CATEGORIES
Kategorier
மொகா கடன் திட்டங்களுக்கு முற்றுப்புள்ளியா?
வெளிநாடுகளில் இருந்துப் பாரியளவிலானக் கடன்களைப் பெற்று, இனி நாட்டில் பாரிய அபிவிருத்தித் திட்டங்கள் முன்னெடுக்கப்படமாட்டாதென ஜனாதிபதியின் செயலாளர் பி.பி.ஜயசுந்தர தெரிவித்துள்ளார்.
துறைமுக நகர சட்டமூல வாக்கெடுப்பு; குளறுபடியை ஆராய இரு விசாரணைகள்
கொழும்புத் துறைமுக நகர பொருளாதார ஆணைக்குழு சட்டமூலத்தை நிறைவேற்றுவதற்காக நடத்தப்பட்ட வாக்கெடுப்பின் போது, இடம்பெற்றதாகக் கூறப்படும் குளறுபடி தொடர்பில் ஆராய்வதற்காக, இரு விசாரணைகள் நடத்தப்படுவதாக, சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன தெரிவித்துள்ளார்.
கொழும்புக்குப் பின்னர் கண்டிக்குத் தடுப்பூசி
மேல் மாகாணத்தின் கொழும்பு, கம்பஹா மாவட்டங்களுக்கான தடுப்பூசி ஏற்றல் பணிகளின் பின்னர், கண்டி மாவட்ட மக்களுக்கான தடுப்பூசி ஏற்றல் பணிகள் முன்னெடுக்கப்படும் என்று, அமைச்சரவைப் பேச்சாளரும் அமைச்சருமான கெஹெலிய ரம்புக்வெல்ல தெரிவித்துள்ளார்.
'மனித உயிர்களே பெறுமதியானவை'
நாட்டின் இன்றைய நிலையில், உயிர்களைப் பாதுகாப்பதற்கு மட்டுமே முன்னுரிமையளிக்கப்பட வேண்டுமெனத் தெரிவித்த முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் அஜித் பி. பெரேரா, மனித உயிர்களைக் காப்பாற்றினால் மாத்திரமே, ஏனைய அபிவிருத்தித் திட்டங்களை முன்னெடுக்க முடியும் என்றும் எனவே,
பரீட்சைகள் பிற்போடல் செய்தி: மறுக்கிறது கல்வி அமைச்சு
இவ்வாண்டுக்கான கல்விப் பொதுத்தராதர சாதாரணதரம் மற்றும் உயர்தரப் பரீட்சைகளை மீண்டும் பிற்போடுவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளதாக வெளியாகும் செய்தியில் எவ்வித உண்மையும் இல்லைனெ, கல்வி அமைச்சு அறிவித்துள்ளது.
உலகில் உருமாறிய வைரஸ்களில் '4இல் 3 இலங்கையில் கண்டுபிடிப்பு'
உலகில் மிக அபாயம் மிக்கவையாக அடையாளப் படுத்தப்பட்டுள்ள 4 உருமாறிய வைரஸ்களில் 3 வைரஸ்கள், இதுவரையில் இலங்கையில் இனங்காணப்பட்டுள்ளன என்று, நோய் எதிர்ப்பு மற்றும் உயிரியல் மூலக்கூறு வைத்திய நிபுணர் பேராசிரியர் நீலிகா மலவிகே தெரிவித்துள்ளார்.
இராணுவ வீரர் தின நிகழ்வு
சப்ரகமுவ மாகாண இராணுவ வீரர் தின நிகழ்வு, இரத்தினபுரி புதிய நகரில் அமைந்துள்ள இராணுவ வீரர் நினைவுத் தூபியில், நேற்று முன்தினம்(19) நடைபெற்றது.
மட்டக்களப்பு சிறைச்சாலையில் 44 பேருக்கு கொரோனா
மட்டக்களப்பு சிறைச்சாலையில் எழுமாற்றாக 62 பேருக்கு மேற்கொள்ளப்பட்ட அன்டிஜன் பரிசோதனையில் 44 பேருக்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக மட்டக்களப்பு மாவட்ட பிராந்திய சுகாதாரப் பணிப்பாளர் டொக்டர் நாகலிங்கம் மயூரன் தெரிவித்தார்.
ஆர்ஜென்டீனா - அண்டார்டிக்காவில் உலகின் பாரிய பனிமலை உடைந்தது
ஸ்பானியத் தீவான மஜோர்காவைப் பெரியதாக பாரிய பனிமலைக் கட்டியொன்று அண்டர்டிக்காவிலிருந்து பிரிந்த்து வெட்டெல் கடலுக்குள் சென்றுள்ளதாக ஐரோப்பிய விண்வெளி முகவரகம் நேற்று முன்தினம் தெரிவித்துள்ளது.
போர்ட் சிட்டி வாக்கெடுப்பை பிற்போடவும்
கொழும்புத் துறைமுக நகர பொருளாதார ஆணைக்குழு சட்டமூலத்தின் (போர்ட் சிட்டி) மீதான விவாதத்தை ஒத்திவைக்குமாறு மதத்தலைவர்கள், அரசாங்கத்திடம் கோரிக்கையொன்றை முன்வைத்துள்ளனர்.
