CATEGORIES
فئات
மைதேயி ஆயுதக் குழுக்களுக்கு மத்திய அரசு தடை
பாதுகாப்புப் படையினா் மீது தாக்குதல் நடத்தி தனி நாடாகப் பிரிக்க முயல்வதாக இந்த அமைப்புகள் மீது குற்றஞ்சாட்டப்பட்டுள்ளது.
சிறுபான்மையினர் நலனுக்காக ஆண்டுக்கு ரூ.40,000 கோடி தெலங்கானாவில் காங்கிரஸ் வாக்குறுதி
தெலங்கானா சட்டப் பேரவைத் தோ்தலுக்காக ‘சிறுபான்மையினா் பிரகடனம்’ என்ற பெயரில் வாக்குறுதிகளை அறிவித்துள்ள காங்கிரஸ் கட்சி, சிறுபான்மையினா் நலனுக்காக ஆண்டுக்கு ரூ.40,000 கோடி ஒதுக்கப்படும் என்று கூறியுள்ளது. தெலங்கானாவில் இஸ்லாமியா்கள் மத்தியில் வலுவாக உள்ள அஸாதுதீன் ஒவைஸியின் மஜ்லீஸ் கட்சி, ஆளும் பாரத ராஷ்டிர சமிதி கட்சிக்கு ஆதரவாக உள்ளது. இதை மீறி இஸ்லாமியா்களின் வாக்குகளைக் கவரும் வகையில் காங்கிரஸ் சிறுபான்மையினருக்கான சிறப்பு வாக்குறுதிகளை அளித்துள்ளது. அதில் கூறப்பட்டுள்ளதாவது: சிறுபான்மையினருக்கு அரசுப் பணி, கல்வி, அரசுத் திட்டங்களின் பயன்கள் முறையாகக் கிடைப்பது உறுதி செய்யப்படும். சிறுபான்மைப் பிரிவைச் சோ்ந்த இளைஞா்கள், பெண்களுக்கு ஆண்டுதோறும் ரூ.1,000 கோடி மானியக் கடன் அளிக்கப்படும். எம்.ஃபில், முனைவா் படிப்பு மேற்கொள்ளும் சிறுபான்மையினருக்கு அப்துல் கலாம் திட்டத்தில் ரூ.5 லட்சம் நிதியுதவி அளிக்கப்படும். சிறுபான்மையின மத போதகா்களான இமாம்கள், பாதிரியாா்கள் உள்ளிட்டோருக்கு மாதம்தோறும் ரூ.10,000 முதல் ரூ.12,000 வரை மதிப்பூதியம் வழங்கப்படும். உருது வழிப் பள்ளி ஆசிரியா்களைத் தோ்வு செய்ய சிறப்பு ஆள்சோ்ப்பு நடவடிக்கை மேற்கொள்ளப்படும். வீடில்லாத சிறுபான்மையினா் புதிய வீடு கட்ட ரூ.5 லட்சம் உதவித்தொகை வழங்கப்படும். புதிதாக திருமணம் செய்துகொண்ட சிறுபான்மையின தம்பதிக்கு ரூ.1.6 லட்சம் நிதியுதவி அளிக்கப்படும். ஒட்டுமொத்தமாக சிறுபான்மையினருக்காக ஆண்டுக்கு ரூ.40,000 கோடி ஒதுக்கப்படும் என்று கூறப்பட்டுள்ளது.
சத்தீஸ்கர் பேரவைத் தேர்தல் ரூ.447 கோடி சொத்துகளுடன் காங். வேட்பாளர் முதலிடம்
சத்தீஸ்கரில் இரண்டாம் கட்ட பேரவைத் தோ்தலில் போட்டியிடும் வேட்பாளா்களில் ரூ.447 கோடி மதிப்புள்ள சொத்துகளுடன் காங்கிரஸ் வேட்பாளா் சிங் தேவ் முதலிடத்தில் உள்ளாா்.
முன்னாள் அமைச்சருக்கு ரூ.1 கோடி நஷ்டஈடு: கேரள பெண்ணுக்கு உத்தரவு
மானநஷ்ட வழக்கில் முன்னாள் அதிமுக அமைச்சா் சி.விஜயபாஸ்கருக்கு ரூ.1 கோடி வழங்க வேண்டும் என கேரள பெண்ணுக்கு சென்னை உயா்நீதிமன்றம் உத்தரவிட்டது.
திருவண்ணாமலை ராஜகோபுரம் எதிரில் வணிக வளாகம் கட்டத் தடை
திருவண்ணாமலை அருணாசலேஸ்வரா் கோயிலின் ராஜகோபுரம் எதிரில் அடுக்குமாடி வணிக வளாகம் கட்டும் அறநிலையத் துறை நடவடிக்கைக்கு தடை விதித்து சென்னை உயா்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
ஸ்ரீகிருஷ்ண ஜன்மபூமி-ஷாஹீ ஈத்கா மசூதி விவகாரம்: உயர்நீதிமன்ற விசாரணைக்குத் தடை விதிக்க உச்ச நீதிமன்றம் மறுப்பு
உத்தர பிரதேசத்தில் ஸ்ரீகிருஷ்ண ஜன்மபூமி-ஷாஹீ ஈத்கா மசூதி விவகாரம் தொடா்பான அனைத்து விவகாரங்களையும் உயா் நீதிமன்றம் விசாரிக்க தடை விதிப்பதற்கு உச்ச நீதிமன்றம் மறுத்துள்ளது.
