CATEGORIES
Kategorier
பிரபல பாடகி ரம்லா பேகம் காலமானார்
கேரள மாநிலத்தில் மாப்பிளப்பாட்டு பாடல்களால் ரசிகர்களின் மனதை கவர்ந்த பிரபல பாடகி ரம்லா பேகம் (வயது 86). வயது முதிர்வு காரணமாக உடல் நலம் பாதிக்கப்பட்டிருந்த அவர் கோழிக்கோடு பரப்பட்டியில் உள்ள தனது இல்லத்தில் காலமானார்.
மன்னிப்பு கேட்ட பிரதமர்
உக்ரேன் ஜனாதிபதி ஜெலன்ஸ்கி கனடாவுக்கு கடந்த 22ஆம் திகதியன்று வந்திருந்தார்.
ஊழியரை கடித்ச பைடனின் நாய்
அமெரிக்காவில் ஜனாதிபதி, துணை ஜனாதிபதி, முன்னாள் ஜனாதிபதி மற்றும் அவர்களின் குடும்பத்தினருக்கு பாதுகாப்பு அளிக்கும் பணியை அமெரிக்க சீக்ரெட் சர்வீஸ் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
மூன்றாவது ஒருநாள் சர்வதேசப் போட்டியில் இந்தியாவை வீழ்த்திய அவுஸ்திரேலியா
இந்தியாவுக்கு எதிரான மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் சர்வதேசப் போட்டித் தொடரில், ராஜ்கோட்டில் நேற்று முன்தினம் நடைபெற்ற மூன்றாவது போட்டியில் அவுஸ்திரேலியா வென்றது.
ஈ.எஃப்.எல் கிண்ணத் தொடர் வெளியேற்றப்பட்ட மன்செஸ்டர் சிற்றி
இங்கிலாந்து கால்பந்தாட்ட லீக் கிண்ணத் தொடரிலிருந்து மன்செஸ்டர் சிற்றி வெளியேற்றப்பட்டுள்ளது.
அடக்குமுறை குறித்து கனேடிய தூதுவர் எரிக்கிடம் எடுத்துரைப்பு
மலையக மக்கள், மற்றும் நாட்டில் நிலவும் பல்வேறு பிரச்சினைகள் தொடர்பாகவும் அடக்குமுறை சட்டத்தின் ஊடாக நாட்டு மக்கள் மீது பல்வேறு துன்பங்களை திணிப்பது,
மூளைசாலிகளின் வெளியேற்றம்: ஒக். 6இல் ஒத்தவைப்பு விவாதம்
பொருளாதார நெருக்கடி காரணமாக தொழில் வல்லுநர்கள் (மூளைசாலிகள்) நாட்டை விட்டு வெளியேறும் சமீபத்திய போக்கு குறித்து எதிர்வரும் ஒக்டோபர் 6ஆம் திகதி ஒத்திவைப்பு வேளை விவாதத்தை நடத்த தீர்மானிக்கப்பட்டுள்ளது.
துப்பாக்கி அனுமதி பத்திரங்களை மூன்று மாதங்களுக்குள் புதுப்பிக்க வேண்டும் பாதுகாப்பு அமைச்சு விசேட அறிவித்தல்
துப்பாக்கிகளை வைத்திருக்கும் தனிநபர்கள் மற்றும் நிறுவனங்கள் 2024 ஆம் ஆண்டுக்கான துப்பாக்கி அனுமதிப் பத்திரங்களை 2023 ஆம் ஆண்டு ஒக்டோபர் 1 ஆம் திகதி முதல் டிசெம்பர் 31 ஆம் திகதி வரை புதுப்பிக்க வேண்டும் என்று பாதுகாப்பு அமைச்சு தெரிவித்துள்ளது.
இலங்கையின் கல்வித்துறையில் நீண்டகால பிரச்சினைக்கு வாய்ப்பு நிபுணர்கள் எச்சரிக்கை
கல்விப் பொதுத் தராதர உயர்தர பரீட்சை பிற்போடப்படுவதால், தேசிய மற்றும் சர்வதேச பட்டதாரி பாடத்திட்டங்களுக்காக இணைத்துக்கொள்வதற்கான வயது ஏற்படுவதற்கான வாய்ப்பு அதிகமாகுமென கல்வி நிபுணர்கள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவுக்கு அறிவுறுத்தியுள்ளனர்.
கொட்டாஞ்சேனை தங்கப் பெண் சிக்கினார்
இந்தியாவில் இருந்து 1.2 மில்லியன் ரூபாய் பெறுமதியான நகைகளை சட்டவிரோதமான முறையில் இலங்கைக்கு கொண்டு வந்த இலங்கை வர்த்தகப் பெண் ஒருவர், கட்டுநாயக்க விமான நிலையத்தை விட்டு வெளியேறும் போது வியாழக்கிழமை (28) அதிகாலை பொலிஸ் போதைப்பொருள் ஒழிப்பு திணைக்கள அதிகாரிகள் குழுவினால் கைது செய்யப்பட்டுள்ளார்.