அஸ்ட்ரா செனெக்காவின் 2ஆவது டோஸ் ஜினில் கிடைக்கும்
இலங்கையில் கொரோனா வைரஸ் தொற்றைக் கட்டுப்படுத்துவதற்காக, முதன்முறையாக நாட்டுக்குக் கொண்டுவரப்பட்டு செலுத்தப்பட்ட இந்தியத் தயாரிப்பான அஸ்ட்ரா செனெக்கா கொவிஷீல்ட் தடுப்பூசியின் இரண்டாவது டோஸ், எதிர்வரும் ஜூன் மாதத்தில் இலங்கைக்குக் கிடைக்குமென்று, அரசாங்கம் அறிவித்துள்ளது.
விமான பயணிகளுக்கு 10 நாள்களுக்குத் தடை
தற்போதைய கொரோனா தொற்றின் காரணமாக, விமானப்பயணிகள் நாட்டுக்குள் நுழைவதற்கான அனுமதியை வழங்காமல் இருப்பதற்கு தீர்மானிக்கப்பட்டு, அதற்கான தடையும் விதிக்கப்பட்டுள்ளது.
சி.ஐ.டீஇல் தடுத்துவைக்கப்பட்டிருந்த அஸாத் சாலிக்கு மாரடைப்பு
தடுப்புக்காவல் உத்தரவின் பேரில், குற்றப்புலனாய்வுத் திணைக்களத்தில் தடுத்து வைக்கப்பட்டிருந்த மேல் மாகாண முன்னாள் ஆளுநர் அஸாத் சாலி, நேற்று முன்தினம் (18) இரவு, கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
'சஜித்துக்குப் பின்பே நாமலுக்கு வாய்ப்பு
எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ ஜனாதிபதியானதன் பின்னரே, அமைச்சர் நாமல் ராஜபக்ஷ ஜனாதிபதியாக முடியுமென, ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் ஹர்ஷ டி சில்வா தெரிவித்தார்.
போரில் மரணித்த 'பொதுமக்களையும் நினைவுகூருங்கள் '
சுமந்திரன் உரையாற்ற சபாநாயகரால் தடங்கல்
முள்ளிவாய்க்கால் இனப்படுகொலையின் 12ஆவது ஆண்டு நினைவேந்தல்; பிரத்தியேகமான இடத்தில் நெஞ்சுருகி பிரார்த்தனை
பொலிஸார் இராணுவத்தினரின் கண்காணிப்பையும் மீறி அஞ்சலி
இலங்கையில் பகிரங்கமான இனவழிப்பே இடம்பெற்றது'
இலங்கையில் இடம்பெற்றது பகிரங்கமான இனவழிப்பே எனத் தெரிவித்த கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் எஸ்.சிறிதரன், இனவழிப்புக்காக எந்தவொரு சிங்களத் தலைவரும் இதுவரையில் மன்னிப்புக் கோரவில்லை என்றார்.
துறைமுக நகர சட்டமூலத்தை நிறைவேற்ற இரண்டும் தேவையில்லை'
கொழும்புத் துறைமுக நகர பொருளாதார ஆணைக்குழுச் சட்டமூலத்தின் திருத்தங்கள், சட்ட மா அதிபர் திணைக்களத்தால் உயர்நீதிமன்றுக்கு முன்வைக்கப்பட்டுள்ளதால், சாதாரண பெரும்பான்மை வாக்கெடுப்பின் மூலம் இச்சட்டமூலத்தை நிறைவேற்றிக்கொள்ள முடியுமென, கல்வி அமைச்சர் பேராசிரியர் ஜீ.எல்.பீரிஸ், நேற்று (18) மாலை நடைபெற்ற குழுநிலை விவாதத்தின் போது தெரிவித்தார்.
'பாலூட்டும் தாய்மார் தடுப்பூசி ஏற்றலாம்'
தாய்ப்பாலூட்டும் அனைத்துத் தாய்மார்களும், கொரோனா வைரஸுக்கு எதிரான தடுப்பூசியை ஏற்றிக்கொள்ள முடியுமென்று, சுகாதார அமைச்சின் தொற்றுநோயியல் பிரிவின் தலைவரும் விசேட வைத்திய நிபுணருமான சுதத் சமரவீர தெரிவித்துள்ளார்.
முள்ளிவாய்க்கால் நினைவு முற்றத்தின் தூபியில் சுடரேற்றி சிவாஜிலிங்கம் அஞ்சலி
முல்லைத்தீவு மாவட்டத்தில், முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நிகழ்வை நடத்துவதற்கு தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ள நிலையில், நேற்று (17), முள்ளிவாய்க்கால் நினைவுத் தூபியில், சுடரேற்றி அஞ்சலி செலுத்தும் நிகழ்வு நடைபெற்றது. இறுதி யுத்தத்தில் உயிரிழந்த உறவுகளை நினைவு கூரும் செயற்பாடுகள், ஒவ்வொரு வருடமும் மே மாதம் 12ஆம் திகதி முதல் 18ஆம் திகதி வரை இடம்பெறும்.
