CATEGORIES
Kategorier
சில நாட்களில் பரீட்சை திகதி
2023 க.பொ.த உயர்தரப் பரீட்சைக்கான புதிய திகதிகளை அடுத்த சில நாட்களில் பரீட்சை ஆணையாளர் நாயகம் அறிவிப்பார் என்று கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த பாராளுமன்றத்தில் செவ்வாய்க்கிழமை (03) தெரிவித்தார்.
அரசாங்கம் முன்வைத்துள்ள சட்டமூலம் வாபஸ் பெறப்பட வேண்டும்
ஆசிய இன்டர்நெட் கூட்டமைப்பானது கடுமையான எதிர்ப்பை வெளியிட்டுள்ளது
ரூ. 4 கோடி பெறுமதியான 35 கிலோ கிராம் ஹஷீஸ் மீட்பு
நான்கு கோடியே 20 இலட்சம் ரூபாய் பெறுமதியான 35 கிலோ கிராம் ஹஷீஸ் போதைப்பொருள் ஒருகொடவத்தை சுங்க வருமான கண்காணிப்பு பிரிவின் பரிசோதனை நிலையத்தில் கைப்பற்றப்பட்டுள்ளதாக சுங்க ஊடகப் பேச்சாளர் சிவலி அருக்கொட தெரிவிதுள்ளார்.
வடக்கு, கிழக்கில் நீதிமன்றங்கள் முடங்கின
நீதிபதி சரவணராஜாவுக்கு இழைக்கப்பட்ட அநீதிக்கு எதிராக
முல்லை நீதிபதிக்கு யாராவது-அழுத்தம் கொடுத்திருந்தால் அவமதிப்பு வழக்கு தொடருக
நீதியமைச்சர் விஜேதாஸ சபையில் தெரிவிப்பு
சிறுவர்கள் யாசிப்பதை தடுப்பதற்கு விசேட குழு
சிறுவர்களை யாசகத்துக்குப் பயன்படுத்துவதைத் தடுப்பதற்கான பொறிமுறையொன்றைப் பரிந்துரைப்பதற்கு விசேட குழுவொன்றை நியமிப்பதற்கு மகளிர், சிறுவர் அலுவல்கள் மற்றும் சமூக வலுப்படுத்துகை அலுவல்கள் பற்றிய அமைச்சுசார் ஆலோசனைக் குழுவில் தீர்மானிக்கப்பட்டது.
சர்வதேச விசாரணை இல்லை, முற்றுப்புள்ளி
Deutsche Welle நேர்காணலில் கோபமடைந்தார் ஜனாதிபதி
“எங்கள் கைகள் இணையட்டும்;அடிமை விலங்குகள் உடையட்டும்”
மனிதச்சங்கிலி போராட்டம் மருதனார் மடசந்தியில் இருந்து புதன்கிழமை (04) காலை 9 மணியளவில் ஆரம்பிக்கப்படும்
சட்னி உட்கொண்ட பெண்ணுக்கு நேர்ந்த துயரம்
பெரும்பாலான மக்கள் உணவுடன் சட்னி உட்கொள்ள விரும்புகிறார்கள். ஒருவகையில் பலர் இதற்கு அடிமையாகி உள்ளனர். ஒவ்வொரு உணவிற்கும் அதற்கு ஏற்ற சட்னி அவசியம் இருக்க வேண்டும். அதற்காக ரெடிமேட் சட்னி/ சாஸ் வாங்கி உட்கிகொள்கிறார்கள். இது தவறில்லை. ஆனால் அதில் கொஞ்சம் கவனம் தேவை. இல்லையேல் அது உயிருக்கே ஆபத்தாக முடியலாம். அப்படி ஒரு சம்பவம் நடந்துள்ளது.
கிழக்கு மாகாண பாடசாலைகளுக்கிடையிலான மெய்வல்லுநர் போட்டியில் வென்ற அக்கரைப்பற்று முஸ்லிம் மத்திய கல்லூரி மாணவர் கௌரவிப்பு
கிழக்கு மாகாண பாடசாலை மாணவர்களுக்கிடையிலான மெய்வல்லுநர் போட்டியின்போது வெற்றி பெற்ற, சாதனை புரிந்த அக்கரைப்பற்று முஸ்லிம் மத்திய கல்லூரி மாணவர்களை பாராட்டி கௌரவிக்கும் நிகழ்வு கல்லூரி வளாகத்தில் அண்மையில் நடைபெற்றுள்ளது.
சிறுவர்களுக்கான மென்பந்தாட்ட கிரிக்கெட் தொடர்: சம்பியனான திருகோணமலை
உலக சிறுவர் தினத்தை முன்னிட்டு கிழக்கு மாகாண விளையாட்டுத் திணைக்களத்தின் ஏற்பாட்டில் நடாத்தப்பட்ட சிறுவர்களுக்கான மென்பந்தாட்ட கிரிக்கெட் தொடரில் திருகோணமலை சம்பியனானது.
