CATEGORIES
Kategorier
நிர்வாணப் படங்களை பதிவேற்றிய ஐவர் கைது
ஆபாச புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை சமூக வலைத்தளங்கள் மற்றும் இணையத்தளங்களில் பதிவேற்றிய ஐவர் கைது செய்யப்பட்டுள்ளனர் என பொலிஸ் பேச்சாளர் சிரேஷ்ட பிரதிப் பொலிஸ்மா அதிபர் அஜித் ரோஹண தெரிவித்தார்.
தப்பிய தொற்றாளரை தேடி வேட்டை
பலாங்கொடை ஆதார வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த கொரோனா தொற்றுக்குள்ளான ஒருவர் தப்பியோடியுள்ளார் என்று பலாங்கொடை பொலிஸார் தெரிவித்தனர்.
ஆடைத் தொழிற்சாலை ஊழியர்களின் உரிமைகளை பாதுகாக்கவும்'
கொரோனா தொற்றுக் காகாலப்பகுதியில் ஆடைத்தொழிற்சாலை ஊழியர்களின் உரிமைகளைப் பாதுகாப்பதற்கு இலங்கை அரசாங்கம், தொழிற்சாலை உரிமையாளர்கள், சர்வதேச ஆடை உற்பத்தி நிறுவனங்கள் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என மனித உரிமைகள் கண்காணிப்பகம் தெரிவித்தது.
3ஆவது டோஸ் அவசியமில்லை
'3வது டோஸ் கொவிட் தடுப்பூசி இப்போது அவசியம் இல்லையெனத் தெரிவித்துள்ள உலக சுகாதார அமைப்பு, தற்போதிருக்கும் கொவிட் தடுப்பூசிகளை ஏழை நாடுகளுக்கு வழங்க வேண்டும்' எனக் கேட்டுக்கொண்டுள்ளது.
மக்கள் மன்றத்தை கலைத்தார் ரஜினி
அரசியலுக்கு முற்றுப்புள்ளி
26,000 'பைசர் வந்தடைந்தன
இலங்கை கொள்வனவு செய்த மேலும் 26,000 ஃபைசர் தடுப்பூசிகள், நேற்று (12) காலை கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்துள்ளன.
ஏடிஸ் கொசுக்களால் தான் ஸிகா வைரஸ் பரவுகிறது
கேரளாவின் திருவனந்தபுரத்தை சேர்ந்த கர்ப்பிணியொருவருக்கு ஸிகா வைரஸ் பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது.
பிலிப்பைன்ஸ் படைகள் மீதான தாக்குதல்: சீனாவை மீண்டும் எச்சரிக்கும் ஐ. அமெரிக்கா
தென் சீனக் கடலில், பிலிப்பைன்ஸ் ஆயுதப் படைகள் மீதான தாக்குதல் ஒன்றானது 1951ஆம் ஆண்டு ஐக்கிய அமெரிக்க பிலிப்பைன்ஸ் பரஸ்பர பாதுகாப்பு ஒப்பந்தத்தை தூண்டும் என சீனாவை ஐ. அமெரிக்கா மீண்டும் நேற்று முன்தினம் எச்சரித்துள்ளது.
யூரோ: பெனால்டியில் இங்கிலாந்தை வீழ்த்தி சம்பியனான இத்தாலி
யூரோ கிண்ணத் தொடரில் இத்தாலி சம்பியனானது.
மொத்த தேசிய உற்பத்தி முதல் காலாண்டில் உயர்வு
2021ஆம் ஆண்டின் முதல் காலாண்டில் நாட்டின் மொத்த தேசிய உற்பத்தி 4.3 சதவீதத்தால் வளர்ச்சியடைந்தது என அரசாங்க தொகை மதிப்பு மற்றும் புள்ளி விவரத் திணைக்களம் அறிவித்துள்ளது. 2020 ஆம் ஆண்டு 1.8 சதவீத வளர்ச்சியை பதிவு செய்திருந்ததைத் தொடர்ந்து, நடப்பு ஆண்டின் முதல் காலாண்டில் இந்த வளர்ச்சியைப் பதிவு செய்துள்ளமை விசேட அம்சமாகும்.
கொரோனா வைரஸின் நான்காவது அலையை உருவாக்காதீர்கள் அரசியல்வாதிகளிடம் நாமல் வேண்டுகோள்
திட்டமிட்ட முறையில் நாட்டைத் திறந்து கொண்டிருக்கின்ற இக்கால கட்டத்தில், கொரோனா வைரஸின் நான்காவது அலையை உருவாக்குவதை அரசியல்வாதிகள் தவிர்த்துக் கொள்ளவேண்டுமென அமைச்சர் நாமல் ராஜபக்ஷ வேண்டுகோள் விடுத்துள்ளார்.
