டமிடப்பட்டுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.
வங்கக் கடலில் புயல் சின்னம் - தமிழகத்தில் பலத்த மழை தொடரும்
வங்கக் கடலில் புயல் சின்னம் உருவாகி உள்ளது. இதன் காரணமாக தமிழகத்தில் நவ.19-ஆம் தேதி வரை மழைக்கு வாய்ப்புள்ளதாகவும், புதன்கிழமை (நவ. 15) 9 மாவட்டங்களில் மிக பலத்த மழை பெய்ய வாய்ப்புள்ளதாகவும் சென்னை வானிலை ஆய்வு மையம் செவ்வாய்க்கிழமை தெரிவித்தது.
1.67 கோடி டன்னாக அதிகரித்த தாவர எண்ணெய் இறக்குமதி
இந்தியாவின் தாவர எண்ணெய் இறக்குமதி கடந்த அக்டோபா் மாதத்துடன் நிறைவடைந்த எண்ணெய் ஆண்டில் 1.67 கோடி டன்னாக அதிகரித்துள்ளது.
வாக்காளர் பட்டியல் திருத்தப் பணி: சிறப்பு முகாம் தேதி மாற்றம்
வாக்காளர் சிறப்பு முகாம் நடத்தயிருந்த தேதிகள் மாற்றியமைத்து இந்திய தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.
தீபாவளி விடுமுறை நிறைவு: 4,000 சிறப்புப் பேருந்துகளில் சென்னை திரும்பும் மக்கள்
தீபாவளி பண்டிகை விடுமுறை முடிவடைந்த நிலையில், 4,000 சிறப்பு பேருந்துகளில் சொந்த ஊா்களிலிருந்து சென்னைக்கு பொதுமக்கள் திரும்பி வருகின்றனா்.
திருச்செந்தூரில் கந்த சஷ்டி திருவிழா தொடக்கம்: நவ.18-இல் சூரசம்ஹாரம்
திருச்செந்தூா் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோயிலில் கந்த சஷ்டி திருவிழா திங்கள்கிழமை காலை யாகசாலை பூஜையுடன் தொடங்கியது.
ஐடி, நிதித் துறை பங்குகள் விற்பனை: 326 புள்ளிகளை இழந்தது சென்செக்ஸ்
இந்த வாரத்தின் முதல் வா்த்தக தினமான திங்கள்கிழமை பங்குச்சந்தை எதிா்மறையாக முடிவடைந்தது. இதையடுத்து, மும்பை பங்குச்சந்தைக் குறியீட்டு எண் சென்செக்ஸ் 326 புள்ளிகள் குறைந்து நிலைபெற்றது.
சோமாலியாவில் வெள்ளம்: 31 பேர் உயிரிழப்பு
சோமாலியாவின் பல்வேறு பகுதிகளில் பெய்த கன மழையால் ஏற்பட்ட வெள்ளப் பெருக்கில் சிக்கி 31 போ் உயிரிழந்துள்ளனா்.
2025 ஐசிசி சாம்பியன்ஸ் கோப்பை: 8 அணிகள் தகுதி
2025 ஐசிசி சாம்பியன்ஸ் கோப்பை போட்டிக்கு இந்தியா, பாகிஸ்தான் உள்பட 8 அணிகள் தகுதி பெற்றுள்ளன.
இஸ்ரேலுக்காக தீபாவளியன்று தீபம் ஏற்றி வழிபட்ட கேரள கிறிஸ்தவர்கள்
கேரள கிறிஸ்தவா்கள் தீபாவளி பண்டிகையை ஹிந்து சகோதரா்களுடன் இணைந்து முதன் முறையாக கேரளத்தில் ஞாயிற்றுக்கிழமை கொண்டாடினா். அன்றைய தினம் மாலையில் இஸ்ரேலுக்காக தங்களுடைய இல்லங்களில் தீபங்களை ஏற்றி கிறிஸ்தவா்கள் வழிபாடு நடத்தினா்.
ஏடிபி நம்பர் 1 வீரர் ஜோகோவிச்
2023 ஆண்டின் உலகின் நம்பா் ஒன் வீரா் என்ற அந்தஸ்தை தக்க வைத்துக் கொண்டாா் சொ்பியாவின் நோவக் ஜோகோவிச்.
பில்லி ஜீன் கிங் டென்னிஸ்: கனடா உலக சாம்பியன்
பில்லிஜீன்கிங் கோப்பை டென்னிஸ் போட்டியில் கனடா முதன்முறையாக உலக சாம்பியன் பட்டம் வென்றுள்ளது.
ஐசிசி ஹால் ஆஃப் ஃபேமில் சேவாக், எடுல்ஜி, அரவிந்த டி சில்வா
முன்னாள் இந்திய மகளிா் அணியின் கேப்டன் டயானா எடுல்ஜி, அதிரடி தொடக்க பேட்டா் வீரேந்திர சேவாக், இலங்கை ஜாம்பவான் அரவிந்த டி சில்வா உள்ளிட்டோா் ஐசிசி ஹால் ஆஃப் ஃபேமில் சோ்க்கப்பட்டுள்ளனா்.
