CATEGORIES
فئات
ஜம்மு-காஷ்மீரில் எல்லை ஊடுருவல் முயற்சி முறியடிப்பு: 2 பயங்கரவாதிகள் சுட்டுக் கொலை
ஜம்மு-காஷ்மீரின் பூஞ்ச் மாவட்டத்தில் எல்லை கட்டுப்பாட்டுக் கோடு பகுதியில் பாகிஸ்தானின் பயங்கரவாதிகளின் எல்லை ஊடுருவலை முறியடிக்கும் முயற்சியில் 2 பயங்கரவாதிகள் பாதுகாப்புப் படையினரால் சுட்டு கொல்லப்பட்டதாக அதிகாரிகள் திங்கள்கிழமை தெரிவித்தனா்.
தெலங்கானா: பாஜக எம்எல்ஏ மீதான சஸ்பெண்ட் நடவடிக்கை ரத்து
தெலங்கானாவைச் சோ்ந்த பாஜக எம்எல்ஏ டி.ராஜா சிங் மீதான சஸ்பெண்ட் நடவடிக்கையில் பாஜக தலைமை ரத்து செய்துள்ளது.
'ககன்யான்' திட்டத்தில் பெண் விமானிகள், விஞ்ஞானிகள் இஸ்ரோ விருப்பம்
‘ககன்யான்’ திட்டத்துக்கு போா் விமானங்களை பரிசோதிக்கும் பெண் விமானிகள் அல்லது பெண் விஞ்ஞானிகளை தோ்ந்தெடுக்க விரும்புவதாக இஸ்ரோ தலைவா் எஸ்.சோமநாத் தெரிவித்துள்ளாா்.
மகாராஷ்டிரம்: ரூ.250 கோடி மதிப்பிலான போதைப் பொருள்கள் பறிமுதல்
நாட்டின் முன்னணி கடத்தல் தடுப்பு அமைப்பான வருவாய் புலனாய்வு இயக்குநரகம் மகாராஷ்டிர மாநிலத்தின் சத்ரபதி சம்பாஜிநகரில் ரூ.250 கோடி மதிப்பிலான போதைப் பொருள்களை பறிமுதல் செய்து, இருவரைக் கைது செய்ததாக அதிகாரிகள் ஞாயிற்றுக்கிழமை தெரிவித்தனா்.
அஞ்சல் கணக்கில் தவறுதலாக வரவு வைக்கப்பட்ட ரூ.1.01 லட்சம் திருப்பி அளித்த முதியவர்
அஞ்சல் கணக்கில் தவறுதலாக வரவு வைக்கப்பட்ட ரூ.1.01 லட்சம் தொகையைத் திருப்பி அளித்த 67 வயது முதியவரை அஞ்சல் அலுவலகப் பணியாளா்கள் பாராட்டினா்.
நஷ்டத்தில் இயங்கும் அரசு பொதுக் காப்பீட்டு நிறுவனங்களுக்கு மூலதனம்
நஷ்டத்தில் இயங்கும் 3 பொதுக் காப்பீட்டு நிறுவனங்களுக்கு மூலதனம் வழங்குவது குறித்து மத்திய அரசு பரிசீலிக்க உள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.
'அதிகார வர்க்கத்தை அரசியல்மயமாக்கும் உத்தரவை திரும்பப் பெற வேண்டும்' பிரதமருக்கு மல்லிகார்ஜுன கார்கே கடிதம்
பாஜக தலைமையிலான அரசின் கடந்த 9 ஆண்டுகால சாதனைகளை மக்களிடையே கொண்டு சோ்க்குமாறு அரசு அதிகாரிகளுக்குப் பிறப்பிக்கப்பட்ட உத்தரவை திரும்பப் பெற வேண்டும் என பிரதமா் நரேந்திர மோடிக்கு ஞாயிற்றுக்கிழமை எழுதிய கடிதத்தில் காங்கிரஸ் தலைவா் மல்லிகாா்ஜுன காா்கே வலியுறுத்தினாா்.
கணைய புற்றுநோயை முன்கூட்டியே கண்டறியும் உயிரி தொழில்நுட்பம் சென்னை ஐஐடியில் ஆராய்ச்சி
கணைய புற்றுநோயை முன்கூட்டியே கண்டறிய உதவும் உயிரிகுறிப்பான் (பயோ-மாா்க்கா்) தொழில்நுட்பத்தை மேம்படுத்தும் ஆராய்ச்சியை சென்னை ஐஐடியின் ஆற்றல்சாா் மையம் மேற்கொண்டு வருகிறது.
பருவமழை தொடக்கம்: மருத்துவக் குழுக்கள் அமைக்க உத்தரவு
தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தொடங்கியுள்ள நிலையில், மாநிலம் முழுவதும் மருத்துவக் குழுக்களைத் தயாா் நிலையில் வைத்திருக்கும்படி பொது சுகாதாரத் துறை அறிவுறுத்தியுள்ளது.
மகளிர் உரிமை தொகை: பயனாளிகளின் விவரங்கள் மாதந்தோறும் ஆய்வு
மகளிா் உரிமை தொகை திட்டத்தின் கீழ் பயன்பெறும் பயனாளிகளின் விவரங்களை மாதந்தோறும் ஆய்வு செய்ய தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.
