CATEGORIES
Kategorier
க.பொ.த உயர்தரப் பரீட்சை: ஆணையாளர் விரைவில் அறிவித்தல் வெளியிடுவார்
க.பொ.த உயர்தரப் பரீட்சையை ஒத்திவைக்குமாறு விடுக்கப்படும் கோரிக்கைகள் பரீட்சைகள் ஆணையாளரின் கவனத்திற்கு கொண்டு வரப்பட்டுள்ளதாகவும் அது குறித்து ஆணையாளர் விரைவில் அறிவித்தலொன்றை வெளியிடுவார் என்றும் கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த தெரிவித்தார்.
கொழும்பு துறைமுக நகருக்கு மாத்திரம்: விசேட வரி சலுகை வழங்கியமை பாரிய நெருக்கடிகளை ஏற்படுத்தும்
துறைமுக நகரத்துக்கு முன்பாக உள்ள சங்ரில்லா ஹோட்டல் உட்பட வெளிநாட்டு முதலீட்டாளர்களின் ஹோட்டல்களுக்கு வரி விதிக்கப்பட்டுள்ள நிலையில் ஒரு தரப்பினருக்கு மாத்திரம் விசேட வரி சலுகை வழங்கப்பட்டுள்ளமை எதிர்காலத்தில் வணிக நகரம் என்ற இலக்குக்கு பாரிய நெருக்கடிகளை ஏற்படுத்தும் என்று ஐக்கிய மக்கள் சக்தியின் ஏம்.பியான ஹர்ஷ டி சில்வா குற்றம் சுமத்தினார்.
உலக வங்கி ஆதரவு; அழைப்பும் ஏற்பு
இலங்கைக்கு விஜயம் மேற்கொள்ளுமாறு ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க விடுத்த அழைப்பை உலக வங்கியின் தலைவர் அஜய் பங்கா ஏற்றுக்கொண்டார்.
ஈஸ்டர் ஞாயிறு சாட்சிய விசாரணைகளை ஏன் மறைக்க வேண்டும்?
கோட்டாவின் காலத்தில் முன்வைத்த அறிவித்தலை இப்போதும் பேணுவது ஏன்? ஈஸ்டர் ஞாயிறு தாக்குதலை விற்றே அரசாங்கத்தை அமைத்தனர். சபாநாயகரும் அதன்மூலமே வந்தார்.
26 விரல்களுடன் பிறந்த குழந்தை
ஒரு தம்பதிக்கு 26 விரல்களுடன் பெண் குழந்தை பிறந்த சம்பமொன்று ராஜஸ்தான் மாநிலம் பரத்பூர் பகுதியில் இடம்பெற்றுள்ளது.
நீருக்கு அடியில் மெட்ரோ ரயில் சேவை
இந்தியாவில் பலவகையான போக்குவரத்து உள்ளன. பஸ், ரயில் விமானம், மெட்ரோ ரயில், படகு போக்குவரத்து ஆகியவை நடைமுறையில் உள்ளன.
உக்ரேன் அகதிகளுக்கு உதவும் ரஷ்யர்கள்
2022 பெப்ரவரியில் ரஷ்யா, தனது அண்டை நாடான உக்ரேனை ஆக்ரமித்தது. ரஷ்யாவை எதிர்த்து அமெரிக்கா மற்றும் மேற்கத்திய நாடுகளின் உதவியுடன், உக்ரேன் கடுமையாக போரிட்டு வருகிறது.
இங்கிலாந்து பிறீமியர் லீக் சமநிலையில் செல்சி போர்ண்மெத் போட்டி
இங்கிலாந்து கால்பந்தாட்டக் கழகங்களுக்கிடையிலான பிறீமியர் லீக் தொடரில், போர்ண்மெத்தின் மைதானத்தில் நேற்று முன்தினம் நடைபெற்ற அவ்வணியுடனான போட்டியை 0-0 என்ற கோல் கணக்கில் செல்சி சமப்படுத்தியது.
