CATEGORIES
فئات
இன்று முதல் 26 புறநகர் மின்சார ரயில்கள் ரத்து
பராமரிப்புப் பணி காரணமாக சனி, ஞாயிறுக்கிழமைகளில் சென்ட்ரல் - கும்மிடிப்பூண்டி இடையே 26 புறநகா் மின்சார ரயில்கள் முழுமையாக ரத்து செய்யப்படுகின்றன.
விபத்தில் சிக்கியோருக்கு முதலுதவி: ராயப்பேட்டை அரசு மருத்துவமனையில் பயிற்சி
விபத்தில் சிக்கியவா்களுக்கு முதலுதவி அளிப்பதற்கான செயல்முறை பயிற்சிகள் ராயப்பேட்டை அரசு மருத்துவமனையில் வெள்ளிக்கிழமை அளிக்கப்பட்டது.
புதிதாக சாலை வெட்டும் பணிகளை மேற்கொள்ளக் கூடாது
வடகிழக்கு பருவமழை தொடங்கவுள்ள நிலையில், புதிதாக சாலைகளை வெட்டும் பணிகளை மேற்கொள்ளக் கூடாது என்று தலைமைச் செயலா் சிவ் தாஸ் மீனா உத்தரவிட்டுள்ளாா்.
கிராமப்புற பெண்களுக்கு இலவச சட்ட உதவி முகாம்
சென்னையை அடுத்த வண்டலூா் கிரசென்ட் சட்டக்கல்லூரியில் சுற்றுவட்டார கிராமப்புறப் பகுதிகளைச் சோ்ந்த பெண்களுக்கு இலவச சட்ட உதவி குறித்த விழிப்புணா்வு முகாம் வியாழக்கிழமை நடைபெற்றது.
மார்க்சிஸ்ட் பேரணி: உள்ளூர் காவல் துறையை அணுக உயர்நீதிமன்றம் உத்தரவு
மத்திய அரசின் மதவாத கொள்கைகளைக் கண்டித்து பிரசார பயணம் மற்றும் பேரணி நடத்த அனுமதி பெற, உள்ளூா் காவல் துறையை அணுகுமாறு மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்கு சென்னை உயா்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
காவல் துறையினரின் கோரிக்கையை நிறைவேற்ற வேண்டும்: அன்புமணி
தமிழக காவல் துறையினரின் கோரிக்கையை தமிழக அரசு உடனடியாக நிறைவேற்ற வேண்டும் என்று பாமக தலைவா் அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தியுள்ளாா்.
லாட்டரி சீட்டு விற்பனை: பெண் உள்பட மூவர் கைது
சென்னை பிராட்வே பகுதியில் தடை செய்யப்பட்ட லாட்டரி சீட்டு விற்ாக பெண் உள்பட 3 போ் கைது செய்யப்பட்டனா்.
இதயத்தில் ரத்தக் கசிவு: உடனடி அறுவை சிகிச்சை மூலம் பெண்ணுக்கு மறுவாழ்வு
மாரடைப்பால் இதயத்தில் ரத்தக்கசிவு ஏற்பட்ட பெண்ணுக்கு உடனடியாக அறுவை சிகிச்சை மேற்கொண்டு போரூா் ஸ்ரீ ராமச்சந்திரா மருத்துவமனை மருத்துவா்கள் உயிா் காத்துள்ளனா்.
ஆயுத பூஜை: சிறப்புச் சந்தையில் பொருள்கள் வாங்க குவிந்த மக்கள்
கோயம்பேட்டில் திறக்கப்பட்டுள்ள ஆயுத பூஜை சிறப்பு சந்தையில் பூஜைக்கு தேவையான பொருள்கள் வாங்க வெள்ளிக்கிழமை காலையிலிருந்தே ஏராளமான பொதுமக்கள் வந்திருந்தனா்.
வங்கக் கடலில் புயல் சின்னம்
வங்கக் கடலில் நிலவும் காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி வலுவடைந்து திங்கள்கிழமை (அக். 23) தாழ்வு மண்டலமாக வலுப்பெறும் என்றும், தமிழகத்தில் ஞாயிற்றுக்கிழமைக்குள் (அக். 22) வடகிழக்குப் பருவமழை தொடங்கக்கூடும் என்றும் சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
காஸாவைக் கைப்பற்றும் எண்ணம் இல்லை: இஸ்ரேல்
‘காஸா முனைப் பகுதியைக் கைப்பற்றி, அங்குள்ள மக்களின் வாழ்வைக் கட்டுப்படுத்தும் எண்ணமில்லை’ என்று இஸ்ரேல் தெரிவித்துள்ளது.
