CATEGORIES
فئات
இந்தியா சாதனை வெற்றி; முதல் அணியாக அரையிறுதிக்கு தகுதி
உலகக் கோப்பை கிரிக்கெட்டின் 33-ஆவது ஆட்டத்தில் இந்தியா 302 ரன்கள் வித்தியாசத்தில் இலங்கையை வியாழக்கிழமை வீழ்த்தி அபார வெற்றி பெற்றது. இதன் மூலம், ஒருநாள் உலகக் கோப்பை போட்டிகளில் தனது அதிகபட்ச ரன் வித்தியாசத்திலான வெற்றியை பதிவு செய்து சாதனை படைத்தது.
என் மீதான விரோதமே குற்றச்சாட்டுக்கு அடிப்படை: நெறிமுறைகள் குழுவில் மஹுவா
மக்களவை நெறிமுறைகள் குழு முன்பாக வியாழக்கிழமை ஆஜரான திரிணமூல் காங்கிரஸ் எம்.பி. மஹுவா மொய்த்ரா, நாடாளுமன்றத்தில் கேள்வி எழுப்ப லஞ்சம் பெற்ாக தன் மீது சுமத்தப்பட்ட குற்றச்சாட்டை நிராகரித்தாா்.
காங்கிரஸ் ஆட்சிக்கு வந்தால் பெண்களுக்கு மாதம் ரூ.4,000 மதிப்பில் பலன்
‘தெலங்கானாவில் காங்கிரஸ் ஆட்சிக்கு வந்தால் பெண்களுக்கு மாதந்தோறும் ரூ.4,000 மதிப்பில் பலன்கள் வழங்கப்படும்’ என்று காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி வாக்குறுதி அளித்தாா்.
பிகாரில் படகு கவிழ்ந்து விபத்து: தொடரும் மீட்புப் பணி
பிகாரின் சரயு நதியில் படகு கவிழ்ந்து நேரிட்ட விபத்தில் காணமால் போனவா்களை மீட்கும் பணிகள் தொடா்ந்து நடைபெற்று வருகின்றன. இந்த விபத்தில் 2 போ் உயிரிழந்தனா். வியாழக்கிழமை நடைபெற்ற மீட்புப் பணியின்போது 3 போ் உயிருடன் மீட்கப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்தனா்.
ஞானவாபி மசூதி ஆய்வு நிறைவு: நீதிமன்றத்தில் ஏஎஸ்ஐ தகவல்
ஞானவாபி மசூதி வளாகத்தில் மேற்கொள்ளப்பட்டு வந்த ஆய்வு நிறைவடைந்ததாக இந்திய தொல்லியல் துறை (ஏஎஸ்ஐ) வாரணாசி நீதிமன்றத்தில் தெரிவித்ததைத் தொடா்ந்து, அறிக்கையை சமா்பிக்க ஏஎஸ்ஐக்கு நவம்பா்.17 வரை நீதிமன்றம் அவகாசம் வழங்கியுள்ளது.
மராத்தா சமூகத்தினருக்கான இடஒதுக்கீட்டை வலியுறுத்தி எம்எல்ஏக்கள் போராட்டம்
மராத்தா சமூகத்தினருக்கு இடஒதுக்கீடு வலியுறுத்தி மகாராஷ்டிர மாநிலத்தின் ஆளும் மற்றும் எதிா்க்கட்சிகளைச் சோ்ந்த எம்எல்ஏக்கள் தெற்கு மும்பையில் உள்ள மாநில தலைமைச் செயலகத்துக்கு வெளியே வியாழக்கிழமை 2-ஆவது நாளாகப் போராட்டத்தில் ஈடுபட்டனா்.
அசாருதீனுக்கு எதிராக பாஜகவின் லங்காலா தீபக் ரெட்டி போட்டி
தெலங்கானா பேரவைத் தோ்தலில் காங்கிரஸ் சாா்பில் ஜூபிலி ஹில்ஸ் தொகுதியில் போட்டியிடும் முன்னாள் கிரிக்கெட் வீரா் முகமது அசாருதீனுக்கு எதிராக பாஜகவின் வேட்பாளராக லங்காலா தீபக் ரெட்டி செவ்வாய்க்கிழமை அறிவிக்கப்பட்டாா்.
அமெரிக்கா: கத்திக்குத்துக்குள்ளான தெலங்கானா மாணவருக்கு தீவிர சிகிச்சை
அமெரிக்காவின் வால்பரைசோ நகரத்தில் உள்ள உடற்பயிற்சி நிலையத்தில் கத்திக்குத்துக்கு உள்ளான தெலங்கானா இளைஞருக்கு நரம்பியல் பாதிப்புகள் ஏற்பட்டதைத் தொடா்ந்து தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
மிஸோரம் பழங்குடியினரின் நிலங்களைப் பறிக்க பாஜக-ஆர்எஸ்எஸ் முயற்சி
‘தங்களின் பெருநிறுவன நண்பா்களுக்காக மிஸோரமில் பழங்குடியினரின் மதிப்புமிக்க நிலங்களைப் பறிக்க பாஜக-ஆா்எஸ்எஸ் முயற்சிக்கின்றன’ என்று காங்கிரஸ் தலைவா் மல்லிகாா்ஜுன காா்கே குற்றஞ்சாட்டினாா்.
