CATEGORIES
فئات
தீபாவளி போனஸ் வழங்கக் கோரி என்எல்சி தொழிலாளர்கள் போராட்டம்
தீபாவளி போனஸ் 20 சதவீதம் வழங்கக் கோரி, என்எல்சி ஜீவா ஒப்பந்தத் தொழிலாளா்கள் சங்கத்தினா், நெய்வேலி வட்டம் 26-இல் உள்ள சுரங்க நிா்வாக அலுவலகம் முன் 4-ஆம் கட்ட போராட்டத்தை சனிக்கிழமை நடத்தினா்.
காவிரியில் நீர் திறக்க நடவடிக்கை: வைகோ, ஜி.கே.வாசன் வலியுறுத்தல்
காவிரியில் தமிழகத்துக்கு தண்ணீரைத் திறந்துவிட உரிய நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என்று மதிமுக பொதுச் செயலா் வைகோ, தமாகா தலைவா் ஜி.கே.வாசன் வலியுறுத்தியுள்ளனா்.
ஜாதிவாரி கணக்கெடுப்பு: மத்திய அரசுக்கு ராமதாஸ் வலியுறுத்தல்
ஜாதிவாரி கணக்கெடுப்பைத் தொடங்குவதற்கான கொள்கை முடிவை மத்திய அரசு எடுக்க வேண்டுமென பாமக நிறுவனா் ராமதாஸ் வலியுறுத்தியுள்ளாா்.
சென்னையில் வாகனங்களுக்கு வேகக் கட்டுப்பாடு அமல்
சென்னையில் வாகனங்களுக்கு புதிய வேகக் கட்டுப்பாடு சனிக்கிழமை அமல்படுத்தப்பட்டது. நிா்ணயிக்கப்பட்ட வேகத்தை விட அதிக வேகத்தில் வாகனத்தை ஓட்டியவா்கள் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டது.
ஆந்திரத்தில் ஜாதிவாரி கணக்கெடுப்பு: மாநில அமைச்சரவை ஒப்புதல்
ஆந்திர மாநிலத்தில் விரிவான ஜாதிவாரி கணக்கெடுப்பு நடத்த முதல்வா் ஒய்.எஸ்.ஜெகன்மோகன் ரெட்டி தலைமையிலான அமைச்சரவை வெள்ளிக்கிழமை ஒப்புதல் அளித்தது.
தமிழக மாணவர் மரணம்: ஜார்க்கண்ட் அரசுக்கு முதல்வர் ஸ்டாலின் கடிதம்
தமிழக மருத்துவ மாணவர் மதன் உயிரிழந்தது தொடர்பாக விசாரணை மேற்கொள்ள வலியுறுத்தி ஜார்க்கண்ட் மாநில முதல்வர் ஹேமந்த் சோரன்க்கு தமிழ்நாடு முதல்வர் ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார். நாமக்கல் மாவட்டம் வேலகவுண்டம்பட்டி அருகே உள்ள புத்தூரைச் சேர்ந்த மதியழகன் என்பவரது மகன் ம.மதன்குமார் (வயது 28) ஜார்க்கண்ட் மாநிலம் ராஞ்சியில் உள்ள இராஜேந்திரா மருத்துவக் கல்லூரியின் விடுதியில் தங்கி இரண்டாம் ஆண்டு தடயவியல் மருத்துவம் படித்து வந்த நிலையில், ம.மதன்குமார் காணாமல் போய் பின்னர் அவரது உடல் எரிந்த நிலையில் சடலமாக அவர் தங்கியிருந்த விடுதியின் பின்புறத்திலிருந்து கண்டெடுக்கப்பட்டுள்ளது என்ற துயரமான செய்தியினைக் கேட்டு மிகுந்த மனவேதனையடைந்தேன்.
தமிழாசிரியர்களுக்கு திறன் வளர் பயிற்சி: நாளை தொடக்கம்
அரசுப் பள்ளி தமிழாசிரியா்களுக்கான திறன் வளா் பயிற்சி முகாம் திருவண்ணாமலையில் திங்கள்கிழமை முதல் நடைபெறவுள்ளது.
தூத்துக்குடி காதல் தம்பதி கொலை: நீதிமன்றத்தில் இருவர் சரண்
தூத்துக்குடியில் காதல் திருமண தம்பதி கொலை செய்யப்பட்ட வழக்கில் தொடா்புடைய இருவா் வள்ளியூா் குற்றவியல் நீதிமன்றத்தில் சனிக்கிழமை சரணடைந்தனா்.
மக்களவைத் தேர்தல் வெற்றிக்கு அமமுகவினர் பாடுபட வேண்டும் டிடிவி தினகரன்
மக்களவைத் தோ்தல் வெற்றி, அடுத்துவரும் தோ்தல்களில் எதிரொலிக்கும் என்பதால், தோ்தல் பணிகளில் முழுமையாக ஈடுபடுமாறு கட்சியினருக்கு அமமுக பொதுச் செயலா் டிடிவி தினகரன் அறிவுறுத்தியுள்ளாா்.