அவுஸ்திரேலியாவுக்கெதிரான தொடரைக் கைப்பற்றிய தென்னாபிரிக்கா
அவுஸ்திரேலியாவுக்கு எதிரான ஒருநாள் சர்வதேசப் போட்டித் தொடரை தென்னாபிரிக்கா கைப்பற்றியது.
ஈஸ்டர் ஞாயிறு தாக்குதல் விவகாரம்: அமைச்சர் ஹரீனின் அடிப்படை மனு வாபஸ்
ஈஸ்டர் ஞாயிறு தாக்குதல் சம்பவம் தொடர்பில் தம்மை கைது செய்வதை தடுக்கும் உத்தரவை பிறப்பிக்குமாறு கோரி ஹரீன் பெர்னாண்டோவால் மனு தாக்கல் செய்யப்பட்ட அடிப்படை உரிமைகள் மீறல் மனு, திங்கட்கிழமை (18) வாபஸ் பெறப்பட்டது.
ஈஸ்டர் ஞாயிறு தாக்குதல்: சபையில் 2 நாள் விவாதம்
ஈஸ்டர் ஞாயிறு தாக்குதல் மற்றும் தேசிய பாதுகாப்பு தொடர்பில் ஒத்திவைப்பு பிரேரணை மீதான விவாதத்தை வியாழன் (21) மற்றும் வெள்ளிக்கிழமை (22) நடத்துவதற்கு பாராளுமன்ற விவகாரங்களுக்கான குழு தீர்மானித்துள்ளது.
"காலை உணவு கட்டாயம்"
பாடசாலை மாணவர்கள் காலை உணவை கட்டாயமாக உட்கொண்டே பாடசாலைக்கு சமூகமளிக்க வேண்டும்.
திலீபனின் நினைவு ஊர்தி தடை கோரிக்கை நிராகரிப்பு
தியாக தீபம் திலீபனின் திருவுருவப்படம் தாங்கிய ஊர்தியானது, வவுனியாவில் பயணிப்பதற்கு பொலிஸார் தாக்கல் செய்த தடை விண்ணப்பத்தை நிராகரித்த வவுனியா நீதிமன்றம், குழப்பங்கள் ஏற்படாத வகையில் பாதுகாப்பினை வழங்குமாறு பொலிஸாருக்கு திங்கட்கிழமை (18) உத்தரவு பிறத்துள்ளது.
திலீபனின் நினைவு ஊர்தி மற்றும் கஜேந்திரன் எம்.பி மீது கொலை வெறி தாக்குதல் அறுவர் கைது: இருவர் பெண்கள் முல்லையில் கவனயீர்ப்பு போராட்டம்
திருகோணமலை, கப்பல்துறை இராணுவ முகாமுக்கு அருகில் வைத்து யாழ். மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் செல்வராசா கஜேந்திரன் மற்றும் திலீபனின் நினைவு ஊர்தி மீது தாக்குதல் நடத்தினர் என்ற குற்றச்சாட்டின் பேரில் பெண்கள் இருவர் உட்பட 6 பேரை, சீனன்குடா மற்றும் திருகோணமலை பொலிஸார் கைது செய்துள்ளனர்.
துடுப்பாட்ட வீரர்களுக்கான தரவரிசைப் பட்டியலில் இரண்டாமிடத்துக்கு முன்னேறிய கில்
சர்வதேச கிரிக்கெட் சபையின் ஒருநாள் சர்வதேசப் போட்டிகளுக்கான துடுப்பாட்டவீரர்களின் தரவரிசையில் இரண்டாமிடத்துக்கு இந்தியாவின் ஷுப்மன் கில் முன்னேறியுள்ளார்.
மூன்றாவது ஒருநாள் சர்வதேசப் போட்டியில் நியூசிலாந்தை வீழ்த்திய இங்கிலாந்து
நியூசிலாந்துக்கு எதிரான நான்கு நி போட்டிகள் கொண்ட ஒருநாள் சர்வதேசப் போட்டித் தொடரில், ஓவலில் நேற்று முன்தினம் நடைபெற்ற மூன்றாவது போட்டியில் இங்கிலாந்து வென்றது.
