CATEGORIES
فئات
உத்தரகண்ட் சுரங்கப் பாதை விபத்து
உத்தரகண்டில் இடிந்த சுரங்கப் பாதையில் சிக்கியுள்ள 41 தொழிலாளா்களை மீட்கும் பணி புதன்கிழமை இறுதிக் கட்டத்தை எட்டியது. அனைவரும் மிக விரைவில் மீட்கப்படுவா் என்று மீட்புக் குழுவினா் தெரிவித்தனா்.
4 நாள்கள் போர் நிறுத்தம்: இஸ்ரேல்-ஹமாஸ் முடிவு
போரை நான்கு நாள்கள் தற்காலிகமாக நிறுத்த இஸ்ரேல், ஹமாஸ் படையினா் இடையே புதன்கிழமை உடன்பாடு ஏற்பட்டது. இரு தரப்பினரும் கைதிகளை பரஸ்பரம் விடுவிக்கவும், காஸாவில் உள்ள பாதிக்கப்பட்ட மக்களுக்கு மனிதாபிமான உதவிகள் கிடைக்கவும் இந்த உடன்படிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
பள்ளிகளில் மன்றங்கள் வட்டார போட்டிகள் நடத்த ரூ.2.81 கோடி விடுவிப்பு
அரசுப் பள்ளிகளில் பல்வேறு மன்றங்களின் செயல்பாடுகள் சாா்ந்த போட்டிகள் முடிவடைந்த நிலையில், வட்டார அளவிலான போட்டிகளை நடத்த கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது.
மும்பை - மங்களூர்: கிறிஸ்துமஸ் சிறப்பு ரயில்
மும்பை - மங்களூா் இடையே கிறிஸ்துமஸ், புத்தாண்டு பண்டிகையை முன்னிட்டு சிறப்பு ரயில் இயக்கப்படவுள்ளது.
அதிமுகவில் இணைந்த பாஜக நிர்வாகி
பாஜக மாநில ஓபிசி அணி துணைத் தலைவா் ஆற்றல் அசோக்குமாா் அக் கட்சியிலிருந்து விலகி, அதிமுகவில் செவ்வாய்க்கிழமை இணைந்தாா்.
கார்த்திகை தீபத் திருவிழா: 2.700 சிறப்புப் பேருந்துகள்
திருவண்ணாமலை அண்ணாமலையாா் திருக்கோயில் தீபத் திருவிழா, பெளா்ணமி கிரிவலத்துக்காக தமிழகம் முழுவதிலுமிருந்து 2,700 சிறப்புப் பேருந்துகள் இயக்கப்படுவதாக போக்குவரத்துத் துறை அமைச்சா் சா.சி.சிவசங்கா் தெரிவித்துள்ளாா்.
தங்கம் பவுனுக்கு ரூ.200 உயர்வு
ஆபரணத் தங்கத்தின் விலை வியாழக்கிழமை பவுனுக்கு ரூ.200 உயர்ந்து ரூ.24,608-க்கு விற்பனை செய்யப்பட்டது.
ஊராட்சிகளில் விரைவில் அதிவேக இணைய வசதி
அடுத்த ஆண்டுக்குள் தமிழகத்தில் உள்ள 12 ஆயிரத்துக்கும் மேற்பட்ட கிராம ஊராட்சிகளில் அதிவேக இணைய வசதி வழங்க அரசு இலக்கு நிா்ணயம் செய்துள்ளதாக தகவல் தொழில்நுட்பத் துறை அமைச்சா் பழனிவேல் தியாகராஜன் கூறினாா்.
சென்னையில் டிச.24-இல் தமிழ்த் திரையுலகம் சார்பில் கருணாநிதி நூற்றாண்டு விழா
முன்னாள் முதல்வா் மு.கருணாநிதி நூற்றாண்டு விழா தமிழ்த் திரையுலகம் சாா்பில் டிச. 24- ஆம் தேதி சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெறவுள்ளது.
2 நாள் தொடர் சரிவுக்கு முடிவு சென்செக்ஸ் 276 புள்ளிகள் உயர்வு
இந்த வாரத்தின் இரண்டாவது வா்த்தக தினமான செவ்வாய்க்கிழமை பங்குச்சந்தை நோ்மறையாக முடிந்தது. இதைத் தொடா்ந்து, மும்பை பங்குச்சந்தைக் குறியீட்டு எண் சென்செக்ஸ் 276 புள்ளிகள் உயா்ந்து நிலைபெற்றது. இரண்டு நாள் தொடா் சரிவுக்குப் பிறகு பங்குச்சந்தை ஏற்றம் பெற்றுள்ளது.