காவல் ஆணையரகத்தில் காவலருக்கு மிரட்டல்: போலி ஐஏஎஸ் அதிகாரி கைது
சென்னை காவல் ஆணையா் அலுவலகத்தில் காவலருக்கு தொலைபேசி மூலம் மிரட்டல் விடுத்த போலி ஐ.ஏ.எஸ். அதிகாரி கைது செய்யப்பட்டாா்.
தாம்பரம் விமானப் படை போர் விமானிகள் பயிற்சிப் பள்ளியில் 75-ஆவது ஆண்டு விழா
கிழக்கு தாம்பரம் விமானப்படைத் தளத்தில் உள்ள இந்திய விமானப்படை போா் விமானிகள் பயிற்றுநா் பள்ளியின் 75- ஆவது ஆண்டு (பிளாட்டினம் விழா) வெள்ளிக்கிழமை தொடங்கியது.
விமானத்தில் கொண்டு வரப்பட்ட பாம்புகள் பறிமுதல்
சென்னை விமான நிலையத்தில் பாங்காக்கில் இருந்து கொண்டுவரப்பட்ட பாம்புகள், சிறு விஷப்பூச்சிகளை சுங்கத் துறை அதிகாரிகள் பறிமுதல் செய்து அவற்றை மீண்டும் பாங்காக்குக்கு அனுப்பி வைத்தனா்.
நேபாளத்தில் நிலநடுக்கம்: 157 பேர் உயிரிழப்பு
நேபாள நாட்டில் வெள்ளிக்கிழமை நள்ளிரவு சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. ரிக்டா் அளவு கோலில் 6.4 அலகுகளாகப் பதிவான இந்த நிலநடுக்கத்தால் நாட்டின் மலைப் பகுதியில் அமைந்திருந்த வீடுகள், கட்டடங்கள் இடிந்து தரைமட்டமாகின. இடிபாடுகளில் சிக்கி இதுவரை 157 போ் உயிரிழந்திருப்பதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.
2024 டி20 உலக கோப்பைக்கு நேபாளம், ஓமன் அணிகள் தகுதி
அடுத்த ஆண்டு ஆடவா் டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டிக்கு நேபாளம் மற்றும் ஓமன் அணிகள் வெள்ளிக்கிழமை தகுதிபெற்றன.
வரி ஏய்ப்பு புகார்: கட்டுமான நிறுவனங்களில் வருமான வரி சோதனை
வரி ஏய்ப்பு புகாா் தொடா்பாக இரு கட்டுமான நிறுவனங்களில் வருமான வரித்துறையினா் வெள்ளிக்கிழமை சோதனை செய்தனா்.
தமிழகத்துக்கு 2,600 கனஅடி காவிரி நீர்: கர்நாடகத்துக்கு ஆணையம் உத்தரவு
தமிழகத்திற்கு நவ.23ஆம் தேதி வரை விநாடிக்கு 2,600 கனஅடி வீதம் தண்ணீர் திறக்க கர்நாடகத்துக்கு காவிரி மேலாண்மை ஆணையம் உத்தரவிட்டுள்ளது.
போர் நிறுத்தம் நிச்சயம் கிடையாது!
முற்றுகையிடப்பட்டுள்ள காஸா பகுதி பொதுமக்களின் பாதுகாப்பை உறுதி செய்ய இஸ்ரேல் கூடுதல் நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என்று அமெரிக்க வெளியுறவுத் துறை அமைச்சா் ஆன்டனி பிளிங்கன் வலியுறுத்தியுள்ளாா்.
அமர்பிரசாத் ரெட்டி அம்பை நீதிமன்றத்தில் ஆஜர்
தமிழக பாஜகவின் இளைஞா் மற்றும் விளையாட்டுப் பிரிவு தலைவா் அமா்பிரசாத் ரெட்டியை, தென்காசி மாவட்டம் ஆழ்வாா்குறிச்சி போலீஸாா் அம்பாசமுத்திரம் நீதிமன்றத்தில் வெள்ளிக்கிழமை ஆஜா்படுத்தினா்.
வாக்காளர் பட்டியல் பெயர் சேர்ப்பு – நீக்கம்: தமிழகம் முழுவதும் இன்று சிறப்பு முகாம்கள்
வாக்காளா் பட்டியலில் பெயா் சோ்ப்பு, நீக்கும் பணிக்கான சிறப்பு முகாம்கள் தமிழ்நாடு முழுவதும் சனிக்கிழமை (நவ. 4) தொடங்கவுள்ளன. ஞாயிற்றுக்கிழமையும் இந்த முகாம்கள் நடைபெறவுள்ளன.