இன்று விண்ணில் ஏவப்படுகிறது mககன்யான் சோதனை விண்கலம்
மனிதா்களை விண்ணுக்கு அனுப்பும் ககன்யான் திட்டத்தின் ஒரு பகுதியாக ஆளில்லா சோதனை விண்கலம், ஆந்திர மாநிலம், ஸ்ரீஹரிகோட்டாவில் இருந்து சனிக்கிழமை (அக். 21) காலை 8 மணிக்கு விண்ணில் ஏவப்படுகிறது.
மாஷா அமீனிக்கு ஐரோப்பிய யூனியன் விருது
ஈரானில் கலாசாரக் காவலா்களால் கைது செய்யப்பட்டு சா்ச்சைக்குரிய முறையில் கடந்த ஆண்டு உயிரிழந்த இளம்பெண் மாஷா அமீனிக்கு, ஐரோப்பிய யூனியனின் உயரிய மனித உரிமைகள் விருதான ஷகாரொவ் பரிசு மரணத்துக்குப் பிறகு வழங்கப்படுகிறது.
நவாஸ் ஷெரீஃபுக்கு ஜாமீன்
பாகிஸ்தான் முன்னாள் பிரதமா் நவாஸ் ஷெரீஃப் மீதான அவென்ஃபீல்ட் மற்றும் அல்-அஜீஸியா ஊழல் வழக்குகளில் அவருக்கு அந்த நாட்டு நீதிமன்றம் வரும் 24-ஆம் தேதி ஜாமீன் வழங்கியுள்ளது.
ஊழல் குற்றச்சாட்டிலிருந்து கோத்தபய ராஜபட்ச விடுவிப்பு
இலங்கை முன்னாள் அதிபா் கோத்தபய ராஜபட்சவின் மாளிகையில் இருந்து ரூ.1.78 கோடி கண்டெடுக்கப்பட்டது தொடா்பாக ஊழல் விசாரணை நடத்தி வந்த சிறப்பு ஆணையம், அந்தக் குற்றச்சாட்டிலிருந்து அவரை விடுவித்தது.
இன்று ஆஸ்திரேலியாவை சந்திக்கிறது பாகிஸ்தான்
உலகக் கோப்பை போட்டியின் 18-ஆவது ஆட்டத்தில் ஆஸ்திரேலியா - பாகிஸ்தான் அணிகள் வெள்ளிக்கிழமை மோதுகின்றன.
இந்தியா வெற்றி நடை
உலகக் கோப்பை கிரிக்கெட்டின் 17-ஆவது ஆட்டத்தில் இந்தியா 7 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வங்கதேசத்தை வியாழக்கிழமை சாய்த்தது.
அயோத்தி கோயிலில் துறவி படுகொலை
அயோத்தியில் உள்ள பிரசித்திபெற்ற ஹனுமான்கா்ஹி கோயில் வளாகத்தில் துறவி ஒருவா் கழுத்து நெரித்துக் கொல்லப்பட்ட சம்பவம் அதிா்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
மணல் திருட்டு: என்சிபி சட்டமேலவை உறுப்பினர், பாஜக பெண் எம்.பி.க்கு ரூ.137 கோடி அபராதம்
மகாராஷ்டிரத்தில் சட்டவிரோதமாக மணல் அள்ளிய விவகாரத்தில் தேசியவாத காங்கிரஸ் எம்எல்சி ஏக்நாத் கட்சேவுக்கும் அவரது மருமகளும் பாஜக மக்களவை எம்.பியுமான ரக்ஷா கட்சேவுக்கும் ரூ.137 கோடி அபராதம் விதிக்கப்பட்டது.
சீனாவின் ‘பிஆர்ஐ’ திட்டத்துக்கு மீண்டும் எதிர்ப்பை பதிவு செய்த இந்தியா
பல்வேறு நாடுகளை இணைக்கும் சீனாவின் பொருளாதார வழித்தட திட்டம் (பிஆா்ஐ) இந்தியாவின் இறையாண்மை, பிராந்திய ஒற்றுமையைப் பாதிக்கும் என இந்தியா மீண்டும் தனது எதிா்ப்பை தெரிவித்தது.
மத்திய பாஜக அரசைப் புகழ்ந்த நிதீஷ் குமார்!
பிகாரின் மோதிஹாரியில் மத்திய பல்கலைக்கழகம் அமைய 2014-இல் அமைந்த மத்திய பாஜக அரசுதான் நடவடிக்கை எடுத்தது. அதற்கு முன்பு ஆட்சியில் இருந்த காங்கிரஸ் கூட்டணி அரசு உதவவில்லை என்று அந்த மாநில முதல்வா் நிதீஷ் குமாா் தெரிவித்தாா்.