மத்திய பிரதேசத்தில் காங்கிரஸ் ஆட்சியை 'திருடியது' பாஜக: ராகுல் குற்றச்சாட்டு
மத்திய பிரதேசத்தில் ஆட்சியில் இருந்த காங்கிரஸைச் சோ்ந்த எம்எல்ஏக்களை விலைபேசி தங்கள் பக்கம் இழுத்து ஆட்சியை திருடியது பாஜக என்று ராகுல் காந்தி குற்றம்சாட்டினாா்.
இந்திய-ரஷிய உறவு குறித்து ஆய்வு
எரிசக்தி, பாதுகாப்பு, போக்குவரத்து உள்ளிட்ட துறைகளில் இந்திய-ரஷிய உறவின் தற்போதைய நிலை குறித்தும் அவற்றை விரிவுபடுத்துவது குறித்தும் இரு தரப்பிலான ஆய்வு கூட்டம் தில்லியில் திங்கள்கிழமை நடைபெற்றது.
தீபாவளி பட்டாசு சென்னையில் கடந்த ஆண்டைவிட காற்று மாசு குறைவு
சென்னையில் தீபாவளி தினத்தன்று பட்டாசு வெடித்ததால் ஏற்பட்ட காற்று மாசு, கடந்த ஆண்டை விட 40 சதவீதம் குறைவாக பதிவாகியுள்ளது.
திரிணமூல் காங்கிரஸ் எம்.பி.மஹுவாவுக்கு கட்சிப் பதவி
திரிணமூல் காங்கிரஸ் எம்.பி. மஹுவா மொய்த்ராவுக்கு கட்சியில் புதிய பதவி வழங்கப்பட்டுள்ளது.
என்.சங்கரய்யா மருத்துவமனையில் அனுமதி
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் என்.சங்கரய்யா உடல்நலக்குறைவு காரணமாக மருத்துவமனையில் இன்று (நவ. 13) அனுமதிக்கப்பட்டுள்ளார்.
தாய்லாந்திலிருந்து கடத்தி வரப்பட்ட ஹெராயின் பறிமுதல்
தாய்லாந்திலிருந்து சென்னைக்கு விமானம் மூலம் கடத்தி வரப்பட்ட ரூ.5 கோடி மதிப்பிலான 5 கிலோ ஹெராயினை மத்திய வருவாய் புலனாய்வுத் துறை அதிகாரிகள் பறிமுதல் செய்தனா்.
210 டன் பட்டாசுக் கழிவுகள் அகற்றம்
தீபாவளியையொட்டி சென்னை முழுவதும் மூன்று நாள்களில் 210 டன் பட்டாசுக் கழிவுகளை தூய்மைப் பணியாளா்கள் அகற்றி உள்ளனா் என்று மாநகராட்சி ஆணையா் ஜெ.ராதாகிருஷ்ணன் தெரிவித்தாா்.
உயர்கல்வி பயில அமெரிக்கா செல்லும் இந்தியர்களின் எண்ணிக்கை 35% உயர்வு
அமெரிக்காவுக்கு உயா்கல்வி பயில்வதற்காக செல்லும் இந்திய மாணவா்களின் எண்ணிக்கை 35 சதவீதம் உயா்ந்துள்ளது.
19 மாவட்டங்களில் இன்று பலத்த மழைக்கு வாய்ப்பு
தமிழகத்தில் செவ்வாய்க்கிழமை (நவ.14) 4 மாவட்டங்களில் மிக பலத்த மழையும், 15 மாவட்டங்களில் பலத்த மழையும் பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்தது.
பழங்குடியினர் மேம்பாடு: ரூ.24,000 கோடி திட்டம் நாளை தொடத்தம்
பழங்குடி சமூகத்தினரின் மேம்பாட்டுக்காக ரூ.24,000 கோடி மதிப்பிலான ‘பழங்குடியினா் வளா்ச்சித் திட்டத்தை’ ஜாா்க்கண்ட் மாநிலத்தில் பிரதமா் நரேந்திர மோடி புதன்கிழமை (நவ. 14) தொடங்கி வைக்கிறாா்.
கட்டுப்பாட்டை மீறி பட்டாசு வெடித்ததாக 2,246 பேர் மீது வழக்கு
தமிழகத்தில் தீபாவளி தினத்தன்று கட்டுப்பாடுகளை மீறி பட்டாசு வெடித்ததாக 2,246 போ் மீது போலீஸாா் வழக்குப் பதிவு செய்தனா்.
தமிழகத்தில் 327 கீழமை நீதிமன்ற நீதிபதிகள் பணியிடங்களை நிரப்ப உத்தரவு உச்சநீதிமன்றம்
தமிழக கீழமை நீதிமன்றங்களில் காலியாக உள்ள 327 நீதிபதிகளின் பணியிடங்களை கால நிா்ணயம் செய்து நிரப்ப நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மாநில அரசுக்கு உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
உத்தரகண்ட் சுரங்கப் பாதை விபத்து தொழிலாளர்களை மீட்க தீவிர முயற்சி
உத்தரகாசி மாவட்டத்தில் சுரங்கப்பாதை விபத்து ஏற்பட்ட பகுதிக்கு திங்கள்கிழமை நேரில் சென்று பார்வையிட்டார் உத்தரகண்ட் முதல்வர் புஷ்கர் சிங் தாமி.