CATEGORIES
Kategorier
இலங்கை வான் பரப்பின் கட்டணங்கள் அதிகரிப்பு
கொழும்பு விமானப் பயணத் தகவல் வலயத்துக்கு மேலாக வான்பறப்பு செய்கின்ற சர்வதேச விமானப் பயணங்களுக்காக அறவிடப்படும் விமான செலுத்தல்களுக்கான கட்டணத்தைத் திருத்தம் செய்ய அமைச்சரவை அங்கிகாரம் அளித்துள்ளது.
"தேர்தலுக்கு நான் எதிரானவன் அல்ல"
உள்ளூராட்சி சபைத்தேர்தலால் எனத் தெரிவித்த, நாட்டில் ஆட்சிமாற்றம் ஏற்படப்போவதில்லை இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் பொதுச்செயலாளரும், அமைச்சருமான ஜீவன் தொண்டமான், தற்போதைய பொருளாதார நெருக்கடியில் நிதியை மக்கள் நலன்களுக்காகவே பயன்படுத்த வேண்டும் என்றார்.
மின்கட்டண திருத்தத்தை இரத்து செய்யுமாறு மனு
உத்தேச மின் கட்டண திருத்தத்துக்கு அனுமதி வழங்கும் அமைச்சரவை தீர்மானத்தை இரத்து செய்யுமாறு கோரி மேன்முறையீட்டு நீதிமன்றத்தில் செவ்வாய்க்கிழமை (24) ரிட் மனு தாக்கல் செய்யப்பட்டது.
அடுத்த ஆறு மாதங்களில் கடன் மறுசீரமைப்பு பேச்சுகள் முடியும்
மத்திய வங்கி ஆளுநர் அறிவிப்பு
அஜித் பிரசன்னவுக்கு 4 ஆண்டுகள் கடூழிய சிறை
நீதிமன்றத்தை அவமதித்தார் என்று குற்றம் சுமத்தப்பட்டிருந்த ஓய்வு பெற்ற இராணுவ மேஜரும் சட்டத்தரணியுமான அஜித் பிரசன்னவை குற்றவாளியாக இனங்கண்ட உயர்நீதிமன்றம், அவருக்கு 4 வருட கடூழிய சிறைதண்டனை விதித்து, செவ்வாய்க்கிழமை (24) தீர்ப்பளித்தது.
வரிகள் இன்றேல் IMF உதவி இல்லை
விதிக்கப்பட்டுள்ள புதிய வரிகளை நீக்கினால் சர்வதேச நாணய நிதியத்துடன் உடன்படிக்கையில் கைச்சாத்திட முடியாது என அமைச்சரவைப் பேச்சாளரும் அமைச்சருமான பந்துல குணவர்தன தெரிவித்தார்.
இந்தியாவின் உறுதிமொழியை ஏற்றது ஐ.எம்.எப்
ஏனைய கடன்வழங்குநர்களுடன் இலங்கை பேச்சு; சீனாவும் உத்தரவாதம் வழங்கும் என எதிர்பார்ப்பு
முடிசூட்டு விழாவில் நிகழப்போகும் மாற்றம்
பிரித்தானியாவின் மன்னர் மூன்றாம் சார்லஸின் முடி சூட்டு விழாவில் பல நூற்றாண்டுகளாகக் கடைப்பிடிக்கப்பட்டு வந்தபாரம்பரிய நிகழ்வொன்று இம்முறை கைவிடப்பட்டுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.
இங்கிலாந்து பிறீமியர் லீக்: யுனைட்டெட்டை வென்றது ஆர்சனல்
இங்கிலாந்து கால்பந்தாட்டக் கழகங்களுக்கிடையிலான பிறீமியர் லீக் தொடரில், தமது மைதானத்தில் நேற்று முன்தினமிரவு நடைபெற்ற மன்செஸ்டர் யுனைட்டெட்டுடனான போட்டியில் 3-2 என்ற கோல் கணக்கில் ஆர்சனல் வென்றது.
இன்று மூன்றாவது ஒருநாள் சர்வதேசப் போட்டி: இந்தியாவுக்கெதிராக ஆறுதல் வெற்றி பெறுமா நியூசிலாந்து?
