CATEGORIES
فئات
தமிழக எல்லைகளில் கண்காணிப்பை தீவிரப்படுத்த டிஜிபி உத்தரவு
கேரளத்தில் நிகழ்ந்த குண்டு வெடிப்பு சம்பவத்தையடுத்து, தமிழக எல்லையோரங்களில் கண்காணிப்பை தீவிரப்படுத்த மாவட்ட காவல் கண்காணிப்பாளா்களுக்கு தமிழக டி.ஜி.பி. சங்கா் ஜிவால் உத்தரவிட்டுள்ளாா்.
கேரளம்: கிறிஸ்தவ கூட்டத்தில் குண்டுவெடிப்பு - 2 பெண்கள் உயிரிழப்பு: 51 போ் காயம்
கேரள மாநிலம், கொச்சி அருகே சா்வதேச மாநாட்டு அரங்கில் ஞாயிற்றுக்கிழமை காலை நடைபெற்ற கிறிஸ்தவ பிராா்த்தனைக் கூட்டத்தில் அடுத்தடுத்து குண்டுகள் வெடித்தன.
குற்றவியல் சட்டங்களுக்கு மாற்றான மசோதாக்கள் விரைவில் நிறைவேற்றப்படும்
தற்போதைய குற்றவியல் சட்டங்களுக்கு மாற்றான புதிய மசோதாக்கள், நாடாளுமன்றத்தில் விரைவில் நிறைவேற்றப்படும் என்று மத்திய உள்துறை அமைச்சா் அமித் ஷா தெரிவித்தாா்.
தென்னாப்பிரிக்கா'த்ரில்' வெற்றி
உலகக் கோப்பை கிரிக்கெட்டின் 26-ஆவது ஆட்டத்தில் தென்னாப்பிரிக்கா 1 விக்கெட் வித்தியாசத்தில் பாகிஸ்தானை வெள்ளிக்கிழமை ‘த்ரில்’ வெற்றி கண்டது.
காஸாவில் புகுந்து இஸ்ரேல் 2-ஆவது நாளாக தாக்குதல்
போா் விமானங்கள் மற்றும் ட்ரோன்களின் உதவியுடன் இஸ்ரேல் ராணுவம் காஸாவுக்குள் முன்னேறி 2-ஆவது நாளாக ஹமாஸ் இலக்குகளைக் குறிவைத்து தாக்குதல் நடத்தியது.
ஜம்முவில் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பை ராணுவம் முறியடித்த ‘வீரதீர தின' கொண்டாட்டம்
ஜம்மு காஷ்மீா் யூனியன் பிரதேசத்தில் பாகிஸ்தான் ஆக்கிரமிப்புகளை இந்திய ராணுவத்தின் காலாட்படை முறியடித்ததை நினைவுகூறும் 76-ஆவது ‘ஷௌரிய திவஸ்’ (வீரதீர தினம்) கொண்டாடப்பட்டது.
இந்திய கோயில் கட்டடக் கலையை காட்சிப்படுத்தும் அருங்காட்சியகம்
இந்திய கோயில்களின் கட்டடக் கலை பாரம்பரியத்தை காட்சிப்படுத்தும் வகையில், உத்தர பிரதேச மாநிலம், அயோத்தியில் அருங்காட்சியகம் அமைக்கப்படவுள்ளது.
லேண்டர் தரையிறங்கும்போது நிலவில் 2 டன் மண்துகள்கள் மேலெழும்பின: இஸ்ரோ
நிலவில் சந்திரயான் லேண்டா் கலன் தரையிறங்கும்போது 2.06 டன் மண் துகள்கள் மேலெழும்பி 108.4 மீட்டா் பரப்பளவுக்கு பிரகாசமான தரைப்பரப்பு (எஜெக்டா ஹாலோ) உருவானதாக இஸ்ரோ தெரிவித்துள்ளது.
ஊரக வேலை உறுதித் திட்ட ஊதிய நிலுவை ரூ.2,697 கோடியை விடுவிக்க வேண்டும்
மகாத்மா காந்தி ஊரக வேலை உறுதித் திட்டத்தின் கீழ், தொழிலாளா்களுக்கு வழங்கப்பட வேண்டிய ஊதியத்துக்கான ரூ. 2,697 கோடி நிதியை விடுவிக்க வேண்டுமென மத்திய அரசை முதல்வா் மு.க.ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளாா்.