'யாழில் சர்வதேச கிரிக்கெட் மைதானத்தை உருவாக்கும் எண்ணமுண்டு'
\"யாழ்ப்பாணத்தில் சர்வதேச தர கிரிக்கெட் மைதானத்தை உருவாக்கும் எண்ணம் எனக்கு உண்டு\" என தென்னிந்தியாவின் பிரபல இசையமைப்பாளர் சந்தோஷ் நாராயணன் தெரிவித்துள்ளார்.
உலகக் கிண்ணத்துக்கான இலங்கைக் குழாமில் சமீர, ஹஸரங்க இல்லை
சர்வதேச கிரிக்கெட் சபையின் ஒருநாள் சர்வதேசப் போட்டி உலகக் கிண்ணத் தொடருக்கான இலங்கைக் குழாமில் துஷ்மந்த சமீர, வனிடு ஹஸரங்க ஆகியோர் இடம்பெறவில்லை.
தேசிய விளையாட்டுப் போட்டியில் மூன்றாமிடம் பெற்ற விரியும் சிறகுகள்
தேசிய இளைஞர் சேவைகள் மன்றத்தின் ஏற்பாட்டில் நடைபெறும் தேசிய விளையாட்டுப் போட்டியில் கடற்கரை கரப்பந்தாட்டத்துக்காக பதுளை மாவட்டம் சார்பில் ஹாலிஎல எல பிரதேச செயலாளர் பிரிவிலிருந்து கலந்துகொண்ட விரியும் சிறகுகள் விளையாட்டுக் கழகத்தின் மகளிர் அணி மூன்றாமிடத்தைப் பெற்றது.
தியாக தீபம் திலீபன் நினைவுக் கிண்ணத் தொடர்: சம்பியனான ரெட்பானா நியூபாரதி
தியாகதீபம் திலீபனின் 36ஆம் ஆண்டு நினைவுதினத்தை முன்னிட்டு நடாத்தப்பட்ட மாபெரும் மென்பந்தாட்ட கிரிக்கெட் தொடரில் ரெட்பானா நியூபாரதி அணி சம்பியனானது.
திருமண நிகழ்வில் தீ 113 பேர் கருகினர்
ஈராக் நாட்டின் நினே வா மாகாணத்தில் உள்ள ஹம்தானியா என்ற பகுதியில் பாக்தாத் நகரத்தில் இருந்து சுமார் 335 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள பகுதியில் கிறிஸ்தவர்கள் அதிகளவில் வசிக்கின்றனர்.
அமைச்சர் பதவி தேவையில்லை
அமைச்சுப் பதவி ஒன்றைப் பொறுப்பெடுத்தால் அந்த அமைச்சு பதவியின் ஊடாக மக்களுக்குச் சேவை செய்யக்கூடியதாக இருக்க வேண்டும் என்றும் அவ்வாறு மக்களுக்கு சேவை செய்ய முடியா விடின் அமைச்சர் பதவி தேவையில்லை என்றும் தொழிலாளர் தேசிய சங்கத்தின் தலைவரும் நுவரெலியா மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரும் முன்னாள் அமைச்சர்ருமான பழனி திகாம்பரம் தெரிவித்தார்.
ஜேர்மனியில் ரணில் பதிலுக்கு ஐவர் நியமனம்
ஜேர்மனியின் பேர்லின் நகரில் நடைபெறவுள்ள \"பேர்லின் குளோபல்\" மாநாட்டில் பங்கேற்பதற்காக ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க புதன்கிழமை (27) அதிகாலை நாட்டிலிருந்து புறப்பட்டுச் சென்றார்.
225 பேரும் இணைந்தால் இல்லாதொழிக்கலாம்
விசேட பிரமுகர்களுக்கான வரப்பிரசாதங்களைப் பயன்படுத்தி விமான நிலையத்தில் இருந்து தங்கம் கொண்டு வந்த எம்பிக்கு எதிராக அனைத்து பாராளுமன்ற உறுப்பினர்களும் ஏகமனதாக தீர்மானம் கொண்டு வந்ததைப் போல மது, புகையிலை, சிகரெட் மற்றும் போதைப்பொருள் பாவனையில் இருந்து நாட்டை விடுவிப்பதற்கு 225 எம்.பிக்களும் சம்மதித்தால், நாடு என்ற வகையில் முன்ணுதாரனமாக செயற்பட முடியும் என்று எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்தார்.
ரூ.23 கோடி தங்கம்: ஐவர் சிக்கினர்
சுமார் 23 கோடி ரூபாய் பெறுமதியான நகைகள் மற்றும் தங்க பிஸ்கட்களை சட்டவிரோதமான முறையில் கொண்டு வந்த நான்கு பெண்களும் ஆண் ஒருவரும் சுங்க போதைப்பொருள் கட்டுப்பாட்டு திணைக்கள அதிகாரிகளால் கட்டுநாயக்க விமான நிலையத்தின் வருகை முனையத்தில் வைத்து புதன்கிழமை (27) கைது செய்யப்பட்டுள்ளனர்.