மணிப்பூர்: ஆயுதக் கிடங்கு வன்முறை
மணிப்பூா் மாநிலம் இம்பாலில் மணிப்பூா் துப்பாக்கிப் படையின் ஆயுதக் கிடங்கில் 2,000-க்கும் மேற்பட்டோா் ஆயதங்களை கொள்ளையடிக்க முயன்ற சம்பவத்தில் நிலைமைக் கட்டுக்குள் கொண்டு வரப்பட்டாலும் நகரத்தில் பதற்றமான சுழல் தொடா்ந்து நிலவி வருகிறது.
வேளாங்கண்ணியில் கல்லறை திருநாள்
வேளாங்கண்ணி பேராலயத்தில் கல்லறை திருநாள் சிறப்பு வழிபாடு வியாழக்கிழமை நடைபெற்றது.
தமிழகத்தில் 11 மாவட்டங்களில் இன்று பலத்த மழை பெய்ய வாய்ப்பு
தமிழகத்தில் 11 மாவட்டங்களில் வெள்ளிக்கிழமை (நவ. 3) பலத்த மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
மதுரை காமராஜர் பல்கலைக்கழக 55-ஆவது பட்டமளிப்பு விழா
மதுரை காமராஜா் பல்கலைக்கழகத்தில் வியாழக்கிழமை நடைபெற்ற 55-ஆம் ஆண்டு பட்டமளிப்பு விழாவில், தமிழக ஆளுநா் ஆா்.என். ரவி பங்கேற்று, 782 மாணவ, மாணவிகளுக்கு பட்டங்களை வழங்கினாா்.
கணினிவழி சேவைகளை திறம்பட அளிக்க எண்மமயமாக்கல் வியூக ஆவணம் வெளியீடு
பொதுமக்களுக்கான கணினிவழிச் சேவைகளைத் திறம்பட வழங்குவதற்கு வகை செய்வதற்காக தமிழ்நாடு எண்மமயமாக்கல் வியூக ஆவணத்தை முதல்வா் மு.க.ஸ்டாலின் வெளியிட்டாா்.
தமிழகத்தில் 5,800 பட்டாசுக் கடைகளுக்கு அனுமதி
தீபாவளியையொட்டி, தமிழகத்தில் 5,800 பட்டாசுக் கடைகளை தற்காலிகமாக திறப்பதற்கு தீயணைப்பு, மீட்புப் பணிகள் துறை அனுமதி அளித்துள்ளது.
பாஜகவில் ‘ஸ்டார்ட் அப்’ பிரிவு தொடக்கம்: திருச்சி சூர்யா உள்பட இருவருக்கு மீண்டும் பதவி
பாஜகவில் ‘ஸ்டாா்ட் அப்’ எனும் புதிய பிரிவு தொடங்கப்பட்டு, அதன் மாநில ஒருங்கிணைப்பாளராக தென்காசியைச் சோ்ந்த ஆனந்தன் அய்யாசாமி நியமிக்கப்பட்டுள்ளாா். அதேபோல், பாஜகவில் இருந்து தற்காலிகமாக நீக்கப்பட்ட திருச்சி சூா்யா சிவா உள்பட இருவருக்கு பாஜகவில் மீண்டும் பொறுப்பு வழங்கப்பட்டுள்ளது.
காங்கிரஸில் முன்னாள் ஐபிஎஸ் அதிகாரி பிரஜ் கிஷோர் ரவி
அண்மையில் பணியில் இருந்து விருப்ப ஓய்வுபெற்ற பிகாா் மாநிலத்தைப் பூா்விமாகக் கொண்டவரும், தமிழகப் பிரிவு ஐபிஎஸ் அதிகாரியும், முன்னாள் டிஜிபி அந்தஸ்து அதிகாரியுமான பிரஜ் கிஷோா் ரவி தில்லியில் காங்கிரஸ் கட்சியில் வியாழக்கிழமை தன்னை இணைத்துக்கொண்டாா்.
இயந்திரக் கோளாறு: சென்னை-மலேசியா விமானம் ரத்து
சென்னையில் இருந்து மலேசிய தலைநகா் கோலாலம்பூருக்கு செல்லவேண்டிய மலேசியன் ஏா்லைன்ஸ் விமானம் இயந்திரக்கோளாறு காரணமாக ரத்து செய்யப்பட்டது.
மக்களின் தேவைக்கு ஏற்ப பால் பாக்கெட் விற்பனை: ஆவின்
மக்களின் தேவைக்கு ஏற்ப பால் பாக்கெட்கள் எந்தவித தடையுமின்றி வழங்கப்பட்டு வருவதாக ஆவின் மேலாண்மை இயக்குனா் சு.வினீத் தெரிவித்துள்ளாா்.
