CATEGORIES
Kategorier
கோதுமை மா இறக்குமதி: உரிம நடைமுறை இரத்து
வரி அதிகரிப்பு; விலை உயராது
மண்வெட்டி கணையால் தாக்கியதில் ஒருவர் மரணம்
லிந்துலை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட வளஹா தோட்டத்தில் செவ்வாய்க்கிழமை (29) இரவு ஏற்பட்ட கைகலப்பில் மண்வெட்டி தடியில் தாக்கப்பட்டதால் 3 பிள்ளைகளின் தந்தையான 40 வயதுடைய வீரசாமி பெஞ்சமின் சிகிச்சை பலனின்றி புதன்கிழமை (30) அதிகாலை மரணமடைந்தார்.
ரூ.3 கோடி பெறுமதியான 3 கிலோ கிராம் ஐஸ் சிக்கியது
மன்னார் - மதவாச்சி பிரதான வீதியின் உயிலங்குளம் பகுதியில் வைத்து சுமார் 3 கிலோ 394 கிராம் ஐஸ் போதைப்பொருளுடன் ஒருவரை விசேட அதிரடிப்படையினர் செவ்வாய்க்கிழமை (29) மாலை கைது செய்துள்ளனர்.
காலநிலை மாற்றம் மேலும் மோசமாக்கும்
பலவீனமான மற்றும் போரால் பாதிக்கப்பட்ட நாடுகளில் காலநிலை மாற்றம் மோதல்களை மோசமாக்கும் வாய்ப்பு உள்ளதாக சர்வதேச நாணய நிதியம் தெரிவித்துள்ளது.
காலி சிறை பக்டீரியா கொழும்புக்கு வந்தது
காலி சிறைச்சாலையில் இரண்டு கைதிகளை பலிகொண்ட 'மெனிங்கோகோகல்' எனும் பக்டீரியா தொற்றுக்குள்ளான நோயாளி கொழும்பு மாவட்டத்தில் அடையாளம் காணப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
2 தடைகளை மீறி பறந்தவர் மீண்டும் பறந்து வந்தார்
இலங்கையின் இரண்டு நீதிமன்றங்களினால் விமானப் பயணத்துக்கு தடை விதிக்கப்பட்டிருந்த நபர் ஒருவர் இந்தியாவுக்கு தப்பிச் சென்றிருந்த நிலையில், குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்கள அதிகாரிகள் மீண்டும் அவரை இலங்கைக்கு அழைத்து வந்துள்ளனர்.
110 ஆவது ஜனன தினம்
‘மலையகத்தின் தந்தை' என போற்றப்படுகின்ற பெருந்தலைவர் அமரர். சௌமியமூர்த்தி தொண்டமானின் 110 ஆவது ஜனன தினம், கொழும்பிலும், மலையக பகுதிகளிலும் புதன்கிழமை (30) அனுஷ்டிக்கப்பட்டது.
அமெரிக்காவையும் ஐரோப்பிய ஒன்றியத்தையும் வலியுறுத்த வேண்டும்
தமிழர்தாயக காணாமல் ஆக்கப்பட்டோர் சங்கம் தெரிவிப்பு
டயலொக் பாடசாலைகள் றக்பி விலகல் முறையிலான தொடர்: அரையிறுதியில் சென். ஜோசப் கல்லூரி
டயலொக் பாடசாலைகள் றக்பி விலகல் முறையிலான தொடரின் அரையிறுதிப் போட்டிக்கு சென். ஜோசப் கல்லூரி தகுதி பெற்றுள்ளது.
இன்று ஆரம்பிக்கிறது ஆசியக் கிண்ணம்
ஆசியக் கிண்ணத் தொடரானது பாகிஸ்தானின் முல்தானில் நேபாளத்துக்கும் அவ்வணிக்கும், இடையே இன்று பிற்பகல் 3 மணிக்கு நடைபெறவுள்ள குழு ஏ போட்டியுடன் ஆரம்பிக்கிறது.
புஷ்-அப்பில் கின்னஸ் சாதனை
சமீப காலமாக சிறுவர், சிறுமிகள், இளைஞர்கள், பெண்கள் என பலரும் பல்வேறு வகைகளில் தங்களது திறமைகளை நிரூபித்து கின்னஸ் சாதனை படைத்து வருகின்றனர்.
கிம் ஜோங் உன்னை கொலை செய்ய முயற்சி
வடகொரிய தலைவர் கிம் ஜோங் உன்னை கொலை செய்ய அந்நாட்டின் தலைநகரில் நடத்தப்பட்ட குண்டு வெடிப்பு பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.
