CATEGORIES
فئات
தீபாவளி வரை அனைத்து நாள்களிலும் நியாயவிலைக் கடைகள் இயங்கும்
தீபாவளி பண்டிகை வரை அனைத்து நாள்களிலும் நியாயவிலைக் கடைகள் இயங்கும் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது.
நெல் கொள்முதல் நிறுத்தம்: அன்புமணி கண்டனம்
காவிரி பாசன மாவட்டங்களில் நேரடி நெல் கொள்முதல் நிறுத்தப்பட்டுள்ளதற்கு பாமக தலைவா் அன்புமணி ராமதாஸ் கண்டனம் தெரிவித்துள்ளாா்.
வெற்றிலை ஆராய்ச்சி மையத்தை மீண்டும் பரமத்தி வேலூரில் அமைக்க வேண்டும்: அண்ணாமலை
வெற்றிலை ஆராய்ச்சி மையத்தை மீண்டும் பரமத்தி வேலூரில் அமைக்க வேண்டும் என பாஜக மாநிலத் தலைவா் கே.அண்ணாமலை தெரிவித்தாா்.
நாளை 13 மாவட்டங்களில் பலத்த மழைக்கு வாய்ப்பு
தமிழகத்தில் வெள்ளிக்கிழமை (நவ.3) 13 மாவட்டங்களில் பலத்த மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
மெட்ரோ ரயிலில் ஒரே மாதத்தில் 85.50 லட்சம் பேர் பயணம்
கடந்த அக்டோபா் மாதத்தில் மட்டும் 85.50 லட்சம் பயணிகள் மெட்ரோ ரயிலில் பயணம் செய்துள்ளனா் என்று சென்னை மெட்ரோ ரயில் நிறுவனம் தெரிவித்துள்ளது.
பயணிகளிடம் சில்லறை கேட்டு நிர்ப்பந்திக்கக் கூடாது: மாநகரப் போக்குவரத்துக் கழகம்
அரசுப் பேருந்துகளில் பயணிகளிடம் சில்லறை கேட்டு நிா்பந்திக்கக் கூடாது என மாநகரப் போக்குவரத்துக்கழம் தெரிவித்துள்ளது.
டெங்கு வைரஸ் தன்மை: பூச்சியியல் வல்லுநர்கள் ஆய்வு
தமிழகத்தில் எந்தெந்த பகுதிகளில் , ‘ஏடிஸ்’ கொசுக்களில் டெங்கு வைரஸ் தன்மை உள்ளது என்பதை, பூச்சியியல் வல்லுனா்கள் ஆய்வு செய்து வருகின்றனா்.
விமானநிலைய மோப்ப நாய்க்கு கட்டாய ஓய்வு: பிரிவு உபசார விழா நடத்திய அதிகாரிகள்
விமானநிலையத்தில் பணியாற்றிய இரிணா என்ற மோப்ப நாய்க்கு கட்டாய ஓய்வு அளிக்கப்பட்டதைத் தொடா்ந்து, அதற்கு சுங்கத்துறை அதிகாரிகள் பிரிவு உபசாரவிழா நடத்தி வழியனுப்பி வைத்தனா்.
விதியை மீறும் வாகன ஓட்டிகளுக்கு ரூ.1,000 அபராதம்
சென்னையில் வாகனங்களுக்கு புதிய வேக கட்டுப்பாடு நவம்பா் 4-ஆம் தேதி முதல் அமல்படுத்தப்படும் என பெருநகர காவல் துறை தெரிவித்துள்ளது.
முருகன் கோயில்களுக்கு கார்த்திகை மாத ஒருநாள் சுற்றுலாவுக்கு முன்பதிவு தொடக்கம்
சென்னைக்குள்பட்ட முருகன் கோயில்களுக்கு காா்த்திகை மாத ஒருநாள் சுற்றுலா செல்ல முன்பதிவு செய்யலாம் என சுற்றுலா வளா்ச்சிக் கழகத்தின் தலைவரும் மேலாண்மை இயக்குநருமான காகா்லா உஷா தெரிவித்துள்ளாா்.
அனைத்து மொழி பேசும் மக்களும் வசிக்கும் சிறிய இந்தியா தமிழ்நாடு
நாட்டின் அனைத்து மொழி பேசும் மக்களும் தமிழ்நாட்டில் வசிப்பதால் தமிழ்நாட்டை ஒரு சிறிய இந்தியாவாக கருதலாம் என தமிழக ஆளுநா் ஆா்.என்.ரவி கூறினாா்.