இந்திய, நியூசிலாந்து அணிகளுக்கு இடையிலான மூன்றாவது ஒருநாள் சர்வதேசப் போட்டியானது இந்தூரில் இன்று பிற்பகல் 1.30 மணிக்கு நடைபெறவுள்ளது.
இந்திய கடற்படையில் ‘ஐ.என்.எஸ் வகிர் '
இந்தியக் கடற்படையில் நேற்றைய தினம்(23) ஐ.என்.எஸ் வகிர் (INS vagir) என்ற நீர் மூழ்கிக் கப்பலொன்று புதிதாக இணைக்கப்பட்டுள்ளது.
ஒடிசாவில் பிரமாண்டம்
இந்திய சுதந்திரப் போராட்ட வீரர் நேதாஜி சுபாஷ் சந்திர போசின் 126ஆவது பிறந்த தினம் நேற்றைய தினம் (23) நாடு முழுவதும் கொண்டாடப்பட்டது.
வசூல் மழையில் “அவதார் 2”
ஜேம்ஸ் கேமரூன் இயக்கிய பிரம்மாண்ட ஹொலிவுட் திரைப்படமான ‘அவதார் -த வே ஆப் வோட்டர்' படம் டிசெம்பர் 16ம் திகதி வெளியானது. தொடர்ந்து வசூலைக் குவித்து வந்த படம் தற்போது 2 பில்லியன் டொலர் வசூலைக் கடந்துள்ளது.
கங்கனாவின் அடமானம்
மறைந்த இந்திய பிரதமர் இந்திரா காந்தி வாழ்க்கையை மையமாக வைத்து தயாராகும் 'எமர்ஜென்சி’ படத்துக்காக தனது அனைத்து சொத்துகளையும் அடமானம் வைத்ததாக நடிகை கங்கனா தெரிவித்துள்ளார்.
21 தீவுகளுக்குப் பெயர் சூட்டினார் மோடி
இந்திய சுதந்திர போராட்ட வீரர் 'நேதாஜி சுபாஷ் சந்திரபோசின்' பிறந்தநாளை நினைவுகூரும் வகையில், நேற்றைய தினம் (23) ‘பராக்கிரம தினமாகக்' கொண்டாடப்படும் என மத்திய அரசு அறிவித்திருந்தது.
பதுளையில் நிச்சயம் மாற்றம் நிகழும்
லெட்சுமனார் சஞ்சய் தெரிவிப்பு
நுவரெலியா மாவட்ட வேட்பு மனுக்களில் 17 நிராகரிப்பு
108 வேட்பு மனுக்கள் தாக்கல்
மொனராகலை வைத்தியசாலையின் சுகாதார உதவியாளர்கள் கடமைகளிலிருந்து விலகினர்
வைத்தீயசாலையீன் சேவைகள் பாத்ப்பு
புதிய அமைச்சர்களை நியமிப்பது அநாவசியமான செலவாகும்
உயர்தரப் பரீட்சைகள் நடைபெறும்போது மின் வெட்டு என தெரிவிக்கும் அமல்ப்படுத்தக்கூடாது ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் பாராளுமன்ற உறுப்பினர் சஞ்சீவ எதிரிமான்ன, நாட்டின் தற்போதைய சூழ்நிலையில் புதிய அமைச்சர்களை நியமிப்பது அநாவசியமான செலவு என்கிற கருத்து நாட்டில் காணப்படுவதாகவும் தெரிவித்தார்.
2022 டிசெம்பர் மாத பணவீக்கம் சரிவு
2022 ஒக்டோபரில் 70.6 சதவீதமாகக் காணப்பட்ட பணவீக்கம் நவம்பர் மாதத்தில் 65 சதவீதமாக வீழ்ச்சியடைந்ததாகவும் டிசெம்பரில் 59.2 சதவீதமாக மேலும் குறைவடைந்துள்ளதாகவும் திணைக்களம் சுட்டிக்காட்டியுள்ளது.
இலவச டீசலை விநியோகிக்க 12 கோடி ரூபாய் செலவாகும்
சீனாவால் இலவசமாக வழங்கப்பட்ட டீசலை விநியோகிப்பதற்கு 12.2 கோடி ரூபாய் வரை அரசாங்கத்துக்கு செலவாகும் என்று எதிர்பார்க்கப்படுவதாக விவசாய அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்தார்.