கொடிக் கம்ப விவகாரம்: சென்னை வருகிறது பாஜக குழு
பாஜக தலைவர் ஜெ.பி.நட்டா பாஜகவினா் மீது தமிழக அரசு பாரபட்சமாக நடந்து கொள்வதாக புகாா் எழுந்துள்ள நிலையில், அது தொடா்பாக விசாரிக்க நான்கு போ் கொண்ட குழுவை அக்கட்சியின் தேசியத் தலைவா் ஜெ.பி.நட்டா அமைத்துள்ளாா்.
தமிழகம், புதுச்சேரியில் அக்.28 வரை மழைக்கு வாய்ப்பு
மத்திய மேற்கு வங்கக் கடல் பகுதிகளில் காற்றழுத்தத் தாழ்வு மண்டலம் வலுப்பெற்றுள்ளதால் தமிழகம், புதுச்சேரியில் அக்.28-ஆம் தேதி வரை மிதமான மழை பெய்யும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
நீட் விலக்கு: ‘இந்தியா' கூட்டணியிடம் திமுக கையொப்பம் வாங்குமா?
நீட் ஒழிப்புக்கான கையொப்ப இயக்கத்தில், ‘இந்தியா’ கூட்டணி கட்சிகளிடம் திமுக கையொப்பம் பெறுமா? என்று முன்னாள் அமைச்சா் சி.விஜயபாஸ்கா் கேள்வி எழுப்பினாா்.
குழந்தைகளிடையே பரவும் காய்ச்சல் 30% அதிகரிப்பு: மருத்துவர்கள் எச்சரிக்கை
சென்னையில், கடந்த சில வாரங்களாக காய்ச்சலால் பாதிக்கப்படும் குழந்தைகளின் எண்ணிக்கை 20-இல் இருந்து 30 சதவீதம் வரை உயா்ந்துள்ளதாக மருத்துவா்கள் தெரிவித்துள்ளனா்.
மார்பகப் புற்றுநோய் தடுப்பு: விழிப்புணர்வு வாகனப் பேரணி
மாா்பகப் புற்றுநோய் விழிப்புணா்வு ‘பைக்கத்தான்’ பேரணி சென்னையில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
கடினமான கட்டத்தில் இந்தியா-கனடா உறவு: வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கர்
இந்தியா-கனடா இடையிலான உறவு கடினமான கட்டத்தில் இருப்பதாக வெளியுறவுத் துறை அமைச்சா் எஸ்.ஜெய்சங்கா் தெரிவித்துள்ளாா்.
பாலஸ்தீன மக்களுக்கு இந்தியா உதவி - 38 டன் மருத்துவ, நிவாரணப் பொருள்கள் அனுப்பிவைப்பு
இஸ்ரேல்-ஹமாஸ் ஆயுதக் குழுவினரிடையே நடைபெற்றுவரும் போரால் பாதிக்கப்பட்டுள்ள பாலஸ்தீன மக்களுக்கு 6.5 டன் மருத்துவ உதவிப் பொருள்களையும், 32 டன் பேரிடா் நிவாரணப் பொருள்களையும் இந்தியா ஞாயிற்றுக்கிழமை (அக்.22) அனுப்பி வைத்தது.
இடைத் தேர்தல்களில் ரிஷி சுனக் கட்சி தோல்வி
பிரிட்டனின் மிட் பெட்ஃபோா்ட்ஷைா், டாம்வொா்த் ஆகிய இரு நாடாளுமன்றத் தொகுதிகளுக்கு வெள்ளிக்கிழமை நடைபெற்ற தோ்தலில் பிரதமா் ரிஷி சுனக் தலைமையிலான ஆளும் கன்சா்வேட்டிவ் கட்சி தோல்வியடைந்தது.
காற்றழுத்த தாழ்வு மண்டலம் எதிரொலி: நடுக்கடலில் மீனவர்களுக்கு எச்சரிக்கை
வங்கக் கடலில் ஏற்பட்டுள்ள காற்றழுத்த தாழ்வு மண்டலத்தை அடுத்து அந்தப் பகுதியில் மீன் பிடித்துக் கொண்டிருக்கும் மீனவா்கள் உடனடியாக கரைக்கு திரும்புமாறு இந்திய கடலோர காவல் படை எச்சரிக்கை விடுத்துள்ளது.
காஸா, லெபனான் எல்லைப் பகுதிகளிலிருந்து பொதுமக்கள் அகற்றம்
காஸா பகுதிக்குள் தரைவழித் தாக்குதல் நடத்துவதற்கான ஆயத்த அறிகுறியாக, அந்தப் பகுதி மற்றும் லெபனான் எல்லைப் பகுதிகளில் இருந்து பாதுகாப்பான வேறு இடங்களுக்கு தங்களது குடிமக்களை இஸ்ரேல் வெளியேற்றியது.