ஐஎம்எப் குழுவின் மீளாய்வு ஆரம்பம் சவால்களை வெற்றிகொள்ள நெருக்கமாக ஒத்துழைப்பு அர்ப்பணிப்புடன் இருப்பதாக ஷெஹான் தெரிவிப்பு
எதிர்காலத்தில் உள்ள சவால்களை வெற்றிகொள்வதற்காக சர்வதேச நாணய நிதியத்தின் குழுவுடன் நெருக்கமாக ஒத்துழைத்து வருவதாகவும் நிலையான பொருளாதாரத்தை ஸ்தாபிப்பதற்கு அரசாங்கம் முழுமையாக அர்ப்பணிப்புடன் இருப்பதாகவும் நிதி இராஜாங்க அமைச்சர் ஷெஹான் சேமசிங்க தெரிவித்தார்.
ஸ்ரீலங்கனுக்கு 80 விமானிகளை ஆட்சேர்ப்பு செய்யத் திட்டம்
தேசிய விமான நிறுவனமான ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் நிறுவனத்துக்கு இந்த வருடத்தில் 30 விமானிகளையும் அடுத்த வருடத்தின் நடுப்பகுதியில் மேலும் 50 விமானிகளுமாக 80 பேரை ஆட்சேர்ப்பு செய்ய நிறுவனம் திட்டமிட்டுள்ளது.
சுங்கத்துடன் தொடர்பான குற்றங்களே பரவியுள்ளன
போதைப்பொருள் கடத்தல், இலஞ்சம் மற்றும் ஊழல், வர்த்தக அடிப்படையிலான வரும்படிகளின் பணம் தூயதாக்கல் உள்ளடங்கலாக சுங்கத்துடன் தொடர்புடைய குற்றங்கள் என்பன மிகவும் அதிகம் பரவியுள்ள பாரிய இலங்கை மத்திய வங்கி குற்றக்கூறுகளாக இனங்காணப்பட்டுள்ளதாக தேசிய இடர்நேர்வு மதிப்பீட்டில் குறிப்பிடப்பட்டுள்ளது.
65 ஆயிரம் ஏக்கரில் பயிர்கள் பாதிப்பு
2023 ஜனவரி முதல் செப்டெம்பர் 12ஆம் திகதி வரையான காலப்பகுதியில் வறட்சி, கடும் மழை மற்றும் பீடைகள் காரணமாக 65 ஆயிரத்து 871.32 ஏக்கர் நெல் மற்றும் ஏனைய பயிர்களும் 67 ஆயிரத்து 122 விவசாயிகளும் பாதிக்கப்பட்டுள்ளனர்.
அநுராதபுரம் சிறைச்சாலையில் தமிழ்க் கைதிகளின் தலையில் துப்பாக்கி வைத்து அச்சுறுத்தல் இராஜாங்க அமைச்சர் லொஹானுக்கு பிணை
தமிழ் அரசியல் கைதிகளை, முழந்தாளிடச் செய்து, தன்னுடைய துப்பாக்கியை தலையில் வைத்து கொலை அச்சுறுத்தல் விடுத்தார் என குற்றச்சாட்டப்பட்ட பெருந்தோட்ட கைத்தொழில் இராஜாங்க அமைச்சர் லொஹான் எவிந்த ரத்வத்தவை இரண்டு இலட்சம் ரூபாய் பெறுமதியான இரண்டு சரீரப் பிணைகளில் விடுவிக்குமாறு அநுராதபுரம் பிரதான நீதவானும் மற்றும் மேலதிக மாவட்ட நீதிபதியுமான நாலக சஞ்சீவ ஜயசூரிய வியாழக்கிழமை (14) உத்தரவிட்டார்.