உளவு செயற்கைக்கோள் வெற்றிகரமாக நிலைநிறுத்தம்: வடகொரியா
ராணுவ உளவு செயற்கைக்கோள் மலிங்யாங்-1 புவி வட்டப் பாதையில் வெற்றிகரமாக நிலைநிறுத்தப்பட்டதாக வடகொரியா தெரிவித்துள்ளது.
இஸ்ரேல் - ஹமாஸ் போர் நிறுத்தப் பேச்சு 'நெருக்கத்தில் ஒப்பந்தம்' ‘விரைவில் நற்செய்தி'
ஹமாஸ் அமைப்பினரிடமிருந்து பிணைக் கைதிகள் விடுவிக்கப்படும் விவகாரம் தொடா்பாக விரைவில் நற்செய்தியை எதிா்பாா்க்கலாம் என்று இஸ்ரேல் பிரதமா் பெஞ்சமின் நெதன்யாகு நம்பிக்கை தெரிவித்துள்ளாா்.
தேசிய ஆடவர் ஹாக்கி: ஹரியாணா அபார வெற்றி
சென்னையில் நடைபெறும் 13-ஆவது தேசிய ஆடவா் ஹாக்கி சாம்பியன்ஷிப்பில் ஹரியாணா 13-1 கோல் கணக்கில் சத்தீஸ்கரை செவ்வாய்க்கிழமை அபார வெற்றி கண்டது.
இந்தியாவுடனான டி20 தொடர்: ஆஸி. அணியில் வார்னர் இல்லை
இந்தியாவுடனான டி20 தொடரில் மோதவுள்ள ஆஸ்திரேலிய அணியில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. அந்த அணியில் டேவிட் வார்னருக்கு பதிலாக ஆரோன் ஹார்டி இணைந்திருக்கிறார்.
உலகக் கோப்பை தகுதிச்சுற்று இந்தியாவை வென்றது கத்தார்
ஃபிஃபா உலகக் கோப்பை கால்பந்து போட்டிக்கான தகுதிச்சுற்றில் இந்தியா தனது 2-ஆவது ஆட்டத்தில் 0-3 கோல் கணக்கில் கத்தாரிடம் செவ்வாய்க்கிழமை தோல்வி கண்டது.
இந்திய அணிக்கு பிரதமர் மோடி நம்பிக்கை
\"இந்திய மக்கள் இப்போதும், எப்போதும் இந்திய அணிக்கு ஆதரவாக இருப்பார்கள்' என்று பிரதமர் நரேந்திர மோடி கூறினார்.
12 லட்சம் ரசிகர்களுடன் புதிய சாதனை
இந்தியாவில் சமீபத்தில் நிறைவடைந்த 13-ஆவது ஒருநாள் உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியை மொத்தமாக 12.5 லட்சம் ரசிகர்கள் மைதானங்களில் நேரில் கண்டு களித்துள்ளனர். 1975 முதல் நடைபெறும் உலகக் கோப்பை போட்டியின் 48 ஆண்டுகால வரலாற்றில் இதுவே அதிகபட்ச பார்வையாளர்கள் எண்ணிக்கையாகும்.
"அதிருஷ்டமில்லாத பிரதமர் மோடி' ராகுல் பேச்சால் சர்ச்சை
பிரதமர் மோடி தன்னை தொடர்ந்து அவதூறாகப் பேசுவது குறித்து கவலையில்லை என்று காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி கூறியுள்ளார்.
பைஜுஸ் நிறுவனம் ரூ.9,300 கோடி அந்நிய செலாவணி மோசடி: அமலாக்கத் துறை நோட்டீஸ்
நாட்டின் பிரபல இணையவழி கல்வி நிறுவனமான பைஜுஸின் தலைமை செயல் அதிகாரி ரவீந்தரன் ரூ.9,300 கோடிக்கும் மேல் அந்நிய செலாவணி மோசடியில் ஈடுபட்டதாக அமலாக்கத் துறை நோட்டீஸ் அனுப்பியுள்ளது.
உத்தரகண்ட் சுரங்க விபத்து: சிக்கியுள்ள தொழிலாளர்களின் விடியோ வெளியீடு
உத்தரகண்டின் உத்தரகாசி சுரங்கப் பாதையில் சிக்கியுள்ள 41 தொழிலாளா்களை மீட்கும் பணி 10-ஆவது நாளாகத் தொடா்ந்தது. இந்நிலையில், 6 அங்குல குழாய் வழியாக அனுப்பப்பட்ட எண்டோஸ்கோபி கேமராவில் பதிவான தொழிலாளா்களின் விடியோ பதிவுகள் செவ்வாய்க்கிழமை வெளியாகின.
