CATEGORIES
Kategorier
புறப்பட்ட 26 நிமிடங்களில் தப்பியது பயிற்சி விமானம்
விமானிகளின் சாமர்த்தியத்தால் அனர்த்தம் தவிர்க்கப்பட்டது
ஒருநாள் மட்டுமே சபையமர்வு: மதிய போசனம் இன்றி நடக்கும்
கொரோனா வைரஸ் தொற்றுச் சூழல் காரணமாக இவ்வார பாராளுமன்ற அமர்வு, இன்று (08) மட்டுமே நடைபெறும்.
ஆடைத் தொழிற்சாலைக்கு முன்பாக எதிர்ப்பு: கைதான 10 பேரும் விடுதலை
புதுக்குடியிருப்பு ஆடைத்தொழிசாலையைத் திறப்பதைத் தடுப்பதற்காக, எதிர்ப்பு நடவடிக்கையில் ஈடுபட்ட புதுக்குடியிருப்பு பிரதேச சபை உபதவிசாளர் க.ஜெனமேஜெயந் உள்ளிட்ட பத்து பேர், புதுக்குடியிருப்பு பொலிஸாரால கைது செய்யப்பட்டனர். அவர்கள் அனைவரும் பொலிஸ் பிணையில் பின்னர் விடுதலை செய்யப்பட்டுள்ளனர்.
'குடு அஞ்சு'வின் ஜோடி கைது
போதைப்பொருள் வியாபாரத்தில் ஈடுபட்டனர் என்ற குற்றச்சாட்டின் கீழ், இளம் தம்பதியினர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
தடுப்பூசியை ஏற்றிக்கொள்ள 69 ஆயிரம் பேர் தகுதி
கிளிநொச்சி மாவட்டத்தில், 69 ஆயிரத்து 704 பேர் தடுப்பூசிகளை செலுத்திக்கொள்வதற்கு தகுதி பெற்றுள்ளனரென, கிளிநொச்சி மாவட்டப் பிராந்திய சுகாதார சேவைகள் பணிமனை தகவல்கள் தெரிவிக்கின்றன.
சபிக்கப்பட்ட இந்த ஆட்சியில் 'கொல்கிறது கொரோனா; பட்டினியும் கொல்லும்'
கொரோனா வைரஸின் மூன்றாவது அலையை அரசாங்கத்தால் கட்டுப்படுத்த முடியாத நிலை ஏற்பட்டுள்ளதாகத் தெரிவித்த ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் எஸ்.எம்.மரிக்கார், கொரோனா வைரஸால் மக்கள் உயிரிழந்து வருகின்ற நிலையில், பட்டினியால் மக்கள் உயிரிழக்கும் நிலைமை ஏற்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
பயணக் கட்டுப்பாடுகளை '21 வரை நீடிக்கவும்'
நீடிக்காவிடின் கட்டுப்பாடுகள் பிரயோசனமற்றதாகிவிடும்
காக்கைதீவு 'இறங்குதுறையை விஸ்தரிக்கவும்'
யாழ்ப்பாணம், காக்கைதீவு இறங்கு துறையை விஸ்தரித்துத் தருமாறு, அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவிடம் காக்கைதீவு கடற்றொழிலாளர் கோரிக்கை விடுத்துள்ளனர்.
'குழந்தைகளை கவனிக்கவும்'
கொரோனா வைரஸ் தொற்றிலிருந்து குழந்தைகளைப் பாதுகாக்கவும், குழந்தைகளுக்கு நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கவும் மஞ்சள் நிறத்திலான காய்கறிகள், மூலிகைகள் கொண்ட அரிசி உள்ளிட்ட சத்தான உணவுகளை வழங்குங்கள் என அறிவுரை வழங்கியுள்ள பொரளை சீமாட்டி வைத்தியசாலையின் சிறுவர் நோய் தொடர்பிலான விசேட வைத்திய நிபுணர் தீபால் பெரேரா, சத்தான உணவுகளைக் கொடுப்பதே சிறந்தது என்றார்.
பாராளுமன்றத்தால் அகதிகளை நாடு கடத்தும் சட்டத்துக்கு அங்கிகாரம்
அகதிகளை ஐரோப்பாவுக்கு வெளியேயுள்ள நாடுகளுக்கு நாடுகடத்த அனுமதிக்கும் சட்டம் ஒன்றை டென்மார்க் பாராளுமன்றம் நிறைவேற்றியுள்ளது.