சப்ரகமுவ மாகாண மட்ட விளையாட்டுப் போட்டியின் ஈட்டி எறிதலில் கந்தலோயா பாடசாலை மாணவன் சாதனை
சப்ரகமுவ மாகாண மட்ட 20 வயதுக்குட்பட்ட ஈட்டியெறிதலில் கந்தலோயா பாடசாலை மாணவன் எம்.
4 ஆயிரம் அடி ஆழ குகையில் சிக்கிய வீரர்
உலகில் உள்ள குகைகளுக்கு சென்று ஆராய்வதில் ஆர்வம் கொண்டவர் மார்க் டிக்கி (வயது 40). இவர் அமெரிக்காவை சேர்ந்தவர்.
ஆசியக் கிண்ணம்: இலங்கையை வென்று இறுதிப் போட்டியில் இந்தியா
ஆசியக் கிண்ணத் தொடரின் இறுதிப் போட்டிக்கு இந்தியா தகுதி பெற்றுள்ளது.
குரங்கு ஏற்றுமதி விவகாரம்: மனு விசாரணை நிறைவு
இலங்கையின் 'டோக் மக்காக்' குரங்குகள் சீனாவுக்கு அனுப்பப்பட மாட்டாது என்று அரசாங்கம் உறுதியளித்த நிலையில், குரங்கு ஏற்றுமதிக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட மனு மீதான விசாரணையை நிறைவு செய்வதற்கு மேன்முறையீட்டு நீதிமன்றம் தீர்மானித்துள்ளது.
யாழ். போதனாவில் ஸ்மார்ட் போனுக்கு தடை
கடமை நேரத்தில் தாதியர்கள், சுகாதார உதவியாளர்கள், பாதுகாப்பு பணியாளர்கள் மற்றும் நோயாளர் பராமரிப்பில் ஈடுபட்டுள்ளவர்கள் ஆகியோர் திறன்பேசிகளை (ஸ்மார்ட் போன்) பயன்படுத்த யாழ். போதனா வைத்தியசாலை பணிப்பாளர் த. சத்தியமூர்த்தி தடைவிதித்துள்ளார்.
தாதியர் பயிற்சிக்கு விண்ணப்பம் கோரல்
தாதியர் பயிற்சிக்காக 3,500 மாணவர்களை உள்வாங்குவதற்கு சுகாதார அமைச்சு நடவடிக்கை எடுத்துள்ள நிலையில், அதற்கான விண்ணப்பங்களை வெள்ளிக்கிழமை (15) முதல் ஒக்டோபர் 18 ஆம் திகதி வரை அனுப்பி வைக்க முடியும் என்று அமைச்சு தெரிவித்துள்ளது.
கியூபாவுக்கு பறந்தார் ஜனாதிபதி: பதில் அமைச்சர்கள் நியமனம்
கியூபா மற்றும் அமெரிக்காவுக்கான உத்தியோகபூர்வ விஜயமொன்றை மேற்கொண்டு ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க, புதன்கிழமை (13) அதிகாலை நாட்டிலிருந்து புறப்பட்டுச் சென்றதுடன், ஜனாதிபதி வெளிநாடு சென்றுள்ள காலப்பகுதியில் அவருக்கு கீழுள்ள அமைச்சுகளின் பொறுப்புகள் இராஜாங்க அமைச்சர்களிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளன.
"ரஷ்யாவுக்கு ஆதரவளிப்பேன்"
அமெரிக்கா, ஜப்பான், தென் கொரியா ஆகிய நாடுகளுக்கு எதிராக செயற்பட்டு வரும் வட கொரியா ஜனாதிபதி கிம் ஜாங் உன், ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புட்டினுடன் நடத்திய தனிப்பட்ட சந்திப்பு நிறைவடைந்தது.
"கொல்கத்தா வாங்க"
கொல்கத்தாவில் நடைபெற உள்ள தொழில் முனைவோர் மாநாட்டில் பங்கேற்க வருமாறு இலங்கை ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவிடம் இந்திய மேற்கு வங்க முதலமைச்சர் மம்தா பானர்ஜி நேரில் அழைப்பு விடுத்துள்ளார்.