இராணுவ மேஜராக பென்குயின் நியமனம்
ஸ்கொட்லாந்து நாட்டின் எடின்பர்க் விலங்கியல் பூங்காவில் வசித்து வந்த சார் நில்ஸ் ஓலவ் 3 என்ற ராஜா வகை பென்குயின், தற்போது அந்நாட்டின் இராணுவ மேஜர் ஜெனரலாக நியமனம் செய்யப்பட்டுள்ளது. நோர்வேஜியன் அரச பிரிவு படைக்கு தளபதியாக இந்த பென்குயின் செயல்பட உள்ளது.
மலையகத்தில் ஆன்மீக அருளுரைகள்
மலையகத்தில் தவத்திரு சிவாக்கர தேசிக சுவாமிகளின் ஆன்மீக அருளுரைகள் தமிழ் நாடு திருஞானசம்பந்தர் திருமடத்தைச் சேர்ந்த திருக்கயிலாய பரம்பரை ஸ்ரீ கந்த பரம்பரை சூரியனார் கோவில் ஆதீனம் ஸ்ரீ கார்யம் வாமதேவ தவத்திரு சிவாக்கர தேசிக சுவாமிகள் கேகாலை மாவட்டத்திலும், கொட்டகலை.
விபத்தில் காயமடைந்த பொலிஸ் உத்தியோகஸ்தர் மரணம்
முறிகண்டிக்கும், இரணைமடு சந்திக்கும் இடையில் ஏ-9 வீதியில் கடந்த 25ம் திகதி இரவு 10.30 மணியளவில் இடம்பெற்ற வீதி விபத்தில் பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவர் படுகாயம் அடைந்து கிளிநொச்சி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டார்.
நீதியை பெற்றிட ஒன்றிணைவோம்
மட்டக்களப்பு, மன்னார் ஆர்ப்பாட்டத்துக்கு ஜனா எம்.பி அழைப்பு
இடைக்கால கொடுப்பனவுக்கு இலங்கை அரசாங்கம் இணக்கம்
எக்ஸ்பிரஸ் பேர்ள் கப்பல் விபத்துக்கான இடைக்கால கொடுப்பனவை பெறுவதற்கான இலங்கை அரசாங்கத்தின் இணக்கப்பாட்டை அந்த நிறுவனங்களுக்கு அனுப்பிவைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக சட்ட மா அதிபர் திணைக்களம் தெரிவித்துள்ளது.
தமிழர் விரோத நடவடிக்கைக்கு சர்வதேச சமூகம் கடிவாளமிட வேண்டும்
13ஆவது திருத்தத்தை நிறைவேற்றுவதைத் தடுத்து நிறுத்துவதை நோக்கமாகக் கொண்டு, தமிழ் மக்களுக்கு எதிராக சிங்கள பௌத்த இனவாதப் போராட்டங்கள் கட்டவிழ்த்து விடப்பட்டுள்ளதாகத் தெரிவித்த ஜனநாயக தமிழ் தேசிய கூட்டணியின் உத்தியோகபூர்வ பேச்சாளரும் ஈழ மக்கள் புரட்சிகர விடுதலை முன்னணியின் தலைவருமான சுரேஷ் க.பிரேமச்சந்திரன், சர்வதேச சமூகமும் குறிப்பாக இந்தியாவும் அரசாங்கத்தினதும் சிங்கள பௌத்த இனவாத சக்திகளினதும் தமிழர் விரோத நடவடிக்கைகளுக்குக் கடிவாளமிடவேண்டும் என்று வலியுறுத்தியுள்ளார்.
பங்கரவாத எதிர்ப்பு சட்டமூலத்தை மீண்டும் தயாரிக்க அனுமதி
பயங்கரவாத எதிர்ப்புச் சட்டத்தை அறிமுகப்படுத்துவதற்காக சட்ட வரைஞரால் தயாரிக்கப்பட்டு அரச வர்த்தமானியில் வெளியிடப்பட்ட சட்டமூலத்தில் திருத்தங்களை உள்வாங்கி பயங்கரவாத எதிர்ப்புச் சட்டமூலத்தை மீண்டும் தயாரிப்பதற்காக சட்டவரைஞருக்கு ஆலோசனை வழங்க அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது.
92.1 மில்லியன் முட்டைகளை கொள்வனவு செய்ய அனுமதி
இந்தியாவில் இருந்து எதிர்வரும் 03 மாதங்களுக்கு 92.1 மில்லியன் முட்டைகளைக் கொள்வனவு செய்வதற்கு அமைச்சரவை அங்கிகாரம் வழங்கியுள்ளது.