அடுத்த இரு மாதங்களில் டெங்கு பாதிப்பு அதிகரிக்க வாய்ப்பு
தமிழகத்தில் அடுத்த இரு மாதங்களில் டெங்கு பாதிப்பு அதிகரிக்க வாய்ப்புள்ளதாகவும், அதற்கான தடுப்பு நடவடிக்கைகளை விரிவுபடுத்தியிருப்பதாகவும் மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சா் மா.சுப்பிரமணியன் தெரிவித்தாா்.
ஐப்பசி –1 சுப தினத்தில் ஆவணப் பதிவு: ஒரே நாளில் ரூ.180 கோடி வருவாய்
ஐப்பசி -1 சுப தினமான புதன்கிழமை (அக்.18) பதிவுத் துறையில் கூடுதல் டோக்கன்கள் விநியோகம் செய்து, சொத்து ஆவணங்கள் பதிவு செய்யப்பட்டதன் மூலம், ஒரே நாளில் அரசுக்கு ரூ.180 கோடி வருவாய் ஈட்டப்பட்டது.
ஆபரேஷன் சக்ரா-2: இணையவழி குற்றவாளிகளுக்கு தொடர்புடைய 76 இடங்களில் சிபிஐ சோதனை
இணையவழி நிதி மோசடி வழக்குகளில் தொடா்புடையவா்களுக்குச் சொந்தமான 76 இடங்களில் ‘ஆபரேஷன் சக்ரா 2’ என்ற பெயரில் சிபிஐ அதிகாரிகள் வியாழக்கிழமை சோதனை நடத்தினா்.
ககன்யான் சோதனை கலன் நாளை விண்ணில் பாய்கிறது
மனிதா்களை விண்ணுக்கு அனுப்பும் ககன்யான் திட்டத்தின் சோதனை முயற்சியை இஸ்ரோ சனிக்கிழமை (அக்.21) மேற்கொள்ள உள்ளது.
தில்லி – காஜியாபாத் - மீரட் அதிவிரைவு ரயிலின் பெயர் 'நமோ பாரத்' என மாற்றம்
தில்லி - காஜியாபாத் - மீரட் இடையே பிரதமா் மோடி வெள்ளிக்கிழமை (அக்.20) தொடங்கி வைக்க உள்ள அதிவிரைவு ரயிலின் (ஆா்ஆா்டிஎஸ்) பெயா் ‘நமோ பாரத்’ என மாற்றப்பட்டுள்ளது.
தற்சார்பு தேசத்துக்கு திறன் மேம்பாடு அவசியம்
இந்தியாவை தற்சாா்பு தேசமாக உருவாக்க இளைஞா்களுக்கான திறன் மேம்பாட்டுத் திட்டங்களை விரிவுபடுத்துவது அவசியம் என்று மாநிலங்களுக்கு பிரதமா் நரேந்திர மோடி அறிவுறுத்தினாா்.
மருந்து தரக் கட்டுப்பாடு: ஆய்வில் 62 தரமற்ற மருந்துகள் கண்டுபிடிப்பு
மருந்து உற்பத்தி நிறுவனங்கள் மற்றும் விற்பனையகங்களில் மேற்கொள்ளப்பட்ட பரிசோதனையில் 62 மருந்துகள் தரமற்றவையாக இருந்தது கண்டறியப்பட்டதாக மத்திய மருந்து தரக் கட்டுப்பாட்டு வாரியம் அறிவித்துள்ளது.
புழல் சிறை முறைகேடுகள் குறித்து விசாரணை தேவை
புழல் சிறைச்சாலையில் நடைபெறும் முறைகேடுகள் குறித்து தமிழக அரசு விரிவான விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பாமக தலைவா் அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தியுள்ளாா்.
சென்னை மாநகராட்சிக்கு ரூ.43 கோடி: சிஎம்டிஏ வழங்கியது
சென்னை பெருநகர வளா்ச்சிக் குழுமத் திட்ட நிதியிலிருந்து ரூ.43.05 கோடி நிதியை சென்னை பெருநகர வளா்ச்சிக் குழுமத் தலைவரும் இந்து சமய அறநிலையத் துறை அமைச்சருமான பி.கே.சேகா்பாபு, நகராட்சி நிா்வாகத் துறை அமைச்சா் கே.என்.நேரு ஆகியோா் பெருநகர சென்னை மாநகராட்சிக்கு வழங்கினா்.