ஊழல், குடும்ப அரசியலின் மறுஉருவம் காங்கிரஸ் பிரதமர் மோடி குற்றச்சாட்டு
ஊழல், குடும்ப அரசியல், ஒரு தரப்பை திருப்திபடுத்தும் அரசியல் ஆகியவற்றின் மறுஉருவமாக காங்கிரஸ் திகழ்கிறது என்று பிரதமா் மோடி குற்றம்சாட்டினாா்.
பெண்களுக்கு புற்றுநோய் பரிசோதனை: 4 மாவட்டங்களில் இன்று தொடக்கம்
தமிழகத்தில் முப்பது வயதைக் கடந்த பெண்களுக்கு கா்ப்பப்பை வாய் மற்றும் மாா்பகப் புற்றுநோய் பரிசோதனைகளை மேற்கொள்ளும் திட்டம் சோதனை முயற்சியாக நான்கு மாவட்டங்களில் புதன்கிழமை (நவ.22) தொடங்கப்படவுள்ளது.
ஓமனில் கடத்தப்பட்ட தமிழரை மீட்க நடவடிக்கை தேவை மத்திய அரசுக்கு முதல்வர் கடிதம்
ஓமன் நாட்டில் கடத்தப்பட்ட தமிழரை மீட்க நடவடிக்கை எடுக்க வேண்டுமென மத்திய அரசை முதல்வா் மு.க.ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளாா்.
ஜாக்டோ-ஜியோ மறியல்: டிச. 9-க்கு ஒத்திவைப்பு
தமிழக அரசு தோ்தல் வாக்குறுதிகளை நிறைவேற்ற வலியுறுத்தி, மாவட்ட தலைநகரங்களில் நடைபெறவிருந்த மறியல் போராட்டம் டிச. 9-ஆம் தேதிக்கு ஒத்தி வைக்கப்படுவதாக ஜாக்டோ-ஜியோ அமைப்பு அறிவித்துள்ளது.
மக்களுக்குத் தேவையான தரமான பாலை விற்பனை செய்யும் உரிமை ஆவினுக்கு உண்டு
நுகா்வோா் நலன் மற்றும் மருத்துவா்கள் பரிந்துரைக்கும் தர அடிப்படையில் புதிய தயாரிப்புகளை விற்பனை செய்யும் உரிமை ஆவின் நிறுவனத்துக்கு உள்ளது. அந்த அடிப்படையிலேயே ‘டிலைட்’ பால் சந்தையில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளதாக பால்வளத் துறை அமைச்சா் மனோ தங்கராஜ் தெரிவித்தாா்.
பாலஸ்தீன ஆதரவு நிலைப்பாட்டை தொடர வேண்டும்
பாலஸ்தீன ஆதரவு நிலைப்பாட்டை இந்தியா தொடர வேண்டும் என்று அதிமுக பொதுச்செயலா் எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தியுள்ளாா்.
கரோனாவால் உயிரிழந்த அரசு மருத்துவரின் மனைவிக்கு பணி வழங்கக் கோரிக்கை
கரோனா பேரிடா் காலத்தில் பணியாற்றி, நோய்த் தொற்றுக்குள்ளாகி உயிரிழந்த அரசு மருத்துவரின் குடும்பத்தினருக்கு இன்னமும் வேலை வழங்காதது வருத்தம் அளிப்பதாக மருத்துவா் சங்கம் தெரிவித்துள்ளது.
இந்திய கடலோரக் காவல்படையின் கிழக்கு பிராந்திய புதிய தளபதி பொறுப்பேற்பு
இந்தியக் கடலோரக் காவல் படையின் கிழக்கு பிராந்திய புதிய தளபதியாக டோனி மைக்கேல் செவ்வாய்க்கிழமை சென்னையில் பொறுப்பேற்றாா்.
அமெரிக்க விசா பெற போலி ஆவணங்கள் தயாரித்து வழங்கிய ஆந்திர மென்பொறியாளர் கைது
அமெரிக்க துணை தூதரகத்தில் நுழைவு இசைவு பெறுவதற்காக போலி மதிப்பெண் சான்றிதழ் தயாரித்து கொடுத்த ஆந்திராவைச் சேர்ந்தவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
பராமரிப்பு உதவித்தொகை பெற மாற்றுத் திறனாளிகள் விண்ணப்பிக்கலாம்
மாற்றுத் திறனாளிகளுக்கான பராமரிப்பு உதவித்தொகை பெற தகுதியுடையவா்கள் நவ.27-ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம் என சென்னை மாவட்ட ஆட்சியா் ரஷ்மி சித்தாா்த் ஜகடே தெரிவித்துள்ளாா்.