வேற்றுக் கிரக தொழில்நுட்பத்துக்கு 'ஆதாரமில்லை'
'ஆனால் மறுக்கவும் முடியாது'
நியூசிலாந்துக்கு எதிரான முதலாவது டெஸ்டில் போராடும் இங்கிலாந்து
நியூசிலாந்துக்கு எதிரான முதலாவது டெஸ்டின் நேற்று முன்தினம் இரண்டாம் நாளில் இங்கிலாந்து போராடி வருகிறது.
கொரோனாவால் 1,700க்கும் மேற்பட்ட 'குழந்தைகள் நிர்க்கதி'
மத்திய அரசு புதிய விதிமுறைகளை வெளியிட்டது
ஆடைத்தொழிற்சாலை ஊழியர்களுக்கு விரைவில் தடுப்பூசி
கிளிநொச்சி மாவட்டத்தில் இயங்கிவரும் MAS holdings எனும் நிறுவனத்தின் 'விடியல் மற்றும் வானவில்' என்ற ஆடைத்தொழிற்சாலை ஊழியர்களுக்கு தடுப்பூசி வழங்குவதற்கான ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
திரிபோஷா திருட்டு
அம்பாறை, ஆலையடிவேம்பு பிரதேச செயலாளர் பிரிவின் கண்ணகி கிராமத்தின் சுகாதார நிலையத்தில் வைக்கப்பட்டிருந்த 30 திரிபோஷா பக்கெட்டுகள் திருடப்பட்டுள்ளதாக அக்கரைப்பற்று பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.
எண்ணெய் கசிவு ஏற்படுமாயின் கட்டுப்படுத்த துரித நடவடிக்கை
இலங்கை கடற்பரப்பில் எரிந்து, கடலுக்குள் மூழ்கிக்கொண்டிருக்கும் எக்ஸ்பிரஸ் பேர்ள் கப்பலிலிருந்து எண்ணெய் கசிவு ஏற்படுமாயின் அதைக்கட்டுப்படுத்த அனைத்து நடவடிக்கைகளும் முன்னெடுக்கப்பட்டுள்ளன என கடல் மாசுறல் தடுப்பு அதிகார சபை தெரிவித்துள்ளது.
நினைவேந்திய 10 பேருக்கு விளக்கமறியல்
மட்டக்களப்பு, வாழைச்சேனை பிரதேசத்திலுள்ள கடற்கரையில், மே 18ஆம் திகதி முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நிகழ்வை நடத்திய 10 பேரையும், எதிர்வரும் 16ஆம் திகதி வரையிலும் விளக்கமறியலில் வைக்குமாறு, வாழைச்சேனை மாவட்ட நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
சுகாதார ஊழியர்கள் பணிப் புறக்கணிப்பு
நாடளாவிய ரீதியில் வைத்தியசாலைகள் மற்றும் சுகாதார நிலையங்களில் பணியாற்றும் சுகாதார ஊழியர்கள், நேற்று (03) பணிப் புறக்கணிப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
அழையா விருந்தாளியாக வந்தால் கவனம்
வைத்தியர்கள் எனத் தங்களை இனங்காட்டிக்கொண்ட இருவர், தனிமைப்படுத்தப்பட்ட வீடுகள் உள்ளிட்ட பல்வேறு இடங்களுக்குச் சென்று சிகிச்சை வழங்கியபோது கைது செய்யப்பட்டுள்ளனர்.
பல்லேகலையில் 74 பேர் மயங்கினர்
கண்டி, பல்லேகலை பகுதியில் பதற்றமான நிலைமையொன்று, நேற்று (02) ஏற்பட்டிருந்தது, பல்லேகலை முதலீட்டு ஊக்குவிப்பு வலயத்திலுள்ள ஆடைத் தொழில்சாலையில் கடமையாற்றும் பணியாளர்களில் 74 பேர் திடீரென சுகவீனமடைந்துள்ளனர்.
யாழ். பல்கலைக்கழகத்தில் தடுப்பூசி ஏற்றும் பணி ஆரம்பம்
யாழ். பல்கலைக்கழகப் பணியாளர்களுக்கு கொரோனா தடுப்பூசி வழங்கும் செயற்பாடு, ஜனாதிபதி விசேட அனுமதியின் கீழ், நேற்று (02) ஆரம்பித்து வைக்கப்பட்டது.
