CATEGORIES
Kategorier
சட்ட விரோத கொலைகளுக்கு இடமளிக்க முடியாது'
"குற்றவாளிகளுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்படுவது அவசியம். ஆனால், சட்டத்துக்குப் புறம்பாக முன்னெடுக்கும் சட்ட விரோத கொலைகளை உடனடியாக நிறுத்த வேண்டும்” எனத் தெரிவித்த எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ், அரசாங்கம் சர்வாதிகாரப் போக்கை நோக்கி நகர்வதாகவும் அதற்கெதிராக ஒன்றிணையுமாறும் அழைப்பு விடுத்துள்ளார்.
' சிவப்புப் பட்டியலின் விளிம்பில் இலங்கை'
கொரோனா வைரஸ் தொற்றின் மிக மோசமான கட்டத்தை எட்டிய நாடாக, இலங்கை சிவப்புப் பட்டியலில் சேர்க்கப்படும் அபாயம் ஏற்பட்டுள்ளதாகத் தெரிவித்த அரசதாதியர் சங்கத்தின் தலைவர் சமன் ரத்னபிரிய, அடுத்த வாரத்துக்குள் அப்பட்டியலுக்குள் இணைக்கப்படலாம் என எச்சரித்தார்.
3 நாள் பயணக்கட்டுப்பாடு சட்டத்துக்கு புறம்பானது'
ஊரடங்கு உத்தரவைப் பிறப்பிக்காமல், மூன்று நாள்களுக்குப் பயணக் கட்டுப்பாடுகளை விதிப்பது சட்டத்துக்கு புறம்பான செயற்பாடாகுமெனத் தெரிவித்துள்ள ஐக்கிய தேசிய கட்சியின் தவிசாளர் வஜிர அபேவர்தன, சட்டத்துக்கு புறம்பாக விதிக்கப்பட்டுள்ள இப்பயண கட்டுப்பாட்டை சவாலுக்கு உட்படுத்தி, அடிப்படை உரிமை மனுவைத் தாக்கல் செய்தால், விதிக்கப்பட்டுள்ள சகல பயணக்கட்டுபாட்டுகளையும் அரசாங்கம் மீளப்பெறவேண்டிய நிலைமை ஏற்படும் என்றார்
' இரவில் தடைவிதித்து நடுகல்லைத் திருடிவிட்டனர்'
"முள்ளிவாய்க்கால் நினைவேந்தலை எமது மக்கள் இம்முறையும் நினைவுகூர்வார்கள். அதில் விட்டுக்கொடுப்பென்ற பேச்சுக்கே இடமில்லை.
முடக்கப்பட்டுள்ள பகுதிகளிலுள்ள மக்களுக்கு நிதியுதவி
கொரோனா வைரஸ் தொற்றுப் பரவல் காரணமாகத் தனிமைப்படுத்தப்பட்டுள்ள பிரதேசங்களைச் சேர்ந்த மக்களுக்கு நிதியுதவி வழங்கும் நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன என்று தெரிவிக்கப்படுகிறது.
மே 18 நினைவேந்தல்: செப நாளாக அனுஷ்டிக்கவும்
வடக்கு, கிழக்கு ஆயர் மன்றம் அமைப்பு
பசில் ராஜபக்ஷ பறந்தார் பேரிடர் சட்டத்தை பயன்படுத்தக் கோரிக்கை
பொருளாதார புத்துயிர் மற்றும் வறுமையொழிப்பு பற்றிய ஜனாதிபதி செயலணியின் தலைவரும் முன்னாள் அமைச்சருமான பசில் ராஜபக்ஷ, நேற்று (12) அதிகாலை, அவசரமாக அமெரிக்காவுக்குப் பயணமாகியுள்ளார்.
கொரோனாவுடன் தொடர்புடைய ' கண்டறியா வைரஸ்கள் உலாவலாம்'
கண்டறியப்படாத புதிய கொரோனா வைரஸ் வகைகள், சமூகத்தில் இருக்கக்கூடும் என்று, சுகாதார அதிகாரிகள் எச்சரித்துள்ளனர்.
கிழக்கு ஆளுநருக்கு கொரோனா
கிழக்கு மாகாண ஆளுநர் அநுராதா யஹம்பத் கொரோனா வைரஸ் தொற்றுக்கு உள்ளாகியுள்ளார்.
இந்தியாவில் கண்டறியப்பட்ட பீ.1.67 வைரஸ் இலங்கையில் பரவாது
இந்தியாவில் பரவியிருக்கும் கொரோனா வைரஸின் புதிய மாறுபாடு, இலங்கையிலும் கண்டறியப்பட்டுள்ள போதிலும், அது இந்த நாட்டுக்குள் சமூகப் பரவலடைய வாய்ப்பில்லை என அரசாங்கம் அறிவித்துள்ளது.