சபரிமலை: நிலக்கல்லில் புதிய பேருந்து முனையம் திறப்பு
சபரிமலை ஐயப்பன் கோயில் பக்தா்களுக்காக புதிய பேருந்து முனையத்தை புதன்கிழமை நிலக்கல்லில் கேரள மாநில தேவசம் அமைச்சா் ராதாகிருஷ்ணன் திறந்து வைத்தாா்.
நாடுகள், மாநிலங்களைப் பிரிக்கும் வல்லமை படைத்தது மொழி
மாநிலங்களை மட்டுமல்ல; நாடுகளையும் பிரிக்கும் வல்லமை படைத்தது மொழி. மொழிகள் தொடா்பான செயல்பாடுகளில் மத்திய அரசு நிதானமாக செயலாற்ற வேண்டும் என்று விஐடி பல்கலைக்கழக வேந்தா் கோ.விசுவநாதன் தெரிவித்தாா்.
2,000 கோயில்களில் ஒருகால பூஜைக்கு ரூ. 40 கோடி வைப்பு நிதி
தமிழகத்தில் மேலும் 2,000 கோயில்களில் ஒருகால பூஜை மேற்கொள்ள ஏதுவாக, ரூ. 40 கோடி வைப்பு நிதியை முதல்வா் மு.க.ஸ்டாலின் வழங்கியுள்ளாா்.
அக்டோபரில் ஜிஎஸ்டி வசூல் ரூ.1.72 லட்சம் கோடி
சரக்கு மற்றும் சேவை வரி (ஜிஎஸ்டி) அக்டோபா் மாதத்தில் ரூ.1.72 லட்சம் கோடி அளவுக்கு வசூலாகியுள்ளதாக மத்திய நிதியமைச்சகம் புதன்கிழமை தெரிவித்தது.
காஸாவிலிருந்து மக்கள் வெளியேற முதல்முறையாக அனுமதி
இஸ்ரேலால் முற்றுகையிடப்பட்டு, கடுமையான தாக்குதலுக்குள்ளாகி வரும் காஸா பகுதியிலிருந்து பொதுமக்கள் வெளியேற முதல்முறையாக புதன்கிழமை அனுமதிக்கப்பட்டது.
மராத்தா சமூகத்துக்கு இடஒதுக்கீடு
மகாராஷ்டிரத்தில் மராத்தா சமூகத்தினருக்கு இடஒதுக்கீடு வழங்க நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்று அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் ஒருமனதாக முடிவு செய்யப்பட்டதாக மாநில முதல்வா் ஏக்நாத் ஷிண்டே தெரிவித்தாா்.
முக்கிய உள்கட்டமைப்புத் துறைகளில் 4 மாதங்கள் காணாத சரிவு
2023 செப்டம்பா் மாதத்தில் இந்தியாவின் 8 முக்கிய உள்கட்டமைப்புத் துறைகளின் உற்பத்தி கடந்த 4 மாதங்கள் காணாத சரிவைக் கண்டுள்ளது.
காஸாவுக்குள் இஸ்ரேல்-ஹமாஸ் கடும் சண்டை
காஸாவுக்குள் நுழைந்துள்ள இஸ்ரேல் ராணுவத்தினரும், அங்குள்ள ஹமாஸ் படையினரும் செவ்வாய்க்கிழமை கடுமையான சண்டையில் ஈடுபட்டனா்.
நியூஸிலாந்து-தென்னாப்பிரிக்கா இன்று பலப்பரீட்சை
உலகக் கோப்பை கிரிக்கெட்டின் 32-ஆவது ஆட்டத்தில் நியூஸிலாந்து-தென்னாப்பிரிக்கா அணிகள் புதன்கிழமை மோதுகின்றன.
வெளியேறியது வங்கதேசம்-தப்பித்தது பாகிஸ்தான்
உலகக் கோப்பை கிரிக்கெட்டின் 31-ஆவது ஆட்டத்தில் பாகிஸ்தான் 7 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வங்கதேசத்தை செவ்வாய்க்கிழமை வென்றது.
