CATEGORIES
فئات
உலக குத்துச்சண்டை தரவரிசையில் இந்தியா 3-ஆவது இடம்
சர்வதேச குத்துச் சண்டை சம்மேளனம் (ஐபிஏ) வெளியிட்ட உலக தரவரிசைப் பட்டியலில் இந்தியா மூன்றாவது இடத்துக்கு முன்னேறி உள்ளது.
ஐரோப்பிய கால்பந்து: ஜுவென்டஸ், ரியல் மாட்ரிட் வெற்றி
ஐரோப்பிய கால்பந்து லீக் தொடர்களில் ஜுவென்டஸ், ரியல் மாட்ரிட் அணிகள் தத்தமது ஆட்டங்களில் வெற்றி கண்டன.
2024 மக்களவைத் தேர்தலில் ஆர்விஎம் பயன்படுத்தப்படாது
மக்களவையில் மத்திய அரசு தகவல்
சென்னை ஐஐடி.யின் பி.எஸ். படிப்புக்கு கல்வி உதவித் தொகை: கார்கில் நிறுவனம்
சென்னை ஐஐடி வழங்கும் பி.எஸ்.டேட்டாசயின்ஸ் அண்ட் அப்ளிகேஷன்ஸ் படிப்புக்கு, அமெரிக்காவைச் சேர்ந்த ‘கார் கில்' என்ற பன்னாட்டு நிறுவனம் முழு கல்வி உதவித்தொகை வழங்குவதாக அறிவித்துள்ளது.
அதானி விவகாரம்: நாடாளுமன்றம் 2-ஆவது நாளாக முடக்கம்
அதானி குழுமத்தின் மீதான மோசடி குற்றச்சாட்டு குறித்து விவாதிக்கக் கோரி எதிர்க்கட்சிகள் அம் ளியில் ஈடுபட்டதால் நாடாளுமன்ற நடவடிக்கைகள் தொடர்ந்து 2-ஆவது நாளாக முடங்கின.
அமெரிக்காவின் அவைக் குழுக்களில் 4 இந்திய-அமெரிக்க எம்.பி.க்கள்
அமெரிக்காவின் முக்கியத்துவம் வாய்ந்த பிரதிநிதிகள் அவை (நாடாளுமன்ற கீழவை) குழுக்களில் இந்திய-அமெரிக்க எம்.பி.க்களான பிரமிளா ஜெயபால், அமிபெரா, ராஜா கிருஷ்ணமூர்த்தி,ரோகன்னா ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர்.
ஒருநாள் தொடரைக் கைப்பற்றியது தென்னாப்பிரிக்கா
தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான 3-ஆவது மற்றும் கடைசி ஒருநாள் ஆட்டத்தில் இங்கிலாந்து 59 ரன்கள் வித்தியாசத்தில் வென்றது. எனினும் தொடரை 2-1 என தன்வசப்படுத்தியது தென்னாப்பிரிக்கா.
ஆஸ்திரேலியா - தோல் துறை திறன் கூட்டமைப்பு புரிந்துணர்வு ஒப்பந்தம்
ஆஸ்திரேலிய வர்த்தக, முதலீட்டு ஆணையம், தோல் துறை திறன் கூட்டமைப்பு ஆகியவை இடையே புரிந்துணர்வு ஒப்பந்தம் சென்னை கிண்டியில் உள்ள தனியார் ஹோட்டலில் வியாழக்கிழமை கையொப்பமானது.
கூட்டுக் குழு விசாரணை: எதிர்க்கட்சிகள் கோரிக்கை
அதானி குழுமத்தின் மீதான மோசடி புகார் குறித்து விசாரிக்க நாடாளுமன்ற கூட்டுக் அமைக்குமாறு காங்கிரஸ் தேசியத் குழுவை தலைவர் மல்லிகார்ஜுன கார்கே கோரிக்கை விடுத்தார்.
அதானி குழும பங்குகள் வீழ்ச்சி எரிசக்தித் துறையை பாதிக்காது
'அதானி குழும பங்குகளின் வீழ்ச்சி இந்தியாவில் புதுப்பிக்கத்தக்க எரிசக்தித்துறை வளர்ச்சியை பாதிக்காது; ஏனெனில் நாட்டில் இத்துறையில் 15 முதல் 16 பெரிய நிறுவனங்கள் செயல்பட்டு வருகின்றன' என்று மத்திய மின்சாரம் மற்றும் புதுப்பிக்கத்தக்க எரிசக்தி துறை அமைச்சர் ஆர்.கே.சிங் தெரிவித்தார்.
ஆஸ்திரேலியா: காணாமல் போன கதிரியக்க பொருள் கண்டுபிடிப்பு
மேற்கு ஆஸ்திரேலியாவின் நியூமனில் உள்ள சுரங்கத்திலிருந்து பெர்த் நகரத்துக்கு வந்த லாரியிலிருந்து காணாமல் போன ஆபத்தான கதிரியக்கப் பொருளை அதிகாரிகள் கண்டறிந்தனர்.
பாகிஸ்தான் மசூதி தாக்குதல்: 17 பேர் கைது
பாகிஸ்தானின் பெஷாவர் நகர காவல் வளாக மசூதியில் நடத்தப்பட்ட பயங்கரவாதத் தாக்குதல் தொடர்பாக 17 பேரை அதிகாரிகள் கைது செய்துள்ளனர்.