பிறை பார்க்கும் மாநாடு இன்று
இன்றைய (12) மஹ்ரிப் தொழுகையின் பின்னர் ஷவ்வால் மாத தலைப்பிறையை தீர்மானிக்கும் மாநாடு நடைபெறவுள்ளதாக பெரிய பள்ளிவாசல் விடுத்துள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
அதிகரிக்கும் கொரோனா பற்றி ஆராய அனைத்துக் கட்சிக் கூட்டத்தை கூட்டச் சொல்கிறது எதிர்க்கட்சி
இணைந்துச் செயற்படத் தயார் என்கிறது அரசாங்கம்
200 கர்ப்பிணிகளுக்கு கொரோனா தொற்று
கொரோனா வைரஸ் தொற்றுக்கு இலக்கான 200 கர்ப்பிணிகள் அடையாளம் காணப்பட்டுள்ளனர் என்று, சுகாதாரத் தரப்பினர் தெரிவித்துள்ளனர்.
'அத்தியாவசிய சேவை முடங்காது'
அத்தியாவசியச் சேவைகளுக்கு எந்தவித அசௌகரியமும் ஏற்படாத வகையில், போக்குவரத்துக் கட்டுப்பாடுகள் அமுல்படுத்தப்படும் என அரசாங்கம் அறிவித்துள்ளது.
பெருநாள் தொழுகை இம்முறை இல்லை
நோன்புப் பெருநாள் தொழுகைகளுக்கு இம்முறை அனுமதியில்லை என, முஸ்லிம் சமய பண்பாட்டலுவல்கள் திணைக்களம் அறிவித்துள்ளது.
'ஒன்றுக்கூடி உண்ணாதீர்'
நிறுவனங்கள், தொழிற்சாலைகள், அலுவலகங்களில் பணிப்புரிபவர்கள், ஒன்றுகூடி உணவு உண்பதை முற்றாகத் தவிர்த்துக்கொள்ளுமாறு, பொலிஸ் தலைமையகம் கோரிக்கை விடுத்துள்ளது.
இலங்கை உள்ளிட்ட நாடுகளுக்கு ஐக்கிய அரபு அமீரகம் பயணத்தடை
இலங்கை உள்ளிட்ட நாடுகளுக்கு, ஐக்கிய அரபு அமீரகம் பயணத் தடை விதித்துள்ளது. அதில், பங்களாதேஷ், பாகிஸ்தான், நேபாளம் ஆகிய நாடுகளும் அடங்குகின்றன. நேரடியாகத் தரையிறங்குவதற்கு மட்டுமன்றி, தரித்துநின்று பயணிகளை ஏற்றிச் செல்லும் விமானங்களுக்கும் தடைவிதிக்கப்பட்டுள்ளது.
14 நாள்கள் முடக்கவும்': மனோ எம்.பி கோரிக்கை
கொரோனா தொற்றின் வேகம் அதிகரித்து உள்ளமையால், ஆகக் குறைந்தது, 14 நாள்களுக்காவது நாட்டை முழுமையாக முடக்குமாறு கோரியுள்ள மனோ கணேசன் எம்.பி, வயதானவர்களுக்கு மட்டுமே தொற்றும் என்றிருந்த கொரோனா வைரஸ், கர்ப்பிணிகளையும் சிறுவர்களையும் பாதிக்குமளவுக்குத் திரிபடைந்துள்ளது என்றார்.
'ஐந்து விடயங்கள் முக்கியம்'
சுகாதார அமைச்சர் பவித்ரா வன்னியாராச்சி தலைமையில், நேற்று (10) நடைபெற்ற முக்கிய கலந்துரையாடலில், மிக முக்கியமான ஐந்து விடயங்கள் தொடர்பில் கவனம் செலுத்தப்பட்டுள்ளது.
பொலிஸ் அதிகாரி திடீர் மரணம்
மஸ்கெலியா பொலிஸ் நிலையத்தில், புலனாய்வுப் பிரிவில் பணியாற்றும் 24 வயதுடைய பொலிஸ் அதிகாரி, நேற்று (09) காலை திடீரென மரணமடைந்துள்ளார்.
முடக்கப்பட்ட பகுதிகளுக்கு அத்தியாவசிய பொருட்களை கொண்டு செல்ல தடையில்லை
கொரோனா வைரஸ் தொற்றுப் பரவல் காரணமாக முடக்கப்பட்டுள்ள பிரதேசங்களில் வசிக்கும் மக்களுக்கான அத்தியாவசியப் பொருட்கள், உணவுப் பொருட்களைக் கொண்டு செல்லத் தடை விதிக்கப்படவில்லை என்று தெரிவித்துள்ள இராணுவத் தளபதி ஜெனரல் ஷவேந்திர சில்வா, குறித்த சேவைகளை வழங்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது என்றும் குறிப்பிட்டுள்ளார்.