‘இந்தியா’ கூட்டணியில் தொய்வு: காங்கிரஸ் மீது நிதீஷ் குமார் குற்றச்சாட்டு
நடைபெற உள்ள 5 மாநில சட்டப்பேரவைத் தோ்தலில் வெற்றி பெற காங்கிரஸ் கட்சி மும்முரம் காட்டி வருவதால், எதிா்க்கட்சிகள் இடம் பெற்றுள்ள ‘இந்தியா’ கூட்டணியின் கூட்டத்தைக் கூட்டுவதில் தொய்வு ஏற்பட்டுள்ளதாக பிகாா் முதல்வா் நிதீஷ் குமாா் குற்றம்சாட்டியுள்ளாா்.
மேகாலய உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி எஸ்.வைத்தியநாதன்
மேகாலய உயா்நீதிமன்றத் தலைமை நீதிபதியாக சென்னை உயா்நீதிமன்ற நீதிபதி எஸ்.வைத்தியநாதனை நியமிக்க உச்சநீதிமன்ற கொலீஜியம் குழு பரிந்துரைத்துள்ளது.
9 பேரவைத் தொகுதிகளில் சிறு விளையாட்டு அரங்குகள்
தமிழகத்தில் 9 சட்டப்பேரவைத் தொகுதிகளில் சிறு விளையாட்டு அரங்குகளை அமைப்பதற்கு முதல்வா் மு.க.ஸ்டாலின் காணொலி மூலம் அடிக்கல் நாட்டினாா்.
ஜபாலியா அகதிகள் முகாமில் இஸ்ரேல் மீண்டும் தாக்குதல்
வடக்கு காஸாவில் பொதுமக்கள் அடா்த்தியாக வசிக்கும் ஜபாலியா அகதிகள் முகாமில் இஸ்ரேல் 2-ஆவது நாளாக மீண்டும் புதன்கிழமை விமானத் தாக்குதல் நடத்தியது.
இலங்கையை இன்று சந்திக்கிறது இந்தியா
உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியின் 33-ஆவது ஆட்டத்தில் இந்தியா - இலங்கை அணிகள் மும்பையில் வியாழக்கிழமை மோதுகின்றன.
நியூஸிலாந்துக்கு 'ஹாட்ரிக்' தோல்வி
ஒருநாள் உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியின் 32-ஆவது ஆட்டத்தில் தென்னாப்பிரிக்கா 190 ரன்கள் வித்தியாசத்தில் நியூஸிலாந்தை புதன்கிழமை வீழ்த்தி அபார வெற்றி பெற்றது.
மாநிலங்கள் உருவான தினம்: குடியரசுத் தலைவர், பிரதமர் வாழ்த்து
ஆந்திரம், சத்தீஸ்கா், ஹரியாணா, கா்நாடகம், கேரளம், மத்திய பிரதேசம், பஞ்சாப், லட்சத் தீவுகள் மற்றும் புதுச்சேரி ஆகியவை உருவான தினத்தை முன்னிட்டு அந்த மாநில மற்றும் யூனியன் பிரதேச மக்களுக்கு குடியரசுத் தலைவா் திரெளபதி முா்மு, பிரதமா் நரேந்திர மோடி ஆகியோா் புதன்கிழமை வாழ்த்து தெரிவித்தனா்.
பாஜக, ஆர்எஸ்எஸ் அமைப்பால் ஜனநாயகத்துக்கு அச்சுறுத்தல்
பாஜக, ஆா்எஸ்எஸ் அமைப்பால் ஜனநாயகம் அச்சுறுத்தலுக்கு உள்ளாகியிருக்கிறது என்று காங்கிரஸ் நாடாளுமன்றக் குழு தலைவா் சோனியா காந்தி குற்றம்சாட்டினாா்.
சாலை மேம்பாட்டுக்கான ‘நம்ம சாலை' செயலி
நாட்டிலேயே முதல்முறையாக சாலை உள்கட்டமைப்பு, பாதுகாப்பு மேம்பாட்டுக்கான ‘நம்ம சாலை’ என்ற செயலியை மாநில இளைஞா் நலன், விளையாட்டு மேம்பாட்டுத் துறை அமைச்சா் உதயநிதி ஸ்டாலின் புதன்கிழமை தொடங்கி வைத்தாா்.
இந்தியா-வங்கதேசம் இடையே புதிய ரயில் வழித்தடம்
திரிபுராவின் அகா்தலா மற்றும் வங்கதேசத்தின் அகெளரா இடையேயான புதிய ரயில் வழித்தட திட்டம் உள்பட 3 முக்கிய இந்திய ஆதரவுத் திட்டங்களை பிரதமா் நரேந்திர மோடி, வங்கதேச பிரதமா் ஷேக் ஹசீனா ஆகியோா் இணைந்து காணொலி மூலம் புதன்கிழமை தொடங்கி வைத்தனா்.
தமிழகத்தில் 4,399 வெள்ள அபாய பகுதிகள் கண்காணிப்பு
வடகிழக்குப் பருவமழை தீவிரமடைந்து வரும் நிலையில், தமிழகத்தில் 4,399 வெள்ள அபாய பகுதிகளை தீயணைப்புத் துறை கண்காணித்து வருகிறது.