எரிவாயு சிலிண்டர் விலை மீண்டும் அதிகரிக்கும்?
உலக சந்தையில் எரிவாயுவின் விலை அதிகரிப்பு காரணமாக எதிர்வரும் பெப்ரவரி மாதம் உள்நாட்டு எரிவாயு சிலிண்டரின் விலை மீண்டும் அதிகரிக்கலாம் என்று லிட்ரோ எரிவாயு நிறுவன தகவல்கள் தெரிவிக்கின்றன.
7 சூழ்ச்சிகளும் தோல்வி
உள்ளூராட்சி சபைத் தேர்தலை தடுப்பதற்கு அரசாங்கம் கடந்த இரண்டரை மாதங்களில் 7 தடவைகள் சூழ்ச்சிகளை மேற்கொண்ட போதும் அவை அனைத்தும் தோல்வியடைந்துள்ளதாக சுதந்திர ஜனதா சபையின் அழைப்பாளர் பாராளுமன்ற உறுப்பினர் பேராசிரியர் ஜீ.எல்.பீரிஸ் தெரிவித்துள்ளார்.
‘கோரம்’ இன்றி எடுக்கப்படும் தீர்மானம்: செல்லாது செல்லாது
தேர்தல் ஆணைக்குழுவில் கோரம் (உறுப்பினர்களின் எண்ணிக்கை) இன்றி எடுக்கப்படும் எந்தவொரு தீர்மானமும் செல்லுப்படியாகாது எனத் தெரிவித்துள்ள இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவின் முன்னாள் ஆணையாளர் கலாநிதி பிரதிபா மஹாநாம ஹேவா, தேர்தல் திகதியை ஊடகங்களுக்கு அறிவிப்பது அல்ல; அந்தத் திகதியை வர்த்தமானியில் வெளியிடுவதே சட்டமாகும் என்றார்.
அவுஸ்திரேலிய பகிரங்க டென்னிஸ் தொடர்: வெளியேற்றப்பட்ட ஸ்வியாடெக்
அவுஸ்திரேலியாவில் நடைபெற்று வரும் அவுஸ்திரேலிய பகிரங்க டென்னிஸ் தொடரிலிருந்து உலகின் முதல்நிலை வீராங்கனையான இகா ஸ்வியாடெக் வெளியேற்றப்பட்டுள்ளார்.
பைடன் வீட்டில் எப்.பி.ஐ அதிரடி சோதனை
அண்மையில் அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடனின் வீடு மற்றும் அவரது தனிப்பட்ட அலுவலகத்தில் எப்.பி.ஐ. அதிகாரிகள் நடத்திய அதிரடிச் சோதனையில் அரசின் அதிமுக்கிய ரகசிய ஆவணங்கள் கண்டுபிடிக்கப்பட்டன.
தலிபான் கொடியுடன் அதிகாரிகள்; மன்னிப்பு கேட்டது ஐ.நா
ஆப்கானிஸ்தானில் கடந்த வருடம் தலிபான்கள் ஆட்சியைக் கைப்பற்றியதிலிருந்து அங்கு பல்வேறு கடுமையான கட்டுப்பாடுகளை விதித்து வருகின்றனர்.
ஆசனப் பட்டியால் சர்ச்சையில் சிக்கிய ரிஷி
காரில் ஆசனப்பட்டி அணியாமல் சென்றதால் பிரித்தானியாவின் பிரதமர் ரிஷி சுனக்கிற்கு 100 பவுண்டுகள் அபராதமாக விதிக்கப்பட்டுள்ளன.
நியூசிலாந்துக்கு எதிரான தொடரை கைப்பற்றிய இந்தியா
நியூசிலாந்துக்கு எதிரான ஒருநாள் சர்வதேசப் போட்டித் தொடரை இந்தியா கைப்பற்றியது.
கொவிட் விதிமுறைகளில் எந்த மாற்றமும் இல்லை
2022ஆம் ஆண்டு டிசெம்பர் முதல் சுற்றுலாப் பயணிகளுக்காக நடைமுறையில் இருந்த கொவிட நெறிமுறைகளில் எந்த மாற்றமும் செய்யப்படவில்லை என இலங்கை சுற்றுலா அபிவிருத்தி அதிகார சபை தெரிவித்துள்ளது.