கிழக்கு மாகாணத் தமிழ் ஆசிரியர் சங்கத்தினரும் இணையவழி கற்பித்தலில் இருந்து விலகினர்
கிழக்கு மாகாணத் தமிழ் ஆசிரியர் சங்கமும் உடனடியாக இணையவழிக் கற்பித்தலில் இருந்து விலகிக்கொள்வதாக அறிவித்துள்ளது.
கோப்பா அமெரிக்கா தொடர்: பிரேஸிலை வீழ்த்தி சம்பியனான ஆர்ஜென்டீனா
கோப்பா அமெரிக்கா தொடரில் ஆர்ஜென்டீனா சம்பியனானது . பிரேஸிலில் நடைபெற்று வந்த இத்தொடரில், நேற்றுக் காலை நடைபெற்ற பிரேஸிலுடனான இறுதிப் போட்டியில் 1-0 என்ற கோல் கணக்கில் வென்றே ஆர்ஜென்டீனா சம்பியனாகியிருந்தது.
அரசியலில் பெண்கள் இணைவதற்கான 'சூழலை ஏற்படுத்தவும் பரிந்துரைகளை முன்வைக்கவுள்ளது பாராளுமன்ற பெண் உறுப்பினர்கள் ஒன்றியம்
நாட்டின் சகல தேர்தல் சட்டங்களும் ஒரு தேர்தல் நடத்தை விதியின் கீழ் ஒருங்கிணைக்கப்பட வேண்டுமெனக் கேட்டுக்கொண்ட பாராளுமன்ற பெண் உறுப்பினர்கள் ஒன்றியம், திருத்தங்களைப் பரிந்துரைப்பதற்கும் நியமிக்கப்பட்ட விசேட பாராளுமன்ற குழுவில் பரிந்துரைகளை வழங்க முன்வந்துள்ளது.
சகலரின் ஒத்துழைப்பையும் கேட்டார் நிதியமைச்சர் பெசில்
ஜனாதிபதி, பிரதமர் ஆகியோரின் வழிநடத்தலில் சகல மக்கள் பிரதிநிதிகளின் ஒத்துழைப்பு தமக்கு அவசியம் என தெரிவித்த நிதியமைச்சர் பெசில் ராஜபக்ஷ, ஜனாதிபதி, பிரதமர் உள்ளிட்ட அரசாங்கத்திலுள்ள அனைவருக்கும் என்ன பிரச்சினை என்பது குறித்து தெளிவு உள்ளது என்றார். .
இரண்டு இராஜாங்க அமைச்சுகள் மறுசீரமைப்பு
இராஜாங்க அமைச்சுகள் இரண்டு மறுசீரமைப்பு செய்யப்பட்டுள்ளன. அவற்றுக்கான இராஜாங்க அமைச்சர்கள், ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ முன்னிலையில், நேற்று (08) பிற்பகல் ஜனாதிபதி அலுவலகத்தில் வைத்து பதவிப்பிரமாணம் செய்து கொண்டனர்.
கைதுக்கு எதிராக ஐ.தே.க வழக்கு
இலங்கையில் அமுலிலில் இருக்கும் தனிமைப்படுத்தல் சட்டத்தின் கீழ், எதிர்ப்பு நடவடிக்கைகளை முன்னெடுப்பதை தடை செய்வதற்கும் அதில் கலந்துகொள்ளும் நபர்களைக் கைது செய்வதற்கும் முடியாதென, இதற்கு முன்னர் ஐக்கிய தேசியக் கட்சியின் நீதிப்பிரிவுக்கு காரணங்கள் முன்வைக்கப்பட்டதாக ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் ரணில் விக்கிரமசிங்க எம்.பி சுட்டிக்காட்டியுள்ளார்.
672 கிலோ கிராம் உலர்ந்த மஞ்சள் மீட்பு
மன்னார் பெரியகடை கடற்கரை கலப்புப் பகுதியில் வைத்து, நேற்று (08) அதிகாலை 2.30 மணியளவில், ஒருதொகுதி உலர்ந்த மஞ்சள் மூடைகளை, இராணுவத்தினர் மீட்டுள்ளனர்.