இரண்டாம் சுற்றில் சாய் பிரணீத், கிரண் ஜார்ஜ்
தாய்லாந்து ஓபன்
'இனி சாதிப்பதற்கு எதுவும் இல்லை’
இனிமேல் சாதிப்பதற்கு எதுவுமில்லை என ஆர்ஜென்டீனா கால்பந்து ஜாம்பவான் லயோனல் மெஸ்ஸி கூறியுள்ளார்.
பொது அடையாள அட்டையாக எண்ம முறை பான் கார்டு
அரசின் பல்வேறு துறைகளிலும் எண்ம (டிஜிட்டல்) முறையில் பொதுவான அடையாள அட்டையாக வருமானவரி நிரந்தர கணக்கு எண்ணை (பான்) பயன்படுத்தலாம் என்று பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டது.
‘கல்வித் துறைக்கு ரூ.1.12 லட்சம் கோடி'
இதுவரை இல்லாத அளவாக பட்ஜெட்டில் கல்வித் துறைக்கு ரூ.1.12 லட்சம் கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
சிபிஐ-க்கு ரூ.946 கோடி நிதி
மத்திய பட்ஜெட்டில், புலனாய்வு அமைப்பான சிபிஐ-க்கு ரூ.946.51 கோடி நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. இது கடந்த ஆண்டைவிட 4.4 சதவீதம் கூடுதலாகும்.
பாதுகாப்புத் துறைக்கு ரூ.5.93 லட்சம் கோடி ஒதுக்கீடு
எந்தத் துறைக்கும் இல்லாத அளவுக்கு பாதுகாப்புத் துறைக்கு ரூ.5,93,537.64 கோடி பட்ஜெட்டில் ஒதுக்கப்பட்டுள்ளது.
விளையாட்டுத் துறைக்கு ரூ.3,397 கோடி ஒதுக்கீடு
பட்ஜெட்டில் விளையாட்டுத்துறைக்கு ரூ.3,397.32 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
வேளாண் கடன் இலக்கு ரூ.20 லட்சம் கோடி: முந்தைய ஆண்டைவிட 10% அதிகம்
வேளாண் கடன்கள் அதிகமாக வழங்க நிகழாண்டு பட்ஜெட்டில் ரூ.20 லட்சம் கோடி ஒதுக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. இது முந்தைய ஆண்டைவிட 10 சதவீதம் அதிகம்.
வெளியுறவுத் துறைக்கு ரூ.18,050 கோடி; இலங்கைக்கு ரூ.150 கோடி
வெளியுறவுத்துறைக்கு பட்ஜெட்டில் ரூ.18,050 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இது கடந்த ஆண்டை விட 4.64 சதவீதம் (ரூ.17,250 கோடி ) அதிகமாகும்.
ரயில்வேக்கு ரூ.2.40 லட்சம் கோடி: இதுவரை இல்லாத அதிகபட்சம்
மத்திய பட்ஜெட்டில் ரயில்வே அளவில் அதிகபட்சமாக ரூ.2.40 லட்சம் கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
முல்லைப் பெரியாறு அணையில் நிலநடுக்கத்தை கண்டறியும் கருவிகள் பொருத்தும் பணி
மத்திய துணைக் குழு ஆய்வு
மெரீனாவில் நடமாடும் எரியூட்டும் ஆலை: இதுவரை 852 மெ. டன் கழிவு எரியூட்டல்
மெரீனா கடற்கரையில் நிறுவப்பட்டுள்ள நவீன நடமாடும் எரியூட்டும் ஆலையில் இதுவரை 852 மெட்ரிக் டன் நெகிழி மற்றும் இதர உலர் கழிவு எரியூட்டப்பட்டுள்ளன.
ரூ.7 லட்சம் வரை வருமான வரி இல்லை
புதிய வரி விதிப்பு முறை சீரமைப்பு
பட்ஜெட் கூட்டத்தொடரின் முதல்பாதி முன்கூட்டியே நிறைவு?
நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத் தொடரின் முதல்பாதி திட்டமிட்டதற்கு முன்கூட்டியே நிறைவடைய வாய்ப்புள்ளது.
பாகிஸ்தான் மசூதித் தாக்குதல்: 100-ஐ தொட்ட பலி எண்ணிக்கை
பாகிஸ்தானின் பெஷாவர் நகர காவல்துறை தலைமையக வளாக மசூதியில் தலிபான் பயங்கரவாதி நடத்திய தற்கொலை குண்டுவெடிப்புத் தாக்குதலில் பலியானவர்களின் எண்ணிக்கை 100ஐ தொட்டது.
ஐசிசி டி20 தரவரிசை: இரண்டாம் இடத்தில் தீப்தி சர்மா
ஐசிசி டி20 பௌலர்கள் தரவரிசை கிரிக்கெட்யில் இந்திய இளம் வீராங்கனை தீப்தி சர்மா இரண்டாவது இடத்துக்கு முன்னேறியுள்ளார்.
விரைவில் ஆந்திர தலைநகராக விசாகப்பட்டினம்
முதல்வர் ஜெகன்மோகன் ரெட்டி
மத்திய பட்ஜெட் இன்று தாக்கல்
நடுத்தரப் பிரிவினருக்கு சலுகைகள் ?