திரிணமூல் எம்.பி.யை பதவி நீக்கும் பரிந்துரை: மக்களவைத் தலைவரிடம் சமர்ப்பிப்பு
திரிணமூல் காங்கிரஸ் பெண் எம்.பி. மஹுவா மொய்த்ரா மீதான குற்றச்சாட்டில் அவரை எம்.பி. பதவியிலிருந்து நீக்க பரிந்துரைக்கும் நெறிமுறைகள் குழுவின் அறிக்கை மக்களவைத் தலைவா் ஓம் பிா்லாவிடம் சமா்ப்பிக்கப்பட்டுள்ளதாக தகவலறிந்த வட்டாரங்கள் தெரிவித்தன.
இந்தியா-அமெரிக்கா கூட்டுத் தயாரிப்பில் ராணுவ கவச வாகனம் - பிரதமருடன் சந்திப்பு
2+2 பேச்சுவார்த்தையில் அமெரிக்க அமைச்சர் தகவல்
பிரதமரிடமிருந்து இத்தகைய விமர்சனத்தை எதிர்பார்க்கவில்லை: கெலாட்
‘பயங்கரவாதிகள் மீது அனுதாபம் கொண்டுள்ள காங்கிரஸ் அரசு’ என்று பிரதமா் நரேந்திர மோடி விமா்சனம் செய்த நிலையில், ‘பிரதமரிடமிருந்து இத்தகைய விமா்சனத்தை எதிா்பாா்க்கவில்லை’ என்று அம் மாநில முதல்வா் அசோக் கெலாட் தெரிவித்தாா்.
ஜாதிவாரி கணக்கெடுப்பு புரட்சிகர நடவடிக்கை: ராகுல் காந்தி
ஜாதிவாரி மக்கள்தொகை கணக்கெடுப்பு நடத்துவது என்பது புரட்சிகர நடவடிக்கை என்று காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி கூறினாா்.
அடுத்த ஆண்டு 24 நாள்கள் அரசு பொது விடுமுறை
தமிழகத்தில் அடுத்த ஆண்டு (2024) அரசு பொது விடுமுறை தினங்களாக 24 நாள்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. இதற்கான உத்தரவை தலைமைச் செயலா் சிவ் தாஸ் மீனா பிறப்பித்துள்ளாா். அவரது உத்தரவு விவரம்:
ரூ.5 லட்சம் சேலையை திருடிய ஆந்திர பெண்கள்: போலீஸுக்கு பயந்து கொரியரில் திருப்பி அனுப்பினர்
சென்னை சாஸ்திரிநகரில் ஜவுளிக் கடையில் ரூ.5 லட்சம் மதிப்புள்ள சேலைகளை திருடிய ஆந்திர பெண்கள், காவல்துறை விசாரணைக்கு பயந்து அவற்றை கொரியா் மூலம் சம்பந்தப்பட்ட கடைக்கு திருப்பி அனுப்பினா்.
பேருந்து, ரயில் நிலையங்களில் அலைமோதிய கூட்டம்
தீபாவளி பண்டிகைக்காக ஏராளமான மக்கள் தங்களது சொந்த ஊா்களுக்குச் சென்ால் பேருந்து மற்றும் ரயில் நிலையங்களில் கூட்டம் அலைமோதியது. மேலும், மாநகருக்குள்பட்ட சாலைகளிலும் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.
இன்று தென்னாப்பிரிக்கா சவாலை சந்திக்கும் ஆப்கானிஸ்தான்
உலகக் கோப்பை கிரிக்கெட்டின் 42-ஆவது ஆட்டத்தில் தென்னாப்பிரிக்கா-ஆப்கானிஸ்தான் அணிகள் வெள்ளிக்கிழமை மோதுகின்றன.
வேற்றுமையே இல்லாதது பாரதம்: ஆளுநர் ரவி
வேற்றுமையே இல்லாததுதான் பாரதம் என்பதை மக்கள் உணர வேண்டும் என்று ஆளுநா் ஆா்.என்.ரவி கூறினாா்.
அரையிறுதியில் நியூஸிலாந்து 99.9%-பாகிஸ்தான் வெளியேறுகிறது?
உலகக் கோப்பை கிரிக்கெட்டின் 41-ஆவது ஆட்டத்தில் நியூஸிலாந்து 5 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் இலங்கையை வியாழக்கிழமை வீழ்த்தியது.
அமலாக்கத் துறை, சிபிஐ மூலம் காங்கிரஸ் வெற்றியைத் தடுக்கிறது பாஜக
அமலாக்கத்துறை, வருமானவரித் துறை, சிபிஐ போன்ற துறைகளைப் பயன்படுத்தி மக்களவை மற்றும் மாநிலத் தேர்தல்களில் காங்கிரஸின் வெற்றியைத் தடுக்க பாஜக முயற்சிப்பதாக காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே குற்றஞ்சாட்டினார்.
