CATEGORIES
Kategorier
நெஸ்டோமல்ட் சைக்கிள் சவால்: எஸ்.எஸ்.எச் மகே முதலிடம் பெற்றார்
விளையாட்டு மற்றும் இளைஞர் விவகார அமைச்சின் வழிகாட்டலின் கீழ் நெஸ்லே நெஸ்டமோல்டின் அனுசரணையில் இலங்கை சைக்கிளோட்ட சம்மேளனத்தால் நடாத்தப்பட்ட சைக்கிள் சவால் போட்டியின் கனிஷ்ட ஆண்கள் பிரிவில் கதிரான ஸ்பீட் சைக்கிளோட்டக் கழகத்தின் எஸ்.எஸ்.எச்.மகே முதலிடம் பெற்றார்.
உலகின் மிகப்பெரிய இந்து கோயில்
நவீன காலத்தில் இந்தியாவுக்கு வெளியே கட்டமைக்கப்பட்ட மிகப்பெரும் இந்துக் கோயில், அமெரிக்காவின் நியூ ஜெர்ஸியில் ஒக்டோபர் 8 ஆம் திகதியன்று குடமுழுக்கு காண இருக்கிறது.
ஆபத்தான சிறுகோளின் தரையிறங்கிய நாசா கலம்
சூரியனை சுற்றியுள்ள மிகவும் ஆபத்தான சிறுகோளின் மாதிரிகளுடன் நாசாவின் கலமொன்று வெற்றிகரமாக தரையிறங்கியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
கரையாத விநாயகர் சிலைகள்
9 சென்னை பட்டினப்பாக்கம் கடற்கரையில் 50 க்கும் மேற்பட்ட விநாயகர் சிலைகள் கரையாமல் கரை ஒதுங்கி கிடக்கும் நிலையில், அதை அகற்றுவது தொடர்பாக சென்னை மாநகராட்சி ஆணையர் ராதாகிருஷ்ணன் நேரில் சென்று ஆய்வு மேற்கொண்டார்.
“இந்தியாவுடனான உறவு முக்கியமானது"
இந்தியா-கனடா உறவு நாளுக்கு நாள் மோசமாகிக் கொண்டே வருகிறது. காலிஸ்தான் பயங்கரவாதி ஹர்தீப் சிங் நிஜ்ஜார் கடந்த ஜூன் மாதம் கனடாவில் வைத்து கொலை செய்யப்பட்ட நிலையில், அதில் இந்தியாவுக்குத் தொடர்பு இருக்கலாம் எனக் கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ குற்றஞ்சாட்டியதே இதற்குக் காரணமாகும்.
அவுஸ்திரேலியாவுக்கெதிரான தொடரை கைப்பற்றியது இந்தியா
அவுஸ்திரேலியாவுக்கு எதிரான ஒருநாள் சர்வதேசப் போட்டித் தொடரை இந்தியா கைப்பற்றியது.
சசித்ர சேனாநாயக்க பிணையில் விடுதலை
விசாரணைக் காலப்பகுதியில் சந்தேகநபர் சாட்சிகளை அச்சுறுத்தியதாக தெரியவராததால் சந்தேகநபருக்கு பிணை வழங்குவதாகத் தெரிவித்த நீதிமன்றம், அவருக்கு 3 மாதங்கள் வெளிநாட்டு பயணத்தடை விதித்தது.
ஒக்டோபர் 3 முதல் 6 வரை 5ஆவது கலந்துரையாடல்
பிராந்தியத்தின் சுற்றாடல் பிரச்சினைகள் தொடர்பில் கலந்துரையாடுவதற்கான ஆசிய பசுபிக் பிராந்திய அமைச்சர்கள் மற்றும் சுற்றாடல் அதிகாரிகளின் ஐந்தாவது கலந்துரையாடல் ஒக்டோபர் 03முதல் 06 திகதி வரை கொழும்பில் நடைபெறவுள்ளதென சுற்றாடல் அமைச்சர் நசீர் அஹமட் தெரிவித்தார்.
வடக்கு, கிழக்கில் உள்ள தமிழர்கள் தீர்வு கிடைக்கும் வரையும் ஒற்றுமை காட்ட வேண்டும்
தமிழ் மக்களுக்கான தீர்வு கிடைக்கும் வரையில் வடக்கு, கிழக்கில் உள்ள தமிழர்கள் தமது ஒற்றுமையினைக் காட்டவேண்டும் என்றும் அதற்காகவே தியாகதீபம் திலீபன் போன்றவர்கள் தியாகங்களை செய்துள்ளார்கள் என்றும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் மட்டக்களப்பு மாவட்ட முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் பா.அரியநேத்திரன் தெரிவித்தார்.
ஷாஃப்டரின் சடலத்தை ஒப்படைக்க உத்தரவு
பிரேத பரிசோதனை முடிவடைந்த நிலையில் வர்த்தகர் தினேஷ் ஷாஃப்டரின் சடலத்தை அவரது குடும்பத்தினரிடம் ஒப்படைக்குமாறு குற்றப் புலனாய்வு திணைக்களத்திற்கு கொழும்பு மேலதிக நீதவான் உத்தரவிட்டுள்ளார்.