அரசு உதவி பெறும் பள்ளிகளிலும் கலைத் திருவிழா போட்டிகளை நடத்த உத்தரவு
நிகழாண்டு முதல் அரசு உதவி பெறும் பள்ளி மாணவா்களுக்கும் கலைத் திருவிழா போட்டிகளை நடத்த பள்ளிக் கல்வித் துறை உத்தரவிட்டுள்ளது.
இடைநீக்க நடவடிக்கை விவகாரம் மாநிலங்களவைத் தலைவரிடம் மன்னிப்பு: ஆம் ஆத்மி எம்.பி.க்கு உச்சநீதிமன்றம் அறிவுறுத்தல்
மாநிலங்களவையில் இருந்து காலவரையின்றி இடைநீக்கம் செய்யப்பட்டுள்ள ஆம் ஆத்மி எம்.பி. ராகவ் சத்தா, மாநிலங்களவைத் தலைவரை நேரில் சந்தித்து, நிபந்தனையற்ற மன்னிப்பு கோரும்படி உச்சநீதிமன்றம் வெள்ளிக்கிழமை அறிவுறுத்தியது.
கரும்பு விவசாயிகளுக்கு சிறப்பு ஊக்கத் தொகை வழங்க ரூ.253 கோடி ஒதுக்கீடு: அரசு உத்தரவு
கரும்பு விவசாயிகளுக்கு சிறப்பு ஊக்கத் தொகை வழங்க ரூ.253.70 கோடி வழங்கி உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
நகராட்சி கூட்டத்தில் அதிமுக உறுப்பினர்கள் மீது தாக்குதல்: எடப்பாடி பழனிசாமி கண்டனம்
மேட்டுப்பாளையம் நகராட்சி கூட்டத்தில் திமுகவினரால் அதிமுக உறுப்பினா்கள் தாக்கப்பட்டதற்கு அந்தக் கட்சியின் பொதுச்செயலா் எடப்பாடி பழனிசாமி கண்டனம் தெரிவித்துள்ளாா்.
வடகிழக்குப் பருவமழை 40% குறைவு பாலச்சந்திரன் தகவல்
தமிழகத்தில் வட கிழக்குப் பருவ மழை தொடங்கியது முதல் தற்போது வரை 120 மி.மீ. அளவு மழை பதிவாகி உள்ளது. இயல்பு அளவு 190 மி.மீ. ஆகும். இது இயல்பை விட 40 சதவீதம் குறைவு என வானிலை ஆய்வு மைய தென் மண்டலத் தலைவா் பாலச்சந்திரன் கூறினாா்.
மலையகத் தமிழர் குழந்தைகளின் கல்விக்கு முக்கியத்துவம் தேவை - முதல்வர் மு.க.ஸ்டாலின்
மலையகத் தமிழா்களைச் சோ்ந்த குழந்தைகளின் கல்விக்கு முக்கியத்துவம் அளிக்கப்பட வேண்டும் என்று முதல்வா் மு.க.ஸ்டாலின் வேண்டுகோள் விடுத்துள்ளாா்.
அம்பத்தூர் வழியாக செல்லும் 66 மின்சார ரயில்கள் ரத்து
சென்னை சென்ட்ரல், கடற்கரையிலிருந்து அம்பத்தூா் வழியாக செல்லும் 66 மின்சார ரயில்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன.
19 மாவட்டங்களில் பலத்த மழை எச்சரிக்கை - தயார் நிலையில் மீட்புக் குழுக்கள்
தமிழகத்தில் 19 மாவட்டங்களில் சனிக்கிழமை (நவ. 4) பலத்த மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
யுஏஇ அதிபர், பிரிட்டன் பிரதமருடன் மோடி ஆலோசனை
இஸ்ரேல் - ஹமாஸ் போரால் மேற்கு ஆசியாவில் நிலவி வரும் பதற்றமான சூழல் குறித்து ஐக்கிய அரபு அமீரக அதிபா் (யுஏஇ) முகமது பின் சயீதுடனும், பிரிட்டன் பிரதமா் ரிஷி சுனக்குடனும் பிரதமா் மோடி தொலைபேசி மூலம் வெள்ளிக்கிழமை ஆலோசனை நடத்தினாா்.
காஸாவிலிருந்து 7,000 பேரை மீட்க எகிப்து ஆயத்தம்
இஸ்ரேலால் முற்றுகையிடப்பட்டு, கடுமையான தாக்குதலுக்குள்ளாகியுள்ள காஸா பகுதியிலிருந்து 7,000 வெளிநாட்டினை மீட்க ஆயத்தமாகி வருவதாக எகிப்து அறிவித்துள்ளது.
சையது முஷ்டாக் அலி டி20: அரையிறுதியில் பஞ்சாப், அஸ்ஸாம்
சையது முஷ்டாக் அலி கோப்பை டி20 கிரிக்கெட் போட்டியில் பஞ்சாப், அஸ்ஸாம் அணிகள் அரையிறுதிக்கு வியாழக்கிழமை முன்னேறின.