'ஜூலை மூன்றாவது வாரம் 'அஸ்ட்ரா செனெகா' கிடைக்கும்'
அஸ்ட்ரா செனெகா தடுப்பூசிகள், ஜூலை மூன்றாவது வாரம் கிடைக்கவுள்ளது
பத்திக்கை கைவிடுவேன்
பத்திக் கைத்தறி மற்றும் உள்நாட்டு ஆடை உற்பத்தி இராஜாங்க அமைச்சை இராஜினாமா செய்யுமாறு, ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் தலைவர் மற்றும் கட்சியின் செயற்குழு வலியுறுத்தினால் நிச்சயம் பதவி விலகுவேன் எனத் தெரிவித்த இராஜாங்க அமைச்சர் தயாசிறி ஜயசேகர, நான் பதவி விலகத்தயாரென ஏற்கெனவே தெரிவித்துள்ளேன் என்றார்.
தோழனுக்கு கொரோனா; 64 பேர் தனிமையில்
யாழ்ப்பாணம், அச்சுவேலி பொலிஸ் நிலையத்தில் கடமையாற்றும் பொலிஸ் உத்தியோகஸ்தரின் பதிவுத் திருமண நிகழ்வில் கலந்துகொண்ட 38 குடும்பங்கள், சுகாதாரப் பிரிவினரால் தனிமைப்படுத்தப்பட்டுள்ளன.
ஜனாதிபதி தேர்தலில் பசில் போட்டியிடுவார்'
இன்று எம்.பியாக சத்தியப்பிரமாணம்
மண்டைதீவில் கைக்குண்டுகள் 3 மீட்பு
ஊர்காவற்றுறை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட மண்டைதீவு பகுதியில் உள்ள வெற்றுக் காணி ஒன்றிலிருந்து மூன்று கைக்குண்டுகள் நேற்றுக்காலை மீட்கப்பட்டுள்ளன.
21/4 வழக்கை விசாரிக்க டிரயல் அட்-பார்
2019ஆம் ஆண்டு ஏப்ரல் 21ஆம் திகதி, இடம்பெற்ற உயிர்த்த ஞாயிறுத் தாக்குதல் தொடர்பில், கைது செய்யப்பட்டுள்ள பாதுகாப்பு அமைச்சின் முன்னாள் செயலாளர் ஹேமசிறி பெர்ணான்டோ, முன்னாள் பொலிஸ் மா அதிபர் பூஜித் ஜயசுந்தர ஆகியோருக்கு எதிரான வழக்கை டிரயல் அட்-பார் முறையில் விசாரிக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது.
ஜயந்த கெட்டகொட இராஜினாமா
ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தேசியப்பட்டியல் எம்.பியான ஜயந்த கெட்டகொட, தனது இராஜினாமா கடிதத்தை பாராளுமன்ற செயலாளர் நாயகம், தம்மிக்க தசநாயக்கவிடம், எழுத்து மூலமாக நேற்று (06) கையளித்தார்.
இன்று வர்த்தமானி நாளை எம்.பி
பசில் ராஜபக்ஷவின் பெயரடங்கிய விசேட வர்த்தமானி, இன்று (07) வெளியாகும். அதற்கான ஏற்பாடுகளை தேர்தல்கள் ஆணைக்குழு நேற்றிரவு முன்னெடுத்திருந்தது.
யாரை முட்டாள்களாக்க நீங்கள் நினைக்கிறீர்கள்
சுமந்திரன் கேள்வி. உலகத்துக்கு உரக்கக் கூறினார்
சிறுமிகள் துஷ்பிரயோகம்: சிறிய தந்தைக்கு 90 வருடங்கள் சிறை
அக்கா, தங்கையான 15 மற்றும் 12 வயதான சிறுமிகள் இருவரையும் அவ்வப்போது பாலியல் துஷ்பிரயோகத்துக்கு உட்படுத்தினார் என குற்றஞ்சாட்டப்பட்டிருந்த அவ்விரு சிறுமிகளின் சிறிய தந்தைக்கு 90 வருடங்கள் கடூழிய சிறைத்தண்டனை விதித்து தீர்ப்பளிக்கப்பட்டது.
777 கிலோ கிராம் உலர்ந்த மஞ்சள் தீயிட்டு அழிப்பு
சட்டவிரோதமான முறையில், இந்தியாவில் இருந்து கடல் மார்க்கமாக மன்னாருக்கு கடத்தி வரப்பட்ட நிலையில் கைப்பற்றப்பட்ட ஒரு தொகை உலர்ந்த மஞ்சள் கட்டிகள், நேற்று முன்தினம் (5) மாலை தீயிட்டு அழிக்கப்பட்டுள்ளன.
முல்லைத்தீவு உறவினர்கள் கவனயீர்ப்புப் போராட்டம்
எத்தடை வரினும், எமது உறவுகள் கிடைக்கும் வரை போராட்டம் தொடரும் ...