எமது ஆட்சியில் மறுபரிசீலனை - ஐஎம்எப் பிரதிநிதிகளிடம் எடுத்துரைத்தார் சஜித் ஊ.சே.நிதி பாதிப்பு குறித்தும் எடுத்துரைப்பு
சர்வதேச நாணய நிதியத்தின் நீடிக்கப்பட்ட கடன் வசதிகளின் கீழ் மேற்கொள்ளப்படும் மீளாய்வு கலந்துரையாடலில் முதலாவது மீளாய்வின் இறுதி கலந்துரையாடலின் நிமித்தம் வருகை தந்துள்ள சர்வதேச நாணய நிதியத்தின் பிரதிநிதிகள் குழுவுக்கும் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாசவுக்கும் இடையிலான சந்திப்பொன்று எதிர்க்கட்சித் தலைவர் அலுவலகத்தில் திங்கட்கிழமை (25) இடம்பெற்றது.
சீதவாக்கயில் அருங்காட்சியகம் அமைக்க ஜனாதிபதி திட்டம்
சீதாவக்க இராசதானியினால் நம் நாட்டின் சுதந்திரம் பாதுகாக்கப்பட்டது என்றும் அடுத்த தலைமுறைக்கு அது தொடர்பான அறிவை வழங்கும் வகையில் சீதாவக்க பகுதியில் அருங்காட்சியகம் ஒன்றை அமைக்க திட்டமிட்டுள்ளதாகவும் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்தார்.
சர்வதேச அங்கீகாரம் பெற்ற விநாயகர் சிலை
மத்தியப் பிரதேச மாநிலம், இந்தூரில் 39 ஆண்டுகள் பழமையான தேங்காய் விநாயகர் என்ற கோவில் உள்ளது. இந்தக் கோவிலில் அமைந்துள்ள சிலையானது சிறப்பு வாய்ந்த சக்தியை கொண்டிருப்பதாக போற்றப்படுகிறது.
உறுப்பு தானம் செய்வோருக்கு அரசு மரியாதை
\"இறக்கும் முன் உறுப்பு தானம் செய்வோரின் இறுதிச்சடங்குகள் இனி அரசு மரியாதையுடன் மேற்கொள்ளப்படும்” என தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார்.
லேண்டர், ரோவர் செயல்படும் வாய்ப்பு
நிலவின் தென் துருவத்தில் ஆய்வுப்பணியில் ஈடுபட்ட சந்திரயான்-3 விண்கலத்தின் லேண்டர், ரோவர் கருவிகள் சூரிய சக்தி மூலம் இயங்கும் திறன் கொண்டதாக வடிவமைக்கப்பட்டு இருந்தது.
இரண்டாவது ஒருநாள் சர்வதேசப் போட்டியில்: பங்களாதேஷை வீழ்த்திய நியூசிலாந்து
பங்களாதேஷுக்கு எதிரான மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் சர்வதேசப் போட்டித் தொடரில், மிர்பூரில் நேற்று முன்தினம் நடைபெற்ற இரண்டாவது போட்டியில் நியூசிலாந்து வென்றது.
இத்தாலிய சீரி ஏ தொடர்: சஸுலோவிடம் தோற்றது ஜூவென்டஸ்
இத்தால்லியக் கால்பந்தாட்டக் கழகங்களுக்கிடையிலான ஏ தொடரில், சஸூலோவின் மைதானத்தில் நடைபெற்ற அவ்வணியுடனான போட்டியில் 2-4 என்ற கோல் சீரி கணக்கில் ஜுவென்டஸ் தோற்றது.
வட்டியுடன் வங்கதேசத்துக்கு கடன் செலுத்தியது இலங்கை
இரண்டு வருடங்களுக்கு முன்னர் நாணய மாற்று ஒப்பந்தத்தின் மூலம் பங்களாதேஷிடம் இருந்து பெறப்பட்ட 200 மில்லியன் அமெரிக்க டொலர் கடனை இலங்கை செலுத்தியுள்ளது.
ஐஎம்எப் 2ஆம் தவணைக்கான ஒப்பந்தம் நாளை கைச்சாத்தாகும்
சர்வதேச நாணய நிதியத்தின் சுமார் 338 மில்லியன் அமெரிக்க டொலர்களுக்கான இரண்டாவது தவணைக்கான பணியாளர் மட்ட ஒப்பந்தத்தில் அரசாங்கமும் சர்வதேச நாணய நிதியமும் நாளை செவ்வாய்கிழமை (26) கைச்சாத்திடவுள்ளன.
நேற்று திரும்பியவர் நாளை பயணம்
ஐக்கிய நாடுகளின் பொதுச் சபையின் 78 ஆவது கூட்டத்தொடரில் பங்கேற்பதற்காக நியூயோர்க் சென்றிருந்த ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க, விஜயத்தை முடித்துக்கொண்டு நேற்று ஞாயிற்றுக்கிழமை (24) நாடு திரும்பிய நிலையில், நாளை செவ்வாய்க்கிழமை (26) ஜேர்மனிக்கு பயணமாகவுள்ளார்.