1,486 வகையான பொருள்களுடன் தீப்பிடித்த கப்பல் மூழ்குகிறது
கொழும்புத் துறைமுகத்துக்கு அருகில், தீப்பற்றி எரிந்த எம்வி எக்ஸ்பிரஸ் பேர்ள் கப்பல் மூழ்கிக்கொண்டிருக்கின்ற நிலையில், அக்கப்பல் ஏற்றிவந்த அபாயகரமான இரசாயனங்களின் பட்டியலை சுற்றுச்சூழல் நீதிக்கான மத்திய நிலையம் வெளியிட்டுள்ளது.
110 கிலோ கிராம் கேரள கஞ்சாவுடன் ஒருவர் கைது
எம். றொனந்த், செந்தூரன் பிரதீபன் - யாழ்ப்பாணம் மாதகல் கடற்கரை பகுதியில், 110 கிலோ கிராம் கேரளா கஞ்சாவுடன், அப்பகுதியைச் சேர்ந்த 35 வயதான ஒருவரை, கடற்படையினர், நேற்று (02) காலை கைது செய்துள்ளனர்.
'அவசரம் புரியாத அரசாங்கம்'
கடந்த 2 வருடங்களாக நாடு முகங்கொடுத்துள்ள தேசிய, சர்வதேச பிரச்சினைகளுக்குத் தன்னிச்சையாகவும் தனித்தனியாகவும் தீர்வுகளைத் தேடுவதற்குப் பதிலாக, கூட்டு முயற்சியின் மூலம் தீர்வுகளைக் கண்டுபிடிப்பதன் முக்கியத்துவத்தை மதிப்பதாகத் தெரிவித்துள்ள எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ, ஆனால், குறைந்தபட்சம் இந்தக் கொரோனா பேரழிவின் அவசர நிலையில் கூட, அரசாங்கம் சர்வகட்சி மாநாட்டைக் கூட்ட நடவடிக்கை எடுக்கவில்லை என்றார்.
யாழ். பொதுநூலக வளாகத்தில் பொலிஸார் கண்காணிப்பு
யாழ்ப்பாணம் பொது நூலகம் எரிக்கப்பட்டு நேற்றுடன் (01) 40 ஆண்டுகள் நிறைவடைகின்ற நிலையில், அதன் நினைவு நாள் நிகழ்வுகள், யாழ்.
பாராளுமன்றுக்கு 6 நாள்கள் பூட்டு
பாராளுமன்ற கட்டடத்தொகுதியிலுள்ள சகல அலுவலகங்களும் ஜூன் 7ஆம் திகதி வரையிலும் மூடப்பட்டுள்ளன. அடுத்தக்கட்ட நடவடிக்கைகள் தொடர்பில், பின்னர் அறிவிக்கப்படுமென அறிவுறுத்தப்பட்டுள்ளது.
24 வயதான யுவதியை வீட்டுக்குள் கொன்றது கொரோனா
கொரோன தொற்றுக்கு உள்ளாகி மரணித்தவர்களின் எண்ணிக்கை 1,487ஆக அதிகரித்துள்ளது என அரசாங்கத் தகவல் திணைக்களம், நேற்றுக்காலை விடுத்துள்ள ஊடக அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
'ஸ்புட்னிக் வீ ஒரு டோஸ்'
வைத்திய நிபுணர்களின் முடிவு
'ஒரு தடுப்பூசிக்கு ஒப்புதல் ஏன்?'
21 நாள்களில் இரண்டாவது தடுப்பூசி வழங்கப்பட வேண்டும். முதல் கட்டத்தில் 50,000 தடுப்பூசிகள் கிடைத்துள்ளன என கூறப்படுகிறது
போலி முகங்கள் தென்படுகின்றன'
பல்வேறான தொழில் வாய்ப்புகளுக்காக, வழங்கப்பட்ட சில நிவாரணங்களையும் பயணக் கட்டுப்பாடுகளையும் சிலர் தவறாக பயன்படுத்துகின்றனர் எனத் தெரிவித்த கொவிட்-19 பரவுதலை தடுக்கும் தேசிய மத்திய நிலையத்தின் பிரதானியான இராணுவத் தளபதி ஜெனரல் ஷவேந்திர சில்வா தெரிவித்தார்.