வெளிநாட்டுப் பயணங்களை தவிர்க்குமாறு அறிவித்தல்
எதிர்வரும் செப்டெம்பர் மாதம் 5, 6, 7 மற்றும் 8 ஆம் திகதிகளில் வெளிநாட்டுப் பயணங்களைத் தவிர்க்குமாறு ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க, அமைச்சர்கள் மற்றும் ஆளும் கட்சி உறுப்பினர்களுக்கு விசேட அறிவித்தல் விடுத்துள்ளார்.
ராஜன் ராஜகுமாரி மரணம் பொலிஸ் உபபரிசோதகருக்கு செப், II வரை விளக்கமறியல்
வெலிக்கடை பொலிஸாரால் கைது செய்யப்பட்டதன் பின்னர் உயிரிழந்த ராஜன் ராஜகுமாரியின் மரணம் குறித்து சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்ட வெலிக்கடை பொலிஸ் உப பொலிஸ் பரிசோதகரை எதிர்வரும் 11 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு கொழும்பு பிரதான நீதவான் நீதிமன்றம், செவ்வாய்க்கிழமை உத்தரவிட்டது.
போதைக்கு அடிமையானவர் கிருமி தொற்றால் உயிரிழப்பு
அதிகளவான ஹெரோயினை ஊசி மூலம் நுகர்ந்து வந்த யாழ்ப்பாணம் ஆனைக்கோட்டை பகுதியை சேர்ந்த இளைஞர் ஒருவர் கிருமி தொற்றுக்கு உள்ளாகி சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.
இன்று திறப்பு
அஸ்வெசும நலன்புரி கொடுப்பனவுகளை வழங்குவதற்காக மாத்திரம் இன்றையதினம் (30) அரச வங்கிகள் திறக்கப்படும் என்று நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய தெரிவித்துள்ளார்.
20 நாடுகளில் இலங்கையை முன்மாதிரியாக கொள்க
ஐ.நா வதிவிட பிரதிநிதி பாராட்டு
அங்க பிரதட்சணம் செய்தவர் மரணம்
தொண்டைமானாறு செல்வச்சந்நிதி முருகன் ஆலயத்தில் அங்கப் பிரதட்சணம் செய்த யாழ்ப்பாணம், நாவலர் வீதியை சேர்ந்த சின்னையா சுரேஷ்குமார் (வயது 57) என்பவர் உயிரிழந்துள்ளார்.
1924 க்கு அழைக்கவும்
689,803 அஸ்வெசும பயனாளிகளின் வங்கிக் கணக்குகளில் 4.395 பில்லியன் ரூபாய் ஏற்கெனவே வைப்பிலிடப்பட்டுள்ளதாக நிதி இராஜாங்க அமைச்சர் ஷெஹான் சேமசிங்க தெரிவித்தார்.
இராணுவத்திடம் கொடுத்த உறவுகளுக்கு “உயிர் இருக்கா? இல்லையா?"
\"பாதிக்கப்பட்ட தரப்பினருக்கு என்ன வேதனை \"என புரிந்து கொண்டால் மன்னாரில் இடம்பெறும் சர்வதேச காணாமல் ஆக்கப்பட்டோர் தின போராட்டத்துக்கு அனைவரும் வருவீர்கள். நாங்கள் ஒவ்வொருவரையும் இராணுவத்திடம் கொடுத்து உயிர் இருக்கா? இல்லையா? என்ற திண்டாட்டத்தின் மத்தியில் தான் போராட்டத்தை மேற்கொள்கிறோம்\" என்று முல்லைத்தீவு மாவட்ட வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளின் சங்கத்தின் இணைப்பாளர் மரியசுரேஸ் ஈஸ்வரி தெரிவித்தார்.
உலகத் தடகள சம்பியன்ஷிப்பில் தங்கம் வென்றார் நீரஜ் சோப்ரா
ஹங்கேரியில் நடைபெற்ற உலகத் தடகள சம்பியன்ஷிப் போட்டிகளில் இந்தியாவின் நீரஜ் சோப்ரா தங்கப் பதக்கம் வென்றுள்ளார்.
விண்வெளிக்கு செல்லும் 'வயோமித்ரா'
மனிதர்களை விண்வெளிக்கு அனுப்பும் ககன்யான் திட்டத்தை செயல்படுத்த இஸ்ரோ தீவிரமாக ஈடுபட்டு வருகிறது. இந்த திட்டத்தின் கீழ் மூன்று பேர் விண்வெளிக்கு அனுப்பப்பட உள்ளனர்.