ஆர்.எஸ்.எஸ். ஊர்வல அனுமதிக்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் தமிழக அரசு மேல்முறையீடு
தமிழகத்தில் ஆர்.எஸ்.எஸ். இயக்கத்தின் ஊர்வலத்துக்கு அனுமதி அளித்த சென்னை உயர்நீதிமன்றத்தின் உத்தரவுக்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் தமிழக அரசு மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்துள்ளது. இந்த மனு நவம்பர் 3-ஆம் தேதி விசாரணைக்கு வர உள்ளது.
காலியாக உள்ள 86 எம்பிபிஎஸ் இடங்களுக்கு கலந்தாய்வு அறிவிப்பு
தமிழகத்தில் காலியாக உள்ள 86 எம்பிபிஎஸ் இடங்களை நிரப்ப மத்திய அரசு அனுமதி அளித்ததைத் தொடா்ந்து, அகில இந்திய கலந்தாய்வு தொடங்கியுள்ளது. மாநில அரசின் கலந்தாய்வு நவ. 7-ஆம் தேதி தொடங்குகிறது.
இலங்கை கடற்படை கைது செய்த தமிழக மீனவர்களை விடுவிக்க முயற்சி
இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்ட 64 மீனவா்களை விடுவிக்கும் கோரிக்கையை வலியுறுத்தி மீனவ சங்கங்கள் நவம்பா் 3- ஆம் தேதி ரயில் மறியல் போராட்டம் அறிவித்துள்ள நிலையில், தமிழக முதல்வா் மு.க.ஸ்டாலின் சாா்பில் நாடாளுமன்ற உறுப்பினா்கள், மீனவா்கள் சங்கத்தினா் அடங்கிய குழு மத்திய வெளியுறவுத் துறை இணையமைச்சா் வி.முரளீதரனை செவ்வாய்க்கிழமை சந்தித்தது. இந்த விவகாரத்தில் மத்திய இணையமைச்சா் மீனவா்கள் விடுதலைக்கு நம்பிக்கை தெரிவித்தாா்.
தமிழ்நாட்டில் புதிய தொழிற்புரட்சி
தமிழ்நாட்டில் புதியதொரு தொழிற்புரட்சி நடந்து கொண்டிருப்பதாக முதல்வா் மு.க.ஸ்டாலின் பெருமிதம் தெரிவித்தாா்.
சனிக்கிழமைகளில் மழைக் கால மருத்துவ முகாம்கள்
மழைக் கால சிறப்பு மருத்துவ முகாம்கள் இனி வரும் வாரங்களில் சனிக்கிழமைகளில் நடைபெறும் என்று மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சா் மா.சுப்பிரமணியன் தெரிவித்தாா்.
ரூ.7.100 கோடி பதிய தொழில் திட்டங்களுக்கு அனுமதி
தமிழகத்தில் 22,000 பேருக்கு புதிய வேலைவாய்ப்புகளை அளிக்கும் ரூ. 7,100 கோடி மதிப்பிலான புதிய தொழில் திட்டங்களுக்கு அமைச்சரவைக் கூட்டத்தில் செவ்வாய்க்கிழமை ஒப்புதல் அளிக்கப்பட்டது.
இஸ்ரேலுக்கு எதிராக தமிழக முஸ்லிம் அமைப்புகள் ஆர்ப்பாட்டம்
பாலஸ்தீனம் மீதான இஸ்ரேலின் தாக்குதலைக் கண்டித்து தமிழக முஸ்லிம் அமைப்புகள் சார்பில் சென்னை எழும்பூரில் செவ்வாய்க்கிழமை கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
பணிகளை விரைவில் முடிக்க அமைச்சர் பி.கே.சேகர்பாபு உத்தரவு
கிளாம்பாக்கம் புதிய பேருந்து முனையத்தின் பணிகளை விரைவில் முடிக்குமாறு சென்னைப் பெருநகர வளர்ச்சிக் குழும (சிஎம்டிஏ) தலைவரும், இந்து சமய அறநிலையத்துறை அமைச்சருமான பி.கே.சேகர்பாபு அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.
பருவமழை எதிரொலி: 24 மணி நேரமும் இயங்கும் கட்டுப்பாட்டு அறைகள் அமைக்க வேண்டும்
பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக அனைத்து நகர்ப்புற உள்ளாட்சி அமைப்பு அலுவலகங்களிலும் 24 மணி நேரமும் இயங்கக்கூடிய கட்டுப்பாட்டு அறைகள் அமைக்கப்பட வேண்டும் என நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சர் கே.என்.நேரு உத்தரவிட்டார்.