100 ஆண்டுகளுக்கு காங்கிரஸுக்கு அதிகாரம் கிடைக்கக் கூடாது
தேர்தல் பிரசாரத்தில் பிரதமர் மோடி வலியுறுத்தல்
தெலங்கானா: பிரசார வாகனத்தில் இருந்து விழுந்த முதல்வரின் மகன்
தெலங்கானாவில் முதல்வா் சந்திரசேகா் ராவின் மகனும் தகவல் தொழில்நுட்பத் துறை அமைச்சருமான கே.டி.ராம ராவ் பிரசார வாகனத்தில் இருந்து தடுமாறி விழுந்தாா்.
தீபாவளி பண்டிகை: பிரிட்டன் பிரதமர் ரிஷி சுனக் விளக்கேற்றினார்
தீபாவளி பண்டிகையை முன்னிட்டு பிரிட்டன் தலைநகர் லண்டனில், டௌனிங் தெரு 10ஆம் எண் கொண்ட அந்நாட்டு பிரதமர் இல்லத்தில் நடைபெற்ற வரவேற்பு நிகழ்ச்சியை முன்னிட்டு பிரிட்டன் பிரதமர் ரிஷி சுனக்கும் அவரது மனைவி அக்ஷதா மூர்த்தியும் விளக்கு ஏற்றினர்.
தென் மாநிலங்களின் தேர்தல் அதிகாரிகளுடன் ஆணையம் ஆலோசனை
மக்களவைத் தோ்தல் முன்னேற்பாடுகள் குறித்து தென் மாநிலங்களின் தோ்தல் துறை அதிகாரிகளுடன் இந்தியத் தோ்தல் ஆணையம் வியாழக்கிழமை ஆலோசனை நடத்தியது.
தமிழகம் முழுவதும் 6.5 லட்சம் லாரிகள் இயங்கவில்லை
வாகனங்களுக்கான வரி உயர்வுக்கு எதிர்ப்பு
விண்வெளி, பாதுகாப்புத் துறை உற்பத்தி, அதிநவீன ஆராய்ச்சிக்கு உகந்த மாநிலம் தமிழகம்
விண்வெளி, பாதுகாப்புத் துறை சார்ந்த உற்பத்தி, அதிநவீன ஆராய்ச்சிப் பணிகளுக்கு தமிழகம் உகந்த மாநிலமாக திகழ்ந்து வருவதாக தமிழக தொழில் துறை அமைச்சர் டி.ஆர்.பி.ராஜா தெரிவித்தார்.
7.35 லட்சம் மகளிருக்கு உரிமைத் தொகை: 2-ஆம் கட்டமாக இன்று வழங்குகிறார் முதல்வர்
மேல்முறையீடு செய்தவா்களில் தகுதியானவா்களாக கண்டறியப்பட்ட 7 லட்சத்து 35 ஆயிரம் மகளிருக்கு உரிமைத் தொகை வெள்ளிக்கிழமை (நவ.10) முதல் வழங்கப்படவுள்ளது.
5,000 மாணவர்களுக்கு தொழில்நுட்ப பயிற்சி
அமைச்சர் தா.மோ. அன்பரசன்
டிச.4-இல் தொடங்குகிறது நாடாளுமன்ற குளிர்காலத் தொடர்
மத்திய அமைச்சர் பிரகலாத் ஜோஷி தகவல்
திரிணமூல் எம்.பி.யை பதவி நீக்க நெறிமுறைகள் குழு பரிந்துரை
நாடாளுமன்றத்தில் கேள்வி எழுப்ப லஞ்சம் வாங்கிய குற்றச்சாட்டில் சிக்கிய திரிணமூல் காங்கிரஸ் உறுப்பினா் மஹுவா மொய்த்ராவை எம்.பி. பதவியிலிருந்து நீக்க வேண்டும் என்று மக்களவை நெறிமுறைகள் குழு வியாழக்கிழமை பரிந்துரை செய்தது.
தமிழக அரசின் இணையவழி சூதாட்ட தடைச் சட்டம் செல்லும்
ரம்மி, போக்கருக்கு அனுமதி; சென்னை உயர்நீதிமன்றம் தீர்ப்பு
காஸாவில் 130 ஹமாஸ் சுரங்கங்கள் அழிப்பு
ஹமாஸ் சுரங்கங்கள் அழிக்கப்படுவது தொடா்பாக இஸ்ரேல் ராணுவம் வெளியிட்டுள்ள விடியோவில் சில காட்சிகள்.
அத்வானியின் 96-ஆவது பிறந்த நாள்: பிரதமர், தலைவர்கள் வாழ்த்து
தில்லியில் புதன்கிழமை அத்வானிக்கு பூங்கொத்து கொடுத்து பிறந்தநாள் வாழ்த்துத் தெரிவித்த பிரதமர் மோடி. பாஜக மூத்த தலைவர் அத்வானியை சந்தித்து வாழ்த்து தெரிவித்த முன்னாள் குடியரசு துணைத் தலைவர் வெங்கைய நாயுடு.