குருந்தி ரஜமஹா விகாரைக்குச் சொந்தமில்லாத காணியில் ஆலயம், விகாரைக்கு 3 ஏக்கரை ஒதுக்குக
குருந்தி ரஜமஹா விகாரை அமைந்துள்ள தொல்பொருள் காப்புப் பகுதிக்கு சொந்தமில்லாத காணியில் இருந்து 3 ஏக்கர் காணியை ஒதுக்குமாறு புத்தசாசன, சமய மற்றும் கலாசார அலுவல்கள் அமைச்சின் செயலாளர் சோமரத்ன விதானபத்திரன முன்மொழிந்துள்ளார்.
இக்னேஷியஸ் தொடர்: அடுத்த சுற்றில் ஓட்டமாவடி வளர்பிறை விளையாட்டுக் கழகம்
அஸ்ஹர் இப்றாஹிம் இக்னேஷியஸ் கால்பந்தாட்டத் தொடரில் அடுத்த சுற்றுக்கு ஓட்டமாவடி வளர்பிறை விளையாட்டுக் கழகம் தெரிவாகியுள்ளது.
உலகளவில் 80 கோடி பேருக்கு சிறுநீரக கோளாறு
ஒடிசா மாநிலம் புவனேஸ்வர் மாநில மருத்துவக் கல்லூரியில் உலக சிறுநீரக தினம் அனுசரிக்கப்பட்டது.
இம்ரான்கானை அடியாலா சிறைக்கு மாற்ற உத்தரவு
பாகிஸ்தானின் முன்னாள் பிரதமர் இம்ரான்கான் (வயது 70) மீது ஊழல் குற்றச்சாட்டு உள்பட பல்வேறு வழக்குகள் நிலுவையில் உள்ளன.
பகல் இரவு சமமாக இருக்கும் புகைப்படம்
ஐரோப்பிய விண்வெளி ஆய்வு மையம் (ஈஎஸ்ஏ) தனது எக்ஸ் (ட்விட்டர்) பக்கத்தில் ஒரு செயற்கைக்கோள் புகைப்படத்தை ஞாயிறுக்கிழமை (24) வெளியிட்டது.
மைத்திரி மீதான தடை உத்தரவு இடைநிறுத்தம்
ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் தலைவர் மைத்திரிபால சிறிசேனவுக்கு எதிராக பிறப்பிக்கப்பட்டிருந்த தடையை உத்தரவை இடைநிறுத்துமாறு கொழும்பு மாவட்ட நீதிமன்ற நீதிபதி சந்துன் விதான, செவ்வாய்க்கிழமை (26) உத்தரவிட்டார்.
ஜனாதிபதியின் அமெரிக்க விஜயத்தை எதிர்க்கட்சிகள் சாடினாலும் நாட்டுக்கு நன்மையே ஏற்படும்
ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் அமெரிக்க விஜயம் தொடர்பில் எதிர்க்கட்சிகள் குற்றம் சுமத்தி வருகிற போதும், இந்த விஜயத்தினால் நாட்டுக்கு பல நன்மை ஏற்படும் என காலநிலை மாற்றம் தொடர்பான ஜனாதிபதியின் சிரேஷ்ட ஆலோசகர் ருவன் விஜயவர்தன தெரிவித்தார்.
ஷி யான் 6க்கு தரித்து நிற்க அனுமதி இல்லை
சீன ஆராய்ச்சிக் கப்பலான ஷி யான் 6 இலங்கையில் தரித்து நிற்க இதுவரை அனுமதி வழங்கப்படவில்லை என்று தெரிவித்த வெளிவிவகார அமைச்சர் அலி சப்ரி, இந்தியாவின் பாதுகாப்புக் கரிசனைகள் இலங்கைக்கு முக்கியமானவை என்று தெரிவித்தார்.
மலேசியாவில் முக்கொலை: இலங்கையர் இருவர் கைது
மலேசியாவின் கோலாலம்பூர் - சென்டுல் பகுதியில் இடம்பெற்ற முக்கொலையுடன் தொடர்புடைய சந்தேகநபர்களான இரண்டு இலங்கையர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக மலேசிய பொலிஸாரை மேற்கோள் காட்டி சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
நவம்பர் 13 இல் பட்ஜெட் உரை
ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க 2024 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்ட உரையை நவம்பர் 13 ஆம் திகதியன்று பாராளுமன்றத்தில் நிகழ்த்தவுள்ளார்.
பயங்கரவாதிகளின் புகலிடமே கனடா பிரதமர் ட்ரூடோ மீதும் அமைச்சர் அலி சப்ரி சாடல்
கடந்த காலங்களில் இலங்கை தொடர்பாகவும் தற்போது இந்தியா தொடர்பாகவும் கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ தெரிவித்த சில கூற்றுக்களை வெளிவிவகார அமைச்சர் அலி சப்ரி கடுமையாக விமர்சித்துள்ளதுடன், கனடா பயங்கரவாதிகளின் புகலிடமாக மாறியுள்ளதாக குறிப்பிட்டுள்ளார்.