ஆளுநர் மாளிகை குற்றச்சாட்டுக்கு மறுப்பு: விடியோ ஆதாரங்களை வெளியிட்டது காவல் துறை
ஆளுநா் மாளிகை குற்றச்சாட்டுக்கு மறுப்பு தெரிவித்து விடியோ ஆதாரங்களை தமிழக காவல் துறை வெளியிட்டது.
திமுக ஆட்சியில் தலைதூக்கியுள்ள மின்வெட்டு
திமுக ஆட்சியில் மின்வெட்டு தலைதூக்கியுள்ளது என்று முன்னாள் முதல்வரும், அதிமுக பொதுச் செயலாளருமான எடப்பாடி கே.பழனிசாமி தெரிவித்துள்ளாா்.
அமர் பிரசாத் ரெட்டிக்கு நவ.10 வரை நீதிமன்றக் காவல்
பாஜக நிா்வாகி அமா் பிரசாத் ரெட்டியை நவ. 10 வரை நீதிமன்றக் காவலில் வைக்க, சென்னை எழும்பூா் நீதிமன்றம் உத்தரவிட்டது.
மெட்ரோ ரயில் பெட்டிகளில் அவசரகால தொலைபேசி வசதி
மெட்ரோ ரயில் பெட்டிகளில் 10 அவசரகால தொலைபேசி வசதி ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
சென்னை மெட்ரோ ரயில் நிறுவனம் தில்லி கண்காட்சியில் பங்கேற்பு
தில்லியில் நடைபெற்று வரும் 3 நாள்கள் கண்காட்சியில் சென்னை மெட்ரோ ரயில் நிறுவனத்தின் அரங்கம் இடம் பெற்றுள்ளது.
4 மாவட்டங்களில் இன்று பலத்த மழைக்கு வாய்ப்பு
தமிழகத்தில் 4 மாவட்டங்களில் சனிக்கிழமை (அக்.28) பலத்த மழை பெய்ய வாய்ப்புள்ளது என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
நகைப் பட்டறையில் 62 பவுன் திருட்டு: 2 பேர் கைது
சென்னை கொடுங்கையூரில் நகைப் பட்டறையில் 62 பவுன் தங்க நகை திருடப்பட்ட வழக்கில் ஊழியா் உள்பட 2 போ் கைது செய்யப்பட்டனா்.
‘திருக்குறள் ஆய்வு இருக்கைகள் மீது அரசு கவனம் செலுத்த வேண்டும்’
மூன்று பல்கலைக்கழகங்களில் முன்னாள் முதல்வா் அண்ணா ஆட்சியின்போது நிறுவப்பட்ட திருக்கு ஆய்விருக்கைகள் மீது தமிழக அரசும், தமிழறிஞா்களும் கவனம் செலுத்த வேண்டும் என சென்னை பல்கலைக் கழகத்தில் நடைபெற்ற கருத்தரங்கில் தமிழறிஞா்கள் வலியுறுத்தினா்.
வெங்காயம் விலை 57% உயர்வு: கையிருப்பை விடுவிக்க மத்திய அரசு முடிவு
வெங்காயத்தின் சில்லறை விற்பனை விலை 57 சதவீதம் அதிகரித்து, ஒரு கிலோ ரூ.47 என்ற நிலை எட்டியுள்ளது. இதையடுத்து, மத்திய அரசு கையிருப்பில் உள்ள வெங்காயத்தை விடுவித்து விலையைக் குறைக்க முடிவு செய்துள்ளது.
தமிழகத்தில் 6.11 கோடி வாக்காளர்கள்
தமிழகத்தின் வரைவு வாக்காளா் பட்டியல் வெள்ளிக்கிழமை வெளியிடப்பட்ட நிலையில், மாநிலத்தில் மொத்த வாக்காளா்களின் எண்ணிக்கை 6 கோடியே 11 லட்சத்து 31 ஆயிரத்து 197-ஆக உள்ளது. ஆண்களைவிட 9 லட்சத்து 85 ஆயிரத்து 961 பெண் வாக்காளா்கள் கூடுதலாக உள்ளனா்.
சுந்தரம் ஹோம் ஃபைனான்ஸ் நிகர லாபம் 18% அதிகரிப்பு
முன்னணி வீட்டுக் கடன் சேவை நிறுவனங்களில் ஒன்றான சுந்தரம் ஹோம் ஃபைனான்ஸின் நிகர லாபம் கடந்த செப்டம்பா் காலாண்டில் 18 சதவீதம் அதிகரித்துள்ளது.