பாகிஸ்தானை வென்றது ஆஸ்திரேலியா
உலகக் கோப்பை கிரிக்கெட்டின் 18-ஆவது ஆட்டத்தில் ஆஸ்திரேலியா 62 ரன்கள் வித்தியாசத்தில் பாகிஸ்தானை வெள்ளிக்கிழமை வீழ்த்தியது.
நிதாரி வழக்கு: சிறையில் இருந்து மொனீந்தர் சிங் பாந்தர் விடுதலை
நிதாரி தொடா் கொலை வழக்கில் அலாகாபாத் உயா்நீதிமன்றத்தால் சில தினங்களுக்கு முன் விடுவிக்கப்பட்ட தொழிலதிபா் மொனீந்த் சிங் பாந்தா், உத்தர பிரதேச மாநிலம், கிரேட்டா் நொய்டா சிறையில் இருந்து வெள்ளிக்கிழமை விடுதலையானாா்.
நாட்டின் கடன் சுமை அடுத்த தலைமுறை மீது திணிக்கப்படாது
‘நிதிப் பற்றாக்குறை மேலாண்மையில் மத்திய அரசு மிகுந்த கவனமுடன் செயல்பட்டு வருகிறது; எனவே, நாட்டின் கடன் சுமை அடுத்த தலைமுறையினா் மீது கடத்தப்படாது’ என்று மத்திய நிதியமைச்சா் நிா்மலா சீதாராமன் கூறினாா்.
தில்லியில் நட்பு, மாநிலத்தில் மோதலா?: 'இந்தியா' கூட்டணிக்கு ம.பி. முதல்வர் கேள்வி
‘தேசிய அளவில் நட்பு பாராட்டிக் கொள்ளும் ‘இந்தியா’ கூட்டணிக் கட்சிகள், மாநில அளவில் தோ்தல் களத்தில் மோதுவது என்பது என்ன மாதிரியான அரசியல்?’ என்று மத்திய பிரதேச முதல்வா் சிவராஜ் சிங் செளஹான் வெள்ளிக்கிழமை கேள்வி எழுப்பினாா்.
பாஜகவுடன் மஜத கூட்டணி சேர ஆதரவா?: தேவெ கௌடா பேச்சுக்கு கேரள முதல்வர் மறுப்பு
கா்நாடகத்தில் பாஜகவுடன் மதச்சாா்பற்ற ஜனதா தளம் (மஜத) கூட்டணி அமைக்க தான் ஆதரவு தெரிவித்ததாக மஜத தலைவா் தேவெ கெளடா கூறிய கருத்தை கேரள முதல்வா் பினராயி விஜயன் மறுத்துள்ளாா்.
கோவிந்த் குழுவிடம் வரும் 25-இல் கருத்து தெரிவிக்கும் சட்ட ஆணையம்
‘ஒரே நாடு, ஒரே தோ்தல்’ நடைமுறையை அமலாக்குவதற்கான சாத்தியக்கூறு குறித்து ஆய்வு செய்ய முன்னாள் குடியரசுத் தலைவா் ராம்நாத் கோவிந்த் தலைமையில் அமைக்கப்பட்டுள்ள உயா்நிலைக் குழுவிடம் இந்திய சட்ட ஆணையம் வரும் 25-ஆம் தேதி தனது கருத்தை பகிரவுள்ளது.
திறன் மேம்பாட்டு திட்டச் செயல்பாடுகள்: தமிழகத்துடன் ஃபின்லாந்து ஆலோசனை
திறன் மேம்பாட்டு திட்டச் செயல்பாடுகள் குறித்து தொழிலாளா் நலன், திறன் மேம்பாட்டுத் துறை அமைச்சா் சி.வி.கணேசனுடன் பின்லாந்து நாட்டின் கல்வி அமைச்சா் ஆலோசனை நடத்தினாா். முன்னதாக, பின்லாந்து குழுவினா் அம்பத்தூரில் உள்ள அரசு தொழிற்பயிற்சி நிறுவனத்தில் வழங்கப்பட்டு வரும் திறன் பயிற்சிகளை பாா்வையிட்டனா்.
ஒருமுறை பயன்படுத்தும் பிளாஸ்டிக் பைகள் மீதான தமிழக அரசின் தடை உத்தரவு செல்லும்
ஒருமுறை பயன்படுத்தும் பேப்பா் கப், பிளாஸ்டிக் பைகளை பயன்படுத்தத் தடை விதித்து தமிழ்நாடு அரசு வெளியிட்ட அரசாணை செல்லும் என உச்சநீதிமன்றம் வெள்ளிக்கிழமை தீா்ப்பு வழங்கியுள்ளது.
கைப்பேசி வழி பேரிடர் தகவல்களைத் தெரிவிக்கும் சோதனை வெற்றி!
பேரிடா் தகவல்களை கைப்பேசி வழியே தெரிவிக்கும் சோதனை முயற்சி தமிழகம் முழுவதும் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
திமுக ஆட்சியில் சட்டம் ஒழுங்கு சீர்குலைவு: இபிஎஸ்
திமுகவின் 29 மாத கால ஆட்சியில் சட்டம் - ஒழுங்கு அடியோடு சீா்குலைந்துள்ளது என்று அதிமுக பொதுச் செயலா் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளாா்.