மத உரிமை, கலாசாரங்களை பின்பற்றத் தடை கிடையாது'
"இலங்கைக்குள், பௌத்த மதத்துக்கு முன்னுரிமை வழங்கும் அதேவேளை, பிற மதங்களும் சமமாக மதிக்கப்படுகின்றன எனத் தெரிவித்த பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ, சகோதர இன மக்கள், தங்களின் மத உரிமைகளையும் கலாசாரங்களையும் பின்பற்றுவதில் எவ்விதத் தடைகளும் கிடையாது.
அனைத்துத் தேர்தல் முறைமைகளிலும் மாற்றம்
மக்கள் யோசனைப் பெற 1 மாதகால அவகாசம்
'மாகாண எல்லை தாண்டினால் சட்டம் தன் கடமையைச் செய்யும்'
அத்தியாவசியமற்ற காரணத்துக்காக, மாகாண எல்லைகளைத் தாண்டிச் சென்றால், தனிமைப்படுத்தல் சட்டத்தின் கீழ் கைது செய்யப்படுவதோடு, வாகனங்களும் பறிமுதல் செய்யப்படுமென்று, பொலிஸாரால் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
'பணிக்குச் செல்ல இலக்கம் தேவையில்லை'
தங்களுடைய பணியிடங்களுக்குச் சென்று பணியாற்றும் ஊழியர்கள், தேசிய அடையாள அட்டையின் ஒற்றை, இரட்டை இலக்க நடைமுறையைப் பின்பற்றத் தேவையில்லை என்று, இராணுவத் தளபதியும் கொவிட்-19 ஒழிப்புக்கான தேசிய செயலணியின் தலைவருமான ஜெனரல் ஷவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.
முகக்கவசத்தை தொட்டால் ஆபத்து'
முகக்கவசத்தின் மேற்பரப்பை அடிக்கடி தொடுவது, பாரிய பின்விளைவுகளை ஏற்படுத்துமென்று, சுவாச நோய்கள் தொடர்பான விசேட வைத்திய நிபுணர் டொக்டர்ஷன்னடீ சில்வா தெரிவித்துள்ளார்.
செலான் வங்கியின் வரிக்குப் பின்னரான இலாபம் ரூ.1 பில்லியன்
கொவிட்-19 வைரஸ் தொற்றுப் பரவலின் காரணமாக ஏற்பட்ட பாரிய பொருளாதார சவால்களுக்கு மத்தியிலும், செலான் வங்கியானது 2021 இன் 1ஆம் காலாண்டு காலப்பகுதியில் ரூ.1.0 பில்லியனை வரிக்குப் பின்னரான இலாபமாக பதிவு செய்துள்ளது.
கொரோனா அறிகுறிகள் இருந்தால் 'தடுப்பூசி செலுத்தாதீர்'
கொரோனா வைரஸ் தொற்றுக்கான நோய் அறிகுறிகள் காணப்படும் நபர்கள், கொரோனாவுக்கு எதிரான தடுப்பூசியைச் செலுத்திக்கொள்ள வேண்டாமென்று, தொற்றுநோயியல் பிரிவு தெரிவித்துள்ளது.
இத்தாலிய சீரி ஏ தொடர்: சம்பியன்களை வீழ்த்திய இன்டர் மிலன்
இத்தாலியக் கால்பந்தாடக் கழகங்களுக்கிடையிலான சீரி ஏ தொடரில், ஜுவென்டஸின் மைதானத்தில் நேற்று முன்தினமிரவு அவ்வணிக்கும், சம்பியனான இன்டர் மிலனுக்குமிடையிலான போட்டியில், 3-2 என்ற கோல் கணக்கில் ஜுவென்டஸ் வென்றது.
அரசியல் சாயம் அகற்றப்படுகிறதா? முன்னுதாரணமாகும் ஸ்டாலின்
முதலமைச்சர் ஸ்டாலின் படங்கள் இன்றி, கொரோனா நிவாரண டோக்கன், நிவாரணப் பொருள் பைகள் போன்றவற்றை தனது படங்கள் பொறிக்கப்படாமல் வழங்கி வருவதன் மூலம், அரசியல் சாயம் இன்றிய புதிய முன்னுதாரணத்தை தொடங்குகிறாரா என்ற எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.
77 மணிநேரம் கடுமையானது
எதிர்வரும் திங்கட்கிழமை (17) அதிகாலை 4 மணிவரை அமுலில் இருக்கும் முழுநாட்டுக்குமான பயணத்தடை, கடுமையானதாக இருக்குமெனத் தெரிவித்துள்ள பொலிஸ் ஊடகப் பேச்சாளர் பிரதிப் பொலிஸ் மா அதிபர் அஜித் ரோஹன, அத்தியாவசிய தேவைகளின்றி, வெளியில் நடமாடமுடியாது என்றார்.