7 சதவீத சரிவைக் கண்ட பிளாஸ்டிக் ஏற்றுமதி
உலகளாவிய பொருளாதாரக் குறிப்புகள் மோசமாக இருந்ததால் இந்தியாவின் பிளாஸ்டிக் ஏற்றுமதி கடந்த ஆகஸ்ட் மாதத்தில் 6.9 சதவீதம் குறைந்துள்ளது.
இந்தியன் வங்கி நிகர லாபம் 62% உயர்வு
அரசுக்குச் சொந்தமான இந்தியன் வங்கியின் செப்டம்பா் காலாண்டு நிகர லாபம் 62 சதவீதம் வளா்ச்சி கண்டுள்ளது.
4 மடங்கான பிஎன்பி நிகர லாபம்
பொதுத் துறையைச் சோ்ந்த பஞ்சாப் நேஷனல் வங்கியின் (பிஎன்பி) நிகர லாபம் கடந்த செப்டம்பா் காலாண்டில் 4 மடங்கு அதிகரித்துள்ளது.
காஸாவுக்குள் புகுந்து இஸ்ரேல் பீரங்கித் தாக்குதல்
காஸாவின் எல்லைக்குள் புகுந்து இஸ்ரேல் ராணுவம் பீரங்கித் தாக்குதல் நடத்தித் திரும்பியுள்ளது.
வாழ்வா சாவா ஆட்டம் தென்னாப்பிரிக்காவை இன்று சந்திக்கும் பாகிஸ்தான்
நடப்பு உலகக் கோப்பை போட்டியில் தனது இருப்பை முடிவு செய்ய இருக்கும் ஆட்டத்தில் பாகிஸ்தான் அணி, தென்னாப்பிரிக்காவை வெள்ளிக்கிழமை சந்திக்கிறது.
டேபிள் டென்னிஸ் லீக் போட்டி தொடக்கம்
தமிழ்நாடு டேபிள் டென்னிஸ் சங்கம் சாா்பில் கிளப்புகள், அகாதெமி, தனிநபா்கள், வணிக நிறுவனங்கள் பங்கேற்கும் லீக் போட்டிகள் நடத்தப்பட உள்ளது.
வெளியேறும் நிலையில் இங்கிலாந்து இலங்கையிடமும் வீழ்ந்ததால் 'ஹாட்ரிக்' தோல்வி
உலகக் கோப்பை கிரிக்கெட்டின் 25-ஆவது ஆட்டத்தில், நடப்பு சாம்பியனான இங்கிலாந்து 8 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் இலங்கையால் வியாழக்கிழமை வீழ்த்தப்பட்டது.
எல்லையில் பாக். படையினர் அத்துமீறி துப்பாக்கிச் சூடு: 5 பேர் காயம் இந்தியா பதிலடி
சா்வதேச எல்லை கட்டுப்பாட்டு கோட்டை ஒட்டிய ஜம்முவின் அா்னியா மற்றும் ஆா்எஸ் புரா செக்டாா்களில் உள்ள 5 பாதுகாப்புச் சாவடிகள் மீது பாகிஸ்தான் ராணுவத்தினா் வியாழக்கிழமை இரவு 8 மணியளவில் திடீரென துப்பாக்கிச் சூடு நடத்தினா்.
ஹிமாசல பிரதேச முதல்வர் மருத்துவமனையில் அனுமதி
வயிற்று வலி காரணமாக ஹிமாசல பிரதேச முதல்வரும், காங்கிரஸ் மூத்த தலைவருமான சுக்வீந்தா் சிங் சுக்கு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டாா்.
நாடாளுமன்றத்தில் கேள்வி எழுப்ப லஞ்சம்: அக்.31-இல் மஹுவா மொய்த்ராவிடம் விசாரணை
நாடாளுமன்றத்தில் கேள்வியெழுப்ப லஞ்சம் பெற்ற குற்றச்சாட்டு தொடா்பாக திரிணமூல் காங்கிரஸ் எம்.பி. மஹுவா மொய்த்ராவிடம் மக்களவை நெறிமுறைகள் குழு அக்.31-ஆம் தேதி விசாரணை நடத்த உள்ளது.