தூய்மைப் பணியில் பிரதமர் மோடி
மகாத்மா காந்தியின் பிறந்த நாள் காந்தி ஜெயந்தியாக ஒவ்வொரு வருடமும் ஒக்டோபர் 2ஆம் திகதி கொண்டாடப்படுகிறது.
இறுதிச்சடங்கில் 25 பேர் கடத்தல்
நைஜீரியா நாட்டின் தென்மேற்கு மாகாணமான ஒட்டோவில் இறுதிச்சடங்கு ஊர்வலம் நடைபெற்றுள்ளது.
வெளிநாட்டில் கைதாகும் பாகிஸ்தான் யாசகர்கள்
பொருளாதார நெருக்கடியால் பாகிஸ்தான் தற்போது பாதிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து அந்நாட்டிலிருந்து வெளிநாடுகளுக்கு சென்று யாசகம் பெறுபவர்களின் எண்ணிக்கை அதிகரித்திருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
விபத்தில் விடுதி உரிமையாளர் மரணம்
ஏ - 9 வீதியில், சாவகச்சேரி நுணாவில் எனுமிடத்தில் இடம்பெற்ற விபத்தில், மோட்டார் சைக்கிளில் பயணித்த விடுதியின் உரிமையாளரான 35 வயதான இளைஞன் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
அப்பியூலன்ஸில் ஐஸ் சாரதி தப்பியோட்டம்
அம்பியூலன்ஸ் (நோய் காவு வண்டி) சாரதி ஒருவரைக் கைது செய்ய சென்ற மன்னார் பிரிவு குற்றப் புலனாய்வு திணைக்கள பொலிஸ் கான்ஸ்டபிள் ஒருவரின் கையை அந்த சாரதி கடுமையாக கடித்து விட்டு தப்பிச் சென்றுள்ளதாக முருங்கன் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
கர்ப்பிணியை மோதிய ஒட்டோ சாரதி கைது
புத்தளத்தில் இடம்பெற்ற வீதி விபத்தில் மாவனெல்ல பிரதேசத்தை சேர்ந்த புத்தளம் வைத்தியசாலையின் அதி தீவிர சிகிச்சைப் பிரிவில் கடமையாற்றும் ஐந்து மாதக் கர்ப்பிணியான இளம் தாதியொருவர் படுகாயமடைந்து, ஆபத்தான நிலையில் கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
சோகத்தில் மேசை லாம்ப்
மனிதன் சோகத்தில் அமர்ந்து இருப்பதைப் போன்று, சாதாரண பைப்புகளைக் கொண்டு, ஒன்றரை அடி உயரமும் அரையடி நீளம் கொண்ட மேசை விளக்கு (மின் லாம்ப்) ஒன்றை ஓட்டமாவடியில் வசிக்கும் ஓவியர் அபூபக்கர் முகம்மது சமீம் தயாரித்துள்ளார்.
சமூக ஊடக செல்வாக்கு பிரசாரம் ஆரம்பம்
இலங்கையின் சுற்றுலாப் பயணிகளின் வருகையை அதிகரிப்பதற்கும் சுற்றுலாத் துறையை மேம்படுத்துவதற்கும் முயற்சிகளுக்கு ஆதரவளிக்கும் வகையில் சமூக ஊடக தாக்கம் பிரசாரத்தை யுனைடெட் ஸ்டேட்ஸ் ஏஜென்சி ஃபார் இன்டர்நேஷனல் டெவலப்மென்ட் (யு.எஸ்.ஏ.ஐ.டி) இந்தோ பசுபிக் வாய்ப்பு திட்டம் (ஐ.பி.ஓ.பி) மற்றும் ஸ்ரீலங்கா டூரிசம் அலையன்ஸ் (எஸ்.எல்.டி.எ) சமீபத்தில் ஆரம்பித்தன.
தேரர் போல் நடித்து மோசடி செய்தவர் கைது
போலி ஆவணங்களைப் பயன்படுத்தி மல்வத்து மகாநாயக்க தேரரைப்போல் தொலைபேசியில் உரையாடி, வெளிநாட்டு வேலைவாய்ப்புகளை பெற்றுத் தருவதாகக்கூறி பெருந்தொகையான பணத்தை மோசடி செய்த நபரொருவரை நுவரெலியா பொலிஸார் கைது செய்துள்ளனர்.
டிரானுக்கு எதிர்ப்பு
பொது பாதுகாப்பு அமைச்சர் திரன் அலஸுக்கு எதிராக சபாநாயகரிடம் நம்பிக்கையில்லாப் பிரேரணையை அடுத்த வாரம் கையளிக்கத் தயாராகி வருவதாக அறியமுடிகின்றது.
ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸின் தொடர் தாமதத்தால் பயணிகள் அல்லல்
பல நாடுகளுக்கு பயணிக்கவிருந்த ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் விமானங்கள் வார இறுதியில் தாமதமாகியமை மற்றும் இரத்து செய்யப்பட்டமையால் விமான பயணிகள் கடும் சிரமங்களுக்கு முகங்கொடுத்துள்ளனர்.
தற்போதைய எதிர்க்கட்சிகளுக்கு 2ஆம் தவணை நிதி கிடைக்க கூடாது என்பதே ஒரே ஆசை
சர்வதேச நாணய நிதியத்தின் (ஐஎம்எப்) இரண்டாம் தவணையை நாடு பெற்றுக் கொள்ளக் கூடாது என்பதே தற்போதைய எதிர்க்கட்சிகளின் ஒரே ஆசை என்று ஜனாதிபதி தொழிற்சங்கத்தின் பணிப்பாளர் நாயகமும் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினருமான சமன் ரத்னப்பிரிய தெரிவித்தார்
சின்னத் தேர்தல் விவகாரம் ஆணைக்குழுவுக்கு மீண்டும் நோட்டீஸ்
மார்ச் 9ஆம் திகதி நடைபெறவிருந்த உள்ளூராட்சி மன்றத் தேர்தலை ஒத்திவைத்ததன் மூலம் தங்களது அடிப்படை மனித உரிமைகள் மீறப்பட்டுள்ளதாக தீர்ப்பளிக்க கோரி தாக்கல் செய்யப்பட்ட மனுக்களின் பிரதிவாதிகளான தேர்தல் ஆணைக்குழுவின் புதிய தலைவர் உள்ளிட்ட உறுப்பினர்களுக்கு மீண்டும் நோட்டீஸ் வழங்க நடவடிக்கை எடுக்குமாறு உயர் நீதிமன்றம், திங்கட்கிழமை (02) உத்தரவிட்டது.
லிட்ரோ விலை உயரும்?
உலகளாவிய ரீதியில் எரிவாயு விலை உயர்வினால் உள்நாட்டு எரிவாயு சிலிண்டர்களின் விலைகள் இந்த மாதம் அதிகரிக்க வாய்ப்புள்ளதாக லிட்ரோ நிறுவன தகவல்கள் தெரிவிக்கின்றன.
ஒத்திவைத்ததற்கு ரூ.100 கோடி செலவு
கடந்த ஏப்ரல் மாதம் நடைபெறுவதாக அறிவிக்கப்பட்டு ஒத்திவைக்கப்பட்ட உள்ளூராட்சி மன்றத் தேர்தலின் ஆரம்ப நடவடிக்கைகளுக்காக அரசாங்கம் 100 கோடி ரூபாய் நிதியை செலவிட்டுள்ளதாக நிதி அமைச்சின் தரவுகள் தெரிவிக்கின்றன.
முல்லை நீதிபதி பதவி விலகல்: சீ.ஐ.டி விசாரணைக்கு உத்தரவு
முல்லைத்தீவு மாவட்ட நீதிபதியும் நீதவானுமான ரி.சரவணராஜாவின் பதவி விலகல் தொடர்பில் விரிவான விசாரணைகளை மேற்கொள்ளுமாறு குற்றப் புலனாய்வு திணைக்களத்திற்கு பொது பாதுகாப்பு அமைச்சர் டிரான் அலஸ் உத்தரவிட்டுள்ளார்.
பெண்ணின் நிர்வாண சடலம் மீட்பு: சந்தேக நபர்கள் கைது
சியாம்பலாப்பே தெற்கு பகுதியிலுள்ள சதுப்பு நிலத்தில் இருந்து தலை, கை மற்றும் கால்கள் இல்லாத நிலையில் நிர்வாணமாக மீட்கப்பட்ட பெண்ணின் சடலத்தின் தலைப்பகுதி இதுவரை கண்டுபிடிக்கப்படவில்லை என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
பஸ் கட்டணங்களை உயர்த்த வேண்டும்
ஓட்டோ கட்டணங்கள் அதிகரிக்காது
சர்வதேச நாணய நிதிய அறிக்கையில் இலங்கைக்கு 16 பரிந்துரைகள்
இலங்கையின் நிர்வாக முறையை மேம்படுத்துவதற்காக சர்வதேச நாணய நிதியத்தின் பொது நிர்வாக பகுப்பாய்வு மதிப்பீட்டு அறிக்கை இலங்கைக்கு 16 முன்னுரிமைப் பரிந்துரைகளை செய்துள்ளதுதாக தெரியவருகிறது.