ஒப்படைத்த சடலத்தைத் தூக்கிச்சென்ற அதிகாரிகள்; இரத்தினபுரியில் அதிர்ச்சி
வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த ஒருவர், உயிரிழந்ததும் அவரது சடலம் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது. அதன் பின்னர், குறித்த வீட்டுக்கு வந்த சுகாதாரப் பிரிவினரால் அந்தச் சடலம் தூக்கிச் செல்லப்பட்ட சம்பவம் இரத்தினபுரியில் இடம்பெற்றுள்ளது.
11,500 சராசரியாயின் சுகாதாரத்துறை சரியும்'
கொரோனா வைரஸ் தொற்றாளர்களின் எண்ணிக்கை, நாளொன்றுக்கு சராசரியாக 1,500 ஆகக் காணப்படுமாயின் சுகாதாரத்துறை சரிவைச் சந்திக்கும் எனப்பொது சுகாதாரப் பரிசோதகர்கள் சங்கத்தின் தலைவர் உபுல் ரோஹன எச்சரித்துள்ளார்.
நிமோனியா காய்ச்சல்: இரத்த உறைவுடன் ஏற்படின் சிசிச்சை அளிப்பது கடினம்'
கொவிட்19க்கான தடுப்பூசிகள் புதுப்பிக்கப்பட்டுள்ளன எனத் தெரிவித்துள்ள அரச வைத்திய அதிகாரிகள் சங்கம், நாட்டில் தற்போது பயன்படுத்தப்படும் அனைத்துத் தடுப்பூசிகளும் தரம் வாய்ந்தவை எனத் தெரிவித்துள்ளது.
'கட்டில்கள் அல்ல; பொறிமுறையே அவசியம்
வெற்றுக் கட்டடங்களில் கட்டில்களை நிரப்பினால் மாத்திரம் கொரோனாவைக் கட்டுப்படுத்த முடியாதெனத் தெரிவித்த ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் கயந்த கருணாதிலக்க, சுகாதார பொறிமுறையே அத்தியாவசியமானது என்றார்.
முல்லைத்தீவில் மகாவலி அதிகார சபையின் நிலச் சுவீகரிப்பு நிறுத்தம்
முல்லைத்தீவு மாவட்டத்தில், மகாவலி அதிகார சபையால் மேற்கொள்ளத் திட்டமிடப்பட்ட நில சுவீகரிப்பு நிறுத்தப்படும் என்று, துறைசார் இராஜாங்க அமைச்சர் சமல் ராஜபக்ஷ, தமிழ்த் தேசிய கட்சிகளின் பாராளுமன்ற உறுப்பினர்களிடம் உறுதியளித்துள்ளார்.
இந்தியா-இலங்கைக்கு இடையிலான பயணிகள் விமான சேவைகள் ரத்து
இந்தியாவிலிருந்து இலங்கைக்கு வரும் அனைத்து பயணிகள் விமான சேவைகளும் மறு அறிவித்தல் வரை, இரத்துச் செய்யப்பட்டுள்ளன.
முகக்கவசம் அணியாதோரை தூக்கிச்சென்று கடும் எச்சரிக்கை
யாழ்ப்பாணம் நகர்ப் பகுதியில், முகக்கவசம் அணியாதோர், சுகாதார நடைமுறைகளைப் பின்பற்றாதோர், பொலிஸாரால் கைது செய்யப்பட்டனர்.
மாகாண சபை தேர்தல் இப்போதைக்கு இல்லை
மாகாண சபைத் தேர்தலை விரைவில் நடத்தும் எண்ணத்தைக் கைவிட்டுள்ள அரசாங்கம், கொரோனா வைரஸ் தொற்றுப் பரவல் நிலை கட்டுப்பாட்டுக்குள் வந்ததும் தேர்தலை நடத்துவது தொடர்பில் ஆலோசித்து வருவதாகத் தெரியவருகிறது.
'27%ஆல் கேஸ் விலை அதிகரிப்பு'
நாட்டுக்குள் எரிவாயு மோசடியொன்று இடம்பெற்று வருகின்றது என்பதை எடுத்துரைப்பதற்காக, எரிவாயு சிலிண்டரொன்றை ஊடக சந்திப்புக்கு எடுத்துவந்த ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் கபீர் ஹாஸிம், 27 சதவீதத்தால், எரிவாயுவில் விலை அதிகரிக்கப்பட்டு உள்ளதெனச் சாடினார்.