மனைவியின் கத்திக்குத்தில் கணவன் பலி
மனைவி, கணவனை கத்தியால் குத்தி கொலை செய்த சம்பவம் நுவரெலியா பொலிஸ் பிரிவுக்குட்பட்ட இலக்கம் 28பி விஜிதபுர பகுதியில் சனிக்கிழமை (23) இடம்பெற்றுள்ளதாக நுவரெலியா பொலிஸார் தெரிவித்தனர்.
ஒடுக்குமுறை சட்டம் நிறைவேறினால் 21/4 சூத்திரதாரியை கூட விசாரிக்க முடியாது
சமூக ஊடகங்கள் மற்றும் டிஜிட்டல் ஊடகங்களை கட்டுப்படுத்தும் நோக்கில் ஒடுக்குமுறை சட்டத்தை அரசாங்கம் சமர்ப்பிக்க தயாராகி வருவதாகவும், இந்த சட்டங்கள் நிறைவேறினால் ஈஸ்டர் ஞாயிறு தாக்குதலுக்குப் பின்னணியில் உள்ள சூத்திரதாரிகளாக செயற்பட்டவர்களைக் கூட விசாரிக்க முடியாது போகும் என்றும், அரசியல் சதிகளை கண்டு பிடிக்க முடியாது போகும் என்றும் எதிர்கட்சி தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்தார்.
சாதனை படைத்த வெங்காயம்
இங்கிலாந்தில் இலையுதிர்கால மலர் கண்காட்சி ஒன்று ஹரோ கேட் நகரில் நடத்தப்பட்டுள்ளது.
ஆசியப் போட்டிகளுக்கான இலங்கைக் குழாமில் வியாஸ்காந்த்
ஆசியப் போட்டிகளுக்கான இலங்கைக் குழாமில் யாழ்ப்பாணத்தின் விஜயகாந்த் வியாஸ்காந்த் இடம்பெற்றுள்ளார்.
சம்பியன்ஸ் லீக்: யுனைட்டெட்டை வென்ற மியூனிச்
ஐரோப்பிய கால்பந்தாட்டச் சங்கங்களின் ஒன்றியத்தின் சம்பியன்ஸ் லீக் தொடரில், தமது மைதானத்தில் நேற்று அதிகாலை நடைபெற்ற இங்கிலாந்து பிறீமியர் லீக் கழகமான மன்செஸ்டர் யுனைட்டெட்டுடனான போட்டியில் 4-3 என்ற கோல் கணக்கில் ஜேர்மனிய புண்டெஸ்லிகா கழகமான பயேர்ண் மியூனிச் வென்றது.
இந்தியாவுக்குள் நுழைய கனடா பிரஜைகளுக்குத் தடை
1980களில் சீக்கியர்களுக்கு \"காலிஸ்தான்\" என தனி நாடு கோரியதால், இந்தியாவின் பஞ்சாப் மாநிலத்தில் பிரிவினைவாதம் தலைவிரித்தாடியது.
புத்தளத்தில் வெள்ள அனர்த்தத்தைத் தடுக்க நடவடிக்கை
புத்தளம் நகர சபைக்கு உட்பட்ட பகுதிகளில் வெள்ள அனர்த்தம் இடம்பெறுவதை தடுக்கும் முகமாக, புத்தளம் வெஸ்டன் சோல்டன் வீதி ஊடாக களப்புடன் இணையும் கால்வாய் துப்புரவு செய்யப்பட்டது.
54 கிலோ மீற்றர் நடந்து சோழன் உலக சாதனை
பொகவந்தலாவை சென் மேரிஸ் மத்திய கல்லூரியில் 10ஆம் வகுப்பில் கல்வி கற்கும் 15 வயதான நிதர்சனா என்ற மாணவி 8 மணி 30 நிமிடங்களில் 54 கிலோ மீற்றர் தூரத்தினை நடந்துச்சென்று சோழன் உலக சாதனை படைத்துள்ளார்.
தேசிய கல்வியியல் கல்லூரி அனுமதி மீண்டும் தாமதம்
மெய்நிகர் தொழில்நுட்பம் ஊடாக முன்னெடுக்குமாறு கோரிக்கை
சனல் 4 குற்றச்சாட்டுக்கு தெரிவுக்குழு அமைக்க ஆளும் எம்.பிக்கள் 20 பேர் சபாநாயகரிடம் கோரிக்கை
சனல் 4 ஊடகத்தால் ஈஸ்டர் ஞாயிறு தாக்குதல் தொடர்பில் முன்வைக்கப்பட்ட குற்றச்சாட்டுகள் குறித்து விசாரணை நடத்துவதற்காக தெரிவுக் குழுவொன்றை அமைக்குமாறு ஆளும் கட்சி பாராளுமன்ற உறுப்பினர்கள் 20 பேரால் சபாநாயருக்கு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாக சபை முதல்வரும் கல்வி அமைச்சருமான சுசில் பிரேமஜயந்த தெரிவித்தார்.